சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்! Khan11

கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!

Go down

கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்! Empty கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!

Post by rammalar Wed 27 Feb 2019 - 14:34

கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்! E_1314616812





இரவை வைத்திருக்கிறது
உன் மடி.
உன்விரல்கள் கோத
கிடைக்கும் மழைப் பகல்.
மெல்லிசைப் பாகில் 
ஊறி மிதக்கும்
உன் வார்த்தைகள்,
என் பிறையின் 
மீந்த வெற்றிடத்தில்
நிரம்பும் 
உன் புன்னகை
பாதங்களடியில்
சருகாய் உடைகிறது காலம்,
காத்திருப்பின் 
கடைசி இழையைத்
தட்டிச் செல்கின்றன
தட்டான்கள்.
-----
- ஜா.பிராங்க்ளின் குமார்,
-
---------------------------


உணர்விருக்கை
--
பேருந்து நிறுத்த 
சிமெண்ட் இருக்கையிடம்
இருக்கக் கூடும்
எண்ணற்ற கதைகள்
முக்கிய சாலையிலிருந்து
ஒதுங்கி நிற்கும்
கிராமத்து மாந்தர்களின்
நடைப்பயணக் குறிப்புகள்
சுமை தூக்கிகளாய்
பள்ளி செல்லும்
சின்னஞ் சிறுசுகளின்
கண்களில் மின்னும்
வண்ணக் கனவுகள்
“என் ஆளு வருவா
நீ போடா மாப்ள’
காத்திருக்கும்
இளவட்டங்களின்
இனிய அவஸ்தைகள்
ஜன சந்தடிகள்
எதுமற்ற போதுகளில் 
தனிமையில் காயும்
நண்பகலின் வெறுமை
அடக்கி வைப்பார்
யாரும் இல்லாமல்
துள்ளி நடமிடும்
மேகக் குழந்தையின்
வியர்வைக் கதைகள்
கூடவே..
கூப்பிடும் தூரத்தில்
இல்லாத நீ
அருகினில் அமர்ந்து
கைகோர்த்துப் பேசுகின்ற
பல கதைகளும்
-
-கல்யாணி சுரேஷ்
-
------------------------


உயிர்த்தெழுதல்
---
போய்ச்சேருமிடத்தில்
புதிதாய் ஒன்று
இருக்குமென்று
ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள்
அம்மா.
புறப்படும்போது
வாகனமொன்றில்
அடிப்பட்டு இறந்த
வீட்டு புனைக்காக
விட்டுவிட்டு அழுதுகொண்டிருந்தான்
குட்டிப் பையன்.
பயணம் முழுவதும்
அநேகர் மனதில்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழந்து
மரித்துக் கொண்டிருந்தது.
அந்தப் பூனை.
-
----
- செல்வராஜ் ஜெகதீசன்
-
------------------------------


சித்திரம்!
--
கடலின் ஈரத்தைச்
சுமந்து வருகிறது
அலைகள்
அலையின் ஈரத்தைக்
கவர்ந்து செல்கிறது
காற்று
காற்றின் ஸ்பரிசத்தில்
அலை. அலையாய்க்
கடலின் நுண்சித்திரம்
ஆங்கோர் வீட்டின்
சுவரெங்கும்!
---
-ஒவியர் அ.செல்வம் 
------------------
நன்றி - கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23679
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum