சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை! Khan11

குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை!

Go down

குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை! Empty குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை!

Post by ahmad78 Tue 16 Jun 2015 - 14:09

குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை! Ht3620ஃபிட்னஸ்: முனைவர் மு.ஸ்டாலின் நாகராஜன்

கொழுகொழு குழந்தைகள் எப்போதும் கொஞ்சலுக்கு உரியவர்கள். கொழுகொழு குழந்தைகள்தான் ஆரோக்கியமானவர்கள் என்கிற எண்ணம் பலருக்கும் இன்றும் இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அவர்களைக் கொஞ்சி, செல்லப் பெயர்கள் வைத்து ஆராதிக்கிற பெற்றோர், குழந்தைகள் 10 வயதைக் கடக்கும்போது கலங்கிப் போகிறார்கள்.

பள்ளி விட்டு  வீட்டுக்கு சந்தோஷமாக வரவேண்டிய குழந்தை... கண்ணீர் மல்க, கவலையோடு, மனஉளைச்சலுடன் வீடு திரும்புவதையும், தன்னை எல்லோரும் ‘குண்டு கத்தரிக்கா, தர்பூசணி, நீர்யானை’ என பல பட்டப் பெயர்கள் வைத்து கூப்பிடுவதையும் சொல்லி அழும். பள்ளி செல்ல அடம்பிடிக்கும். அது, பெற்றோராகிய நீங்கள் துடிதுடித்துப் போவது நீங்கள் மட்டுமே உணரக்கூடிய மாபெரும் வலி.

சரி! இதை ஆரம்பத்திலேயே பெற்றோர் எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அதற்கு என்ன வழிகளை பின்பற்ற வேண்டும்? இதற்காக விஞ்ஞான கூடத்திற்கோ அல்லது டாக்டரிடமோ சென்று BMI (Body Mass Index) பார்த்து, நம்பர்களை கூட்டிக் கழிக்க வேண்டிய அவசியமெல்லாம் தேவையில்லை. குழந்தைகளைக் கூர்ந்து கண்காணிப்பதே முக்கியம்.

உங்கள் குழந்தை...


  • பம்பரம்  போல சுழன்று, துறுதுறுவென,  சுறுசுறுப்பாக இல்லையா?



  •  சிறிய தூரத்தைக்கூட ஓட முடியாமல் அவதிப்படுகிறதா?



  •  நடந்து வரும் போது உருண்டு வருவது போல உள்ளதா?



  •   துள்ளி விளையாடி, குதிக்க முடியவில்லையா?


இதையெல்லாம் தினமும் கவனித்த பிறகாவது முதலில் கூறியபடி ‘செல்லக்குட்டி, ஆப்பிள், ஜாங்கிரி, பூந்தி, என் கொழுகொழு செல்லமே’ எனக் கொஞ்சு வதை நிறுத்துங்கள். உங்கள் குழந்தை குண்டாகிக்கொண்டு  டைப் 2 நீரிழிவை யும் ஒபிசிட்டி எனப்படுகிற பருமன் பிரச்னையையும் ஏற்றுக் கொள்ளும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்தில் உடல் எடையை குறைப்பது சற்று சுலபம். வயதான பிறகு அதிக எடையைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து, தினசரி வாழ்க்கையை ஒரு யுத்த களமாக ஆக்கிக்கொள்ளும் அநேக நண்பர்களை, குடும்பத்தினரை கண்கூடாகக் காண்கிறோம்.

ஆரம்பத்திலேயே (OBESITY) குண்டாவதை தடுத்து நிறுத்த ஒருசில நல்ல யோசனைகள் இதோ...

1. குழந்தைகளின் உடல் உழைப்புக்கு (Physical Activity) முக்கியத்துவம் அளியுங்கள். தினமும் சில மணி நேரமாவது அவர்கள் ஓடி, ஆடி விளையாடுகிறார்களா அல்லது ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்களா என்பதை கவனித்துக்கொண்டே இருங்கள்.

2. குடும்பத்துக்காகச் சமைக்கும்போது, குழந்தைகள் உடல்நலத்தை முதலில் மனதில் வைத்து அவர்களின் உடல் தேவை, சக்தியின் தேவை, வளர்ச்சி யின் தேவை, உழைப்பின் தேவை, வயதின் தேவை என பாகுபடுத்தி, அதன்பின் சமைத்து, குழந்தைகளுக்கு பரிமாற வேண்டியது மிகமிக முக்கிய மானதாகும். மேலே  கூறப்பட்ட தேவைகளுக்கும் அதிகமாக (Over - eating) குழந்தைகள் சாப்பிடும்போது... எவ்வளவு ருசித்து குழந்தை சாப்பிடு கிறது என அன்பாய் பூரித்து, தினமும் அளவுக்கு அதிகமாக உணவு, இனிப்பு மற்றும் தின்பண்ட வகைகளைக் கொடுக்காமல் அளவோடு சாப்பிட கற்றுக் கொடுத்து, அவர்கள் அதை மீறும் சமயங்களில் கண்டிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

3.  நல்ல சுவையான உணவு வகைகளை அதிகம் சமைத்து, அதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வேண்டி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சூடாக்கி சாப்பிடுவதை தயவு செய்து அறவே நிறுத்துங்கள். மேலும் தேவைக்கு அதிகமாக தின்பண்டங்கள் அல்லது நொறுக்குத் தீனி வகைகளை வீட்டில் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை சேமித்து வைப்பதை இன்றோடு விட்டுவிடுங்கள்.  குழந்தைகளுக்கு சரிவிகித உணவின் (Balanced Diet) முக்கியத்துவத்தை அடிக்கடி விளக்கி, உண்மையை உணரச் செய்யுங்கள்.

4. குழந்தைகள் படிக்கும்போதோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ, ஓடியாடி விளையாடி விட்டு அல்லது உடற்பயிற்சி செய்துவிட்டு களைப்படையும் போதே அவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை. குழந்தைகளின் நல்ல ஓய்வுக்கு உற்ற நண்பன் ‘நல்ல தூக்கமே’. அப்படி ஓய்வு எடுத்து தூங்காத குழந்தைகள், தங்களின் வயிறை ஒரு குப்பைத் தொட்டியாக்கி பலதரப்பட்ட உணவு வகைகள், இனிப்புகள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாகி விடுவார்கள். 

5. சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் டி.வி.  மற்றும் கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் செலவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையாகும். அதன் திரையில் இருந்து வரும் நீல ஒளியின் (Blue light) தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு உகந்ததே அல்ல. அதை இந்த இளம் வயதில் அவர்களால் தாங்க முடியாது. இதனால் குழந்தைகளின் உடலுக்கு தீமையே உண்டாகும். இதன் மறுபக்கம் என்னவெனில் அதன் காரணமாக குழந்தைகளுக்கு அதிக பசி (Increase in appetite) எடுத்து, தேவைக்கு அதிகமான உணவு உட்செல்ல ஏதுவாகிறது.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3630


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum