சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

 பெண்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும்     Khan11

பெண்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும்

Go down

 பெண்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும்     Empty பெண்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும்

Post by நண்பன் Thu 17 Feb 2011 - 23:23

தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.இவையெல்லாம் நடைறை வாழ்க்கும் யதார்த்தத்துக்கும் மிகவும் ஏற்றவையே.தொட்டதெல்லாம் துலங்க வேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் ஆனால், வளமான , சுகமான வாழ்வென்பது பிறக்கும் போதோ அல்லது இடையிலோ எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நம் சமூதாய மட்டத்தில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வறுமை மிக்கதாகவும் அல்லது இடைத்தரப்பட்டதாகவும் போல் அமைந்து விடுகிறது.

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிப்போர் தமது பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட தெரிவு செய்யும் ஒரு விடயம் தான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு. மத்தியதர வர்க்கத்தினன் தெரிவும் அதுவாகவே உள்ளது. இலங்கையை பொறுத் தவரை இது சற்று அதிகம். காரணம் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் மூன்றா வது இடத்தில் இதன் ஆதிக்கம் உள்ளது.

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடு களுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக கடமை யாற்ற செல்வோரின் தொகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்லும் இலங்கை வாழ் பெண்களின் நிலையோ மிகவும் கவலைக்குரியது.

தமது சம்பள விகிதங்கள் வேலை நேரங்கள் பற்றிய போதிய விளக்கங்களின்றி தமது குடும்ப சூழ்நிலையை மட்டும் கருத்திற் கொண்டு வெளிநாடு செல்லும் இவர்கள் அங்கு சொல்லொணா துயரங்களை அனுப விக்கின்றனர்.

பல இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் உயிர் பிழைத்து நாடு திரும்புவதே பெரிய விடயமாகிவிட்டது. கடந்த பல வருடங்களில் மட்டும் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்ற பெண்களில் பலர் தாம் கடமையாற்றிய வீடுகளில் இனந்தெயாத முறையில் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும் அவர்களின் உடல்கள் கூட இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே சொந்தங்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்பது கூட நாம் ஊடகங்கள் மூலம் அறிந்த விடயம்.இப்படி எல்லாம் நடப்பது தெரிந்தும் பலரும் இந்த வெளிநாட்டு தொழில் வாய்ப்பையே மீண்டும் மீண்டும் நாடுவது ஏன்..?

குடும்பப் பொருளாதார சூழ்நிலை, வீட்டு வருமானம், கல்வி, தொழில் பிரச்சினை, திருமண வயதுப் பிரச்சினை, கடன் சுமை, வீட்டுத் தலைமையின் (கணவன் அல்லது தந்தை) பொறுப்பின்மை இப்படிப் பல பிரச்சினைகள் பெண்களை வீட்டுப்படி தாண்டி வெளிநாட்டுப் படியேற நிர்ப்பந்திக்கின்றன.

நல்ல பொருளாதார வசதியுடன் நிம்மதியான வாழ்வுக்காகவும் பின்தங்கிய கல்வித் தகைமையைக் கருத்திற் கொண்டும் இந்தப் பெண்கள் கையிலெடுக்கும் ஆயுதமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு. அதே நேரம் ஒரு சிலர் மற்றவர்களைப் பார்த்து இருப்பதனையும் விட்டுவிட்டுப் பறக்க நினைத்து ஆடம்பர வாழ்வுக்காக அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த கதையாக மூக்குடைபட்ட சம்பவங்களும் உண்டு.

பலருக்கு வெளிநாடு என்றால் ஏதோ சுவர்க்கம் போல் ஒரு மாயை. ஆனால் போய் அனுபவிக்கும் போதுதான் இப்படி ஒரு நரகமா என்ற வேதனை மேலெழுகிறது. கால் வயிறு கஞ்சி குடித்தாலும் பேசாமல் நம் நாட்டிலேயே இருந்திருக்கலாம் என்ற நினைப்புக் கூட வரும். மூச்சுவிட்டாலும் சுதந்திரமாகச் சொந்த நாட்டில் விடுவது போல் வருமா?
இருந்தாலும் குடும்பத்தின் பொருளாதார சீர்கேட்டின் நிமித்தம் பெண்கள் வெளிநாடு களுக்கு போய் உழைத்து நல்லபடியாகத் திரும்புவதற்கும் சீர்கெட்டு வருவதற்கும் வீட்டுத்தலைமை ஆண்கள் நிர்வாகமே பெரும் பாலும் காரணமாக அமைந்து விடுகிறது.
அல்லது வீட்டை நிர்வகிக்க ஆண் துணை இல்லாமையும் காரணியாக அமையலாம்.
எவ்வாறாயினும் விரும்பியோ விருப்பம் இன்றியோ சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாக மணமானவர்களும் இளம் யுவதிகளும் பலவிதமான நிர்ப்பந்தத்தினால் வெளிநாடு போகிறார்கள்.

சிலருக்கு நல்ல முகவர்களும் (ஏஜென்சி) சிலருக்குப் போலியான முகவர்களும் கிடைத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட தரம் கெட்ட முகவர்கள் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி பலி ஆடுகளாக்கி அவர்களின் முகவரிகளையே மாற்றியமைப்பதோடு முழுக் குடும்பத்துடனுமே விளையாடி விடுகிறார்கள்.
பல இளம் பெண்களின் எதிர்காலமே சூனிய மாக்கப்பட்டு விடுகிறது. நல்ல வேலை வாய்ப்பு, சம்பளம் என்று ஏமாற்றப்படும் பெண்களே அதிகம்.

வெளிநாடு சென்று அவர்கள் பணி புரியும் வீடுகளில் பெரும்பாலும் ஒழுங்கான சம்பளம் இன்மை, அடி உதை, பாலியல் துன்புறுத்தல்கள், தாய்நாட்டுடன் எவ்வித தொடர்புமற்ற நிலை, மனிதாபிதானத்தை மீறிய கடும் போக்கு, மொழிப் பிரச்சினை, இன்னும் பல அவலங்கள்.

என்ன கனவுகளுடன் வெளிநாடு போகிறார்களோ அவை பெரும்பாலும் நிறைவேறுவ தில்லை. நியாமாக உழைக்கப் போய் அநியாயத்துக்கு மாறுபவர்களும் உண்டு. ஒழுக்கத்துக்காகப் போராடியவர்களும் உண்டு ஒழுக் கத்தை விலை பேசியவர்களும் உள்ளனர்.

இன,மத, கலாசார விழுமியங்களை விழுங்கி பலவிதமான வாழ்க்கையை அமைப் பவர்களும் இல்லாமலில்லை. மணமானவர்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பச் சூழ்நிலை சில வேளைகளில் தவறிழைக்கத் தூண்டு கிறது.

திருமணமான பெண்கள் கணவன், பிள்ளை களைத் தற்காலிகமாகப் பிரிந்து சென்று பல கஷ்டத்துக்கு மத்தியில் சம்பாதித்து வீட்டையும் குடும்பத்தையும் முன்னேற்றினாலும் சில கணவன்மார்கள் பொறுப்பின்மையுடன் செயற் படுகின்றனர். பணம் பத்தும் செய்யுமென்பதற்கு ஏற்ப வீண்விரயம், மதுபானப் பாவனை, போதை, கல்வியைச் சீர்கெட வைத்தல், பிள்ளைகளை அநாதைகள் போல் சீரழித்தல். இதனால் பிள்ளைகளின் வாழ்க்கை முறை நெறி தவறுதல். மற்றும் பணம் புரளும் போது சில கணவன்மார்கள் தவறான பெண் தொடர்பினை வைத்துக்கொள்ளல் என்று சமுதாய சீர் கேடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதேவேளை, சம்பாதித்தோம், தப்பித்தோம், பிழைத்தோம் என்று நல்வாழ்வுக்காக தம் தாய்நாடு திரும்பும் இந்த யுவதிகளின் சீதனப் பிரச்சினை ஓரளவு முடிவுக்கு வந் தாலும் அவர்களின் கற்பு ஒழுக்க நெறி குறித்து அநியாயமான கேள்விகளும் எழுப்பப்படு கிறன்றன. அப்படியே தியாக மனப்பான்மையுடன் வாழ்வளிக்க வரும் ஆண் சமூகம் பணம், பொருள் வீடு, இவற்றின் மேலேயே ஆசை வைத்து வாழ்க்கை கொடுக்கிறார்கள் (இவர்களில் சிலருக்கு ஒழுங்கான தொழில் கூட இருக்காது) தாம் ஆசை வைத்த பணம் சொத்தும் நாளடைவில் கரைந்த பின்னர் தமது மனைவிமார்களை மீண்டும் வெளிநாடு களுக்கு அனுப்புவதில் கருத்தாக இருக்கும் ஆண்களையும் நாம் காணத்தான் செய்கிறோம்.

வெளிநாடு.. இவர்களின் பார்வையில் ஓர் அபிவிருத்திக்கான மூலதனம்.. முட்களில் புரண்டு விட்டு வந்தாலும் பஞ்சுமெத்தைகளில் புரண்டு வந்ததாகவே இந்தச் சமுகம் நினைத்துக் கொள்கிறது.

உடல், உள ரீதியான இவர்கள் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தாலும் குடும்பத்துக்காக மெழுகாய் உருகி உழைக்கும் பெண்கள் வாழ்வில் என்றுதான் விமோசனம் கிடைக்குமோ?

பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum