சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? Khan11

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

Go down

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? Empty மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

Post by rammalar Wed 23 Nov 2016 - 12:24

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? 1_16105
-
இப்போதெல்லாம் பெண்கள் சிறு வயதிலேயே 
பருவமடைந்துவிடுகிறார்கள். 

பள்ளிகளில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அதை, 
தன்னுடன் இருக்கும் தோழிகளிடம்கூடப் பகிர்ந்து
கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள். மாதவிடாய் சுழற்சியை, 
பெரும்பாலும் பள்ளியில் இருக்கும் காலத்தில் சரியாக 
எந்தப் பெண்ணும் தெரிந்துகொள்வதில்லை. 

இதனால், மாதவிடாய் ஏற்படும்போது… அவர்களுக்குத் 
தேவைப்படும் நாப்கின்களை அவர்கள் வைத்திருப்பதற்கு 
வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. 

இதை, எங்கு… யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருப்பார்கள். 
இதை உணர்ந்த ஹெச்.எல்.எல். லைஃப் கேர் என்கிற நிறுவனம் 
நாப்கின்களை எடுக்கும், எரிக்கும் இயந்திரங்களை 
அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் 
இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் இந்த வசதியை 
அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்த நிறுவனம்.

ஹெச்.எல்.எல். லைஃப் கேர் லிமிடெட்!

ஆணுறை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.எல்.எல். லைஃப் கேர் 
லிமிடெட், இப்போது அரசு மற்றும் அரசு சார்ந்து இருக்கும் 
150 பள்ளிகளில், பணத்தைச் செலுத்தினால் நாப்கின்கள் வரும்படி 
ஓர் இயந்திரத்தை பொருத்தியுள்ளது. 

‘வெண்டிகோ’ என்று பெயரிடப்பட்ட இந்த இயந்திரத்தில், 
பணத்தைச் செலுத்தினால் 3 நாப்கின்கள் வரும். இது தவிர, 
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைச் சுகாதாரமான முறையில் 
அகற்ற, ‘எரியூட்டு’ (incinerators) என்கிற இயந்திரத்தையும் 
அந்த நிறுவனம் பொருத்தியுள்ளது. 

இந்த நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், 
கர்நாடகா மாநிலம் பெல்காம் என்ற ஊரில் இருக்கும் நிறுவனத்தில் 
தயாரிக்கப்படுகின்றன.

ஹெச்.எல்.எல். நிறுவனம், சுகாதார மற்றும் குடும்பநலத் துறை 
அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம், 
மேலும் இதுபோன்று 700-க்கும் மேற்பட்ட இயந்திரங்களை 
திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொருத்தியிருக்கிறது.
-

ஸ்வச் பாரத் நகர்ப்புற மற்றும் நகர அபிவிருத்தி, 
குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அமைச்சகத்தின் 
அனுமதியோடு… 
பள்ளிகளில் இந்த நாப்கின் வசதிகளும், எரியூட்டு 
வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
-
-----------------------------


Last edited by rammalar on Wed 23 Nov 2016 - 12:27; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? Empty Re: மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

Post by rammalar Wed 23 Nov 2016 - 12:26

மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…? 2_16270

விழிப்பு உணர்வு குறைவு!

‘‘நாப்கின்கள், பெண்களுக்குத் தேவைப்படும் 
அத்தியாவசியமான ஒன்று. அது, அவர்களைச் சுகாதாரமாக 
வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. ஆனால், இந்தியாவில் 
மற்ற வளர்ச்சி அடையும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, 
இதற்கான விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. 

இன்றும் பல கிராமங்களில் பெண்கள் அவர்களுக்குத் 
தேவையான நாப்கின்களைக் கடைகளுக்குச் சென்று 
கேட்பதில்கூடத் தயக்கம் காட்டுகிறார்கள்” என்றார் 
ஹெச்.எல்.எல் தலைவர் ஆர்.பி.கந்தல்வால்.

ஹெச்.எல்.எல் நிறுவனம், கர்நாடகா பெல்காம்-ல் உள்ள 
நிறுவனத்தில் வருடத்துக்கு 400 லட்சம் நாப்கின்களைத் 
தயாரிக்கின்றன. மேலும், டெல்லி, மத்தியப் பிரதேசம், 
ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும்… இதேபோல 
பள்ளிகளில் பெண்களுக்குப் பயன்படும் விதமாக நாப்கின்
 மற்றும் எரியூட்டு இயந்திரங்களைப் பொருத்தியுள்ளது.

பெண்களுக்குத் தேவையான பல வசதிகளை அரசு செய்து
கொண்டிருக்கிறது. ஆனால், பல வசதிகள் இருப்பதை 
அவர்களுக்குத் தெரியப்படுத்தத் தவறிவிடுகிறது. இன்றும் 
பெண்கள் பலர், மாதவிடாய் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்கள்
 பற்றி வெளியில் பேசத் தயங்குகிறார்கள். கடைக்குச் சென்று 
நாப்கின் போன்றவற்றை வாங்கி வரும்போதுகூட பல 
பேப்பர்களைக்கொண்டு மறைத்து வாங்கி வருகிறார்கள். 

ஆண்கள், பெண்களின் மாதவிடாய் பற்றி அறியாமல் இல்லை. 
அனைவருக்கும் தெரிந்த விஷயங்களை எதற்காக மறைத்து
வைக்க வேண்டும்? இனியாவது பெண்கள், ‘மாதவிடாய்’யை 
மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரவேண்டும்.
-
---------------------------------------
நன்றி- விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum