சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

தங்கக்கொண்டைச் சேவல். Khan11

தங்கக்கொண்டைச் சேவல்.

Go down

தங்கக்கொண்டைச் சேவல். Empty தங்கக்கொண்டைச் சேவல்.

Post by ஹம்னா Thu 16 Jun 2011 - 19:59

தங்கக்கொண்டைச் சேவல். Sm5


ஒரு பூனையும், கரும்பறவையும், தங்கக் கொண்டைச் சேவலும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. காட்டில் குடில் கட்டிக்கொண்டு அவை வசித்தன. ஒரு நாள் பூனையும் கரும்பறவையும் சேவலைத் தனியாக விட்டுவிட்டு விறகு வெட்டக் காட்டிற்குச் சென்றன.

""நாங்கள் ரொம்பத் தூரம் போகிறோம் சேவலே. நீ வீட்டுக் காரியங்களைப் பார்த்துக்கொள். சத்தங்காட்டாதே. நரி வந்தால் ஜன்னலுக்கு வெளியே தலை காட்டாதே'' என்று சேவலுக்கு அறிவுரை சொல்லிவிட்டுக் கிளம்பின.

பூனையும் கரும்பறவையும் வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு நரி குடிலுக்கு ஓடி வந்தது. ஜன்னலுக்கு அடியில் அமர்ந்துகொண்டு பாடத் தொடங்கியது:

""சேவலே, சேவலே,

தங்கக் கொண்டைச் சேவலே

எண்ணெய்த் தலை மினுக்கா

பட்டுத் தாடிக் குலுக்கா

எட்டிப் பார் வெளியே

பட்டாணி தருவேன்!''


சேவல் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டியது. நரி, அதை லபக்கென்று பிடித்து தன் வளைக்கு எடுத்துக்கொண்டு ஓடியது.

சேவல் கூக்குரலிட்டது:

""நரி என்னைக் கொண்டோடுதே

இருண்ட காட்டுக்கு அப்பாலே

விரைந்த ஆற்றின் அக்கரையில்

உயர்ந்த மலைக்குப் பின்னாலே...

பூனையே, கரும்பறவையே,

காப்பாற்றுங்கள் என்னையே!''

இதைப் பூனையும் கரும்பறவையும் கேட்டன. அவை பாய்ந்தோடித் துரத்தி, நரியிடமிருந்து சேவலைப் பிடுங்கிக்கொண்டுவிட்டன.

இன்னொரு முறையும் பூனையும் கரும்பறவையும் விறகு வெட்டக் காட்டுக்குச் சென்றன.


""சேவலே ஜன்னலுக்கு வெளியே பார்க்காதே. நாங்கள் இன்னும் தூரம் போகிறோம். உன் குரல் எங்களுக்குக் கேட்காது.'' - இப்படி எச்சரித்துவிட்டுப் புறப்பட்டன.

அவை போனதுமே நரி மறுபடியும் குடிலுக்கு வந்து பாடியது:

""சேவலே, சேவலே

தங்கக் கொண்டைச் சேவலே

எண்ணெய்த் தலை மினுக்கா

பட்டுத்தாடிக் குலுக்கா

எட்டிப் பார் வெளியே

பட்டாணி தருவேன்!''

சேவலோ அமைதியாக இருந்தது. நரி மறுபடியும் பாடியது:

""கோதுமை சிந்தியே

ஓடினார்கள் பிள்ளைகள்


கோழிகள்தாம் கொத்துதே

சேவல்களை விரட்டுதே!''
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தங்கக்கொண்டைச் சேவல். Empty Re: தங்கக்கொண்டைச் சேவல்.

Post by ஹம்னா Thu 16 Jun 2011 - 20:13

சேவல் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியது. ""கொக்-கொக்-கொக்! கோழிகளாவது சேவல்களை விரட்டவாவது?'' என்று கேட்டது.

நரி அதை லபக்கென்று பிடித்துத் தன் வளைக்கு எடுத்துக்கொண்டு ஓடியது. சேவல் கூக்குரலிட்டது:

""நரி என்னைக் கொண்டோடுதே

இருண்ட காட்டுக்கு அப்பாலே

விரைந்த ஆற்றின் அக்கரையில்

உயர்ந்த மலைக்குப் பின்னாலே...

பூனையே, கரும்பறவையே,

காப்பாற்றுங்கள் என்னையே!''

இதைக் கேட்டதும் பூனையும், கரும்பறவையும் விரட்டிக்கொண்டு வந்தன. பூனை ஓடியது, கரும்பறவை பறந்தது. அவை நரியை எட்டிப் பிடித்தன. பூனை பிறாண்டியது, கரும்பறவை கொத்தியது. சேவலை அவை பிடுங்கிக்கொண்டன.

கொஞ்சம் காலத்திற்குப் பிறகு பூனையும் கரும்பறவையும் விறகு வெட்டக் காட்டுக்குப் புறப்பட்டன.

""நரி சொல்வதைக் கேளாதே. ஜன்னலுக்கு வெளியே பார்க்காதே. நாங்கள் இன்னும் தொலைவுக்குப் போகிறோம் - உன் குரல் எங்கள் காதில் விழாது.'' - இப்படிச் சேவலிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுச் சென்றன.

அவை அந்தப் பக்கம் போனதுமே நரி வந்துவிட்டது குடிலுக்கு. ஜன்னலுக்கு அடியில் உட்கார்ந்து பாடியது:

""சேவலே, சேவலே

தங்கக்கொண்டைச் சேவலே

எண்ணெய்த் தலை மினுக்கா,

பட்டுத் தாடிக் குலுக்கா

எட்டிப்பார் வெளியே

பட்டாணி தருவேன்!''

சேவல் அமைதியாக உட்கார்ந்திருந்தது. நரியோ, மறுபடி பாடியது:

""கோதுமை சிந்தியே

ஓடினார்கள் பிள்ளைகள்

கோழிகள்தாம் கொத்துதே

சேவல்களை விரட்டுதே!''

அப்போதும் சேவல் அமைதியாக இருந்தது. நரி இன்னும் பாடியது:

""பல மனிதர் வந்தனர்

பருப்புதனைச் சிந்தினர்

கோழிகள்தாம் கொத்துதே

சேவல்களை விரட்டுதே!''


சேவல் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டியது:

""கொக் - கொக் - கொக்! கோழிகளாவது, சேவல்களை விரட்டவாவது?'' என்றது.

நரி அதைப் பாய்ந்து பிடித்தது. இருண்ட காட்டுக்கு அப்பால், விரையும் ஆற்றின் அக்கரையில், உயர்ந்த மலைக்குப் பின்னால் தன் வளைக்குத் தூக்கிச் சென்றுவிட்டது.

சேவல் என்னதான் கத்தியும் கூச்சலிட்டும் பயன் இல்லை. பூனைக்கும் கரும்பறவைக்கும் அதன் குரல் கேட்கவில்லை. அவை குடில் திரும்பியதும் பார்க்கின்றன, சேவலைக் காணோம்.

பூனையும் கரும்பறவையும், நரியின் காலடித் தடங்களைப் பின்பற்றிச் சென்றன. பூனை ஓடியது. கரும்பறவை பறந்தது. அவை நரியின் வளையை அடைந்தன. பூனை, தந்தி வாத்தியத்தை சுருதி சேர்த்து மீட்டிக்கொண்டே பாடியது:

""டிரிங், பிரிங் தந்திகளே

தங்கத் தங்கத் தந்திகளே

எங்கே அருமை நரி அக்கா

இதமாய் வளையில் உறங்கினாளோ?''

நரி வெகு நேரம் இதைக் கேட்டுக்கொண்டிருந்தது. "இவ்வளவு நன்றாக தந்தி வாத்தியம் வாசித்துக்கொண்டு பாடுவது யார், பார்ப்போமே!' என்று நினைத்தது. இப்படி நினைத்து வளையிலிருந்து வெளியே வந்தது. பூனையும் கரும்பறவையும் அதை லபக்கென்று பிடித்து அடித்து நொறுக்கின. அவை அடித்த அடியில் நரி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியே போய்விட்டது.

பூனையும், கரும்பறவையும் சேவலைக் கூடையில் வைத்து வீட்டிற்குக் கொண்டு வந்தன. அன்று முதல் மூன்றும் நல்லபடியாக வாழ்ந்தன. இப்போதும் வாழ்கின்றன.



தங்கக்கொண்டைச் சேவல். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum