சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Khan11

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!

Go down

தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்! Empty தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!

Post by rammalar Sun 11 May 2014 - 5:08


"ஆலூர், அரசலூர், அத்திப்பட்டு என்ற ஊரின்
பெயர்களெல்லாம் நமது மரங்களின் பெயரால்தான்
வைக்கப்பட்டன. உசிலம் மரங்கள் நிறைந்திருந்ததால்
உசிலம்பட்டி என்று பெயர் வைத்தனர். ஆக நமது
மண்ணும் கலாசாரமும் மரங்களை அடிப்படையாகக்
கொண்டுதான் அமைந்தது.

இப்போது அந்நிய தாவரங்கள் கோலோச்சும் காலம்.
அதனால் தமிழகம் பாலையாக மாற வாய்ப்பு அதிகம்
உண்டு. அதிலிருந்து மீள நாம் நமது தமிழ்
தாவரங்களை தத்து எடுத்து வளர்க்க வேண்டும்' என்று
எச்சரிக்கை விடுகிறார் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த
கண்ணன். இவர் கொடைக்கானலை மையமாகக்
கொண்டு இயங்கும் பழனிமலை பாதுகாப்புக் கழகத்தை
நடத்தி வருபவர்களுள் ஒருவர்.

இந்த அமைப்பின் முக்கியபணி.. தமிழ் தாவரங்களின்
நாற்றுகள் உருவாக்கி வளர்ப்பது. அவற்றின் பயன்
பாட்டை பிரபலப்படுத்துவது.

முப்பது வருடமாக தமிழ் தாவரங்களைப் பற்றி
ஆய்வு செய்து 45 வகையான அறிய தாவரங்களையும்,
20 வகையான கட்டுமான மரக்கன்றுகளையும் பாது
காத்து அவற்றின் நாற்றுகளை வளர்த்து வரும்
கண்ணனிடம் பேசியதிலிருந்து சுவாரசியமான அதே
நேரம் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு தந்த
செய்திகளில் சிலவாசகர் பார்வைக்கு...
-

"இப்போ களைக்கொல்லி மிஷின், களைக்கொல்லி
மருந்துன்னு விவசாயத்தில் களைகளுக்கு செலவு
செய்யுறோம். உண்மையில் இங்கு இருப்பதெல்லாம்
நம்முடைய களைகள் இல்லை. வெளிநாட்டிலிருந்து
வந்த களைகள்தான். குறிப்பா தோல் அரிப்பு,
ஆஸ்துமா அலர்ஜியை உண்டாக்குள் வெட்ட வெட்ட
வளரும் பார்த்தீனிய செடிகள் நம் நாட்டுக்கானது
அல்ல.

அதை ஒழிக்க எளிய வழி நாம் துத்திச் செடியை
வளர்த்தாலே போதும். அந்தப் பகுதியில் பார்த்தீனியம்
தலைக்காட்டாது.


மேற்குத் தொடர்ச்சி மலை மீது இருந்த தமிழ்
தாவரங்களை அழித்து சவுக்கும் தைலமரமும், சீமை
கருவேலமும் வளர நாம் வழிவகுத்ததால்தான்
நமக்கு மழை பொய்த்துப் போனது. இதை நான்
சொல்லல, அமெரிக்க விவசாய கழகம் சொல்கிறது.
-
ஊஞ்சலூர் என்ற பெயருக்குப் பின்னால் குறிஞ்சால்
என்ற தாவரம் இருக்கு. இந்த மரத்திலிருந்து பெறப்
படும் மரக்கரி சக்கிவாய்ந்தது. இரண்டாம் உலகப்
போரின்போது குறிஞ்சால் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட
கரியைக்கொண்டுதான் தென்னிந்திய ரயில்வேயின்
வண்டிகள் ஓடின.

இப்போ அதை யாரும் கண்டுக்கவேயில்லை' என்று
சொல்லிக் கொண்டே போனவரிடம், "சரிங்க, நடந்து
முடிந்ததைப் பற்றிப்பேசுவதை விட இப்போது
இருக்கும் தலைமுறை என்ன பண்ணணும் சொல்லுங்க'
என்றதும் "தமிழ் தாவரங்களை எல்லா இடங்களிலும்
வளர்க்கணும். நம்ம கவனம் அதன்மேல் குவியணும்.

அதுதான் நம்மண்ணை, கலாசாரத்தைக் காக்கும்'
என்றார். எப்படிதான் பூச்சிக் காணாமப் போச்சு.
அதைப் பெருக்கணும்னா, குறிஞ்சாங்கொடி, கிலுகிலுப்பை,
தேள் கொடுக்கு போன்ற தாவரங்களை வளர்க்கணும்.
அதை வளர்த்தா ஒரு செடியைத் தேடி ஐம்பது
வண்ணத்துப் பூச்சாவது அந்த இடத்துக்க வந்துடும்.

பேர் தெரியா குரோட்டன்ஸ் செடியைத் தொட்டியில்
வளர்ப்பதால் என்ன பயன்? அதற்குப் பதில் காட்டு
எலுமிச்சை, காட்டு கறிவேப்பிலை, இதுமாதிரி
வளர்த்தா சின்னச் சின்னப் பறவைகள் பழங்களை
சாப்பிட வர ஏதுவாகும்.

கல்லூரி மற்றும் அலுவலகத்தை மட்டுமில்லாமல்
வீட்டையும் குளுமையாக்க, காற்றை சுத்திகரிக்க
வேப்ப மரத்தின் ஐந்து வகைகளையும் நடலாம் என்றார்.


இயற்கையோட இயைந்த வாழ்வுக்கு நமது தமிழ்
தாவரங்களே வழின்னு சொல்றீங்க. பொருளாதார
ரீதியில் விவசாயிக்கு இது எப்படி உதவும்? என்றதும்
"தேக்கு மரத்தையே கட்டிக்கிட்டு அழாம, பத்து
வருடத்தில் பயன்தரும் கட்டுமான மரங்களை
விவசாயம் செய்யலாம்.

குமிழ், தடசு, சந்தன வேங்கை, வாகை போன்ற நல்ல
பயன்தரும். குமிழ் மரங்களை ஒரு ஏக்கரில் 160 தமிழ்
மரங்கள் வைத்தால் பத்து வருடத்தில் 4,85,000 ரூபாய்
வருமானம் தரும். அந்த மரத்தின் இலைச்சாறு
வெள்ளைப்படுதல், வெட்டைக்கு மருந்து. அந்த மரத்தின்
சின்னக் குச்சிகள் தீக்குச்சி, பென்சில் செய்ய பயன்படும்.

பெரிய மரம் கதவு ஜன்னலுக்கு உதவும். ஆக, இப்படித்
தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும்
தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ்
வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்'
என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.
-
---------------------------------
நன்றி: கல்கி
- அமிர்தா

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum