Latest topics
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
» உடல்நலம் பெற முறையாக உண்ண வேண்டிய உணவுகள்
by rammalar Thu 14 Mar 2024 - 14:58
» 100 ரூபாய்க்கு திருப்தியான சாப்பாடு!
by rammalar Thu 14 Mar 2024 - 14:37
பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
Page 1 of 1
பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி
எழுதிய கடிதம் இது:
கடந்த, 1991ல், நான் கோவை மருத்துவ கல்லுாரியில்,
இதய நோய் பேராசிரியராக சேர்ந்தேன். கோவை மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில், தலைமை இதய நோய்
நிபுணராக பணிபுரிந்து வந்ததோடு, ஆர்.எஸ்.புரம்,
டி.பி.ரோடில் உள்ள கிளினிக்கில், மாலையில் ஆலோசனையும்
வழங்கி வந்தேன்.
ஓய்வுபெற்ற, வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின்
மனைவி, என்னிடம் சிகிச்சைக்கு வருவார். சில மாதங்கள்
கழித்து, பொங்கல் தினத்தன்று, சொந்த ஊரான சேலம்
போவதற்கு தயாராகி, கோவை மருத்துவ கல்லுாரி
மருத்துவமனை வாசலுக்கு வந்தேன்.
அப்போது, அப்பெண்மணியும், அவரது கணவரும், விம்மி
அழுதபடியே, என் அருகில் வந்தனர்.
‘என்ன மாமி…’ என்றேன்.
‘டாக்டர்… என் மூத்த மகன், பைக்கில் வந்து கொண்டிருந்த
போது, அவிநாசி ரோடு, தனியார் கல்லுாரி அருகில் லாரியில்
அடிபட்டு இறந்து விட்டான். இறந்த உடல், அரசு மருத்துவமனை
சவக்கிடங்கில் உள்ளது. ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்து தான்
அனுப்புவராம்.
‘இன்று, பொங்கல் பண்டிகை. நாளை சனிக்கிழமை, மாட்டுப்
பொங்கல். ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை. மூன்று நாள் கழித்து
தான் டாக்டர் வருவார் என்கின்றனர். பிராமணர்கள் என்பதால்,
உடனடியாக ஈம சடங்கு செய்ய வேண்டும்…’ என்று கூறி,
கவலைப்பட்டனர்.
மருத்துவமனையில் அனைவரும், பொங்கல் விடுமுறையில்
இருந்தனர். உடனே, நண்பரான மருத்துவமனை, ‘டீனை’
தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினேன்.
அவரது அனுமதியுடன், எம்.டி., படித்து, ‘பாரன்சிக்கில்’
உதவியாளராக பணியாற்றிய மருத்துவர் ஒருவரை, இந்த
பணியை செய்ய சொன்னேன். மூன்று மணி நேரத்தில்,
‘போஸ்ட் மார்ட்டம்’ வேலை முடித்து, அந்த குடும்பத்தினரிடம்
உடலை ஒப்படைத்தேன்.
வயதில் மூத்தவர்களான, வருமான வரித்துறை அதிகாரியும்,
அவர் மனைவியும் என் காலில் விழாத குறையாக நன்றி
தெரிவித்தனர்.
‘சட்டத்தின்படி, கடுமையாக வரி ஏய்ப்பு செய்பவர்கள்,
வரி கட்டாதவர்களை தண்டித்து, வருமான வரி துறைக்கு
உண்மையாக உழைத்தேன். அப்போது, தாராபுரத்தில்,
வசித்த ஒருவர், வியாபாரத்தில் நஷ்டமடைந்து, வரி கட்ட
தவறி, மன உளைச்சலால் இறந்து விட்டார்.
‘அவர் வீட்டை, ‘ஜப்தி’ செய்தபோது, அவர் மனைவி,
‘என் கணவரே இறந்து விட்டார். எனக்கு இந்த வீடு வேண்டாம்;
நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்; தாலியையும் வைத்துக்
கொள்ளுங்கள்…’ என்று, கொடுத்து விட்டார்.
அவர் கொடுத்த சாபம் தான், என்னை இந்த நிலைக்கு
ஆளாக்கியது…’ என்று அழுதார், வருமான வரித் துறை
அதிகாரி.
‘உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, உத்தரவு வாங்கி
செய்தீர்கள்…’ என்று, அவரையும், அவர் மனைவியையும்
சமாதானப்படுத்தி அனுப்பினேன்.
சட்டங்களையும், திட்டங்களையும் வகுப்பது, மனிதன் தான்.
ஒருவன், அதிகாரி; இன்னொருவன், ஓட்டு பெற்று, ஐந்து
ஆண்டு அதிகாரத்தை அனுபவிக்கும், அரசியல்வாதி.
தனி மனிதனுக்கு நீதி கிடைக்காத போது, சட்டத்தை
திருத்துவதும், வளைப்பதும் தப்பில்லை. ஆனால்,
ஆட்சியாளர்கள், ஒரு சட்டம் இயற்றும்போது, அதனால்
கிடைக்கும் ஆதாயத்தை மட்டுமே பார்க்கின்றனர்.
பொதுமக்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களை கவனிக்க
தவறி விடுகின்றனர்.
என், 30 வருட மருத்துவ சேவையில், சில
அரசியல்வாதிகளின் மரணம் அருவருப்பாகவும்,
கொடூரமாகவும், இருந்திருக்கிறது. அது பற்றி பின் ஒரு
சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.
– இவ்வாறு எழுதியிருந்தார்.
–
———————
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
எழுதிய கடிதம் இது:
கடந்த, 1991ல், நான் கோவை மருத்துவ கல்லுாரியில்,
இதய நோய் பேராசிரியராக சேர்ந்தேன். கோவை மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில், தலைமை இதய நோய்
நிபுணராக பணிபுரிந்து வந்ததோடு, ஆர்.எஸ்.புரம்,
டி.பி.ரோடில் உள்ள கிளினிக்கில், மாலையில் ஆலோசனையும்
வழங்கி வந்தேன்.
ஓய்வுபெற்ற, வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின்
மனைவி, என்னிடம் சிகிச்சைக்கு வருவார். சில மாதங்கள்
கழித்து, பொங்கல் தினத்தன்று, சொந்த ஊரான சேலம்
போவதற்கு தயாராகி, கோவை மருத்துவ கல்லுாரி
மருத்துவமனை வாசலுக்கு வந்தேன்.
அப்போது, அப்பெண்மணியும், அவரது கணவரும், விம்மி
அழுதபடியே, என் அருகில் வந்தனர்.
‘என்ன மாமி…’ என்றேன்.
‘டாக்டர்… என் மூத்த மகன், பைக்கில் வந்து கொண்டிருந்த
போது, அவிநாசி ரோடு, தனியார் கல்லுாரி அருகில் லாரியில்
அடிபட்டு இறந்து விட்டான். இறந்த உடல், அரசு மருத்துவமனை
சவக்கிடங்கில் உள்ளது. ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்து தான்
அனுப்புவராம்.
‘இன்று, பொங்கல் பண்டிகை. நாளை சனிக்கிழமை, மாட்டுப்
பொங்கல். ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை. மூன்று நாள் கழித்து
தான் டாக்டர் வருவார் என்கின்றனர். பிராமணர்கள் என்பதால்,
உடனடியாக ஈம சடங்கு செய்ய வேண்டும்…’ என்று கூறி,
கவலைப்பட்டனர்.
மருத்துவமனையில் அனைவரும், பொங்கல் விடுமுறையில்
இருந்தனர். உடனே, நண்பரான மருத்துவமனை, ‘டீனை’
தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினேன்.
அவரது அனுமதியுடன், எம்.டி., படித்து, ‘பாரன்சிக்கில்’
உதவியாளராக பணியாற்றிய மருத்துவர் ஒருவரை, இந்த
பணியை செய்ய சொன்னேன். மூன்று மணி நேரத்தில்,
‘போஸ்ட் மார்ட்டம்’ வேலை முடித்து, அந்த குடும்பத்தினரிடம்
உடலை ஒப்படைத்தேன்.
வயதில் மூத்தவர்களான, வருமான வரித்துறை அதிகாரியும்,
அவர் மனைவியும் என் காலில் விழாத குறையாக நன்றி
தெரிவித்தனர்.
‘சட்டத்தின்படி, கடுமையாக வரி ஏய்ப்பு செய்பவர்கள்,
வரி கட்டாதவர்களை தண்டித்து, வருமான வரி துறைக்கு
உண்மையாக உழைத்தேன். அப்போது, தாராபுரத்தில்,
வசித்த ஒருவர், வியாபாரத்தில் நஷ்டமடைந்து, வரி கட்ட
தவறி, மன உளைச்சலால் இறந்து விட்டார்.
‘அவர் வீட்டை, ‘ஜப்தி’ செய்தபோது, அவர் மனைவி,
‘என் கணவரே இறந்து விட்டார். எனக்கு இந்த வீடு வேண்டாம்;
நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்; தாலியையும் வைத்துக்
கொள்ளுங்கள்…’ என்று, கொடுத்து விட்டார்.
அவர் கொடுத்த சாபம் தான், என்னை இந்த நிலைக்கு
ஆளாக்கியது…’ என்று அழுதார், வருமான வரித் துறை
அதிகாரி.
‘உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, உத்தரவு வாங்கி
செய்தீர்கள்…’ என்று, அவரையும், அவர் மனைவியையும்
சமாதானப்படுத்தி அனுப்பினேன்.
சட்டங்களையும், திட்டங்களையும் வகுப்பது, மனிதன் தான்.
ஒருவன், அதிகாரி; இன்னொருவன், ஓட்டு பெற்று, ஐந்து
ஆண்டு அதிகாரத்தை அனுபவிக்கும், அரசியல்வாதி.
தனி மனிதனுக்கு நீதி கிடைக்காத போது, சட்டத்தை
திருத்துவதும், வளைப்பதும் தப்பில்லை. ஆனால்,
ஆட்சியாளர்கள், ஒரு சட்டம் இயற்றும்போது, அதனால்
கிடைக்கும் ஆதாயத்தை மட்டுமே பார்க்கின்றனர்.
பொதுமக்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களை கவனிக்க
தவறி விடுகின்றனர்.
என், 30 வருட மருத்துவ சேவையில், சில
அரசியல்வாதிகளின் மரணம் அருவருப்பாகவும்,
கொடூரமாகவும், இருந்திருக்கிறது. அது பற்றி பின் ஒரு
சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.
– இவ்வாறு எழுதியிருந்தார்.
–
———————
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23633
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சர்தார்ஜீ எழுதிய கடிதம்!
» சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதிய கடிதம்- சுவை
» காதல் மனைவிக்கு பாரதியார் எழுதிய கடிதம்
» கலெக்டர் சகாயம் எழுதிய உருக்கமான கடிதம்:
» கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.
» சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதிய கடிதம்- சுவை
» காதல் மனைவிக்கு பாரதியார் எழுதிய கடிதம்
» கலெக்டர் சகாயம் எழுதிய உருக்கமான கடிதம்:
» கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|