சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Khan11

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

+9
jaleelge
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
றஸ்ஸாக்
நண்பன்
ராகவா
கவியருவி ம. ரமேஷ்
rammalar
பானுஷபானா
13 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sat 22 Mar 2014 - 23:08

First topic message reminder :

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து  பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும்  தொகுக்கப்பட்டது.


இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்  
பெயர்களின் மேல் சுட்டவும்.

  1. செங்காந்தள்
  2. ஆம்பல்
  3. அனிச்சம்
  4. குவளை
  5. குறிஞ்சி
  6. வெட்சி
  7. செங்கொடுவேரி
  8. தேமாம்பூ
  9. மணிச்சிகை
  10. உந்தூழ்
  11. கூவிளம் பூ
  12. எறுழம்
  13. சுள்ளி
  14. கூவிரம்
  15. வடவனம்
  16. வாகை
  17. குடசம்
  18. எருவை
  19. செருவிளை
  20. கருவிளம்
  21. பயினி
  22. வானி
  23. குரவம்
  24. பசும்பிடி
  25. வகுளம்
  26. காயா
  27. ஆவிரை
  28. வேரல்
  29. சூரல்
  30. சிறுபூளை
  31. குறு்நறுங்கண்ணி
  32. குருகிலை
  33. மருதம்
  34. கோங்கம
  35. போங்கம்
  36. திலகம்
  37. பாதிரி
  38. செருந்தி
  39. அதிரல்
  40. சணபகம்
  41. கரந்தை
  42. குளவி
  43. மா
  44. தில்லை
  45. பாலை
  46. முல்லை
  47. குல்லை
  48. பிடவம்
  49. செங்கருங்காலி
  50. வாழை
  51. வள்ளி
  52. நெய்தல்
  53. தாழை
  54. தளவம்
  55. தாமரை
  56. ஞாழல்
  57. மௌவல்
  58. கொகுடி
  59. சேடல்
  60. செம்மல்
  61. சிறுசெங்குரலி
  62. கோடல்
  63. கைதை
  64. வழை
  65. காஞ்சி
  66. மணிக்குலை
  67. பாங்கர்
  68. மராஅம்
  69. தணக்கம்
  70. ஈங்கை
  71. இலவம்
  72. கொன்றை
  73. அடும்பு
  74. ஆத்தி
  75. அவரை
  76. பகன்றை
  77. பலாசம்
  78. பிண்டி
  79. வஞ்சி
  80. பித்திகம்
  81. சிந்துவாரம்
  82. தும்பை
  83. துழாய்
  84. தோண்றி
  85. நந்தி
  86. நறவம்
  87. புன்னாகம்
  88. பாரம்
  89. பீரம்
  90. குருக்கத்திப்பூ
  91. ஆரம்
  92. காழ்வை
  93. புன்னை
  94. நரந்தம் 
  95. நாகப்பூ
  96. இருவாட்சி
  97. குருந்தம் 
  98. வேங்கை
  99. புழகு



  1. மல்லிகையின் வெவ்வேறு இனங்கள
  2. விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள்
  3. குறுநறுங்கண்ணி போங்கம் திலகம் விதைகளின் வித்தியாசங்கள்!
  4. சங்ககால மலர்களின் பட்டியல் 


மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை  தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!

இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


Last edited by Nisha on Tue 18 Aug 2015 - 23:13; edited 27 times in total (Reason for editing : முதல் பதிவில் லிங்க இணைப்புக்காக)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 17 Oct 2014 - 22:05

இருள்வாசி


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Slide107

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Horti_flower20crops_malligai_clip_image002-1



நள்ளிருள் நாறி, இருள்வாசி என்பது மருவிஇருவாட்சி என வழங்கப்படுகின்றது. நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை செய்வது என்பதன் பொருள் படும்.
அனங்கம் என்றும் அழைக்கப்படும் ஒரு வகை அராபிய மல்லிகை. 
கருமுகை என்றும் அழைக்கப்படும் இரவில் மலரும் மணம் மிக்க சிறு வெண்ணிறப்பூ; அவ்வகைப்பூவைத் தரும் கொடி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 17 Oct 2014 - 22:23

மல்லிகை

குறிஞ்சிப்பாட்டில் பாடப்ப‌ட்ட‌ ம‌ல்லிகையின் வெவ்வேறு இன‌ங்க‌ள் 

முல்லை[*அடுக்கு மல்லிகை]
தளவம்[*செம்முல்லை]
பித்திகம்[*பிச்சிப்பூ]
செம்மல்[*சாதிமல்லிகை]
மௌவல்
சேடல்[*ப‌வளமல்லி]
கொகுடி
இருள்வாசி[*நள்ளிருள்-நாறி]
நந்தி

மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.

தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை வன மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை/பாம்பே வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.

ஜாஸ்மினம் என்று பண்டைய ஃபிரஞ்சு மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் யாஸ்மின் என, அதாவது "கடவுளின் பரிசு"எனப் பொருள்படுவதாக, அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள் மற்றும் கொடிகள் சார்ந்த ஒரு பேரினம். இதில் மொத்தமாக 200 இனங்கள் உள்ளன. இவை பண்டைய உலகில் (அதாவது அமெரிக்கா என்னும் நாடு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் அறிந்திருந்த உலகப் பகுதிகள்) மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. இவற்றின் இலைகள் என்றும் பசுமை மாறாமலோ (அதாவது வருடம் முழுதும் பச்சையாகவே) அல்லது (கூதிர்ப் பருவத்தில் உதிரும்) உதிரிலைகளாகவோ இருக்கலாம்.

இதில் பின்வரும் இனங்கள் அடங்கும்:

01. •ஜாஸ்மினம் அபிசினியம் ஹொகெஸ்ட். எக்ஸ் டிசி. – காட்டு மல்லி
02. •ஜாஸ்மினம் டிகோடோனம் வாஹில் – தங்கக் கடற்கரை மல்லிகை
03. •ஜாஸ்மினம் கிராண்டிஃபிளோரம் L. – ஸ்பானிசிய ஜாஸ்மின், ராயல
       ஜாஸ்மின்,காட்டலோனியன் ஜாஸ்மின்
04. •ஜாஸ்மினம் ஹியுமைல் எல். – இத்தாலிய மஞ்சள் மல்லிகை
05. •ஜாஸ்மினம் லான்சியோலாரியம் ராக்ஸெப்.
06. •ஜாஸ்மினம் மென்சியி ஹான்ஸ் – ஜப்பானிய மல்லிகை,
       மஞ்சள் வண்ண மல்லிகை,   மஞ்சள் ஜாஸ்மின்
07. •ஜாஸ்மினம் நெர்வோசம் லௌர்.
08. •ஜாஸ்மினம் ஓடோராடிசியம் எல். – மஞ்சள் மல்லிகை
09. •ஜாஸ்மினம் அஃபிசினேலி எல். – வழக்கமான மல்லிகை,
      [கவியின் மல்லிகை,ஜாஸ்மின்,        ஜெஸாமின்
10. •ஜாஸ்மினம் பார்கெரி டுன் – குள்ள மல்லிகை
11. •ஜாஸ்மினம் பாலியாந்தம் ஃபிராஞ்ச்.
12. •ஜாஸ்மினம் சாம்பாக் (எல்.) ஐட்டன் – அராபிய மல்லிகை
13. •ஜாஸ்மினம் சினென்சி ஹெம்செல்.
14. •ஜாஸ்மினம் யூரோஃபில்லம் ஹெம்செல்
15. • ஜாஸ்மினம் அடின்னோஃபில்லம் சுவர் – பின்வீல் ஜாஸ்மின், பிளூகிரேப் ஜாஸ்மின், பிரின்சஸ் ஜாஸ்மின், செ வாங்க், லாய் லா கோ டுயென்

இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் (ரோஜா மற்றும் இதர மலர்களைப் போல பிரபலமாக) இல்லத்து பூசைகளிலும், (இல்லத்துப் பெண்களும் சிறுமிகளும்) தலையில் சூடிக் கொள்ள வீட்டுத் தோட்டங்களிலும், வீட்டைச் சுற்றிலும் பானைச் செடியாகவும் வளர்க்கின்றனர். மேற்கூறிய அனைத்துப் பயன்பாடுகள் மற்றும் (வாசனைத் திரவியத் தொழில் போன்ற) இதரப் பயன்பாடுகளுக்காக விவசாய நிலங்களில் விற்பனைக்காகவும் பயிராகிறது.

தெலுங்கு மொழியில் இதை மல்லே என அழைக்கின்றனர். இரு மலரொட்டியுள்ள மல்லிகை குண்டு மல்லே எனப்படுகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை தொடங்கி தெற்காக இந்தியாவின் பல இடங்களிலும் மல்லிகை மலரை விற்போர், நகர வீதிகள், கோயில் சுற்றுப்புறங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பெரும் வணிகவிடங்கள் போன்றவற்றில் அதனை ஆயத்த மாலைகள் என்றாகவோ அல்லது மோத்தியா அல்லது மொகாரா என்னும் அதன் அடர் வகையின் மலர்க் கொத்துக்களை அவற்றின் எடையின் அடிப்படையிலோ விற்பதைக் காணலாம்.

இது கொல்கொத்தாவிலும் அன்னியமான காட்சியல்ல. வடமாநிலப் பெண்களும் சிறுமிகளும் பொதுவாக கூந்தலில் மலர்களைச் சூடுவதில்லை என்பதால், தெருவோர விற்பனைகள் அங்கு குறைவாகவே காணப்படும்.

மல்லிகை மலரைப் பெண்கள், அதன் மணம் மற்றும் அழகுக்காகவே தம் கூந்தலில் சூடுகின்றனர். மேலும், இது திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் மலர் அலங்காரங்களுக்கும் பயன்படுகிறது.


      ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மல்லிகை தேசிய மலராகும். இங்கு அது சமப்கியுட்டா என்று வழங்குகிறது. பொதுவாக, மத ரீதியான பிம்பங்களுக்குச் சூட்டப்படும் மாலைகளில் பயன்படுகிறதுஇந்தோனேஷியா நாட்டில் ஜாஸ்மின் சாம்பக் இனம் "புஷ்ப பங்க்ஸா "வாக (தேசிய மலர்) "மெலட்டி " என்னும் பெயர் கொண்டுள்ளது இந்தோனேஷியாவின் பழங்குடியினருக்கு, குறிப்பாக ஜாவா தீவில் வசிப்போருக்கு, திருமணம் போன்ற நிகழ்வுகளில் இது முக்கியமான மலராகும்.பாகிஸ்தான் நாட்டில் ஜாஸ்மினம் அஃபிசினேலி , "சம்பேலி " அல்லது "யாஸ்மின் " என அழைக்கப்படும் இது அந்நாட்டின் தேசிய மலர் ஆகும்.சிரியா நாட்டில் இது டமாஸ்கஸ் நகரின் குறியீட்டு மலராகும். இந்த நகரே மல்லிகை நகர் என அழைக்கப்படுகிறது.ஜே.ஃபிளூமினென்ஸ் , ஹவாய் நாட்டில் ஒரு ஊடுருவி இனம் என்பதாக உள்ளது. இங்கு இது சில நேரங்களில், அவ்வளவாகத் துல்லியமற்றதான, "பிரேசிலியன் மல்லிகை" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.ஜே.டிகோட்டம் என்பது ஃபுளோரிடாவிலும் ஊடுருவியுள்ளது.தாய்லாந்து நாட்டில், மல்லிகை மலர்கள் அன்னை என்னும் கருத்துருவின் சின்னமாகப் பயன்படுகின்றன.ஜப்பான் நாட்டின் ஓகினாவாவில், மல்லிகைத் தேநீர் சன்பின் ச்சா (さんぴん茶) எனப்படுகிறது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Thu 13 Nov 2014 - 3:22

குருக்கத்திப்பூ


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Slide101

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Madhavi20Lata-1

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 45c098

குருக்கத்தி ஒரு படர்க்கொடியாகும். வெள்ளை இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் மலர்கள் மற்றும் ஹெலிகாப்டர் போன்ற பழங்களோடு கொத்து கொத்தாக பூக்கும். வாசனை தரும் மலரிது. மாதவிக்கொடி என அழைக்கப்டும் குருக்கத்தி அரும்புகளையும் தளிர்களையும் கொண்டு மணம் வீசி மாமரத்தின் கிளையினைத் தழுவிப்படர்வதாக சங்கப்படல்கள் குறிப்பிடுகின்றன. 

கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம், புண், பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாகும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Thu 13 Nov 2014 - 3:24

ஆரம்


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Slide102

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 220px-Santalum_album_-_KC3B6hlerE28093s_Medizinal-Pflanzen-128

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Sandalwood

ஆரம் என குறிஞ்சிப்பாட்டில் அழைக்கபடுவது இக்கால சந்தனமரமஆகும்.

சந்தனம் மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.

மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.

இதன் தாயகம் இந்தியா. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது.தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும்.

இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம்விட ஆரம்பிக்கும். இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.

தேக்கு,கடம்பு,மஞ்சள் கடம்பு,தோதகத்தி,சந்தனம் போன்ற மரங்கள் எல்லாம் இயற்கை தந்த வரம். இவை வானிலிருந்து மழையை ஈர்த்து மனிதனுக்கு சிற்றோடையாக, ஆறாக தருகின்றன. காற்றை தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன. மலைவாழ் ஆதிவாசிகள் தேன்சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Thu 13 Nov 2014 - 3:25

காழ்வை

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Slide103

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Eagle-wood-fruit

காழ்வை என குறிஞ்சிப்பாடில் கூறப்பட்டிருக்கும் அகில் முதன்மையாக அதன் கட்டைகளுக்காகப் பெறுமதி மிக்கதாகக் கருதப்படும் தாவர இனம் ஒன்றாகும்.

அகில் சந்தன மர வகையைச் சார்ந்தது. அகில் கட்டை இலேசான இனிப்பும், கசப்பும் கலந்த சுவை உடையது. உடலின் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. சுமார் 60 முதல் 75 அடி வரையிலும் வளரக் கூடிய மரம். இம்மரங்களில் ஒருவித பிசின் இருக்கிறது. அதுவே அகில் எனப்படுகிறது.

இந்தியாவில் அஸ்ஸாம் காடுகளிலும், கம்போடியா, பர்மாவிலும் அதிகம் காணப்படுகிறது. மருத்துவ முறைப்படி பக்குவம் செய்து சாப்பிட நரை, திரை போன்ற முதுமைக்கால சருமக் குறைபாடுகளை அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

இது வங்காளதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், லாவோசு, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. இது வளரும் இடங்களின் இழப்புக் காரணமாக இது அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தனம் போன்று நறுமணம் கொண்டது. பண்டைக் காலங்களில் அகிற்புகையூட்டி கூந்தலை உலர்த்தியிருக்கிறார்கள். இதிலிருந்து வடிக்கப்படும் தைலம் “அகர் அக்தர்” எனப்படுகிறது. இது தனியாகவும், பல உயர்ந்த வாசனைப் பொருள் தயாரிப்பில் கூட்டுப் பொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவம், ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலும் சிறப்பிடம் பெறுகிறது.

அகில் நறுமணப் பொருட்களின் தயாரிப்புக்காகப் பெறப்படும் அகிற்கட்டைகளின் முதன்மையான வளப்பொருள் ஆகும்.இதன் தண்டுப் பகுதியின் சுரப்பான அகிற் பிசின் நறுமணமானது ஆகும்.உண்மையில் அகிற் பிசின் சுரக்கப்படுவது கரிய பூஞ்சண வகையொன்று இம்மரங்களைத் தொற்றுகையில் அதனை எதிர்ப்பதற்கான விளைபொருளாகவேயாகும்.

அகில் கட்டையை பசும்பால் விட்டு சந்தனம் அரைப்பது போல் அரைத்து, விழுதை சருமத்திற்கு தொடர்ந்து பூசி வர, சருமத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கும்.

ஊளைச் சதை உள்ளவர்கள் இந்த விழுதை தொடர்ந்து உடலில் பூசி வர ஊளைச் சதைக் குறைந்து இறுகி, உடல் வனப்புடன் விளங்கும் என மருத்துவக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

வெப்பத்தைத் தூண்டும், பித்தத்தைப் பெருக்கும், வீக்கங்களை வடிக்கும் செய்கையுடையது. வயோதிகத்தால் உண்டாகும் தேகத் தளர்ச்சியைப் போக்கி உடம்பை இறுக்கும். சந்தனம் போல அகிற்கட்டையை உரைத்து மேனியில் பூசிவர, வயோதிக மேனித் தளர்ச்சி நீங்கும். ஆண்மை விருத்தியில் அகிற்கட்டையும் பங்கு கொள்ளும்.

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திரு காறாயில்
ஆர்த்தானே என்பவர் மேல்வினை யடராவே.
- திருஞானசம்பந்தர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Thu 13 Nov 2014 - 3:27

புன்னை

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Slide104

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Sultan20Champa

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Sultan20Champa-1

புன்னை (calophyllum inophyllum) மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்று பெரியதாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்தூள் பகுதியும் கொண்டது. புன்னை மரத்தின் அறிவியற் பெயர் calophyllum inophyllum என்பதின் முதற்பகுதி calophyllum என்பதன் பொருள் அழகான இலை. calo என்பது கிரேக்கச் சொல்லான καλός (காலோசு), என்பதில் இருந்து பெற்றது. அதன் பொருள் அழகானது, அருமையானது என்பது. phyllum (φύλλον) என்பது இலை.

புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில் நன்கு வளரும். கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும். இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும் உருண்டையான உள் ஓடு உள்ள சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம். இது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும். இதன் பூக்கள் அழகாக இருக்கும். பூவின் அகலம் 25 எம். எம். ஆகும். ஒரு கொத்தில் 4 - 15 பூக்கள் இருக்கும். இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும். ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும். புன்னை மரத்திற்கு ஆங்கிலத்தில் ‘Ballnut’ என்று சொல்வார்கள்.

இதன் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்கா.இது இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகள், மியன்மார், மலேசியா, ஆத்திரேலியா, இலங்கை, கிழக்காபிரிக்கக் கரையை அண்டிய தீவுகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இது ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது. இந்தியாவில் மும்பாய்க்கும் இரத்தினகிரிக்கும் இடைப்பட்ட பகுதியிலும், அந்தமான் தீவுகளிலும் பெருமளவில் காணப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் கடற்கரையோரப்பகுதிகளில் காணலாம்.

இதன் தோற்றம் காரணமாக, நகரப் பகுதிகளில் அழகுக்காக சாலையோரங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றது.

இந்தியாவில் தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. பழங்கால இலக்கியங்களில் புன்னை மரம் பற்றிக் காணப்படுகிறது.புன்னை மரம் அழகிற்காகவும் வளர்க்கப்படுகிறது.

சோதிடத்தில் ஆயில்ய நட்சத்திரத்தின் மரம் புன்னை. இது நோயைகுணமாக்கும் மரமாக விளங்கியுள்ளது. புன்னை கோயில்கள், சர்ச்சுகளிலும் வளர்க்கப்படுகிறது. கேரளம் தமிழ்நாட்டில் கோயில்களில் காணப்படுகிறது. புன்னை மரம் வலுவானது. இந்த மரத்தில் படகுகள் செய்வார்கள். வீடுகள் கட்டவும் பயன்படுத்துவார்கள். இதன் எண்ணெயில் ஆதிகாலத்தில் விளக்குக்குப் பயன் படுத்தினார்கள். தற்போது இதை பயோடீசல் தயார் செய்து டீசலுக்ககுப் பதிலாகப்பயன் படுத்துகிறார்கள்.. காட்டாமணக்கு, புங்கன், சொர்க்கமரம், வேம்பு மற்றும் இலுப்பை மரங்களில் கிடைக்கும் விதை போன்று இதன் விதையும் பயன் படுகிறது. புன்னை விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :- புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம் ஆகியவைகளைக் குணப்படுத்தும்

உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை
(நற்றிணை-231


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Thu 13 Nov 2014 - 3:29

நரந்தம்

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Slide105

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Lemongrass1

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 LEMON_GRASS

நரந்தம் என்பது ஒருவகை மலர்.இந்த நரந்தத்தைப் புல் என்பர்.

இது கிழக்கு இந்திய Lemongrass (மேலும் கொச்சி புல் அல்லது மலபார் புல் என்று அழைக்கப்படுகிறது),

வேறு பெயர்கள் :வாசனை புல் ,எலுமிச்சை புல் ,இஞ்சி புல்

லெமன் கிராஸ் ஆயில் இதனிலிருந்து தயாரிக்கபடுகிறது -இந்த லெமன் கிராஸ் ஆயில் இந்த புல்லை பதங்கமாதல் முறையில் தயாரிக்கபடுகிறது

லெமன் கிராஸ் ஆயில் -மன சோர்வுக்கு,புஞ்சை மற்றும் பாக்டீரியாகளை அழிக்க பயன்படும் விதத்தில் உள்ளதால் பல வகையில் உபயோகமாகிறது பல தோல் வியாதிகளிலும் ,தாய்ப்பால் சுரக்கவும் ,வலிகளை நீக்கவும் பயன்படுகிறது

இப்புல்லிலிருந்து எடுக்கபடும் எண்ணெய் மூலம் சோப்புகள், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு, சிட்ரால் வைட்டமின் ‘ஏ’ போன்ற வேதிப் ரொருட்கள் எடுக்கப் பயன்படுகின்றன. கிருமி நாசினியாக பயன்படுகிறது. பூச்சிக்கொல்லியாகவும் பயன் படுகிறது.

எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய புல் மாட்டுத் தீவனமாகவும், காகிதங்கள், அட்டைப் பட்டிகள் தயாரிக்கவும், எரிபொருளாகவும் பயன் படுகிறது. இந்தப் புல்லிருந்து சூப் செய்கிறார்கள், இறைச்சி, மீன் வகைகளில் உபயோகிக்கிறார்கள்.

கொசுவை விரட்டும் புல்லாக "லெமன் கிராஸ்' எனப்படும் "எலுமிச்சைப் புல்' உள்ளது. இதன் மணம் எலுமிச்சையைப் போன்றே இருக்கும். இந்தப் புல்லை வளர்த்தால், கொசுக்கள் வராது.

இந்தப்புல்லில் இருந்து எடுக்கப்படும் லெமன் கிராஸ் எண்ணெய், துணி துவைக்கும் பவுடர், பாத்திரம் துலக்கும் பவுடர், புளோர் கிளினர், பினாயில் போன்றவற்றுடன் சேர்க்கப்படுகிறது. லெமன் டீ தயாரிப்பில் எலுமிச்சை சாறுடன் நறுமணத்துக்காக லெமன் கிராஸ் ஆயிலும், சில இடங்களில் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சைப்புல் கேரளாவில் தான் அதிகமாக விளைவிக்கப்படுவதால், லெமன் கிராஸ் ஆயிலை கொச்சி வாசனை எண்ணெய் எனவும் அழைப்பர்.

லெமன் கிராஸ் ஆயில், கொடைக்கானலில் அதிகமாக விற்கப்படுகிறது. இது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். கெமிக்கல் கடைகளில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட லெமன்கிராஸ் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது. கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்தப்புல் பயிராகிறது.

புற்று நோயின் செல்களையும் அழிக்க உதவுவதாக ஆராய்சிகள் தெரிவிக்கிறது .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by சுறா Thu 13 Nov 2014 - 11:36

முதல் பக்கத்தில் 99 மலர்கள் பெயர் பட்டியில் 89 மலர்கள் பெயர் தான் இருக்கு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Thu 13 Nov 2014 - 11:41

இன்னும்  முடிக்கவில்லை சுறா!

பதிவு இட்டபின் தேடலுக்கு இலகுவாக முதல் பதிவில் லிங்க் வருகின்றது. இரவு  ஐந்து பூக்களை குறித்து எழுதினேன்! இன்னும் நான்கையும் பதிந்து விட்டு   மொத்தமாய் லிங்க் இணைத்து விடுவேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by சுறா Thu 13 Nov 2014 - 11:59

Nisha wrote:இன்னும்  முடிக்கவில்லை சுறா!

பதிவு இட்டபின் தேடலுக்கு இலகுவாக முதல் பதிவில் லிங்க் வருகின்றது. இரவு  ஐந்து பூக்களை குறித்து எழுதினேன்! இன்னும் நான்கையும் பதிந்து விட்டு   மொத்தமாய் லிங்க் இணைத்து விடுவேன்!

ஓ அப்படியா? சரி சரி. காத்திருக்கிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 22:36

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Slide108-1குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 210px-Citrus_leaves
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 800px-Citrus_hystrix_dsc07772

எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. தென் இந்தியா, இலங்கை நாடுகளில் காணப்படுகிறது. ஒடிசா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அந்தமான் தீவுகளிலும் இது வளர்கிறது.இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை காணலாம் .

எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு வளரும். இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு.கொத்தான வெண்ணிற மலர்களையும் உருண்டை வடிவக் காய்களையும் உடைய முள்ளுள்ள எலுமிச்சை இன மரம். காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்பெறும். இதில் சிறுகுருந்து, பெருங்குருந்து எனும் வகைகள் தமிழகக் காடுகளில் காணப்படுகின்றன. 

எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். 

இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது. வழிபாட்டிலும், வரவேற்பிலும் முதன்மை வகிக்கிறது.விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பழங்காலத்தில் காடுகளில் கிடைக்கும் தாவரங்களே மருந்து போல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கும் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வனங்களில் கிடைக்கும் மூலிகைகளையே மருந்தாக உட்கொள்கின்றனர். 

அந்த வகையில் சிறியவகை மரமான காட்டு எலுமிச்சையானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதன் இலைகள், வேர், கனிகள் மருத்துவப் பயன் கொண்டவை.



    பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், இலைகளின் கசாயம் தோல் வியாதிகளுக்கு மருந்தாகிறது. வேர் கிருமிகளுக்கு எதிரானது. தசை பிடிப்பு வலி போக்குவது. வீக்கங்கள் மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது.செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் எலுமிச்சையில் உண்டு. இத்தாவரத்திலிருந்து எளிதில் ஆவியாகும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் பல வேதிப்பொருட்கள் உள்ளன.கனிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மேல் பூச்சாகிறது. கனிகளின் எண்ணெய் காய்ச்சல் போக்கும், பக்கவாதம் மற்றும் மூட்டுவலிக்கு தடவப்படும்.இத்தாவரம் காய்ச்சல் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ருசி மற்றும் பசி தூண்ட உதவுகிறது. இது உடல் வண்ணத்தை ஒளிரச்செய்யும் என்றும் விந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்க வல்லது எனவும் இராஜநிகண்டு என்னும் மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். தினமும் சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.எலுமிச்சை யூஸாகவும் செய்து அருந்துவார்கள். சமையலுக்கு புளிப்பு சுவையூட்ட உப்போடு புளியாக இதையும் சேர்ப்பர். கனிகள் ஊறுகாயாகத் தயாரிக்கப்படுகிறது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 22:38

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Slide109

வேங்கை (Pterocarpus marsupium) எனப்படுவது நடுத்தர அளவிற் பெரியதான இலையுதிர் தாவரம் ஒன்றாகும். இது 30 மீ உயரம் வரை வளரக் கூடியது. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதான இம்மரம் இந்தியாவின் கேரள-கருநாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது. 

வாட்டி எடுக்கும் கோடையிலும் பூமியின் வெம்மையை உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியைத் தரும் விசேஷ சக்திகொண்ட மரம் இது.

பல ஆலயங்களில் தல விருட்சமாக வேங்கை மரம் இருக்கும். மருத்துவக் குணங்களில் அசாத்திய ஆற்றல் படைத்த வேங்கை மரத்தை நலவிருட்சம் என்றாலும் தகும்

வேங்கை மரத்தின் (வைரம், இலைகள், பூக்கள் உட்படப்) பல்வேறு பகுதிகளும் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.


      வேங்கை மரவைரம் காயங்களை மூடவும், எரிவு மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சிமிலிப்பால் தேசிய வனப் பகுதியில் வாழும் கொல் இனத்தினர் வேங்கை மரப் பட்டையை மா மரப் பட்டை உட்பட வேறு சில மரங்களின் பட்டைகளுடன் அரைத்து பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்கன்னட மக்கள் வேங்கை மரவைரத்தால் ஒரு வகையான கண்ணாடி செய்து அதனை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.


''வேங்கை மரப் பட்டையில் உள்ள டிரோசிலிபின் (Pterosylebene) என்கிற வேதிப் பொருள், சர்க்கரைநோயைக் குணப்படுத்தும் வல்லமைகொண்டது.கணையத்திலிருந்து இன்சுலினை மீளச் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும்.


      மருத்துவ தகவல்கள் ஆட்களுக்கு ஏற்ப மாறுபடலாம். அதனால் தகுந்த ஆலோசனையின் பின்னரே பயன் படுத்தவும்.நிஷா


தோல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் வேங்கை மரப்பட்டையின் வீரியம் அதிகம். வேங்கைப் பட்டை, சீரகம், சோம்பு, மஞ்சள் கலந்து கொதிக்கவைத்த கஷாயத்தை ஒரு மாதத்துக்குதினமும் அரை டம்ளர் என்ற அளவில் குடித்துவந்தால், தேமல், கருந்தேமல், படை, சொறி, படர்தாமரை, கட்டி போன்ற சரும நோய்களும் குணமாகும். வேங்கைப் பட்டை, மருதம் பட்டை, வேப்பம்பட்டை, சந்தனம், ஆவாரம் பூ, தாமரைப்பூ, செம்பருத்திப் பூ, கடுக்காய் பூ, மகிழம்பூ, நெல்லிக்காய், தான்றிக்காய், பச்சைப் பயறு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் கலந்து அரைத்து பொடியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படக் கூடிய உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமையால் உண்டாகக் கூடிய சருமத் தடிப்புகளுக்கும் வேங்கைப் பட்டைக் கஷாயம் நல்ல மருந்து.

உடல் முழுவதும் கொழுப்புக் கட்டிகள் உருவாகி அவஸ்தைப்படுபவர்களுக்கு நவீன மருத்துவ முறைப்படி அறுவைச் சிகிச்சைதான் தீர்வாக இருக்கும். ஆனால், உடல் முழுக்க உருவாகி இருக்கும் இந்தக் கட்டிகளுக்கு எத்தனை இடத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். இதற்கு சிறந்த தீர்வு வேங்கை மரத்தின் இலையும், பூவும். வேங்கை இலை, வேங்கைப் பூ, மகிழம்பூ, ஆவாரம்பூ, வேப்பம்பூ, மாதுளம்பூ ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். 

தினமும் தேவையான அளவு எடுத்து, வெந்நீரில் கரைத்து, உடம்பில் தொடர்ந்து பூசிக் குளித்து வந்தால், கொழுப்புக் கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும். வேங்கைப் பட்டையைத் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகப் பருகினால், சீதபேதி, உஷ்ணபேதி போன்றவை உடனே குணமாகும்''.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 22:40

வேம்பு
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 240px-Neemtree
ராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி என‌ ப‌ல்வாறு அழைக்கப்‌ப‌டும் வேம்பு (Azadirachta indica). வேம்பு என்பது வேப்ப மரம்.

வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானுமாம். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது.இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். 

வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணையும் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது.

ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும்.

இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள். 

வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம். இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :

[*]வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகளை குணப்படுத்தும்.

[*]வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

[*]வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

[*]வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

[*]வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.

[*]வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

[*]நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்

[*]நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

[*]வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

[*]வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.

[*]காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஜக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 22:45

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Slide110

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Crown20Flower-1

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Crown20Flower
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Crown20Flower-2

புழகு தமிழில் எருக்கு எனப்படும் குறுஞ்செடியாம். கம்போடியா, இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இலங்கை, இந்தியா மற்றும் சீனா வளரக்கூடிய Calotropis ஒரு இனமாகும்.எருக்கு என்பதை Calatropis Indica என்று சொல்வார்கள்.

எருக்​கை சமஸ்க்ருதத்தில் அர்க என்பர்.எருக்கு, அகன்று எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய பெரிய நேராக வளரும் பாலுள்ள குறுஞ்செடியாகும். எருக்கு புதர் போன்று வளரும் ஒரு செடி. அதில் இரண்டுவகையுண்டு.இரண்டு செடிகளும் பார்ப்பதற்கு ஒன்றுபோன்றே காணப்படும்.

செடி முழுமையும் மென்மையான வெள்ளைக் கம்பளியால் மூடப்பட்டு இருக்கும். விதைகள் பஞ்சுடன் இணைந்திருப்பதால் காற்றில் பறக்கக் கூடியவை.எருக்கின் பூ கொஞ்சம் கத்திரிப்பூ வண்ணத்தில் இருக்கும். சிவபெருமான் சூடியிருக்கும் மலர்களில் எருக்கம்பூவும் உண்டு. சிலவகையான விநாயகர் பூஜைகளிலும் பயன்படுத்துவார்கள். 

தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்வது. வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கே மருத்துவத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது. இதன் இலைகள்,​​ பூக்கள்,​​ வேர்,​​ பட்டைகள்,​​ எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.

இலை நஞ்சு நீக்குதல், வாந்தியுண்டாக்குதல், பித்தம் பெருக்குதல், வீக்கம்-கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களையுடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்குதல், முறைநோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது. பால் புண்ணுண்டாக்கும் தன்மை கொண்டது. 

எருக்கம்பூவினால் செய்த மருந்து -சுவாசகுடாரி மாத்திரை -சளி ,இளைப்பு ,சுவாசம் போன்ற நோய்களை தீர்க்கும்.

கிராமப்புறங்களில் காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால் அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவுவர். இதனால் வலி குறைவதுடன் முள் குத்திய இடம் விரைவில் பழுத்துச் சீழ் வெளியே வரும். அத்துடன் முள்ளும் வந்துவிடும். குதிகாலில் வலி வந்தால், செங்கல்லைச் சூடாக்கி அதன்மீது பழுத்த எருக்கிலையை வைத்து அதன்மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும். உடம்பில் கட்டிகள் தோன்றி உடையாமல் வேதனை கொடுத்தால் எருக்கு இலையை நெருப்பில் வாட்டி, தாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும். எருக்கஞ் செடியின் குச்சியை, கருப்பைக்குள் செலுத்துவது கொடூரமான கருச்சிதைவு முறைகளில் ஒன்றாக உள்ளது.

வெள்ளெருக்கம்பூ Bronchitis, asthma ஆகியவற்றுக்குச் சிறந்தது. வெள்ளெருக்கம்பூ சட்டென்று பார்த்தால் மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்.இது கடுமையான விஷத்தன்மை கொண்டது.வெள்ளெருக்குச் செடி பெரிதாக இருக்கும். பெயருக்கு ஏற்றாற்போல வெள்ளையான பூக்கள் பூக்கும். இந்தச் செடி இருக்கும் இடத்திற்கு பாம்பு வராது.

எருக்கஞ்செடி எங்கும் இருக்கும். ஆனால் வெள்ளெருக்குக் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும். எல்லா இடத்திலும் இருக்கவும் மாட்டாது. அது ஐந்தடி அல்லது ஆறடி உயரமாவது இருந்து அதே அளவு அகலமுள்ள பரப்பும் இருந்தால்தான், அதன் வேர் போதுமான அளவுக்குத் தடிமனாக இருக்கமுடியும். சிறிய செடிகளின் வேர் சிறிய குறுக்களவே பெற்றதாக இருக்கும்.

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டது வெள்ளெருக்கு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 22:51

குறுநறுங்கண்ணி
போங்கம் 
திலகம்

போன்ற‌ ம‌ல‌ர்க‌ளின் விதைக‌ள் பார்க்கும் போது ஒரே மாதிரி இருந்தாலும் அவைகளுக்கிடையிலான வித்தியாசங்களை இங்கே காணலாம். 

ஒரே மாதிரி தோற்றம் தரும் விதைகள், தாவரவியல் பெயர்களோடு 

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Sdnck6b
A. Erythrina caffra
B. Erythrina sp.
C. Ormosia monosperma
D. Ormosia cruenta
E. Rhynchosia sp.
F. Rhynchosia precatoria
G. Rhynchosia sp.
H. Abrus precatorius
I. Adenanthera pavonina
J. Sophora secundiflora


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 22:53

விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள் காண்க.. 

குறுநறுங்கண்ணி
Abrus precatorius 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Sdnck5b


போங்கம்
Ormosia travancorica Bedd
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 22_Ormosia20travancorica20pod20with20seedDSC_6020_KalyanVarma

Ormosia monosperma
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Ormosi1b

Erythrina sandwicensis
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Wili2b


திலகம்

Adenanthera pavonina 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 800px-Adenanthera_pavonina_seeds


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 22:58

சங்ககால பாடல்களில் பட்டியலிடபட்டிருக்கும் மலர்களை காண்போம். 

அடும்பு, அதிரல், அந்தி, அலரி, அவரை, அனிச்சம் , ஆத்தி, ஆம்பல், ஆரம், ஆவிரை, இருப்பை, இருவாட்சி, இலவம், ஈங்கை, உந்தூழ், உழிஞை, உன்னம், ஊகு, எருக்கு, எருவை, எறுழ், கடம்பு, கணவீரம், கரந்தை, கரும்பு, கருவிளை, கழுநீர், காஞ்சி, காந்தள், காயா, காவி, காளாம்பி, காழ்வை, குடசம், குமிழ், குரவம், குரக்கத்தி, குருந்து, குல்லை, குவளை, குளவி, குறிஞ்சி, குறுநறுங்~ கண்ணி, கூதாளம், கூவிரம், கூவிளம், கொகுடி, கொன்றை, கோடல், கோங்கு, கைதை, சண்பகம், சிறு செங்குரலி, சிந்துவாரம், சிறுமாறோடம்,சுள்ளி, செருவிளை செருந்தி, செச்சை, செம்மல், சேடல், சூரல், ஞாழல், தணக்கம், தளவம், தாழை, தாமரை, தில்லை, திலகம், தெறுழ், தேமாம்பூ, தேறு, தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நரந்தம், நறவம், நாகம், நீலம், நுணவம், நெருஞ்சி, நெய்தல், நொச்சி, பகன்றை, பயினி, பரேரம்,புழுகு, பலாசம், பனை, பாங்கர், பாதிரி, பாலை, பாளை, பிடவு, பிண்டி, பித்திகம், பீர்க்கு, புன்கம், பின்னை, பூளை, -2- போங்கம், மணிச்சிகை, மரவம், மருது, மல்லிகை, முகிழ், முண்டகம், முசுண்டை, முந்தூழ், முருக்கு, முருங்கை,முல்லை, மௌவல், வகுளம், வஞ்சி, வடவனம், வழை, வள்ளி, வாகை, வாழை, வானி, வெட்சி, வெள்ளோத்~ திரம், வேங்கை, வேம்பு, வேரல், வேரி, வேழம், வேளை என்பன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 23:11

மலர்களின் வகை
சங்க இலக்கிய மலர்களை நிலப்பூ, நீர்ப்பூ என்ற இரு வகையுள் அடக்கலாம்.

நிலப்பூக்களைக் கொடிப்பூ, கோட்டுப்பூ, செடிப்பூ, புதற்பூ, புற்பூ என்றும் வகைபடுத்துவர். சங்கப் புலவர்தம் பாடல்களிலேயே, கயப்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ, புதற்பூ என்ற பகுப்பு முறை அமைந்திருப்பதைக் காணலாம்.

புறப்பாட்டு, கலித்தொகை அடிகள் புதற்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ, கயப்பூ வினங்களுக்குச் சான்று பகர்ந்து நிற்கின்றன.

சங்க இலக்கியங்களில் ஓரினப்பூவிற்கே பல பெயர்கள் வழங்குவதையும் நாம் காணமுடியும். ஆனால் அப்பெயர்கள் அவற்றின் நிறவேறுபாடுகளை உணர்த்துவதாக அமைந்திருக்கும்.


      உதாரணமாக தோன்றி, காந்தள், கோடல் இவற்றைக் குறிக்கலாம். இவை காந்தள் இனத்தைச் சார்ந்தவைதான். ஆனால், தோன்றி செங்காந்தளையும், கோடல் வெண்காந்தளையும் குறிக்கும்.


இதைப்போன்றே அதிரல், முல்லை, தளவம், குளவி, மல்லிகை, மௌவ஼ல், கொகுடி, சேடல் ஆகியவை முல்லை இனத்தைச் சேர்ந்தவை.


      தளவம், செம்முல்லை என்றும்; அதிரல், காட்டுமுல்லை என்றும்; குளவி, காட்டுமல்லிகை என்றும்; மௌவல், மல்லிகையின் ஒருவகை என்றும்; கொகுடி, ஒருவகை முல்லை என்றும்; சேடல், பவழக்கால் மல்லிகை என்றும் கூறப்படுகின்றன.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 23:15

ங்க இலக்கியத்தில் மலர்கள்

சங்கத் கால இலக்கியங்களாம் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை போன்றவை. இவ்விலக்கியங்களுள் எண்ணற்ற மலரினங்கள் பட்டியல இடபட்டிருப்பதை காணலாம். பல வண்ணமலர்கள் காலத்துக்குகாலம் பல்வேறுபட்ட புலவர்களால் எடுத்தாளப்பெற்று, இலக்கியச்சோலையில் அழகும், இன்பமும், மணமும் ஊட்டுவதை காணும் போது சமகாலத்தில் அம்மலர்கள் என்ன ஆனது எனும் கேள்வி எழுகின்றது. 

பல சங்க கால மலர்கள் நம் சூழலிலேயே இருந்தாலும் அதன் சங்க கால பெயர்கள் வழக்கொழிந்து போனதனால் இதுவா அதுவா என அறியாது நம் வீட்டு தோட்டத்திலுருக்கும் மலர்களை கூட அன்னிய நாட்டு மலரென நம்பிகொண்டிருக்கிறோம். 

கபிலர் பட்டியலிட்ட 99 மலர்களோடு விடுபட்டிருக்கும் மீதிமலர்களை இன்னும் சில பதிவுகளின் பின் தொடரலாம் என்றிருக்கிறேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Tue 18 Aug 2015 - 23:17

குறிஞ்சிபாட்டில் கபிலர் பட்டியலிட்ட99 வகைப்பூக்களும் பட்டியல் இடப்பட்டு விட்டது. 


சேனை நிர்வாகத்தினர் விரும்பினால் இந்த திரியை ஒட்டியாக்கி விடலாம். 


இந்த திரியை தொடர பின்னூட்டமிட்டு  ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty அனிச்சம் மலர் செடி எங்கே கிடைக்கும்?

Post by CHOKKALINGAM B Wed 22 Nov 2017 - 20:23

அனிச்சம் செடி கிடைக்கும் இடம் தெரிந்தால் பதிவு செய்யவும்.

CHOKKALINGAM B
புதுமுகம்

பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

CHOKKALINGAM B wrote:அனிச்சம்  செடி கிடைக்கும் இடம் தெரிந்தால்  பதிவு செய்யவும்.
இங்கு சென்று பாருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 7 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum