Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?
+2
ahmad78
Muthumohamed
6 posters
Page 1 of 1
யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபல்யமான நஜ்மா ஹெப்துல்லாஹ்வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் 13-ம் தேதி 1940ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்யது யூசுஃப் அலீ மற்றும் பாத்திமா யூசுஃப் அலீ ஆகியோரின் மகளாக பிறந்தார்.
தனது பள்ளிப் படிப்பை மோதிலால் விக்யான் மகாவித்யாலயாவில் (MVM) தொடங்கிய நஜ்மா விலங்கியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர். அதோடு தல்வார் பல்கலைக்கழகத்தில் கார்டியாக் அனாடமி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
1966-ல் அக்பர் அலீ ஹெப்துல்லாஹ் என்பவரை திருமணம் செய்த நஜ்மா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
நஜ்மா ஹெப்துல்லாஹ் இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் பேரப்பிள்ளையாகும். இவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தின் பேத்தி என்றும் கூறப்படுகிறது.
தனது இளமைப் பருவத்திலேயே பாட்டன் வழி இந்தியன் நேஷனல் காங்கிரஸில் அரசியல் பயணத்தை தொடங்கியவர், 1986-ல் அதன் தேசிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். காங்கிரஸ் சார்பாக 1980-ல் மகாராஷ்ட்ராவில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நஜ்மா ராஜ்யசபை அங்கத்தவராக 1980, 1986, 1992, 1998 என்று நான்கு முறை தெரிவாகியுள்ளார்.
1985-ல் மாநிலங்களவை துணைத் தலைவர் பொறுப்புக்கு சொந்தக்காரர் ஆனார். அது ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. மீண்டும் 1988-ல் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவி வகித்தார்.
1993-ம் ஆண்டு Inter-Parliamentary Union (IPU) வில் அங்கம் வகித்தவர், ஜெனிவாவில் அங்கம் வகிக்கும் உலக நாடுகளின் 165-வது மாநாடு 1999-ல் பெர்லினில் நடந்தபோது IPUவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
பல பொறுப்புகளோடு காங்கிரஸில் வலம் வந்த நஜ்மா 2004-ல் திடீரென பா.ஜ.கவில் இணைந்தார். இதற்கு காங்கிரசின் தலைவர் சோனியாவுடனான கருத்துவேறுபாடுதான் காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை காங்கிரசின் தேசிய தலைவர் பதவியை கேட்டாரா என்று தெரியவில்லை.
ஆனால் இத்தனை பெரும் பொறுப்புகளில் பதவி வகித்த போது பதவி சுகத்தை அனுபவித்ததைத் தவிர முஸ்லிம் சமூகத்திற்காக ஒரு கிள்ளுக் கீரையைக் கூட பிடுங்கியதாக வரலாறு இல்லை. கட்சியில் சேர்ந்த மூன்றே வருடத்தில் 2007-ல் நடந்த துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஹமீத் அன்சாரிக்கு போட்டியாக பா.ஜ.க கூட்டணி களமிறக்கிய வேட்பாளர் இதே நஜ்மாதான்.
பா.ஜ.கவில் படுவேகமாக வளர்ந்த நஜ்மா ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து 2010-ல் நிதின் கத்காரி தலைமையில் பா.ஜ.கவின் 13 தேசிய துணை தலைவர்களில் ஒருவராக பதவி உயர்வு பெற்றார். மே 26-2014 அன்று குஜராத் இனப்படுகொலை புகழ் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்துள்ளார்.
இவருடைய வாழ்நாள் முழுவதும் பதவிக்கான பயணமாகவே தெரிகிறதே தவிர நாட்டு நலனோ, சமூக நலனோ கிஞ்சிற்றும் தெரியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள், போலியான தீவிரவாத முத்திரைகள் என தொடர்ந்து அடுக்கடுக்காய் நடக்கும் அடக்குமுறைகளையும், அநீதிகளையும் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர் இந்த நஜ்மா. 2002-ல் குஜராத்தில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, கர்ப்பிணிகளின் வயிற்றை பிளந்தெடுத்த கொடூரங்கள் அரங்கேறிய போது, பச்சிளம் குழந்தைகள் தீக்கிரையாக்கப்பட்டபோது வாய் திறக்காதவர் இன்றைய சிறுபான்மை நலத்துறை (?) அமைச்சர்.
இந்தப் படுகொலைக்கு மோடிதான் காரணம் என்ற உண்மை உலகின் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட போது “1984-ல் சீக்கியர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரசில் இருந்த சீக்கியர்கள் யாரும் பொறுப்பெற்கவில்லையே? குஜராத் கலவரத்திற்கு மோடி எப்படி பொறுப்பேற்க முடியும்?” என்று கேள்வி கேட்டார்.
குஜாராத்தில் அன்று ஒரு கலவரம் மட்டுமே நடந்தது. பின்னர் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் 400-க்கும் மேற்பட்ட கலவரம் நடந்துள்ளது என்று குஜராத் கலவரத்தை நியாயப்படுத்தும் நஜ்மாவை முஸ்லிம் சமூகம் உமா பாரதி, சுஷ்மா சுவராஜ், தமிழிசை சௌந்தரராஜன் என்ற வரிசையில் வைத்து பார்ப்பதுதான் நல்லது.
நஜ்மா ஹெப்துல்லாஹ் முஸ்லிம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இஸ்லாத்தில் இரண்டு அம்சங்களின் அடிப்படையில் மனிதர்களை எடை போடலாம். ஒன்று மனிதன் இறைவனுக்கு செய்யும் கடமைகள். இதை பொறுத்தவரை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. தவறு செய்பவர்களுக்கு தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்த முயலலாம்.
இரண்டு மனிதன் சக மனிதனுக்கு செய்யும் கடமைகள். இதில் சமத்துவம், சகோதரத்துவம், மனிதாபிமானம், ஒருவருக்கொருவர் உதவி செய்தல் எனப் பல்வேறு அம்சங்கள் அடங்கும்.
இந்த அடிப்படையில் நஜ்மாவை நோக்கும்போது அவர் என்று பா.ஜ.கவில் இணைந்தாரோ அன்றே அவரது மனித நேயம் மரித்துவிட்டது எனலாம். இனி அவரிடம் இருந்து சமநீதி அடிப்படையிலான கருத்துகளை எதிர்பார்ப்பது குஜராத்தின் இனப்படுகொலைக்கு மோடிக்கு தண்டனை கிடைக்கும் என்பதற்கு சமம்.
நன்றி தூது ஆன்லைன்
Re: யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?
உண்மையை பதிந்ததற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?
உண்மை. இஷ்லாமிய சமுதாயம் இன்றும் பின் தங்கிய நிலையில் சோதனைகளையும் வேதனைகளையும் சந்திப்பதன் காரணம் இம்மாதிரி போலிகள் தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?
(_ (_ (_பானுஷபானா wrote:*_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» யார் இந்த அழகி ??
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த நேதாஜி....!
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த ஷெரின்?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த நேதாஜி....!
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த ஷெரின்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|