Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்
4 posters
Page 1 of 1
சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்
சிறுவர்களுக்கான கதை
பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் நண்பர்களாம், ஒருநாள் பட்டிக்காட்டு எலி தன் பட்டணத்து சினேகிதனை தன் ஊருக்கு விருநதுக்கு அழைத்தது. விருந்துக்கு வந்த பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் சேர்ந்து அங்கிருந்த வயல் வெளிகளில் வளர்ந்திருந்த நெற்கதிர்களையும் ,காய்கனிகளையும் கொறித்து தின்று பயமில்லாமல் தம் இஷ்டம் போல் ஓடி விளையாடியது. .
அப்போது பட்டணத்து எலி சொல்லியது... இதெல்லாம் ஒரு விருந்தா? சுவையே இல்லை!
வா உடனே பட்டணத்துக்கு... விருந்தென்றால் என்னவென்று காட்டுகிறேன் என்று தான் இருந்த பட்டணத்துக்கு வரும்படிஅழைத்தது!
பட்டிக்காட்டு எலியும் சந்தோஷமாக பட்டிக்காட்டை விட்டு பட்டணம் புறப்பட்டு பட்டணத்து எலி ஒருபெரிய வீட்டிற்கு பின்னால் இருந்த பொந்தில வாழ்வதால் பட்டிகாட்டு எலியும் அங்கே போனது!
பட்டிக்காட்டு எலியை வா வா என மகிழ்ச்சியோடு வரவேற்ற பட்டணத்து எலி தனனை தேடி வந்த பட்டிக்காட்டு எலிக்கு விருந்து கொடுக்க அந்த பெரிய வீட்டுக்குள் போய் வெண்ணெய் கேக்கு துண்டுகள் ரொட்டித்துண்டுகள் எல்லாம் திருடிக்கொண்டு வந்ததும் ரெண்டு எலியு்மாக சேர்ந்து சாப்பிட உட்காநதது. அப்போது தீடீரென மியாவ் மீயாவ் என்று சத்தம் வரவே இரண்டு எலியும் பயந்து போய் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு ஓடி ஒளிந்தது்!
பூனை அந்தப்பக்கமா போனதும் திரும்பி வந்து சாப்பிட அமர்வதும் பூனை மியாவ் மியாவ் என வரும் போது எலிகள் ஒளிவதுமாக நிம்மதியில்லாமலேபயந்து பயந்து மெதுவாக சாப்பிட்டது!
கடைசியாக அந்தப்பக்கமா வந்த பூனை எலிகள் சாப்பிட்டுகொண்டிருந்த பக்கமாக வந்து அங்கிருந்த சாப்பாட்டையெல்லாம் சாப்பிட்டே முடித்து விட்டது
எலிகளுக்கோகஷ்டப்பட்டு்திருடியும் சாப்பாடுகிடைக்கவில்லை பசியோடிருந்த பட்டிக்காட்டுஎலி சொல்லியது!
என் ஊர் சாப்பாடு பால் சீஸ் பிரெட் போல் சுவையில்லாம இருந்தாலும். நிம்மதியாக சாப்பிடலாம் உன்னைப்போல பயந்து பயந்து சாப்பிட வேணாம். இதை பார்த்தா என் பட்டணம் பெரிது என்றாய்! சுதந்திரமில்லாமல் யாருக்கோ பயந்து பயந்து வாழும் உன் வாழ்வும் ஒரு வாழ்வா..!
நான் என் ஊருக்கே போகிறேன் என்று வந்த அன்றே தன் ஊரைத்தேடி ஓடியே போயிற்றுதாம். !*
இது நமக்கு என்ன சொல்வது என்ன..
சொர்க்கமாயிருந்தாலும் நம்மூரு போல வருமான்னு நீங்க நினைக்கிறிங்க தானே!
பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும்
பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் நண்பர்களாம், ஒருநாள் பட்டிக்காட்டு எலி தன் பட்டணத்து சினேகிதனை தன் ஊருக்கு விருநதுக்கு அழைத்தது. விருந்துக்கு வந்த பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் சேர்ந்து அங்கிருந்த வயல் வெளிகளில் வளர்ந்திருந்த நெற்கதிர்களையும் ,காய்கனிகளையும் கொறித்து தின்று பயமில்லாமல் தம் இஷ்டம் போல் ஓடி விளையாடியது. .
அப்போது பட்டணத்து எலி சொல்லியது... இதெல்லாம் ஒரு விருந்தா? சுவையே இல்லை!
வா உடனே பட்டணத்துக்கு... விருந்தென்றால் என்னவென்று காட்டுகிறேன் என்று தான் இருந்த பட்டணத்துக்கு வரும்படிஅழைத்தது!
பட்டிக்காட்டு எலியும் சந்தோஷமாக பட்டிக்காட்டை விட்டு பட்டணம் புறப்பட்டு பட்டணத்து எலி ஒருபெரிய வீட்டிற்கு பின்னால் இருந்த பொந்தில வாழ்வதால் பட்டிகாட்டு எலியும் அங்கே போனது!
பட்டிக்காட்டு எலியை வா வா என மகிழ்ச்சியோடு வரவேற்ற பட்டணத்து எலி தனனை தேடி வந்த பட்டிக்காட்டு எலிக்கு விருந்து கொடுக்க அந்த பெரிய வீட்டுக்குள் போய் வெண்ணெய் கேக்கு துண்டுகள் ரொட்டித்துண்டுகள் எல்லாம் திருடிக்கொண்டு வந்ததும் ரெண்டு எலியு்மாக சேர்ந்து சாப்பிட உட்காநதது. அப்போது தீடீரென மியாவ் மீயாவ் என்று சத்தம் வரவே இரண்டு எலியும் பயந்து போய் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு ஓடி ஒளிந்தது்!
பூனை அந்தப்பக்கமா போனதும் திரும்பி வந்து சாப்பிட அமர்வதும் பூனை மியாவ் மியாவ் என வரும் போது எலிகள் ஒளிவதுமாக நிம்மதியில்லாமலேபயந்து பயந்து மெதுவாக சாப்பிட்டது!
கடைசியாக அந்தப்பக்கமா வந்த பூனை எலிகள் சாப்பிட்டுகொண்டிருந்த பக்கமாக வந்து அங்கிருந்த சாப்பாட்டையெல்லாம் சாப்பிட்டே முடித்து விட்டது
எலிகளுக்கோகஷ்டப்பட்டு்திருடியும் சாப்பாடுகிடைக்கவில்லை பசியோடிருந்த பட்டிக்காட்டுஎலி சொல்லியது!
என் ஊர் சாப்பாடு பால் சீஸ் பிரெட் போல் சுவையில்லாம இருந்தாலும். நிம்மதியாக சாப்பிடலாம் உன்னைப்போல பயந்து பயந்து சாப்பிட வேணாம். இதை பார்த்தா என் பட்டணம் பெரிது என்றாய்! சுதந்திரமில்லாமல் யாருக்கோ பயந்து பயந்து வாழும் உன் வாழ்வும் ஒரு வாழ்வா..!
நான் என் ஊருக்கே போகிறேன் என்று வந்த அன்றே தன் ஊரைத்தேடி ஓடியே போயிற்றுதாம். !*
இது நமக்கு என்ன சொல்வது என்ன..
சொர்க்கமாயிருந்தாலும் நம்மூரு போல வருமான்னு நீங்க நினைக்கிறிங்க தானே!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்
குடியானவனும் நாரையும்.
ஒரு ஊரிலே ஒரு விவசாயக்குடியானவன் வசித்து வந்தான். அவனுக்கு அவன் நிலத்துக்கு பக்கத்திலிருந்த காட்டிலிருந்து வரும் பறவைகளால் பெரும் தொல்லை ஏற்பட்டது.அக்காட்டில் பறவைகள் அதிகம் இருந்ததனால் குடியானவன் வயலில் விதைகளை விதைத்து விட்டு அப்பால் சென்றதும் பெரும் கூட்டமாக பறந்து வரும் பறவைகள் அவனுடைய வயலில் உட்கார்ந்து மண்ணைக்கிளறி விதைக்கப்பட்ட விதைகளை கொத்தித்தின்று விடும்.
குடியானவன் பறவைகளை துரத்திதுரத்தி க்ளைத்து போனான்.அநேகமாக எல்லா விதைகளையும் பழங்களையும் பறவைகள் தினமும் வந்து தின்பதனால் அவன் மறுபடியும் நிலத்தை உழுது புது விதைக்ளை விதைக்கும் படியாகி விட்டது. அதற்கு முன்பாக குடியானவன் சமயோசிதமாக பறவைளை பிடிக்க எண்ணி பெரிய வலை கொண்டு வந்து வயலில் விரித்து விட்டான்.
மறு நாள் மீண்டும் பறவைகள் பறந்து வந்து வயலில் உட்கார்ந்தன. அதன் கால்கள் வலையில் சிக்குப்பட்டதனால் அத்தனை பறவைகளும் வலையில் சிக்கிக்கொண்டன். பறவைகளோடு கூட ஒரு நாரையும் சிக்கிக்கொண்டது.
குடியானவன் வலையில் அகப்பட்ட பறவைகளை பிடிக்க தொடங்கியவுடன் நாரை வேடனிடம்....நீங்கள் எனக்கு கருணை காட்டுங்கள்.நான் உங்களுக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை,நான் கோழியோ, கொக்கோ அல்லது விதைகளைத்தின்னும் பறவையோ இல்லை, நான் நாரை,வயல்களுக்கு தீங்கு விளைவிக்கும் புழுக்களை மட்டுமே சாப்பிடுவேன், என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சியது.
குடியானவன் தாங்க முடியாத கோபத்தோடு நீ சொல்வது சரிதான்,ஆனால் நீ இன்று பறவைகளோடு பிடி பட்டிருக்கிறாய். எனது விதைகளை தின்ற பறவைகளின் தோழன் தானே நீயும் நீ இவைகளுடன் வந்ததனால் இவைகளுடனான தண்டனையை நீய்ம் அனுபவி என்றான்.
பறவைகளோடு சேர்ந்து வசித்ததினால் நாரையும் தண்டனையை அனுபவித்தது.
இக்கதை நமக்கு சொல்வது என்ன தெரியுமா...
ஒரு மனிதன் தான் சார்ந்துள்ள மனிதர்களை கொண்டே கணிக்கப்படுகின்றான்.அவனையும் அவன் உடன் ஒத்தவர்கள் போன்றே மதிப்பிடுகின்றனர்.,கெட்டவர்களுடன் வசிப்பதால் கெடுதல் செய்யாதவர்களுக்கும் தண்டனையும் கெட்ட பெயரும் ஏற்படுகின்றது. அதனால் தான் தொல்லை தந்த பறவைகளுடன் நல்லது செய்யும் நாரையும் சேர்ந்து தண்டனை அடைந்தது போல் பல மனிதர்கள் வாழ்விலும் நடக்கிறது.நாம் சேரும் இடம் அறிந்து சேர வேண்டும்.
ஒரு ஊரிலே ஒரு விவசாயக்குடியானவன் வசித்து வந்தான். அவனுக்கு அவன் நிலத்துக்கு பக்கத்திலிருந்த காட்டிலிருந்து வரும் பறவைகளால் பெரும் தொல்லை ஏற்பட்டது.அக்காட்டில் பறவைகள் அதிகம் இருந்ததனால் குடியானவன் வயலில் விதைகளை விதைத்து விட்டு அப்பால் சென்றதும் பெரும் கூட்டமாக பறந்து வரும் பறவைகள் அவனுடைய வயலில் உட்கார்ந்து மண்ணைக்கிளறி விதைக்கப்பட்ட விதைகளை கொத்தித்தின்று விடும்.
குடியானவன் பறவைகளை துரத்திதுரத்தி க்ளைத்து போனான்.அநேகமாக எல்லா விதைகளையும் பழங்களையும் பறவைகள் தினமும் வந்து தின்பதனால் அவன் மறுபடியும் நிலத்தை உழுது புது விதைக்ளை விதைக்கும் படியாகி விட்டது. அதற்கு முன்பாக குடியானவன் சமயோசிதமாக பறவைளை பிடிக்க எண்ணி பெரிய வலை கொண்டு வந்து வயலில் விரித்து விட்டான்.
மறு நாள் மீண்டும் பறவைகள் பறந்து வந்து வயலில் உட்கார்ந்தன. அதன் கால்கள் வலையில் சிக்குப்பட்டதனால் அத்தனை பறவைகளும் வலையில் சிக்கிக்கொண்டன். பறவைகளோடு கூட ஒரு நாரையும் சிக்கிக்கொண்டது.
குடியானவன் வலையில் அகப்பட்ட பறவைகளை பிடிக்க தொடங்கியவுடன் நாரை வேடனிடம்....நீங்கள் எனக்கு கருணை காட்டுங்கள்.நான் உங்களுக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை,நான் கோழியோ, கொக்கோ அல்லது விதைகளைத்தின்னும் பறவையோ இல்லை, நான் நாரை,வயல்களுக்கு தீங்கு விளைவிக்கும் புழுக்களை மட்டுமே சாப்பிடுவேன், என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சியது.
குடியானவன் தாங்க முடியாத கோபத்தோடு நீ சொல்வது சரிதான்,ஆனால் நீ இன்று பறவைகளோடு பிடி பட்டிருக்கிறாய். எனது விதைகளை தின்ற பறவைகளின் தோழன் தானே நீயும் நீ இவைகளுடன் வந்ததனால் இவைகளுடனான தண்டனையை நீய்ம் அனுபவி என்றான்.
பறவைகளோடு சேர்ந்து வசித்ததினால் நாரையும் தண்டனையை அனுபவித்தது.
இக்கதை நமக்கு சொல்வது என்ன தெரியுமா...
ஒரு மனிதன் தான் சார்ந்துள்ள மனிதர்களை கொண்டே கணிக்கப்படுகின்றான்.அவனையும் அவன் உடன் ஒத்தவர்கள் போன்றே மதிப்பிடுகின்றனர்.,கெட்டவர்களுடன் வசிப்பதால் கெடுதல் செய்யாதவர்களுக்கும் தண்டனையும் கெட்ட பெயரும் ஏற்படுகின்றது. அதனால் தான் தொல்லை தந்த பறவைகளுடன் நல்லது செய்யும் நாரையும் சேர்ந்து தண்டனை அடைந்தது போல் பல மனிதர்கள் வாழ்விலும் நடக்கிறது.நாம் சேரும் இடம் அறிந்து சேர வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்
இது அனைவருக்கும் படிப்பினையான கதை நிச்சயமாக நாம் சார்ந்து வாழும் சமுகத்தை நல்லதாக தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் நாம் தவறு செய்யாவிட்டாலும் செய்பர்களுடன் இருந்தால் அது நாமும் செய்வதாக கருதப்படும்
Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்
நாரை கதை சூப்பர்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்
சிறுவர் கதை அருமை நிசா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்
நன்றிகள் பானு,
நன்றிகள் துறைவன் சார்!
நன்றிகள் துறைவன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்
நன்றி கெட்ட மான்
ஒரு காட்டில் கலை மான் ஒன்று இருந்தது. அங்கு நிறைய புலவெளிகள் இருந்தன. அவற்றை உண்டு அம்மான் சுகமாக வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் அங்கு வந்த வேடன் ஒருவன் அம்மானைக்கண்டான்.அக்கொழுத்த மானை கொல்ல விரும்பினான். அம்புடன் அதைத்துரத்தினான். இது கண்டு பயந்த மான் வேகமாக ஓடி ஒரு பெரிய புதருக்குபின்னே மறைந்து கொண்டது.
மானைத்துரத்தி வந்த வேடன் தீடீரென் மான் மறைந்ததை கண்டு ஆச்சரியப்பட்டான்.இங்கும் அங்கும் அலைந்து தேடினான். மானைகாணாமல் அருகில் உள்ள பெரிய மரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறினான்.
மறைந்து ஒளிந்திருந்த மான் வேடனைக்காணாமல் தனது அபாயம் நீங்கியது என்று எண்ணியது. ஓடி வந்த களைப்பால் அதற்கு அதிகப்பசியாய் இருந்தது. தன்னை மறந்து அப்புதரிலுள்ள இலைகளை தின்று தீர்த்தது. அதனால் அம்மானை மறைத்த புதர் காலியாகி அது இருக்கும் இடம் வெளியில் நன்றாக தெரிந்தது. தற்செயலாய் அப்பக்கம் திரும்பிய வேடன் மானைக்கண்டான். உடனே அம்பால் அதைகொன்றான்.
இறக்கும் தருவாயில் மான் என் உயிரைகாப்பாற்றிய புதரின் இலைகளை நன்றி கெட்டு நான் தின்றதால் எனககு இத்தீங்கு வந்தது என தனக்குள் நினைத்த படியே உயிரை விட்டது.
இக்கதை நமக்கு சொல்வதென்ன.
நமக்கு உதவி செய்தவர்களை நாம் எப்போதும் மறக்ககூடாது.
நன்றி மறப்பது நல்லதல்ல.
ஒரு காட்டில் கலை மான் ஒன்று இருந்தது. அங்கு நிறைய புலவெளிகள் இருந்தன. அவற்றை உண்டு அம்மான் சுகமாக வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் அங்கு வந்த வேடன் ஒருவன் அம்மானைக்கண்டான்.அக்கொழுத்த மானை கொல்ல விரும்பினான். அம்புடன் அதைத்துரத்தினான். இது கண்டு பயந்த மான் வேகமாக ஓடி ஒரு பெரிய புதருக்குபின்னே மறைந்து கொண்டது.
மானைத்துரத்தி வந்த வேடன் தீடீரென் மான் மறைந்ததை கண்டு ஆச்சரியப்பட்டான்.இங்கும் அங்கும் அலைந்து தேடினான். மானைகாணாமல் அருகில் உள்ள பெரிய மரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறினான்.
மறைந்து ஒளிந்திருந்த மான் வேடனைக்காணாமல் தனது அபாயம் நீங்கியது என்று எண்ணியது. ஓடி வந்த களைப்பால் அதற்கு அதிகப்பசியாய் இருந்தது. தன்னை மறந்து அப்புதரிலுள்ள இலைகளை தின்று தீர்த்தது. அதனால் அம்மானை மறைத்த புதர் காலியாகி அது இருக்கும் இடம் வெளியில் நன்றாக தெரிந்தது. தற்செயலாய் அப்பக்கம் திரும்பிய வேடன் மானைக்கண்டான். உடனே அம்பால் அதைகொன்றான்.
இறக்கும் தருவாயில் மான் என் உயிரைகாப்பாற்றிய புதரின் இலைகளை நன்றி கெட்டு நான் தின்றதால் எனககு இத்தீங்கு வந்தது என தனக்குள் நினைத்த படியே உயிரை விட்டது.
இக்கதை நமக்கு சொல்வதென்ன.
நமக்கு உதவி செய்தவர்களை நாம் எப்போதும் மறக்ககூடாது.
நன்றி மறப்பது நல்லதல்ல.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்
அழகும் ஆபத்தும்
ஒரு குளத்தில் பல வகையான மீன்கள் வாழ்ந்து வந்தன. அவற்றின் குஞ்சுகள் கரையோரம் கூடி எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
அதே போல் ஒரு நாள்;
ஏய் சிண்டு... என்னைப் பிடி பார்க்கலாம்.
என்கிட்டேயே சவாலா? இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன்.
அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருந்தது.
ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான்.
அவன் குரலை நீ கேட்டிருகிறாயா? அருவருப்பாக இருக்கும்.
அவன் நம்மைப் பார்த்தால் கொன்று விடுவான். வா போய்டலாம் என்று ஒரு குட்டி மீன் சொன்னதும், அனைத்தும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன.
உள்ளே செல்லும் போது ஒரு பெரிய மீன் கேட்டது; பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க?
கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு ? அதான்...
காகத்தாலே எந்த ஆபத்தும் இல்லே. உருவத்தை மட்டுமே வெச்சு ஒருத்தரைப் பற்றி தப்பா நினைக்கக் கூடாது.
உடனே மீன் குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம்.
அடுத்த நாள் வந்தது;
,குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது; அதை பார்த்த மீன் குஞ்சுகள்,
" ஏய் அங்கே பாரு வெள்ளையா... "
அட! என்ன பறவை அது?
வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா கச்சிதமா இருக்கு.
அடடே! அதனோட நடையைப் பாரேன்.
மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.
உடனே மீன் குஞ்சுகள்; அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா?
கொக்கு; ஓ! தொட்டுப் பாரேன்.
ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டினியா? என்றது.
மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. அது அசர வில்லை.
இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்தினுள் சென்றன.
அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.
மற்ற மீன் குஞ்சுகள் ; தாத்தா சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியடுத்து கொண்டன.
அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன.
இக்கதை நமக்கு சொல்வது என்ன தெரியுமா...
அழகுக்கு பின்னால் ஆபத்தும் இருக்குமாம். ஒய்யாரக்கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.
ஒரு குளத்தில் பல வகையான மீன்கள் வாழ்ந்து வந்தன. அவற்றின் குஞ்சுகள் கரையோரம் கூடி எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
அதே போல் ஒரு நாள்;
ஏய் சிண்டு... என்னைப் பிடி பார்க்கலாம்.
என்கிட்டேயே சவாலா? இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன்.
அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருந்தது.
ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான்.
அவன் குரலை நீ கேட்டிருகிறாயா? அருவருப்பாக இருக்கும்.
அவன் நம்மைப் பார்த்தால் கொன்று விடுவான். வா போய்டலாம் என்று ஒரு குட்டி மீன் சொன்னதும், அனைத்தும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன.
உள்ளே செல்லும் போது ஒரு பெரிய மீன் கேட்டது; பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க?
கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு ? அதான்...
காகத்தாலே எந்த ஆபத்தும் இல்லே. உருவத்தை மட்டுமே வெச்சு ஒருத்தரைப் பற்றி தப்பா நினைக்கக் கூடாது.
உடனே மீன் குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம்.
அடுத்த நாள் வந்தது;
,குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது; அதை பார்த்த மீன் குஞ்சுகள்,
" ஏய் அங்கே பாரு வெள்ளையா... "
அட! என்ன பறவை அது?
வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா கச்சிதமா இருக்கு.
அடடே! அதனோட நடையைப் பாரேன்.
மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.
உடனே மீன் குஞ்சுகள்; அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா?
கொக்கு; ஓ! தொட்டுப் பாரேன்.
ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டினியா? என்றது.
மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. அது அசர வில்லை.
இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்தினுள் சென்றன.
அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.
மற்ற மீன் குஞ்சுகள் ; தாத்தா சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியடுத்து கொண்டன.
அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன.
இக்கதை நமக்கு சொல்வது என்ன தெரியுமா...
அழகுக்கு பின்னால் ஆபத்தும் இருக்குமாம். ஒய்யாரக்கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» அழகும், ஆபத்தும்! – கவிதை
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» தமிழ் சிறுவர் கதைகள்
» படித்த சிறுவர் கதைகள்
» கதை ஒளியாம்... பேச்சு வழக்கில் சிறுவர் கதைகள்.. கேட்டுப்பாருங்கள்!
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» தமிழ் சிறுவர் கதைகள்
» படித்த சிறுவர் கதைகள்
» கதை ஒளியாம்... பேச்சு வழக்கில் சிறுவர் கதைகள்.. கேட்டுப்பாருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|