சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

அதிசயக்குழந்தை  Khan11

அதிசயக்குழந்தை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிசயக்குழந்தை  Empty அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Jan 2016 - 13:50

அதிசய குழந்தை அவன் ...
ஆசான் நான் ...
என்னைவிட அவனே முன்னுக்கு " அ "
நான் "ஆ "

இந்த குழந்தை இப்படியெல்லாம் ....
பேசுமா....?  சிந்திக்குமா ...?
நம்ப முடியவில்லை என்போர் ...
இந்த கவிதையை மூடிவிட்டு 
போகலாம் ....!!!

இந்த குழந்தை என்னதான் 
சொல்லப்போகிறது என்பதை ...
பார்க்க விரும்புவோர் ....
பொறுமையோடு காத்திருந்து ....
தொடராக வரும் வசனக்கவிதையை ....
பாருங்கள் .....!!!

அதிசயக்குழந்தை ....
எப்படி இருப்பான் ...?

ஆசான் நேரான சிந்தனையில் ...
பேசினால் அவன் எதிர் சிந்தனையில் 
பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில் 
பேசினால் அவன் நேர் நித்தனையில் ...
பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!!

ஆன்மீகம் பேசுவான் 
அரசியில் பேசுவான் 
இல்லறம் பேசுவான் 
எல்லாமே பேசுவான் 

இலக்கண தமிழில் உரைப்பான் 
இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும் 
பேசுவான் ....
கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ...
இனிப்பான பொய்களையும் சொல்வான் ...
மொத்தத்தில் அதிசய குழந்தை 
இடையிடையே அதிர்ச்சியை ....
தருவான் என்பது மட்டும் உண்மை ....!!!

^
அதிசயக்குழந்தை 
   வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Jan 2016 - 14:23

அதிசயக்குழந்தை - பூதம் 
-------
ஒட்டு துணிகூட இல்லாமல் ...
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ....
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ....
விளையாடிகொண்டிருந்தான் ....
அதிசயக்குழந்தை .......

டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ...
எதற்கு என்று கேட்டான் அவன் ....!!!

மண்ணுக்குள் விளையாடுகிறாயே ....
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ...
என்றேன் ....

நீங்க மட்டும் அழுகில்லையோ...?
என்றான் அவன் - மேலும் சொன்னான் ....

ஆசானுக்கு  நான் சொல்வதா ...?
ஊழ்வினை உடம்பே அழுக்குதான் ....
பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!!

மனத்தின் அழுக்கை நீக்க 
கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் ....
உடலின் அழுக்கை நீக்கவும் ...
தண்ணீரால் கழுவுகிறீர்கள் ....
கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க ..
உள்ளத்தை துளைக்கும்  சொல்லை ...
காற்றோடு கலக்கிறீங்க ....
உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ...
அசுத்தமாக்கும் போது 
நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும் 
உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....?

என்றான் - அதியக்குழந்தை.....!!!

போதும் போதும் உன் வியாக்கியானம் ..
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ...
அதட்டினேன் .....

விழுந்து விழுத்து சிரித்தான் ....

ஏனடா சிரிகிறாய்....?

இயலாமையின் இறுதி கருவியே ....
அதிகாரம் என்றான் ...!

திகைத்து நின்றேன் ....!!!

தன் பகுத்தறிவால் விடைதராமல் ....
பட்ட தடியை தூக்கி நியாயம் தேடும் ...
ஆசானே - உம்மில் குற்றமில்லை ....
" ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது "
என்பதுபோல் உங்கள் புத்தக படிப்பு 
எனக்கு சரிவராது என்றான் 

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Jan 2016 - 16:06

அதிசயக்குழந்தை - உணவு 
-----
சாப்பிடாயா என்று கேட்டேன் ....
சாப்பிடேன் என்றான் .....
அதிசய குழ்ந்தை  .......!!!

என்ன சாப்பிட்டாய் ....?

என்ன சாப்பிடாய் என்று கேட்காமல் ....
எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள் ...
என்று சொன்னான் .....!!!

எப்படி சாப்பிட்டாய் ....?

அடித்து பறித்து சாப்பிட்டேன் ....

நீ அத்தனை கொடூரமானவனா ...?

நான் மட்டுமல்ல நீங்களும் ....
அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் .....!!!

தன் இனத்தை பெருக்க வந்தத ....
தன் உணர்வை வெளிப்படுத்த வந்த ....
அத்தனை உயிரினத்தையும் ....
நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை ....
பறித்துதானே - சாப்பிடுகிறோம் .....!!!

மாங்காய் தேங்காய் என்று ....
அவை முதுமை அடைய முன்னரே ....
அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம் .....

குடியோடு குடித்தனமாய் தூங்கும் ...
ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே ....
கண்ணி வைத்து கொலை செய்து ....
சாப்பிடுகிறோம் ......

கூட்டம் கூட்டமாய் பார்க்கும் ....
பறவைகள் - சாரை சாரையாய் ...
அலைந்து திரியும் மீன்கள் ....
அத்தனைக்கும் வலைபோட்டு ....
வாழ்வுரிமையை  சாப்பிடுகிறோம் ....!!!

எல்லாமே இறைவன் எமக்கே ....
படைத்தவன் என்று இறைவனை ....
பிணையாக வைத்து அத்தனையின் ....
வாழ்வுரிமையைசாப்பிடுகிறோம் ....!!!

கேட்டால் அதுதான் உணவுசங்கிலி ....
என்று ஒரு கோட்பாட்டையும் 
வைத்திருக்கிறோம் - சொல்லுங்கள் ....!!!

ஆசானே ....!!!!

சமைத்து சாப்பிட்டோமா ....?
சண்டையிட்டு - மனசமரசத்துடன் 
சாப்பிட்டோமா ....?

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by நண்பன் Tue 12 Jan 2016 - 16:46

வாவ் வித்தியாசமாக உள்ளது இந்த அதியக்குழந்தை என்னதான் இருக்கு என்று நானும் படித்துக்கொண்டிருந்தேன் அதியக்குழந்தை சொல்லும் பல கருத்துக்கள் எம்மை வியக்க வைக்கிறது மாஸ்டர் பயங்கரான குழந்தையாக இருப்பானோ இன்னும் எழுதுங்கள் பார்ப்போம் படிப்போம் வியப்போம் 

போதும் போதும் உன் வியாக்கியானம் ..
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ...
அதட்டினேன் .....
விழுந்து விழுத்து சிரித்தான் ....
ஏனடா சிரிகிறாய்....?
இயலாமையின் இறுதி கருவியே ....
அதிகாரம் என்றான் ...!
திகைத்து நின்றேன் ....!!!
எப்படி சொல்கிறான் அதியக்குழந்தை
இயலாமையின் இறுதி கருவியே அதிகாரம்தான் என்று சிந்திக்க வைக்கிறான் மலைத்து நின்று விட்டேன் 
படிப்பினை கிடைக்கிறது மாஸ்டர் தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Jan 2016 - 17:13

நண்பன் wrote:வாவ் வித்தியாசமாக உள்ளது இந்த அதியக்குழந்தை என்னதான் இருக்கு என்று நானும் படித்துக்கொண்டிருந்தேன் அதியக்குழந்தை சொல்லும் பல கருத்துக்கள் எம்மை வியக்க வைக்கிறது மாஸ்டர் பயங்கரான குழந்தையாக இருப்பானோ இன்னும் எழுதுங்கள் பார்ப்போம் படிப்போம் வியப்போம் 

போதும் போதும் உன் வியாக்கியானம் ..
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ...
அதட்டினேன் .....
விழுந்து விழுத்து சிரித்தான் ....
ஏனடா சிரிகிறாய்....?
இயலாமையின் இறுதி கருவியே ....
அதிகாரம் என்றான் ...!
திகைத்து நின்றேன் ....!!!
எப்படி சொல்கிறான் அதியக்குழந்தை
இயலாமையின் இறுதி கருவியே அதிகாரம்தான் என்று சிந்திக்க வைக்கிறான் மலைத்து நின்று விட்டேன் 
படிப்பினை கிடைக்கிறது மாஸ்டர் தொடருங்கள்
தொடர்ந்து வருவான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue 19 Jan 2016 - 17:26

அதிசயக்குழந்தை - உறக்கம் 
--------
ஏய் 
குழந்தாய் நேரமாகி விட்டது
உறங்கவில்லையா ....?

உறக்கம் என்றால் என்ன ....?
நானே சொல்கிறேன் ஆசானே ....!!!

மூளை ஓய்வெடுப்பது உறக்கம் ....
மூளை செயல் இழப்பது மரணம் ....
கண்ணை மூடுவது உறக்கமில்லை....
கண் மூடுவது என்பது சாதாரண ...
விடயமும் இல்லை மிக கடின வேலை....!!!

அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் ...?

வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் ...
கடினமில்லை .இரண்டு இமையும் 
இணைத்தால் போது அது கண் மூடல் ...
என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் ....
தவறு கண்மூடினால் ஒன்றுமே ....
தெரியாமல் இருப்பது மட்டுமல்ல ....
ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே ....
உண்மை கண் மூடல் .....!!!

புருவத்தின் மத்தியில் நினைவை 
கொண்டுவந்து கண்மூடி உள்ளே ...
பாருங்கள் உங்களை நீங்கள் ....
அறிவீர்கள் உங்களின் அத்துணை ...
குணமும் படமாய் ஓடும் .....
என்று அந்த படமெல்லாம் ஓடி ...
கலைத்து வெறும் திரை கண் முன் ...
வருகிறதோ அன்றே நீங்கள் ....
உண்மையான கண் மூடல் 
அனுபவத்தை பெற்றுள்ளீர்கள் ....

வாழ்நாளில் என்றொ ஒரு நாள் ...
இப்படி கண்மூடிபாருங்கள் ....
சொர்க்கம் தெரியும் என்றான் ......!!!  

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by நண்பன் Wed 20 Jan 2016 - 15:28

அதியக் குழந்தை சொல்வது அனைத்தும் வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவும்உ ள்ளது தொடரட்டும்
தொடர்வேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Wed 20 Jan 2016 - 16:55

நண்பன் wrote:அதியக் குழந்தை சொல்வது அனைத்தும் வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவும்உ ள்ளது தொடரட்டும்
தொடர்வேன்
அதிசய குழ்ந்தை பலதும் பத்தும் வாசிகிறான்போல இருக்கு 
எனக்கும் அவனை ரொம்ப பிடிக்குது 
ஆனால் ஆசானை பேசவே விடுகிறான் இல்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by நண்பன் Wed 20 Jan 2016 - 20:34

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அதியக் குழந்தை சொல்வது அனைத்தும் வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவும்உ ள்ளது தொடரட்டும்
தொடர்வேன்
அதிசய குழ்ந்தை பலதும் பத்தும் வாசிகிறான்போல இருக்கு 
எனக்கும் அவனை ரொம்ப பிடிக்குது 
ஆனால் ஆசானை பேசவே விடுகிறான் இல்லை
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue 26 Jan 2016 - 17:18

அதிசயக்குழந்தை - பெயர் 
---
ஏய் குழந்தாய்....
உன் பெயரென்ன ....?

அதிசயகுழந்தை....!!!

இது ஒரு பெயரா ...?

அப்போ சொல்லுங்கள் ...
ஆசானே..... 
பெயர் என்றால் என்ன ...?

நீ தான் 
வியாக்கியான வித்தகன்- சொல் ...!!!

அஃறிணையில் பிறந்த மனிதனை ...
" உயர்திணை" யாக்குவது  ...
தான் பெயர் என்றான் ....!!!

புரியவில்லை என்றேன்....

விளக்கினான் இப்படி .....

நாய் ஓடியது (அஃறிணை)
பறவை பறக்கிறது (அஃறிணை)
கண்ணன் ஓடினான் (உயர்திணை)

இப்போது புரிகிறதா என்றான் ....?

புரிகிறது ஆனால் புரியல்ல ....

மேலும் சொன்னான் .....

மனிதன் பிறக்கும் போதும் ....
இறந்தபின்னும் அஃறிணை....!!!

இதோ என் விளக்கம் ....

குழந்தை அழுகிறது  (அஃறிணை)
பிணம் எரிகிறது  (அஃறிணை)
கண்ணன் அழுகிறான் ( உயர் திணை )

இப்போ பாருங்கள் ஆசானே ....
அஃறிணை பிறந்த மனிதன் ....
அஃறிணை இறக்கிறான் ....
இந்த இடைப்பட்ட காலத்தில் ....
மனிதனை உயர்திணையாக்கும்....
ஒரு மொழிக்கருவியே - பெயர் ....!!!

என்று மனிதனுக்கு பெயர் ....
சூட்ட படுகிறதோ -அன்றே அவன் ....
உயர் திணையில்..... 
அழைக்கப்படுகிறான் ....!!!
மனிதனின் வாழ்க்கை காலத்தை ....
உயர் தினையாக்குவதே -பெயர் ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by நண்பன் Wed 27 Jan 2016 - 16:45

அதிசயக் குழந்தை சூப்பர் விளக்கம் ம்ம் அசத்துங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Wed 27 Jan 2016 - 17:25

நண்பன் wrote:அதிசயக் குழந்தை சூப்பர் விளக்கம் ம்ம் அசத்துங்கள்
அன்பு வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by நண்பன் Wed 27 Jan 2016 - 18:15

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அதிசயக் குழந்தை சூப்பர் விளக்கம் ம்ம் அசத்துங்கள்
அன்பு வணக்கம்

அதியக் குழந்தையை கண்டிப்பாகத் தொடருங்கள் பல கருத்துக்களும் அரிய விளக்கங்களும் கிடைக்கிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Wed 27 Jan 2016 - 18:43

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அதிசயக் குழந்தை சூப்பர் விளக்கம் ம்ம் அசத்துங்கள்
அன்பு வணக்கம்

அதியக் குழந்தையை கண்டிப்பாகத் தொடருங்கள் பல கருத்துக்களும் அரிய விளக்கங்களும் கிடைக்கிறது
நிச்சயம் தொடர்வேன் 
நிறைய வாசிக்க வேண்டியுள்ளது 
வாசிக்கிறேன் சிந்திக்கிறேன் 
எழுதுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by நண்பன் Thu 28 Jan 2016 - 9:04

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அதிசயக் குழந்தை சூப்பர் விளக்கம் ம்ம் அசத்துங்கள்
அன்பு வணக்கம்

அதியக் குழந்தையை கண்டிப்பாகத் தொடருங்கள் பல கருத்துக்களும் அரிய விளக்கங்களும் கிடைக்கிறது
நிச்சயம் தொடர்வேன் 
நிறைய வாசிக்க வேண்டியுள்ளது 
வாசிக்கிறேன் சிந்திக்கிறேன் 
எழுதுகிறேன்
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 Jan 2016 - 16:53

அதிசயக்குழந்தை - கை
----
கை தட்டி ஆரவாரமாக ....
இருந்தான் அதிசயக்குழந்தை.....
என்ன அத்துணை மகிழ்ச்சியோ ....?
ஆசான் அதிகாரத்தில் கேட்டேன் ....!!!

எனக்கு ....
கை கூப்புவது பிடிக்காது .......
கை தட்டுவதே பிடிக்கும் என்றான் ....
கை தட்டி பாருங்கள் -ஓசை மட்டும் ....
வருவதில்லை .ஓயஷ்சும் (காந்த சக்தி )
கிடைக்கும் என்றான் .....!!!

எல்லா மனித நரம்புகளும் ....
கையுடன் தொடர்புபடும் ....
கை தட்டினால் அனைத்து ....
மன அழுத்தமும் பறந்துவிடும் ....
தனித்து நின்று கை தட்டினால் ....
பித்தன் என்கிறார்கள் .....
கூட்டத்தோடு தட்டினால் ...
" பிரார்த்தனை" என்கிறார்கள் ....!!!

இன்னும் ஒன்றை கேளுங்கள் .....!!!

கைகளை கொண்டு ....
போராடுங்கள் என்றது 
மாக்சிஷம்....!
கைகளை ஆயுதமாக்கியது .....
பாசிஷம்.......!
இருகோட்பாடும் தோற்றுவிட்டது... 
முதலாளிதுவத்திடம் .....!!!
இங்கு அலங்கார ஆடையுடன் ....
கை கூப்பியவன் ,கை குலுக்கியவன் ....
உலகினிலே நிமிர்த்து நிற்கிறான்  .....
எனக்கு கை கூப்பும் கொள்கை ....
பிடிக்காது ..............!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Mon 1 Feb 2016 - 19:03

அதிசயக்குழந்தை - வீடு 
------
எப்போதுமே ....
தெருகில் நிற்கிறாயே ....
உனக்கு வீடே இல்லையா ...?
குழந்தாய் ...?

எனக்கு சிறையில் ...
இருப்பது பிடிக்காது ...
என்றான் சட்டென்று ...!!!

வீட்டையேன் ...
சிறை என்கிறாய் ...?
அது பாதுகாப்பான ...
இடமல்லவா ....?
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் இருந்து ....
பாதுகாக்கிறதே.....
அது எப்படி சிறை ....?

ஆசானே ....
வாழ்நாள் முழுதும் ...
இருள் மழை காற்று ...
மின்னல் வெயில் ....
எல்லாவற்றிலும் பேராடி ...
வாழும் மிருகத்துக்கு ...
எங்கே வீடு ....?

குழந்தாய் ....
அவை இவற்றிலிருந்து ....
வாழ்வதற்கான திறனில் ...
படைக்கப்பட்டுள்ளன ....
அவற்றுக்கு வீடு ......
தேவையில்லை ...!!!

அப்போ பலவீனமாக ....
படைக்கப்பட்ட மனிதனுக்கே ...
வீடு தேவைப்படுகிறது ....
அப்படிதானே ஆசானே ...?
பலவீனமாய் படைக்கபட்ட ...
மனிதனே இயற்கையை ....
அழித்தும் வாழ்கிறான் ....
எல்லா விடயத்திலும் ...
இருந்து வெளியில் வாருங்கள் ....
ஆசானே சுதந்திரமாய் ....
வாழ்வோம் .....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by நண்பன் Tue 2 Feb 2016 - 16:15

அதிசயக்குழந்தையின் கை தட்டலும் அருமை
வீடும் அருமை  சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by rammalar Tue 2 Feb 2016 - 16:27

வசன கவிதை...அதிசயக்குழந்தை  3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue 2 Feb 2016 - 19:36

நண்பன் wrote:அதிசயக்குழந்தையின் கை தட்டலும் அருமை
வீடும் அருமை  சூப்பர் சூப்பர்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue 2 Feb 2016 - 19:37

rammalar wrote:வசன கவிதை...அதிசயக்குழந்தை  3838410834
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Feb 2016 - 8:25

வசனக் கவிதை வித்தியாசமாய்


அதிசயக்குழந்தை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Wed 3 Feb 2016 - 16:40

நேசமுடன் ஹாசிம் wrote:வசனக் கவிதை வித்தியாசமாய்

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Feb 2016 - 19:16

அதிசயக்குழந்தை -எழுத்து 
----------------
அழகான வர்ணம் பூசிய .....
ஒரு வீட்டின் வெளிப்புற ....
சுவரில் அதியக்குழந்தை....
கிறுக்கி விளையாடி....
கொண்டிருந்தான்.......!!!

டேய் 
சுவரை அசிங்க படுத்தாதே....
என்று கொஞ்சம் கோபத்தோடு ...
ஆசான் என்ற போர்வையில் ....
அவனை அதட்டினேன் ....!!!

சிரித்த படியே .....
சொன்னான் - ஆசானே ....
நீங்கள் தானே சுவர் இருந்தால் .....
சித்திரம் வரையலாம் என்றீர்கள் ....
நான் அதைதானே செய்கிறேன் ...!!!

குழந்தாய் ...
அந்த சுவர் என்றது ....
உடம்பை குறிக்குமடா....
ஆரோக்கியம் இருந்தாலே ....
சாதிக்கலாம் என்பதாகும் .....!!!

ஆசானே ....
உடம்பும் ஒரு கலவைதானே ....
அது இருக்கட்டும் ஆசானே ....

உணர்வுகளின் ஓசை மொழி ....
ஓசையின் பரிமாணம் பாஷை....
பாசையின் அலங்காக வடிவம் ....
எழுத்து - எழுத்தின் " கரு"  கிறுக்கல் ...
அதேயே  செய்தேன் ஆசானே ....
கிறுக்கியது தவறு இல்லை ....
உங்களுக்கு புதிய சுவர் ...
என்பதுதானே கவலை ....
மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by கவிப்புயல் இனியவன் Tue 16 Feb 2016 - 12:39

அதிசயக்குழந்தை - எண்ணம்
------------
எண்ணும் எழுத்தும் ....
கண்ணெனத்தகும் ....!!!

அதிசய குழந்தை 
வாய்க்குள் உச்சரித்து ...
கொண்டிருந்தான் ...!!!

என்னடா 
புது பழமொழியோ ...?

இல்லை ஆசானே ....
எதுவுமே புதியது இல்லை ....
எல்லாமே முன்னோர் சொன்ன ....
பொதுமை மொழிகள் ....
அதிலிருந்தே இனிமேல் ...
எல்லோரும் எடுக்க வேண்டும் ....
இது எனது இது நான் சொன்னது ....
என்று யாரும் உரிமை ....
கொண்டாடுவதில் பயனில்லை ...!!!

எண்ணமே ஒருவனின் உருவம் ....
எண்ணமே ஒருவனின் வாழ்க்கை....
எண்ணமே ஒருவனின்முடிவும் ....

அடுத்து சொன்னான் குழந்தை ......

சொர்க்கமும் நகரமும் ....
ஒருவனுடைய எண்ணமே .....
துயில் எழும்பும் போது ....
நல்ல சிந்தனையுடன் எழுபவன் ....
அன்று முழுதும் சொர்க்கத்தில் ....
வாழ்கிறான் ......!!!

நேற்றைய பகையை ...
முன்னைய இழப்பை ....
பொறாமையை துயில் ....
எழும்போது நினைப்பவன்
அன்று முழுதும் நரகத்தில் ....
வாழ்கிறான் ......!!!

குப்பத்தில் இருப்பவனை ...
கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ...
இருப்பவனை குப்பத்துக்கும் ....
மாற்றுவது தலையெழுத்தல்ல ....
அவரவர் எண்ணமே எண்ணமே....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயக்குழந்தை  Empty Re: அதிசயக்குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum