Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
ஏட்டுச் சுரைக்காய்
4 posters
Page 1 of 1
ஏட்டுச் சுரைக்காய்
பிரவீன் எட்டாம் வகுப்பு படிப்பவன். அவனது பாடசாலையில், கட்டுரைப்போட்டி நடைபெற இருப்பதாக, அவனது வகுப்பு ஆசிரியர் கூறினார். வகுப்பில் பல மாணவர்கள் கட்டுரைப் போட்டியில், கலந்து கொள்ளப் போவதாகக் கூறினர். பிரவீனும், போட்டியில் கலந்துகொள்ள விரும்பி பெயரைக் கொடுத்தான். போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தாலும், அவனுக்கு உள்ளூர, சிறு அச்சம் இருந்தது. காரணம், அவன் ஏழை மாணவன். அவன் தந்தை விவசாயி. அவர் மகனை சுற்றுலா எதற்கும் அழைத்துச் சென்றது இல்லை.
ஆனால், அவனுடன் படிக்கும் மற்ற மாணவர்களோ, செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள், அவர்கள் தங்கள் வீடுகளில், கணனியும், இணைய வசதியும் இருப்பதாகக் கூறினர். மேலும், இணையத்தில் பெற முடியாத தகவல்களே இல்லையென்றும், சொன்னார்கள். அதைக் கேட்ட பிரவீனுக்கோ, தனது நிலையைப் பற்றி வருத்தம் தான் ஏற்பட்டது.
மாலையில் வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் பாடசாலையில் நடக்கவிருக்கும் கட்டுரைப் போட்டியைப் பற்றி சொன்னான். கூடவே, “அப்பா! என்னுடன் படிக்கும் மாணவர்கள் பலரும் இணையத்திலிருந்து, பல தகவல்களைச் சேகரித்து கட்டுரை எழுதப் போவதாகச் சொன்னார்கள். நம் வீட்டிலும் கணனியும், இணைய வசதியும் இருந்தால் நானும், தகவல் சேகரித்து கட்டுரை எழுதுவேன். இப்போது என்னால் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற முடியுமா? என்று சந்தேகமாக இருக்கிறது!” என்று வருத்தத்தோடு கூறினான்.
அதைக் கேட்ட பிரவீனின் தந்தையோ, “நம் வசதிக்கு, கணனி வாங்கும் நிலையிலா இருக்கிறோம்? நம் கிராமத்தின் அருகிலேயே அழகான அருவி இருக்கிறதே, நாமும்தான் ஓரிருமுறை அந்த அருவிக்குச் சென்று நீராடியிருக்கிறோம். அருவியின் அருகிலேயே உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தோம். நீ அந்த அருவிக்குச் சென்று வந்த உனது அனுபவத்தை சுவைபட கட்டுரையில் எழுது!” என்று சொன்னார்.
தந்தை கூறியதைக் கேட்ட பிரவீனுக்கு தனது ஏழ்மை நிலையை பற்றிய வருத்தம் இருந்தாலும், ஏதோ பெயரளவிற்கு தன் கிராமத்தின் அருகிலிருக்கும் அருவிக்குச் சென்று வந்தது பற்றி நினைவூட்டி தகவல்களைச் சேரித்து எழுதிப் படித்துக் கொண்டான். சில நாட்கள் கடந்தன.
பள்ளியில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. பிரவீன் கூட படிக்கும் மற்ற மாணவர்கள் எல்லாரும் அவனிடம் தாங்கள் லண்டன், நியூயோர்க் போன்ற நகரங்களைப் பற்றி எழுதியிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டனர். மறுவாரமே பாடசாலையின் ஆண்டு விழாவும் வந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவ, மாணவியர் ஆர்வம் பொங்க காத்திருந்தனர். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருப்பதாக பிரவீனின் பெயரைக் கூறினார் மாவட்ட கல்வி அதிகாரி.
அவனால், தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“பிரவீன் எழுதிய கட்டுரை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், அனுபவ அறிவாக அமைந்திருந்தது. மேலும், இயற்கை அழகு, சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வுடன் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. நம்முடைய ஊரைப் பற்றிய செய்தியை அவன் எழுதியிருந்ததும் ஒரு முக்கியமானதாக கருதப்பட்டது. எனவே தான், அக் கட்டுரை முதல் பரிசுக்குரிய தகுதி பெற்றிருக்கிறது” என்று பிரவீனை பாராட்டி பெருமையோடு கூறினார்.
பிரவீன் பரிசு பெறும்போது, அனைவரும் கைதட்டிப் பாராட்டினர். மாலை வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் தான் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றதைக் கூறி, அதற்கு வழிகாட்டிய தந்தைக்கு, நன்றியையும் கூறினான்.
மகனே, “திறமைக்கும், அறிவுக்கும் ஏழ்மை ஒருபோதும் தடையாகாது. அறிவும், அனுபவமும் ஒன்று சேரும் போது, வெற்றியும், புகழும் தானாகவே, நம்மை வந்தடையும்!” என்று கூறினார். வெறும் ஏட்டுச் சுரைக்காயை விட அனுபவ அறிவே சிறந்தது என்று பிரவீன் புரிந்து கொண்டான்.
தினகரன்
ஆனால், அவனுடன் படிக்கும் மற்ற மாணவர்களோ, செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள், அவர்கள் தங்கள் வீடுகளில், கணனியும், இணைய வசதியும் இருப்பதாகக் கூறினர். மேலும், இணையத்தில் பெற முடியாத தகவல்களே இல்லையென்றும், சொன்னார்கள். அதைக் கேட்ட பிரவீனுக்கோ, தனது நிலையைப் பற்றி வருத்தம் தான் ஏற்பட்டது.
மாலையில் வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் பாடசாலையில் நடக்கவிருக்கும் கட்டுரைப் போட்டியைப் பற்றி சொன்னான். கூடவே, “அப்பா! என்னுடன் படிக்கும் மாணவர்கள் பலரும் இணையத்திலிருந்து, பல தகவல்களைச் சேகரித்து கட்டுரை எழுதப் போவதாகச் சொன்னார்கள். நம் வீட்டிலும் கணனியும், இணைய வசதியும் இருந்தால் நானும், தகவல் சேகரித்து கட்டுரை எழுதுவேன். இப்போது என்னால் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற முடியுமா? என்று சந்தேகமாக இருக்கிறது!” என்று வருத்தத்தோடு கூறினான்.
அதைக் கேட்ட பிரவீனின் தந்தையோ, “நம் வசதிக்கு, கணனி வாங்கும் நிலையிலா இருக்கிறோம்? நம் கிராமத்தின் அருகிலேயே அழகான அருவி இருக்கிறதே, நாமும்தான் ஓரிருமுறை அந்த அருவிக்குச் சென்று நீராடியிருக்கிறோம். அருவியின் அருகிலேயே உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தோம். நீ அந்த அருவிக்குச் சென்று வந்த உனது அனுபவத்தை சுவைபட கட்டுரையில் எழுது!” என்று சொன்னார்.
தந்தை கூறியதைக் கேட்ட பிரவீனுக்கு தனது ஏழ்மை நிலையை பற்றிய வருத்தம் இருந்தாலும், ஏதோ பெயரளவிற்கு தன் கிராமத்தின் அருகிலிருக்கும் அருவிக்குச் சென்று வந்தது பற்றி நினைவூட்டி தகவல்களைச் சேரித்து எழுதிப் படித்துக் கொண்டான். சில நாட்கள் கடந்தன.
பள்ளியில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. பிரவீன் கூட படிக்கும் மற்ற மாணவர்கள் எல்லாரும் அவனிடம் தாங்கள் லண்டன், நியூயோர்க் போன்ற நகரங்களைப் பற்றி எழுதியிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டனர். மறுவாரமே பாடசாலையின் ஆண்டு விழாவும் வந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவ, மாணவியர் ஆர்வம் பொங்க காத்திருந்தனர். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருப்பதாக பிரவீனின் பெயரைக் கூறினார் மாவட்ட கல்வி அதிகாரி.
அவனால், தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“பிரவீன் எழுதிய கட்டுரை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், அனுபவ அறிவாக அமைந்திருந்தது. மேலும், இயற்கை அழகு, சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வுடன் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. நம்முடைய ஊரைப் பற்றிய செய்தியை அவன் எழுதியிருந்ததும் ஒரு முக்கியமானதாக கருதப்பட்டது. எனவே தான், அக் கட்டுரை முதல் பரிசுக்குரிய தகுதி பெற்றிருக்கிறது” என்று பிரவீனை பாராட்டி பெருமையோடு கூறினார்.
பிரவீன் பரிசு பெறும்போது, அனைவரும் கைதட்டிப் பாராட்டினர். மாலை வீடு திரும்பிய பிரவீன், தன் தந்தையிடம் தான் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றதைக் கூறி, அதற்கு வழிகாட்டிய தந்தைக்கு, நன்றியையும் கூறினான்.
மகனே, “திறமைக்கும், அறிவுக்கும் ஏழ்மை ஒருபோதும் தடையாகாது. அறிவும், அனுபவமும் ஒன்று சேரும் போது, வெற்றியும், புகழும் தானாகவே, நம்மை வந்தடையும்!” என்று கூறினார். வெறும் ஏட்டுச் சுரைக்காயை விட அனுபவ அறிவே சிறந்தது என்று பிரவீன் புரிந்து கொண்டான்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏட்டுச் சுரைக்காய்
:”@:Muthumohamed wrote:அருமையான கதை
பகிர்வுக்கு நன்றி நண்பன் அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏட்டுச் சுரைக்காய்
நண்பன் wrote::”@:Muthumohamed wrote:அருமையான கதை
பகிர்வுக்கு நன்றி நண்பன் அண்ணா
@. @. @.
Similar topics
» சுரைக்காய் பக்கோடா
» சுரைக்காய் அல்வா
» ஏட்டு சுரைக்காய்!
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
» சுரைக்காய் அல்வா
» ஏட்டு சுரைக்காய்!
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|