சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

விலங்குப்பாகுபாடு Khan11

விலங்குப்பாகுபாடு

2 posters

Go down

விலங்குப்பாகுபாடு Empty விலங்குப்பாகுபாடு

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 22:05

முதுகெலும்பிகள்.


முதுகெலும்பிகள் (ஆங்கிலம்:Vertebrate) எனப்படுவை முதுகெலும்பு அல்லதுதண்டு வடத்தினைக் கொண்டிருக்கும் விலங்குகளைக் குறிக்கும். இதுவரை 57,739 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 530 மில்லியன்ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிவளர்ச்சி அடையத் (பரிணமிக்கத்) தொடங்கின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மீன்கள், நிலநீர் வாழ்வன அல்லதுஇருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.


நிலநீர்வாழிகள்


ஈருடக வாழிகள் (இருவாழ்விகள் அல்லது நீர்நிலவாழ்வன) எனப்படுபவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள்ஆகும். தவளை, தேரை, குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும்.





குள்ளநரி
குள்ள நரி நாய்ப் பேரினத்தில் உள்ள நரி இனத்தில் ஒரு வகை. இது நரியைவிட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி என்று பெயர். இவை பாலூட்டிவகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. இது எல்லாம் உண்ணி வகையான விலங்கு. பிற விலங்குகள் தின்னாமல் விட்டுச் சென்றவற்றையும் இவை தின்னும். இவை சுமார் 60-75 செ.மீ (2-2.5 அடி) நீளம் இருக்கும், உயரம் 36 செ.மீ (1 அடி 2 அங்குலம்) இருக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விலங்குப்பாகுபாடு Empty Re: விலங்குப்பாகுபாடு

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 22:06

விலங்குப்பாகுபாடு New%20picture%203
வாழிடங்களும் வாழ்வு முறையும்
இவை ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழும்.


பகுப்புகள்: பாலூட்டிகள் | முதுகெலும்பிகள்




மீன்


மீன் நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு ஆகும். மீன்களை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என வரைய றை

செய்யலாம். மிகப்பெரும்பாலாவை உடலில் செதிள் கொண்டவை. மீன்களின் உடல் வெப்பநிலையானது தான் வாழும் சூழ்நிலையின் வெப்பத்தைப் பொறுத்து இருக்கும். தனக்கென தனி வெப்பநிலை கொண்டிரா. எனவே மீன்களை சூழ்வெப்பநிலை விலங்குகள்என்று சொல்வர். இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு தன் இனம் பெருக்கி வாழும் உயிரினம். பல் வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. சுமார் 22,000 வகை மீன் இனங்கள் உலகில் உள்ளன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபடுவன. சில தட்டையாகவும் சில உருண்டையாகவும், சில முள்ளுடம்புடனும், சில புழு போலவும் இருக்கும். பிலிப்பைன்சு நாட்டில் உள்ள நீர்நிலைகளில் வாழும் குட்டிக் கோபி என்னும் சிறு மீன் வகை சுமார் 13 மில்லி மீட்டர் நீளம் தான் கொண்டிருக்கும், ஆனால் திமிங்கிலச்சுறாமீன்என்னும் மீன் சுமார் 18 மீட்டர் (60 அடி) நீளம் கொண்டிருக்கும். திமிங்கிலச்சுறா மீன் சுமார் 14 மெட்ரிக் டன் எடை கொண்டிருக்கும் (அதாவது இரண்டு யானையின் எடை இருக்கும்). சில மீன்கள் கண்ணைக் கவரும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களிலும் சில பல நிறக் கோலங்களும், கோடுகளும் தீட்டுகளும் கொண்டவையாகவும் இருக்கும். சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில வகைகள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்பவை. சில வெப்ப மண்டல நாடுகளின் நீர்நிலைகளிலும், சில மீன் இனங்கள் கடுங்குளிர்ப்பகுதியான ஆர்ட்டிக பெருங்கடல் போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றன


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விலங்குப்பாகுபாடு Empty Re: விலங்குப்பாகுபாடு

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 22:06

மீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மீன்களிலே பொதுவாக நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன:


§ வலுவான எலும்புகள் கொண்ட மீன்வகைகள் (சுமார் 20,000 வகைகள்),
§ குருத்தெலும்பு கொண்ட எளிய வகை மீன்கள்.(சுமார் 50 வகைகள்) ,
§ குருத்தெலும்பு கொண்ட சுறாமீன்கள், மற்றும் திருக்கை மீன்கள் முதலியன (சுமார் 600 வகைகள்)
§ செதிள் இல்லா குருத்தெலும்பு உள்ள எளிய மீன் வகைகள் (விலாங்கு,ஆரல் முதலானவை; சுமார் 50 வகைகள்)
மீன்கள் உலகில் வாழும் மில்லியன் கணக்கான மாந்தர்களுக்கும், கரடிமுதலான விலங்குகளுக்கும் உணவாகப் பயன் படுவன




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விலங்குப்பாகுபாடு Empty Re: விலங்குப்பாகுபாடு

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 22:07

முதுகெலும்பிலிகள்.


முதுகெலும்பிலி முதுகெலும்பு இல்லாத ஓர் உயிரினம். பெரும்பான்மை உயிரினங்களுக்கு முதுகெலும்பு இல்லை. இந்த உயிரினங்களை பின்வரும் வகைகளாக பிரிக்கலாம்:


§ அனலிட்டு - வழைதசை புழுக்கள்: en:Annelid
§ கணுக்காலி — en:Arthropod
§ குழியுடலி - en:Cnidaria
§ முட்தோலி - en:Echinoderm
§ மெல்லுடலி - en:Mollusca
§ உருளைப்புழு Nematoda
§ en:Nematomorpha —
§ தட்டைப்புழுக்கள் — en:Platyhelminthes
§ புரையுடலி - en:Porifera
உலகில் உள்ள உயிரினங்களில் முதுகெலும்பில்லாத உயிரினங்களே அதிகம் சுமார் 10 லட்சம் உயிரினங்களில் 8 லட்சத்துக்கு மேற்பட்டவை முதுகெலும்பு இல்லாதவைகளாகும். முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை பல பகுதிகளாக பகுத்துள்ளனர் அறிவியல் அறிஞர்கள். அவற்றுள் புரோட்டோசோவா ஒரே உயிரணுவால் இயங்கும் இனமாகும். மற்ற உயிரினங்கள் செய்யும் சுவாசித்தல்,உணவு உண்ணல், உணவை ஜீரணித்தல், எஞ்சும் கழிவுப் பொருட்களை வெளியயேற்றுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் ஓரணுவுக்குள்ளே செய்கின்றது. ஆனால், இந்த ஓரணு உயிரினங்கள் அளவில் மிக நுண்ணியவைகளாக இருப்பதால் அவற்றை மைக்ரோ ஸ்கோப் மூலமாகத் தான் பார்க்க முடியும். இவற்றில் சிலவற்றில் மேற்பகுதி சற்று கடினத் தன்மை கொண்ட ஓடுகளால் அமைந்தது. இந்த நுண்ணுயிரிகளின் இறந்த தொகுதியே கடலில் கிடைக்கும் சீமைச் சுண்ணாம்பு ஆகும். புரோட்டோசோவா உயிரினங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டாய் பிரிந்து தனித்தனி உயிர்களாய் பெருக்கமடைகின்றன. புரோட்டோசோவா உயிரினங்களில் 30 ஆயிரம் வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மற்றோரு வகை பவளப் பூச்சிகள், கடல் சாமந்தி, ஜெல்லி மீன் போன்றவைகளாகும். நாடாப்புழு, ஈரல் புழு போன்றவை தட்டைப் புழுக்கள் எனும் வேறு வகையைச் சார்ந்தது. கொக்கிப் புழு, நாக்குப் புழு, நரம்பு சிலந்திப் புழு போன்றவை உருண்டைப் புழு என்ற மற்றோர் வகையைச் சார்ந்தததாகும். கிளிஞ்சல், நத்தை போன்றவை சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட மெல்லுடலிகளாகும்.

ஆக்டோபஸ் எனும் எண்காலிகள் போன்றவையும் இவ்வகையைச் சார்ந்தது. நட்சத்திரமீன், கடல் வெள்ளரி போன்ற கடல் வாழ் உயிரினங்களும் முதுகெலும்பில்லாதவைகளே. முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மிகப் பெரியவை கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண்டு ஆகும். முதுகெலும்பில்லா உயிரினங்களில் நன்மை அளிப்பவையும், தீமை அளிப்பவையும் உண்டு. பட்டுப்பூச்சி, தேனீ, அரக்குப் பூச்சி போன்றவை நன்மை செய்பவை. விசத்தன்மை கொண்ட பாம்புகள்,பூச்சிகள் ஏராளம் உள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விலங்குப்பாகுபாடு Empty Re: விலங்குப்பாகுபாடு

Post by *சம்ஸ் Tue 26 Jul 2011 - 22:07

கணுக்காலி



கணுக்காலிகள் என்பவை விலங்குகளின் பிரிவில் ஒரு மிகப் பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட பூச்சிகளும் வண்டுகளும், தேளினங்களும்,எட்டுக்கால் பூச்சி, சிலந்திகளும், நண்டுகளும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்பு. இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட உயிரினங்களில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். கணுக்காலிகளை அறிவியலில் ஆர்த்ரோபோடா (Arthropoda) என்பர். இது கிரேக்க மொழியில் உள்ள ἄρθρον ஆர்த்ரோ (= இணைக்கப்பட்ட, கணு) என்னும் சொல்லும் ποδός(போடொஸ் = கால்) என்னும் சொல்லும் சேர்ந்து ஆக்கப்பட்டது. கணுக்காலிகளுக்குக் கடினமான புற எலும்புறை (எலும்புக்கூடு) உண்டு. இவற்றின் உடல், பகுதி பகுதியாக, அதாவது கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள அமைப்பு கொண்டது. இவற்றின் கால்கள் இணை இணையாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் உள்ளன. கணுக்காலிகளில் பிளாங்க்டன் (plankton) வகையைச் சேர்ந்தவையின் 0.25 மி.மீ அளவில் இருந்து, 20 கிலோ கிராம்எடையுடன் 4 மீட்டர் (12-13 அடிகள்) கால் விரிப்பு அகலம் கொண்ட மிகப்பெரியநிப்பானிய எட்டுக்கால் நண்டு வரை மிகப்பல வகைகள் உள்ளன..

மெல்லுடலி


மெல்லுடலிகள் (Molluscs அல்லது mollusks; இலத்தீன்: molluscus) எனப்படும் விலங்கினங்கள் மிக மெலிதான ஓடுகளைக் கொண்டவை[2].


மெல்லுடலிகளில் மொத்தம் 100,000க்கும் அதிகமான இனங்கள் இருந்துள்ளன. மேலும் 70,000க்கும் அதிகமான சிற்றினங்கள் அற்றுப்போய்விட்டன. முத்துச்சிப்பி,கணவாய் முதலியன மெல்லுடலி வகையைச் சேர்ந்தன. வகைப்பாட்டியலில்மெல்லுடலிகள் பொதுவாக பத்து வகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. இவற்றில் இரன்டு வகுப்புகள் முற்றிலும் அற்றுப்போய்விட்டன.



உடலமைப்பியல்


மெல்லுடலிகளின் உடல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவைகள் தலை, உடல் மற்றும் பாதம் ஆகும்.




வகைப்பாட்டியல்


மெல்லுடலிகளின் முக்கியமான மூன்று வகைகளாவன:வயிற்றுக்காலிகள், இருவோட்டினம், தலைக்காலிகள். நத்தை முதலியன வயிற்றுக்காலி வகுப்பையும் மட்டி, கிளிஞ்சல் முதலியன இருவோட்டினத்தையும், கணவாய் முதலியன தலைக்காலி வகுப்பையும் சேர்ந்தவை.






படிமலர்ச்சிப்பட்டியல்


§ நத்தை

§ மட்டி
§ ஆளி
§ முத்துச்சிப்பி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விலங்குப்பாகுபாடு Empty Re: விலங்குப்பாகுபாடு

Post by Atchaya Wed 27 Jul 2011 - 1:50

மெல்லுடலி...மீன்....... ://:-: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விலங்குப்பாகுபாடு Empty Re: விலங்குப்பாகுபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum