Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
பிரசித்தி பெற்ற காதல்
4 posters
Page 1 of 1
பிரசித்தி பெற்ற காதல்
ஷாஜஹான் மும்தாஜ் - சாவில் நிறைவேறிய காதல்.
ஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும் சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு வந்தான். அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான். அவள் பெயர் அர்ஜுமான் பானு. அவர்களுக்குள் அரும்பியது காதல்.
ஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம் கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது. மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
ஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம வயது. ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக பதினான்கு குழந்தைகள் பிறந்தன. மன்னர் மத்திய இந்தியாவை நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது குழந்தை பிறந்தது.
பிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மஹால்.
அம்பிகாபதி அமராவதி - நட்பு காதலாக மாறிய கதை..
கம்பனின் மகன், அம்பிகாபதி.
குலோத்துங்க சோழனின் குடும்பத்து இளவரசி, அமராவதி.
இருவருக்குள் காதல் எப்படி வந்தது?
கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம் காதலைக்கற்றுக் கொண்டாள்.
காதலை அறிந்த மன்னன் அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.
சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.
அமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.
கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதிக்கிறான். அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.
லைலா மஜ்னு - பகையால் வளர்ந்த காதல்.
அரபு நாட்டில் சிறுகிராமம். அங்கு பள்ளியில் கல்விகற்கும்போது இருவருக்கும் தொடங்கிய நட்பு வயது ஏற ஏற காதலாக மாறியது. காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடைவிதித்தனர். ஒரு செல்வந்தனுக்கும் லைலவுக்கும் திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.
திருமணம் முடிந்தாலும் லைலாவுக்கும் செல்வந்தனுக்கும் இடையே எந்தவுறவும் ஏற்படவில்லை.
மஜ்னுவின் நினைவிலேயே வாழ்ந்த லைலா அவனைத்தேடி பல இடங்களில் அலைந்தாள். அவனை மீண்டும் சந்தித்தபோது அவனும் அவள் நினைவிலேயே இருப்பதை அறிந்த அவளுக்கு அவன் மீது இருந்த காதல் பலமடங்கு அதிகமானது. இதை அறிந்த லைலாவின் பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில் வைத்தனர். மஜ்னுவை மறக்க இயலாத லைலா அவனது நினைவாலேயே இறந்துபோனாள். அதை அறிந்து மஜ்னுவும் இறந்தான்.
ரோமியோ ஜூலியட்.
இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை
ஒருவிருந்தில் கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல் வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.
மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.
இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்.
காதல் வாழ்க! காதலர்கள் வாழ்க!!
ஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும் சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு வந்தான். அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான். அவள் பெயர் அர்ஜுமான் பானு. அவர்களுக்குள் அரும்பியது காதல்.
ஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம் கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது. மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
ஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம வயது. ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக பதினான்கு குழந்தைகள் பிறந்தன. மன்னர் மத்திய இந்தியாவை நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது குழந்தை பிறந்தது.
பிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மஹால்.
அம்பிகாபதி அமராவதி - நட்பு காதலாக மாறிய கதை..
கம்பனின் மகன், அம்பிகாபதி.
குலோத்துங்க சோழனின் குடும்பத்து இளவரசி, அமராவதி.
இருவருக்குள் காதல் எப்படி வந்தது?
கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம் காதலைக்கற்றுக் கொண்டாள்.
காதலை அறிந்த மன்னன் அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.
சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.
அமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.
கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதிக்கிறான். அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.
லைலா மஜ்னு - பகையால் வளர்ந்த காதல்.
அரபு நாட்டில் சிறுகிராமம். அங்கு பள்ளியில் கல்விகற்கும்போது இருவருக்கும் தொடங்கிய நட்பு வயது ஏற ஏற காதலாக மாறியது. காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடைவிதித்தனர். ஒரு செல்வந்தனுக்கும் லைலவுக்கும் திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.
திருமணம் முடிந்தாலும் லைலாவுக்கும் செல்வந்தனுக்கும் இடையே எந்தவுறவும் ஏற்படவில்லை.
மஜ்னுவின் நினைவிலேயே வாழ்ந்த லைலா அவனைத்தேடி பல இடங்களில் அலைந்தாள். அவனை மீண்டும் சந்தித்தபோது அவனும் அவள் நினைவிலேயே இருப்பதை அறிந்த அவளுக்கு அவன் மீது இருந்த காதல் பலமடங்கு அதிகமானது. இதை அறிந்த லைலாவின் பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில் வைத்தனர். மஜ்னுவை மறக்க இயலாத லைலா அவனது நினைவாலேயே இறந்துபோனாள். அதை அறிந்து மஜ்னுவும் இறந்தான்.
ரோமியோ ஜூலியட்.
இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை
ஒருவிருந்தில் கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல் வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.
மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.
இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்.
காதல் வாழ்க! காதலர்கள் வாழ்க!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரசித்தி பெற்ற காதல்
jiffriya wrote:காதலை மிகவும் நேசிக்கிறார் என்று தான் நினைக்கிறன்..
காதலை நேசிக்காதவங்க யார்தான் இருக்கப்போறாங்க
காதல் காதல் எங்கிறிங்களே அப்படின்னா என்ன
Re: பிரசித்தி பெற்ற காதல்
காதலை நேசிக்காதவங்க யார்தான் இருக்கப்போறாங்க
காதல் காதல் எங்கிறிங்களே அப்படின்னா என்ன
எனக்கும் சரியாக தெரியாது..ஒரு பழம் என்று தான் நினைக்கிறன்..
Re: பிரசித்தி பெற்ற காதல்
பழம் கனிஞ்சு இருந்தான் தான் சாப்பிடலாம் பழுதடைந்தா சாப்பிடலாமா
அதுபோலதான் இன்றய காதல்
ஏன் காதலை அனைவரும் வெறுக்கிறாங்க
அதுபோலதான் இன்றய காதல்
ஏன் காதலை அனைவரும் வெறுக்கிறாங்க
Re: பிரசித்தி பெற்ற காதல்
சாதிக் wrote:பழம் கனிஞ்சு இருந்தான் தான் சாப்பிடலாம் பழுதடைந்தா சாப்பிடலாமா
அதுபோலதான் இன்றய காதல்
ஏன் காதலை அனைவரும் வெறுக்கிறாங்க
அதை சரியாகப் புரிந்து கொள்ளாததால் வெறுக்கிறார்கள்..காதலை காதலியின் வடிவில் மட்டுமே கண்டால் தோல்வி நிச்சயம் இருக்கும்..அதை உள் உணர்வாகக் கொண்டால் தோல்வி என்பதே இருக்காது ..
Re: பிரசித்தி பெற்ற காதல்
வெளிப்படையான பகட்டுகளை நம்பி காதலிப்பதால்தான் தோல்வியில் சென்று முடிகிறது
ஏன் காதலித்து திருமணம் முடித்த பெற்றோர் கூட காதலை வெறுக்கிறார்கள் காரணம் ஏன் தெரியுமா
இன்றை காதலில் அதிகம் உண்மைத்தன்மை இல்லை
கவர்ச்சியை மாத்திரம் நம்பும் காதலாகிறதே அப்டியில்லையா
ஏன் காதலித்து திருமணம் முடித்த பெற்றோர் கூட காதலை வெறுக்கிறார்கள் காரணம் ஏன் தெரியுமா
இன்றை காதலில் அதிகம் உண்மைத்தன்மை இல்லை
கவர்ச்சியை மாத்திரம் நம்பும் காதலாகிறதே அப்டியில்லையா
Re: பிரசித்தி பெற்ற காதல்
சாதிக் wrote:வெளிப்படையான பகட்டுகளை நம்பி காதலிப்பதால்தான் தோல்வியில் சென்று முடிகிறது
ஏன் காதலித்து திருமணம் முடித்த பெற்றோர் கூட காதலை வெறுக்கிறார்கள் காரணம் ஏன் தெரியுமா
இன்றை காதலில் அதிகம் உண்மைத்தன்மை இல்லை
கவர்ச்சியை மாத்திரம் நம்பும் காதலாகிறதே அப்டியில்லையா
அப்படியும் இருக்கலாம்..சரியான புரிந்துணர்வு இல்லாவிடில் காதலில் ஏமாற்றம் தான் அதிகம்..
Re: பிரசித்தி பெற்ற காதல்
சாதிக் wrote:நீங்கள் காதலித்திருக்கிறீர்களா
காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன்..நல்ல நட்பை, பெற்றோரின் அன்பை, தமிழை, இலக்கியத்தை, கவிதைகளை..இயற்கையை இப்படி காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன்..
Re: பிரசித்தி பெற்ற காதல்
அதனால்தான் தெளிவாக இருக்கிங்க
இவ்வாறான காதல் என்றும் தோற்பதில்லை
பருவக்காதல் மாத்திரம்தான் தோல்வியை அடைகிறது
உலகக்காதலர்களிடம் கேட்டால் அவர்களின் முதல் காதல் வென்றதாக சரித்திரம் மிகவும் அரிதாகத்தான் இருக்கும்
என்னைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதல்தான் வெல்லும்
இவ்வாறான காதல் என்றும் தோற்பதில்லை
பருவக்காதல் மாத்திரம்தான் தோல்வியை அடைகிறது
உலகக்காதலர்களிடம் கேட்டால் அவர்களின் முதல் காதல் வென்றதாக சரித்திரம் மிகவும் அரிதாகத்தான் இருக்கும்
என்னைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதல்தான் வெல்லும்
Re: பிரசித்தி பெற்ற காதல்
சாதிக் wrote:அதனால்தான் தெளிவாக இருக்கிங்க
இவ்வாறான காதல் என்றும் தோற்பதில்லை
பருவக்காதல் மாத்திரம்தான் தோல்வியை அடைகிறது
உலகக்காதலர்களிடம் கேட்டால் அவர்களின் முதல் காதல் வென்றதாக சரித்திரம் மிகவும் அரிதாகத்தான் இருக்கும்
என்னைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதல்தான் வெல்லும்
அதைப் பற்றி எனக்கு தெரியாது..அனுபவம் இல்லை. ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்கிறேன்..
Re: பிரசித்தி பெற்ற காதல்
jiffriya wrote:சாதிக் wrote:அதனால்தான் தெளிவாக இருக்கிங்க
இவ்வாறான காதல் என்றும் தோற்பதில்லை
பருவக்காதல் மாத்திரம்தான் தோல்வியை அடைகிறது
உலகக்காதலர்களிடம் கேட்டால் அவர்களின் முதல் காதல் வென்றதாக சரித்திரம் மிகவும் அரிதாகத்தான் இருக்கும்
என்னைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதல்தான் வெல்லும்
அதைப் பற்றி எனக்கு தெரியாது..அனுபவம் இல்லை. ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்கிறேன்..
அது சரிதான் அறிந்திருக்க வாய்ப்பில்லை இனி தானாக புரிந்து கொள்ளும் பருவமல்லவா அதனால் சொன்னேன்
Re: பிரசித்தி பெற்ற காதல்
அறியாத சில பல காரியங்களை அறிந்தேன் நன்றி சிறந்த தகவலுக்கு :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரசித்தி பெற்ற காதல்
நண்பன் wrote:அறியாத சில பல காரியங்களை அறிந்தேன் நன்றி சிறந்த தகவலுக்கு :”@:
எதச்சொன்னிங்க நண்பன்
Re: பிரசித்தி பெற்ற காதல்
கம்பனின் பிள்ளை காதலில் தோற்றது இன்னும் பல அத சொன்னேன் சாதிக் ஏன் என்னாச்சி :];:சாதிக் wrote:நண்பன் wrote:அறியாத சில பல காரியங்களை அறிந்தேன் நன்றி சிறந்த தகவலுக்கு :”@:
எதச்சொன்னிங்க நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழக பிரசித்தி பெற்ற கோவில்களை 360 டிகிரியில் கான
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» எல்லாமே காதல் காதல்
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» எல்லாமே காதல் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|