Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
திரை உலகிலும், பின்னர் இசை உலகிலும் புகழ் பெற்று விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி 100 நாடுகளுக்கு மேல் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபையில் கச்சேரி நடத்தினார். ஐ.நா.சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே தமிழ்ப்பாடகி எம்.எஸ்.தான். "சாவித்திரி" படப்பிடிப்புக்காக கல்கத்தா செல்லும் வழியில், நாகபுரியில் காந்தியடிகளை சுப்புலட்சுமியும், சதாசிவமும் சந்தித்து ஆசி பெற்றனர்.
அன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் சுப்புலட்சுமியைப் பாடும் படி கேட்டுக்கொண்டார்கள். எம்.எஸ். சில பக்திப் பாடல்களை பாடினார். பாடல்களைக் கேட்டு மகாத்மா நெகிழ்ந்து போனார். பிற்காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ் நாடெங்கும் பரவியது.
காந்தியடிகளின் மனைவி கஸ்தூரிபாய் மறைந்தபின், அவர் நினைவாக நிதி தி ரட்டப்பட்டது. அதற்கு எம்.எஸ். சில இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி
திரட்டிக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து காந்தியடிகள் தமிழில் கையெழுத்திட்டு, தன் கைப்பட எழுதிய கடிதத்தை இன்றும் போற்றிப் பாது காத்து வருகிறார், எம்.எஸ். நாடு முழுவதும் எம்.எஸ். புகழ் பரவிக்கொண்டு இருந்த நேரத்தில், மக்களிடம் இறை உணர்வை வளர்க்கக்கூடிய இசைக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய படம் ஒன்றை தயாரிக்க டி.சதாசிவம் முடிவு செய்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
"மீரா" கதையை படமாக்க முடிவு செய்யப்பட்டது. மீராவாக சுப்புலட்சுமியும், கணவர் ராணாவாக நாகையாவும் நடித்தனர். மீரா படப்பிடிப்பு 1944_ல் தொடங்கியது. மீரா பிறந்து வளர்ந்த ராஜஸ்தானத் திலேயே படப்பிடிப்பு நடந்தது. எல்லீஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். "மீரா" படத்தில் பாடல்கள் அற்புதமாக அமைந்தன. "கல்கி" எழுதிய "காற் றினிலே வரும் கீதம்" என்ற பாடல், காலத்தைக் கடந்து இன்னும் வாழ்கிறது.
படம் நன்றாக இருந்தபோதிலும், "சகுந்தலை"யைப் போலவோ, "சாவித்திரி" போலவோ அது மெகா ஹிட் திரைப்படமாக அமையவில்லை. அதற்குக் காரணம் மீராவின் கதைதான். சிறுவயதிலேயே கண்ணனை கணவனாக மனதில் வரித்துக்கொண்டவர் மீரா. கல்யாணம் ஆன பிறகும் கணவனை ஏற்க மறுக்கிறாள்.
கண்ணனையே நினைத்துப் பாடிக்கொண்டு ஊர், ஊராகச் செல்கிறாள். கடைசியில், அவள் உயிர் கண்ணனுடன் ஐக்கியமாகிறது. வடநாட்டில் பிரபலமான இக்கதை, தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்க்கவில்லை. டி.சதாசிவம் இதைப் புரிந்து கொண்டார்.
"மீரா"வை இந்தியில் எடுத்தார். மீரா இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தின் விசேஷ காட்சி டெல்லியில் நடந்தபோது, பிரதமர் நேரு வந்திருந்தார். படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார். பின்னர் எம்.எஸ்.சின் இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "நான் சாதாரண பிரதம மந்திரி. எம்.எஸ்.சுப்புலட்சுமியோ இசை உலகின் பேரரசி. பேரரசி முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்?" என்று புகழாரம் சூட்டினார்.
1966_ம் ஆண்டில், அமெரிக்காவில் பல நாட்டு பிரதிநிதிகளும் கூடியிருந்த ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார், எம்.எஸ். இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கென்றே ஆங்கிலப் பாடல் ஒன்றை ராஜாஜி எழுதித்தந்தார். ஆங்கில இசையில் வல்லவரான ஹாண்டல் மானுவெல், அந்தப் பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்தார்.
ஐ.நா.சபையில் எம்.எஸ். நடத்திய இசை நிகழ்ச்சி அற்புதமாக அமைந்தது. அவர் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பொதுப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி, அந்த நிகழ்ச்சிகளில் வசூலான கோடிக்கணக்கான ரூபாய்களை அப்படியே அந்த பொதுப்பணிகளுக்கு வழங்கினார்.
படம் நன்றாக இருந்தபோதிலும், "சகுந்தலை"யைப் போலவோ, "சாவித்திரி" போலவோ அது மெகா ஹிட் திரைப்படமாக அமையவில்லை. அதற்குக் காரணம் மீராவின் கதைதான். சிறுவயதிலேயே கண்ணனை கணவனாக மனதில் வரித்துக்கொண்டவர் மீரா. கல்யாணம் ஆன பிறகும் கணவனை ஏற்க மறுக்கிறாள்.
கண்ணனையே நினைத்துப் பாடிக்கொண்டு ஊர், ஊராகச் செல்கிறாள். கடைசியில், அவள் உயிர் கண்ணனுடன் ஐக்கியமாகிறது. வடநாட்டில் பிரபலமான இக்கதை, தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்க்கவில்லை. டி.சதாசிவம் இதைப் புரிந்து கொண்டார்.
"மீரா"வை இந்தியில் எடுத்தார். மீரா இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தின் விசேஷ காட்சி டெல்லியில் நடந்தபோது, பிரதமர் நேரு வந்திருந்தார். படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார். பின்னர் எம்.எஸ்.சின் இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "நான் சாதாரண பிரதம மந்திரி. எம்.எஸ்.சுப்புலட்சுமியோ இசை உலகின் பேரரசி. பேரரசி முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்?" என்று புகழாரம் சூட்டினார்.
1966_ம் ஆண்டில், அமெரிக்காவில் பல நாட்டு பிரதிநிதிகளும் கூடியிருந்த ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார், எம்.எஸ். இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கென்றே ஆங்கிலப் பாடல் ஒன்றை ராஜாஜி எழுதித்தந்தார். ஆங்கில இசையில் வல்லவரான ஹாண்டல் மானுவெல், அந்தப் பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்தார்.
ஐ.நா.சபையில் எம்.எஸ். நடத்திய இசை நிகழ்ச்சி அற்புதமாக அமைந்தது. அவர் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பொதுப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி, அந்த நிகழ்ச்சிகளில் வசூலான கோடிக்கணக்கான ரூபாய்களை அப்படியே அந்த பொதுப்பணிகளுக்கு வழங்கினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
திருப்பதி ஏழுமலையானை துதித்து எம்.எஸ். பாடிய வெங்கடேச சுப்ரபாதம், அதிகாலை நேரத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஒலிப்பதைக் கேட்கலாம். விற்பனையில் பெரும் சாதனையை நிகழ்த்தியது இந்த ஆடியோ கேசட். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் எல்லாம் திருப்பதி கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இசை மூலம் இமாலய புகழ் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகமும், டெல்லி பல்கலைக்கழகமும் "டாக்டர்" பட்டம் வழங்கி கவுரவித்தன.ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படுகிற பிலிப்பைன்ஸ் நாடு வழங்கும் "ரமான் மக்சாய்" விருது எம்.எஸ்.சுக்கு 1974_ல் வழங்கப்பட்டது.
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருதை எம்.எஸ்.சுக்கு 1998_ல் மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. 1997_ல் சதாசிவம் காலமானார். வாழ்க்கையில் தாயாக _ தந்தையாக _ ஆசானாக _ தோழனாக விளங்கிய சதா சிவத்தின் மறைவினால், சிறகொடிந்த பறவை போலானார் எம்.எஸ். அதன் பிறகு அவர் கச்சேரி செய்வதை நிறுத்தி விட்டார்.
இசை மூலம் இமாலய புகழ் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகமும், டெல்லி பல்கலைக்கழகமும் "டாக்டர்" பட்டம் வழங்கி கவுரவித்தன.ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படுகிற பிலிப்பைன்ஸ் நாடு வழங்கும் "ரமான் மக்சாய்" விருது எம்.எஸ்.சுக்கு 1974_ல் வழங்கப்பட்டது.
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருதை எம்.எஸ்.சுக்கு 1998_ல் மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. 1997_ல் சதாசிவம் காலமானார். வாழ்க்கையில் தாயாக _ தந்தையாக _ ஆசானாக _ தோழனாக விளங்கிய சதா சிவத்தின் மறைவினால், சிறகொடிந்த பறவை போலானார் எம்.எஸ். அதன் பிறகு அவர் கச்சேரி செய்வதை நிறுத்தி விட்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வவுனியாவில் போலிக் கச்சேரி: பாதுகாப்பமைச்சின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
» கச்சேரி பண்ண எதுக்கு 100 பேருக்கு சம்பளம்..?
» ஐ. நா. பாதுகாப்பு சபையில் அசர்பைஜானுக்கு அங்கத்துவம்
» 19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம்
» அமைச்சர் ஹக்கீமினால் நேற்று சபையில் சமர்ப்பிப்பு
» கச்சேரி பண்ண எதுக்கு 100 பேருக்கு சம்பளம்..?
» ஐ. நா. பாதுகாப்பு சபையில் அசர்பைஜானுக்கு அங்கத்துவம்
» 19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம்
» அமைச்சர் ஹக்கீமினால் நேற்று சபையில் சமர்ப்பிப்பு
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|