Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
மாலத்தீவுடன் ஆறு ஒப்பந்தங்கள் 10 கோடி டாலர் நிதியுதவி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மாலத்தீவுடன் ஆறு ஒப்பந்தங்கள் 10 கோடி டாலர் நிதியுதவி
இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளுடன் சீனா அதிக இணக்கம் காட்டி வரும் நிலையில், இந்தியா மற்றும் மாலத்தீவு இடையில், ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான சவாலாக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.மாலத்தீவு, இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளுடன் சீனா சமீப காலமாக அதிகளவில் இணக்கம் காட்டி வருகிறது. இது, இந்தியா மீதான அதன் "முத்துமாலை' வியூகத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.சமீபத்தில் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழு தலைவர் வூ பன்குவோ, மாலத்தீவுக்கு சமீபத்தில் மேற்கொண்ட பயணம் இதில் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மாலத்தீவில், "சார்க்' மாநாடு நடந்த முடிந்த பின், பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டின் அதிபர் முகமது நஷீத்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில், ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இரு நாடுகளிலும் சிறைப்பட்டுள்ள அந்தந்த நாடுகளின் கைதிகளை விடுவித்து பரிமாற்றம் செய்து கொள்வது ஆகியவை இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, இரு தரப்பு வர்த்தகப் பரிமாற்றம் குறித்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.மேலும், பயங்கரவாதத் தடுப்பில், மாலத்தீவில், மேம்பட்ட போலீஸ் அகடமி நிறுவுதல், கொச்சிக்கும், மாலத்தீவுக்கும் இடையில் சரக்கு, பயணிகள் படகு போக்குவரத்து துவக்குதல் ஆகியவற்றிற்கும் இந்தியா முன்வந்துள்ளது.மாலத்தீவுக்கு 10 கோடி டாலர் நிதியுதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.இதற்கிடையில், மாலத்தீவு பார்லிமென்டில் நேற்று பிரதமர் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:இரு நாடுகளும், பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், போலிப் பொருட்கள் உற்பத்தி, கடத்தல் மற்றும் போதை மருந்துக் கடத்தல் ஆகிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை சமாளிக்க, இரு நாடுகளும் பல்நோக்கு அணுகுமுறைகளை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளன.
மாலத்தீவுக்கு இன்றும், எதிர்காலத்திலும் இந்தியா பல்வேறு விஷயங்களிலும் உதவும். திறன் மேம்பாட்டுத் துறையில் மாலத்தீவு இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்க, இந்தியா தயாராக இருக்கிறது.மாலத்தீவின் மீன்பிடி மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைகளை நவீனமயப்படுத்தவும் இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது.
கடல் மட்டம் அதிகரிப்பு பிரச்னையில், மாலத்தீவு கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா உதவும்.இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.முதன் முதலாக பேசிய பிரதமர்மாலத் தீவில், 2008ல் அரசியல் சாசனம் முழுமையும் திருத்தியமைக்கப்பட்டது. அதன்பின் 2009ல் பொதுத் தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து, "மக்கள் மஜ்லிஸ்' எனப்படும் பார்லிமென்ட் ஜனநாயக ரீதியில் முழு அதிகாரங்களுடன் செயல்படத் துவங்கியது.மாலத் தீவு பார்லிமென்ட் செயல்படத் துவங்கிய பின் அதில் முதன் முதலாக பிரதமர் மன்மோகன் சிங் தான் பேசியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இரு நாடுகளிலும் சிறைப்பட்டுள்ள அந்தந்த நாடுகளின் கைதிகளை விடுவித்து பரிமாற்றம் செய்து கொள்வது ஆகியவை இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, இரு தரப்பு வர்த்தகப் பரிமாற்றம் குறித்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.மேலும், பயங்கரவாதத் தடுப்பில், மாலத்தீவில், மேம்பட்ட போலீஸ் அகடமி நிறுவுதல், கொச்சிக்கும், மாலத்தீவுக்கும் இடையில் சரக்கு, பயணிகள் படகு போக்குவரத்து துவக்குதல் ஆகியவற்றிற்கும் இந்தியா முன்வந்துள்ளது.மாலத்தீவுக்கு 10 கோடி டாலர் நிதியுதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.இதற்கிடையில், மாலத்தீவு பார்லிமென்டில் நேற்று பிரதமர் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:இரு நாடுகளும், பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், போலிப் பொருட்கள் உற்பத்தி, கடத்தல் மற்றும் போதை மருந்துக் கடத்தல் ஆகிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை சமாளிக்க, இரு நாடுகளும் பல்நோக்கு அணுகுமுறைகளை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளன.
மாலத்தீவுக்கு இன்றும், எதிர்காலத்திலும் இந்தியா பல்வேறு விஷயங்களிலும் உதவும். திறன் மேம்பாட்டுத் துறையில் மாலத்தீவு இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்க, இந்தியா தயாராக இருக்கிறது.மாலத்தீவின் மீன்பிடி மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைகளை நவீனமயப்படுத்தவும் இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது.
கடல் மட்டம் அதிகரிப்பு பிரச்னையில், மாலத்தீவு கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா உதவும்.இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.முதன் முதலாக பேசிய பிரதமர்மாலத் தீவில், 2008ல் அரசியல் சாசனம் முழுமையும் திருத்தியமைக்கப்பட்டது. அதன்பின் 2009ல் பொதுத் தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து, "மக்கள் மஜ்லிஸ்' எனப்படும் பார்லிமென்ட் ஜனநாயக ரீதியில் முழு அதிகாரங்களுடன் செயல்படத் துவங்கியது.மாலத் தீவு பார்லிமென்ட் செயல்படத் துவங்கிய பின் அதில் முதன் முதலாக பிரதமர் மன்மோகன் சிங் தான் பேசியுள்ளார்.
Similar topics
» சைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு
» சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி
» மத்திய அரசு அளிக்கிறது மேற்கு வங்காளத்துக்கு ^21,614 கோடி நிதியுதவி
» நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்!
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும் 8 ஒப்பந்தங்கள்!
» சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி
» மத்திய அரசு அளிக்கிறது மேற்கு வங்காளத்துக்கு ^21,614 கோடி நிதியுதவி
» நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்!
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும் 8 ஒப்பந்தங்கள்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|