Latest topics
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
» உடல்நலம் பெற முறையாக உண்ண வேண்டிய உணவுகள்
by rammalar Thu 14 Mar 2024 - 14:58
» 100 ரூபாய்க்கு திருப்தியான சாப்பாடு!
by rammalar Thu 14 Mar 2024 - 14:37
சினிமா : நெடுநல்வாடை
Page 1 of 1
சினிமா : நெடுநல்வாடை
நெடுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு...
ஒரு கிராமத்துக் கிழவனின் வாழ்க்கைக் கதை என்பதாய்த்தான் எனக்குப்பட்டது.
வீட்டை விட்டு ஒருவனுடன் ஓடிப்போன மகள், காதல் கசந்து இரண்டு குழந்தைகளுடன் போக இடமின்றி அப்பனைத் தேடி வருகிறாள். அவள் ஓடிப்போன போது பட்ட துயரத்தைவிட 'அய்யா' என வயலில் விழுந்து கதறும் போது அதிகமாக வலிக்கிறது அந்தக் கிழவனுக்கு.
போக்கத்தவளை வீட்டுக்கு கூட்டி வர, மதினி ஏற்றுக் கொள்கிறாள்... அண்ணன்காரன் அடித்து விரட்ட நினைக்கிறான்... அவனின் பயமெல்லாம் சொத்தில் பாதியைக் கொடுத்துருவாரோங்கிறதுதான்... ஓடிப்போனவள் கொடுத்த வலியைத் தூக்கிக்கிட்டு அலைபவனாய் கொடூர வார்த்தைகளை வீசிக் கொண்டேயிருக்கிறான். அதனாலேயே அப்பனுக்கும் மகனுக்கும் பிரச்சினை துளிர் விட ஆரம்பிக்கிறது.
தனது பேரனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வரணும் என்பதற்காகவே பாடுபடுகிறார்... அவன் பேரில் மகனுக்குத் தெரியாமல் பணம் போட்டு வைக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டையும் மகள் பேரில் எழுத, மகனின் கோபம் இன்னும் அதிகமாகிறது. அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை வலுக்கிறது.
அப்பன் இல்லாதவன்... ஒரு வீடு வாசல் இல்லாதவன்... எனச் சொல்லும் மாமனுக்கு முன் படித்து, நல்ல வேலைக்குப் போய் வீடு வாசல்ன்னு பேரன் நல்ல நிலையை அடையணுங்கிற தாத்தாவின் கனவை நோக்கி ஓடுகிறான் பேரன் இளங்கோ... மாமா மீதான கோபமும் அவனுள் தகிக்கிறது. அதனாலேயே முகத்தில் சந்தோஷமின்றித் திரிகிறான்.
இதற்கிடையே உள்ளூரில் அவனுடன் படிக்கும், சிறுவயது முதல் நட்பாய் இருக்கும் அமுதாவுடன் மோதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது... தாத்தாவின் காதுக்குச் செய்தி வர, பேரனுக்கு அவன் எப்படி இந்த ஊருக்கு வந்தான் என்பதை எடுத்துச் சொல்லி, வேலைக்குப் போய் சம்பாரித்து இருக்க ஒரு வீடு, தங்கச்சி கல்யாணம் என அவன் முன் நிற்கும் தேவைகளைச் சொல்லி காதலுக்கு கட்டை போடுகிறார்.
தாத்தாவின் கனவைச் சுமக்கும் இளங்கோ தன்னைச் சுமக்கும் அமுதாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கிறான்... கோபமாய் அவளைத் திட்டுவிட்டு விலக் நினைப்பவன் ஒரு கட்டத்தில் மீண்டும் அணைத்துக் கொள்கிறான்... அவர்களின் காதலும் தொடர்கிறது...
சென்னைக்கு சொற்பச் சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறான். அமுதாவின் அண்ணன் தங்கையின் காதல் விவரம் தெரிந்து திருமணம் நிச்சயம் பண்ணுகிறான்... பேரனுக்காய் அமுதாவின் அண்ணனிடம் பேசப்போய் அவமானப்பட்டுத் திரும்புகிறார் தாத்தா.
காதல் பிரச்சினைக்காகவே வயலில் பாதியை விற்றாவது பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப நினைக்கிறார். அவனோ அமுதாவை எப்படியும் அடைந்தே தீருவேன் எனத் திரிகிறான். எங்கே மகன் சொல்வதைப் போல ஆத்தா மாதிரி இவனும் கூட்டிக்கிட்டு ஓடி தன்னைத் தலைகுனிய வச்சிருவானோன்னு பயப்படுகிறார்.
ஒரு கட்டத்தில் அமுதாவின் அண்ணன் இளங்கோவை அடித்துக் கொல்ல முயற்சிக்கிறான்.
அமுதாவின் அண்ணனிடம் இருந்து தப்பித்தானா..?
வெளிநாடு சென்றானா...?
தாத்தாவின் கனவை நிறைவேற்றினானா..?
காதலியைக் கரம் பிடித்தானா...?
தங்களை மதிக்காத தாய் மாமனுடன் கூடினானா..?
இப்படி பல கேள்விகளுக்கு விடை படத்தைப் பார்த்து முடிக்கும் போது தெரியும்.
ஒரு கிராமத்து வாழ்க்கையின் வலியைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன். கிராமத்து வாழ்க்கை எப்போதும் பட்டாடை கட்டி ஆடுவதில்லை... இதுதான் எதார்த்தம்... இந்த எதார்த்தம் எழுத்தாகவோ காட்சியாகவோ மாறும் போது அதில் ஆனந்தம் இருப்பதில்லை... அழுகையே அதிகமிருக்கும்... அதுதான் மன நிறைவைக் கொடுக்கும்... அதைக் கொடுத்திருக்கிறது நெடுநல்வாடை.
எந்தச் ஜிகினாவும் சேர்க்காமல் இப்படி ஒரு அழகிய படத்தை எடுத்த இயக்குநருக்கும் , தோழனுக்குத் தோள் கொடுக்க ஒன்றாய் நின்று பணம் போட்ட அந்த 50 தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.
கிழவனாக வாழ்ந்திருக்கிறார் பூ ராம்... என்ன ஒரு நடிப்பு... அப்படியே ஊரில் வயல்களில் மண்வெட்டியுடன் திரியும் கரிய உருவ மனிதர்களைக் கண் முன் நிறுத்தியிருக்கிறார். அறிமுக நாயகன் இளங்கோவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் அறிமுக நாயகி அஞ்சலி நாயரும் கிராமத்துத் துறுதுறு பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்... வந்து போகும் நடிகையாக இல்லாமல் அருமையாக நடிக்கவும் செய்திருக்கிறார்... தொன்னூறுகளின் கிராமத்து நாயகிகளை நினைவில் நிறுத்துகிறார். மாமனாக வரும் மீம்கோபி, ஊர்க்காரராக கிழவனுடனேயே திரியும் ஐந்து கோவிலான், அம்மாவாக வரும் செந்திகுமாரி, வில்லனாக... நாயகியின் அண்ணனாக வரும் அஜய் நடராஜ் என எல்லாப் பாத்திரங்களுமே மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
பூ ராமை தமிழ்ச் சினிமா இன்னும் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நெடுநல்வாடை அவருக்குச் சிறந்த படமாக மட்டுமின்றி, விருதுகளை வென்று கொடுக்கும் படமாகவும் அமையும் என்பது உண்மை.
காட்சிகளில் அவ்வளவு எதார்த்தம்... அதேபோல் நடித்திருப்பவர்கள் பலர் அறிமுகம் என்றாலும் துளி கூட மிகையாக நடிக்காமல் எதார்த்தமாய் நடித்திருப்பது படத்தின் வெற்றி... இப்படி இவர்களைப் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் பலமும்... வெற்றியும் எனலாம்.
இசை அறிமுகமாக ஜோஸ் பிராங்க்ளின்... பின்னணி இசை மட்டும் கொஞ்சம் சோர்வைத் தருகிறது எனலாம்... ஆனால் பாடல்களில் இசை அருமை. பாடல் வரிகள் வைரமுத்து... கருவாத்தேவா பாடலின் வரிகள் கதை சொல்கிறது. காசி விஸ்வநாத் தனது ஒளிப்பதிவில் நெல்லையின் சிங்கிலிப்பட்டி கிராமத்தையும் அழகிய, பசுமையான வயல்வெளிகளையும் மிகச் சிறப்பாக உள்வாங்கியிருக்கிறார்... கிராமத்து வீடுகளும்... தெருக்களும்... வயல்வெளியும்... வெல்லம் தயாரிக்கும் இடமும் நம்மோடு கதாபாத்திரமாகவே பயணிக்கின்றன.
இயக்குநரின் தாத்தாவின் கதைதான் என்பதாய் இறுதியில் முடித்திருக்கிறார். வாழ்க்கைக் கதை என்பது எப்போதுமே சற்று கூடுதல் சுவையைக் கொடுக்கும் என்பதை நெடுநல்வாடை நிரூபித்திருக்கிறது.
படத்தில் சொல்லப்படும் சமூகத்தில் ஓடிப்போன மகளை உடனே ஏற்றுக் கொள்வார்கள் என்பது சற்று யோசிக்கக் கூடியதே. முறுக்கிக் கொண்டு திரியும் மாமனை கதாபாத்திரம் இறுதிவரை வராதது ஏனோ..? ஒரே சாதி எனும் போது தன் தங்கையைக் கொடுக்க மறுத்து அண்ணன் சொல்லுக் காரணம் அரதப்பழசானது என சில விஷயங்கள் எதிராய்த் தோன்றினாலும் நெடுநல்வாடை சிறப்பாகவே வந்திருக்கிறது.
அருமையானதொரு படம்... வாய்ப்பிருப்பவர்கள், விருப்பம் உள்ளவர்கள் பாருங்கள்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» சினிமா : தங்கமகன்
» உலக அளவில் புகழ்பெற்ற சினிமா சண்டை காட்சி -- தமிழ் சினிமா
» சினிமா
» சினிமா : கிடாரி
» சினிமா விமர்சனம் : 96
» உலக அளவில் புகழ்பெற்ற சினிமா சண்டை காட்சி -- தமிழ் சினிமா
» சினிமா
» சினிமா : கிடாரி
» சினிமா விமர்சனம் : 96
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|