Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
3 posters
Page 1 of 1
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...
அதாவது,
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."
மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்..
அதாவது,
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."
மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
அருமையாச் சொல்லியிருக்கார்...
எனக்கெல்லாம் நிறைய நட்பு... அப்ப நான் பெரிய பணக்காரந்தான்...
புத்தகம் படிக்கச் சொல்வார்... இணையத்தில் படிக்கிறோம்..
இசை... நமக்கு அதுதான் பெரிய வரப்பிரசாதம்... அலுவலகத்தில் துள்ளல் இசையின்னே 300 பாட்டுக்கிட்ட சேமிச்சி வச்சிருக்கேன்...
பழசை மறக்கக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான்... அவரும் அப்படியே இருக்கச் சொல்றார்.... கூழு குடிச்சிட்டு பால் பாயாசம் சாப்பிட்டு வளர்ந்தோம்ன்னு சிலர் சொல்லும் போது சிரிப்பதா அழுவதான்னு தெரியாது... நானெல்லாம் ரேசன் கடை அரிசி சாப்பிட்டுத்தான் வளர்ந்தேன்னு சொல்லுவேன்... இதிலென்ன இருக்கு... என்று நினைப்பவன்...
ஆணவம் ஆயுளைக் குறைக்கும்... 100% உண்மை....
எல்லாத்தையும்.... இல்லை முடிந்தளவு பின்பற்றப் பார்க்கணும்...
பகிர்வுக்கு நன்றி அக்கா...
அப்பாடா.... எங்க அக்கா போடுற மாதிரி நீண்ட கருத்துப் போட்டாச்சு... இல்லேன்னா அருமை, பகிர்வுக்கு நன்றி அப்படின்னு சொல்லிட்டு ஓடிருவேன்...
எனக்கெல்லாம் நிறைய நட்பு... அப்ப நான் பெரிய பணக்காரந்தான்...
புத்தகம் படிக்கச் சொல்வார்... இணையத்தில் படிக்கிறோம்..
இசை... நமக்கு அதுதான் பெரிய வரப்பிரசாதம்... அலுவலகத்தில் துள்ளல் இசையின்னே 300 பாட்டுக்கிட்ட சேமிச்சி வச்சிருக்கேன்...
பழசை மறக்கக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான்... அவரும் அப்படியே இருக்கச் சொல்றார்.... கூழு குடிச்சிட்டு பால் பாயாசம் சாப்பிட்டு வளர்ந்தோம்ன்னு சிலர் சொல்லும் போது சிரிப்பதா அழுவதான்னு தெரியாது... நானெல்லாம் ரேசன் கடை அரிசி சாப்பிட்டுத்தான் வளர்ந்தேன்னு சொல்லுவேன்... இதிலென்ன இருக்கு... என்று நினைப்பவன்...
ஆணவம் ஆயுளைக் குறைக்கும்... 100% உண்மை....
எல்லாத்தையும்.... இல்லை முடிந்தளவு பின்பற்றப் பார்க்கணும்...
பகிர்வுக்கு நன்றி அக்கா...
அப்பாடா.... எங்க அக்கா போடுற மாதிரி நீண்ட கருத்துப் போட்டாச்சு... இல்லேன்னா அருமை, பகிர்வுக்கு நன்றி அப்படின்னு சொல்லிட்டு ஓடிருவேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
அனைத்தும் அருமையாக உள்ளது அதிலும் இந்த வசனம்
பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன் இந்த வசனம் என்னை மிகவும் கவர்ந்தது நண்பர்கள் என் பட்டியலில் நிஷா அக்காவையும் நான் சிறந்த ஒரு நட்பாகத்தான் கருதுகிறேன் நல்ல நண்பன் ஆறுதல் சொல்வதில் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான் எவ்வளவு சோகத்தில் திளைத்தாலும் அக்காவின் ஆறுதல் வார்த்தைகளும் தன்னம்பிக்கையும் எம்மையும் எம் சிந்தனைகளையும் புத்துணர்ச்சி பெறச்செய்யும்
அந்த வகையில் எனக்கும் மூன்று சிறந்த நண்பர்கள் உள்ளார்கள்.அதிகமாகவே உள்ளார்கள் அனைத்தும் பொன் மொழிகளாக உள்ளது மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி அக்கா.
முகநூலிலும் பகிர்கிறேன்
பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன் இந்த வசனம் என்னை மிகவும் கவர்ந்தது நண்பர்கள் என் பட்டியலில் நிஷா அக்காவையும் நான் சிறந்த ஒரு நட்பாகத்தான் கருதுகிறேன் நல்ல நண்பன் ஆறுதல் சொல்வதில் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான் எவ்வளவு சோகத்தில் திளைத்தாலும் அக்காவின் ஆறுதல் வார்த்தைகளும் தன்னம்பிக்கையும் எம்மையும் எம் சிந்தனைகளையும் புத்துணர்ச்சி பெறச்செய்யும்
அந்த வகையில் எனக்கும் மூன்று சிறந்த நண்பர்கள் உள்ளார்கள்.அதிகமாகவே உள்ளார்கள் அனைத்தும் பொன் மொழிகளாக உள்ளது மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி அக்கா.
முகநூலிலும் பகிர்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
மிண்டும் ஒரு முறை படித்தேன் அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
நான் சொன்னதை வார்த்தை பிசகாமல் அப்படியே தட்டச்சிட்டதால் இப்போட்டியில் தாங்கள் ஜெயித்து விட்டீர்கள். அடுத்த ஜென்மத்தில் எனக்கு நிஜதம்பியாய் பிறந்து என் அடி உதை திட்டையெல்லாம் சீக்கிரம் வாங்கிடும் வரம் தந்தேன்!ஆறுதல் சொல்வதில் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான் எவ்வளவு சோகத்தில் திளைத்தாலும் அக்காவின் ஆறுதல் வார்த்தைகளும் தன்னம்பிக்கையும் எம்மையும் எம் சிந்தனைகளையும் புத்துணர்ச்சி பெறச்செய்யும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
Nisha wrote:நான் சொன்னதை வார்த்தை பிசகாமல் அப்படியே தட்டச்சிட்டதால் இப்போட்டியில் தாங்கள் ஜெயித்து விட்டீர்கள். அடுத்த ஜென்மத்தில் எனக்கு நிஜதம்பியாய் பிறந்து என் அடி உதை திட்டையெல்லாம் சீக்கிரம் வாங்கிடும் வரம் தந்தேன்!ஆறுதல் சொல்வதில் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான் எவ்வளவு சோகத்தில் திளைத்தாலும் அக்காவின் ஆறுதல் வார்த்தைகளும் தன்னம்பிக்கையும் எம்மையும் எம் சிந்தனைகளையும் புத்துணர்ச்சி பெறச்செய்யும்
வாழ்க்கையில் அனுபவம் அறிவூட்டும் உங்கள் அனுபவம் எங்களுககு அறிவூட்டுகிறது என்று சொன்னால் தாங்கள் எண்ணி விட வேண்டாம் ஒவையார் வயதாகி விட்டதோ என்று அப்படி இல்லை எனக்கு கிடைத்த நல்ல நண்பர்கள் சம்ஸ் ஹாசிம் நிஷா அக்கா இப்படி அழகானவர்கள் அன்பானவர்கள் நல்லதை மட்டும் பாராட்டாமல் தவறையும் சுட்டிக்காட்டும் நல்ல உள்ளங்களுடன் நான் பயணிக்கிறேன் நான் எப்படி ஏழையாக முடியும்
அடுத்த ஜென்மம் இல்லை இந்த ஜென்மத்திலும் நான் நிஜத்தம்பியாகவே இருக்க விரும்புகிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள்
மாறா அன்புடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இறந்த பின் FACEBOOK பாக்கணுமா ???
» படத்தில் உள்ள இந்த காட்சியை, நாம் இறந்த பின் நம்மால் காண இயலாது..
» நீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கமுடையவரா? - ஆபத்து!
» இதில் நீங்கள் யார்.?
» நீங்கள் யார்? முறமா? சல்லடையா?…..
» படத்தில் உள்ள இந்த காட்சியை, நாம் இறந்த பின் நம்மால் காண இயலாது..
» நீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கமுடையவரா? - ஆபத்து!
» இதில் நீங்கள் யார்.?
» நீங்கள் யார்? முறமா? சல்லடையா?…..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|