Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வேலனும் குதிரையும்
4 posters
Page 1 of 1
வேலனும் குதிரையும்
ஒரு ஊரில் ஒரு குதிரை வியாபாரி இருந்தார். அவன் பல குதிரைகளை வளர்த்து விற்று வந்தார். அதே ஊரில் வேலன் என்றோருவன் இருந்தான். அவன் சிறிய வேலைகளைச் செய்து சொற்ப வருமானத்தில் தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போதுதான் வேலன் குதிரை வியாபாரியை பற்றி அறிந்தான். அவரிடம் ஓர் குதிரையை விலைக்கு வேண்டி, அதைக்கொண்டு குதிரைப் பந்தயத்தின் மூலம் நாம் சம்பாதிக்கலாமே, எவ்வளவு காலம்தான் இந்த சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்வது, என்று எண்ணினான். தான் சிறிதாக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு குதிரை வியாபாரியைக் காண புறப்பட்டான
அங்கே வியாபாரியின் வீட்டின் அருகே உள்ள குதிரை லாயத்தில் பலவகையான குதிரைகள் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தான். எந்தக் குதிரையை தேர்ந்தெடுப்பது என்று ஒவ்வொன்றாக நோட்டம் இட்டான் வேலன். இறுதியாக வியாபரியிடமே கேட்போம் என்று எண்ணி "ஐயா இங்கே உள்ள குதிரைகளில் எது மிக வேகமாக ஓடக்கூடிய குதிரை?" என்று வினாவினான். அதற்கு வியாபாரி ஓர் குதிரைக் குட்டியைக் காட்டி"இதோ பாரும் ஐயா, எல்லா குதிரைகளும் வேகமாக ஓடக்கூடிய குதிரைகள்தான். ஆனால் இந்த குட்டி இருக்கிறதே, இதன் தாய் சாதாரண குதிரைகளின் வேகத்தை விட சற்று அதிக வேகம் கொண்டது. அதன் வேகம் அதன் குட்டியாகிய இதற்கும் உண்டு, ஆக நீங்கள் இதையே வேண்டலாம்" என்றார். வேலனும் அந்த குதிரை குட்டியையே வேண்டிக்கொண்டான்.
வீட்டுக்கு கொண்டுவந்த குதிரைக்குட்டியை நன்கு கவனிக்க தொடங்கினான் வேலன். அதற்கு தகுந்த தீனியை ஒவ்வொரு நாளும் அளித்தான் வேலன். குதிரையும் அதை நன்கு தின்னுவதும் பின் உறங்குவதுமாக இருந்தது. வேலனும், 'குதிரைக்குட்டி வளர்ந்து வந்து தனக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தரப்போகிறது' என்று பலவாறு கனவு கண்டான். காலங்கள் கடந்து ஓடின. வேலனின் குதிரைக்குட்டி குதிரையாக நன்கு வளர்ந்திருந்தது. நன்றாக வளர்ந்துவிட்டது இனி இக்குதிரையை பந்தயத்தில் விடலாம் என்று எண்ணினான் வேலன்.
பின்னொருனாள் வேலன் தன் குதிரையை ஓட்டிக்கொண்டு குதிரை பந்தயம் நடக்கும் இடத்துக்கு வந்தடைந்தான். பந்தயத்தில் தயாரக நின்ற குதிரைகளுடன் தனது குதிரையையும் கொண்டுபோய் நிறுத்தினான். ஓட்டப்பந்தயமும் ஆரம்பமானது. கொடியசைத்ததும் அனைத்து குதிரைகளும் வேகம் எடுத்து ஓட்டத் தொடங்கின. ஆனால் வேலனின் குதிரை மட்டும் மெதுவாக நடக்கத்தொடங்கியது. குதிரை ஓடாமல்நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான் வேலன். "ஏய் ஏன் நடக்கிறாய், வேகமாக ஓடு" என்று கத்தினான். குதிரை மெல்ல ஓடத் தொடங்கியது அதன் ஓட்டத்தில் வேகமே இல்லை. கோபம் கொண்டான் வேலன். "ஏய் குதிரை என்ன செய்கிறாய்?! அங்கே பார் மற்றய குதிரைகள் எல்லாம் எப்படி ஓடுகிறது. வேகமாக ஓடு..ஓடு" என்று கத்தினான்.
ஆனால் குதிரை மெதுவாகவே ஓடிக் கொண்டிருந்தது. அத்துடன் பாதி தூரத்திலேயே நின்றும் விட்டது. பார்வையாளர்கள் எல்லாம் அதைக்கண்டு சிரித்தே விட்டனர். கிடைக்கவேண்டிய பணமும் கிடைக்காமல் போனது. இதனால் வேலன் கோபத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தான். "இதற்கேல்லாம் காரணம் அந்த குதிரை வியாபாரிதான். அவன் நன்றாக என்னை ஏமாற்றி இந்தக் சோம்பேறிக் குதிரையை என் தலையில் கட்டிவிட்டான் ச்சே!" என்று மனதுக்குள் குமறினான். ஒருவாறு பந்தயத்தில் இருந்து குதிரை ஓட்டிக்கொண்டு நேராக குதிரை வியாபாரிடம் சென்றான்.
குதிரை வியாபரியிடம் வந்தடைந்த வேலன் "இந்தா உன் குதிரையும் நீயும்! இதை நீயே வைத்துக்கொள், நான் இதற்களித்த பணத்தை மட்டும் திருப்பி தந்துவிடு, நான் போய்விடுகிறேன்" என்று வியாபாரி முன் கோபமாக கூறினான். இதைக்கேட்ட வியாபாரி "ஏன் என்ன நடந்தது? ஏன் இவ்வளவு கேபமாக இருக்கிறாய், நடந்தது என்ன? முதலில் அதைக் கூறு" என்று பதிலளித்தார். அதற்கு வேலன் "ம்...நன்றாக நடந்தது உனது குதிரை" என, "என்ன சொல்கிறாய்? விளக்கமாக சொல்?" என்றார். "என்ன சொல்வது உனது பேச்சைக் கேட்டுத்தான இந்தக் குதிரையை வேண்டிச் சென்றேன், அதற்கு எவ்வளவு தீனி போட்டு வளர்த்திருந்தேன் தெரியுமா! நான் சாப்பிட்டதை விட அதற்கு தீனி போட்டதுதான் அதிகம், ஆனால் கடைசியில் பந்தயத்தில் ஓடாமல் பாதியிலேயே நின்று என் கழுத்தை அறுத்து விட்டது. இப்படிப்பட்ட குதிரை இனிமேல் எனக்கு தேவையில்லை. இதை நீயே வைத்துகொள், என் பணத்தை மட்டும் தந்துவிடு" என்று வருத்ததுடன் வேலன் கூறினான்.
இதைக்கேட்ட வியாபாரி ஒஹோ இதுதான் விடயமா என எண்ணி மௌனமாக சிரித்தார். "நீ உன் குதிரைக்கு தீனி போட்டது சரி, அதற்கு முறையான ஓட்டப் பயிற்சி அளித்தாயா? என்று வினாவினார். "என்ன ஓட்டப் பயிற்சியா குதிரைக்கு எதற்கு பயிற்சி? அதன் இயல்பே ஓடுவதுதானே. நீ கதையை மாற்றாமல் என் பணத்தை தந்துவிடு." என்று தன் குறிக்கோலிலே இருந்தான். "பொறு வேலன் பணத்தை பற்றி பிறகு யோசிப்போம், முதலில் நான் சொல்வதைக் கேள்" என்று அவனை நிதானப்படுத்தினார். மேலும் தொடர்ந்த அவர் "என்னதான் குதிரை ஓடப் பிறந்திருந்தாலும் அதற்கு நாம் சிறுவயது முதலே நல்ல ஓட்டப் பயிற்சி கொடுக்க வேண்டும், ஓவ்வொரு நாளும் தீனி போடுவது பெரிதல்ல தீனிக்கு பின் முறையான பயிற்சியே முக்கியம். நீ அதற்கு தீனி மட்டும் போட்டு நன்றாக தூங்க விட்டு வளர்திருப்பாய் அதுவும் சோப்பேறியாக வளர்ந்திருக்கிறது, பிறகு எப்படி பந்தயத்தில் ஓடு என்றால் ஓடுமா? சொல்!" என்றார் வியாபாரி.
அவர் சொன்ன பின்தான் வேலன் சிறிது சிந்தித்து பார்த்தான். தன் தவறையும் உணர்ந்து கொண்டான். "ஐயா, நீங்கள் கூறுவது சரிதான், நான்தான் இக் குதிரையை சோம்பேறியாக வளர்த்து விட்டேன், அது தெரியாமல் உங்களை வேறு தவறாக நினைந்து பேசிவிட்டேன், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா" என்று வேலன் கூறியது மட்டுமல்லாது, இனி இக் குதிரைக்கு தகுந்த பயிற்சி அளித்து பந்தயத்தில் வெற்றி பெருவேன் என்றும் வியாபாரியிடம் சொல்லிவிட்டு குதிரையுடன் வீடு திரும்பினான்.
அங்கே வியாபாரியின் வீட்டின் அருகே உள்ள குதிரை லாயத்தில் பலவகையான குதிரைகள் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தான். எந்தக் குதிரையை தேர்ந்தெடுப்பது என்று ஒவ்வொன்றாக நோட்டம் இட்டான் வேலன். இறுதியாக வியாபரியிடமே கேட்போம் என்று எண்ணி "ஐயா இங்கே உள்ள குதிரைகளில் எது மிக வேகமாக ஓடக்கூடிய குதிரை?" என்று வினாவினான். அதற்கு வியாபாரி ஓர் குதிரைக் குட்டியைக் காட்டி"இதோ பாரும் ஐயா, எல்லா குதிரைகளும் வேகமாக ஓடக்கூடிய குதிரைகள்தான். ஆனால் இந்த குட்டி இருக்கிறதே, இதன் தாய் சாதாரண குதிரைகளின் வேகத்தை விட சற்று அதிக வேகம் கொண்டது. அதன் வேகம் அதன் குட்டியாகிய இதற்கும் உண்டு, ஆக நீங்கள் இதையே வேண்டலாம்" என்றார். வேலனும் அந்த குதிரை குட்டியையே வேண்டிக்கொண்டான்.
வீட்டுக்கு கொண்டுவந்த குதிரைக்குட்டியை நன்கு கவனிக்க தொடங்கினான் வேலன். அதற்கு தகுந்த தீனியை ஒவ்வொரு நாளும் அளித்தான் வேலன். குதிரையும் அதை நன்கு தின்னுவதும் பின் உறங்குவதுமாக இருந்தது. வேலனும், 'குதிரைக்குட்டி வளர்ந்து வந்து தனக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தரப்போகிறது' என்று பலவாறு கனவு கண்டான். காலங்கள் கடந்து ஓடின. வேலனின் குதிரைக்குட்டி குதிரையாக நன்கு வளர்ந்திருந்தது. நன்றாக வளர்ந்துவிட்டது இனி இக்குதிரையை பந்தயத்தில் விடலாம் என்று எண்ணினான் வேலன்.
பின்னொருனாள் வேலன் தன் குதிரையை ஓட்டிக்கொண்டு குதிரை பந்தயம் நடக்கும் இடத்துக்கு வந்தடைந்தான். பந்தயத்தில் தயாரக நின்ற குதிரைகளுடன் தனது குதிரையையும் கொண்டுபோய் நிறுத்தினான். ஓட்டப்பந்தயமும் ஆரம்பமானது. கொடியசைத்ததும் அனைத்து குதிரைகளும் வேகம் எடுத்து ஓட்டத் தொடங்கின. ஆனால் வேலனின் குதிரை மட்டும் மெதுவாக நடக்கத்தொடங்கியது. குதிரை ஓடாமல்நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான் வேலன். "ஏய் ஏன் நடக்கிறாய், வேகமாக ஓடு" என்று கத்தினான். குதிரை மெல்ல ஓடத் தொடங்கியது அதன் ஓட்டத்தில் வேகமே இல்லை. கோபம் கொண்டான் வேலன். "ஏய் குதிரை என்ன செய்கிறாய்?! அங்கே பார் மற்றய குதிரைகள் எல்லாம் எப்படி ஓடுகிறது. வேகமாக ஓடு..ஓடு" என்று கத்தினான்.
ஆனால் குதிரை மெதுவாகவே ஓடிக் கொண்டிருந்தது. அத்துடன் பாதி தூரத்திலேயே நின்றும் விட்டது. பார்வையாளர்கள் எல்லாம் அதைக்கண்டு சிரித்தே விட்டனர். கிடைக்கவேண்டிய பணமும் கிடைக்காமல் போனது. இதனால் வேலன் கோபத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தான். "இதற்கேல்லாம் காரணம் அந்த குதிரை வியாபாரிதான். அவன் நன்றாக என்னை ஏமாற்றி இந்தக் சோம்பேறிக் குதிரையை என் தலையில் கட்டிவிட்டான் ச்சே!" என்று மனதுக்குள் குமறினான். ஒருவாறு பந்தயத்தில் இருந்து குதிரை ஓட்டிக்கொண்டு நேராக குதிரை வியாபாரிடம் சென்றான்.
குதிரை வியாபரியிடம் வந்தடைந்த வேலன் "இந்தா உன் குதிரையும் நீயும்! இதை நீயே வைத்துக்கொள், நான் இதற்களித்த பணத்தை மட்டும் திருப்பி தந்துவிடு, நான் போய்விடுகிறேன்" என்று வியாபாரி முன் கோபமாக கூறினான். இதைக்கேட்ட வியாபாரி "ஏன் என்ன நடந்தது? ஏன் இவ்வளவு கேபமாக இருக்கிறாய், நடந்தது என்ன? முதலில் அதைக் கூறு" என்று பதிலளித்தார். அதற்கு வேலன் "ம்...நன்றாக நடந்தது உனது குதிரை" என, "என்ன சொல்கிறாய்? விளக்கமாக சொல்?" என்றார். "என்ன சொல்வது உனது பேச்சைக் கேட்டுத்தான இந்தக் குதிரையை வேண்டிச் சென்றேன், அதற்கு எவ்வளவு தீனி போட்டு வளர்த்திருந்தேன் தெரியுமா! நான் சாப்பிட்டதை விட அதற்கு தீனி போட்டதுதான் அதிகம், ஆனால் கடைசியில் பந்தயத்தில் ஓடாமல் பாதியிலேயே நின்று என் கழுத்தை அறுத்து விட்டது. இப்படிப்பட்ட குதிரை இனிமேல் எனக்கு தேவையில்லை. இதை நீயே வைத்துகொள், என் பணத்தை மட்டும் தந்துவிடு" என்று வருத்ததுடன் வேலன் கூறினான்.
இதைக்கேட்ட வியாபாரி ஒஹோ இதுதான் விடயமா என எண்ணி மௌனமாக சிரித்தார். "நீ உன் குதிரைக்கு தீனி போட்டது சரி, அதற்கு முறையான ஓட்டப் பயிற்சி அளித்தாயா? என்று வினாவினார். "என்ன ஓட்டப் பயிற்சியா குதிரைக்கு எதற்கு பயிற்சி? அதன் இயல்பே ஓடுவதுதானே. நீ கதையை மாற்றாமல் என் பணத்தை தந்துவிடு." என்று தன் குறிக்கோலிலே இருந்தான். "பொறு வேலன் பணத்தை பற்றி பிறகு யோசிப்போம், முதலில் நான் சொல்வதைக் கேள்" என்று அவனை நிதானப்படுத்தினார். மேலும் தொடர்ந்த அவர் "என்னதான் குதிரை ஓடப் பிறந்திருந்தாலும் அதற்கு நாம் சிறுவயது முதலே நல்ல ஓட்டப் பயிற்சி கொடுக்க வேண்டும், ஓவ்வொரு நாளும் தீனி போடுவது பெரிதல்ல தீனிக்கு பின் முறையான பயிற்சியே முக்கியம். நீ அதற்கு தீனி மட்டும் போட்டு நன்றாக தூங்க விட்டு வளர்திருப்பாய் அதுவும் சோப்பேறியாக வளர்ந்திருக்கிறது, பிறகு எப்படி பந்தயத்தில் ஓடு என்றால் ஓடுமா? சொல்!" என்றார் வியாபாரி.
அவர் சொன்ன பின்தான் வேலன் சிறிது சிந்தித்து பார்த்தான். தன் தவறையும் உணர்ந்து கொண்டான். "ஐயா, நீங்கள் கூறுவது சரிதான், நான்தான் இக் குதிரையை சோம்பேறியாக வளர்த்து விட்டேன், அது தெரியாமல் உங்களை வேறு தவறாக நினைந்து பேசிவிட்டேன், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா" என்று வேலன் கூறியது மட்டுமல்லாது, இனி இக் குதிரைக்கு தகுந்த பயிற்சி அளித்து பந்தயத்தில் வெற்றி பெருவேன் என்றும் வியாபாரியிடம் சொல்லிவிட்டு குதிரையுடன் வீடு திரும்பினான்.
Re: வேலனும் குதிரையும்
இந்த கதையில் நல்ல படிப்பினை உள்ளது மாம்மா உண்ணுவதும் உறங்குவதும்தான் வாழ்க்கை இல்லை என்பதை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள் நன்றி மாமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வேலனும் குதிரையும்
இப்படிதான் ஒவ்வரு தேர்தலில்,ஓடு போடுகிறோம் .கடைசியில் இப்படி தான் முறையான் தேர்வு இல்லாமல் ...
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|