Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
+2
*சம்ஸ்
யாதுமானவள்
6 posters
Page 1 of 1
பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
இன்று (ஜூலை 2 ஆம் தேதி) என் தாயின் பிறந்த நாள் ... .
தாய்க்கு நான் எழுதிய கவிதை இது....
பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
ஐயிரண்டு திங்களெனை அடிவயிற்றில் பதுக்கி யதால்
மெய்யுருக்கி நித்தமுந்தன் மேனியதை வருத்தி யதால்
பெய்யுமழை யாகியெனைப் புதுப்புனலாய் ஆக்கி யதால்
மெய்யான என்னுடலுக் குன்னாலுயிர் பெற்றேன்
உன்னுதிரம் குழைத்து தினம் உட்கொண்ட காரணத்தால்
என்னிதயம் என்சுவாசம் எல்லாமும் ஒழுங்குபட
உன்னுள்ளே ஓசையின்றி ஓவிய மாய்நீ வரைய
இன்னுலகம் காணும் படிஇவ்வுரு வம்நான் பெற்றேன்
உண்ட உந்தன் முலைப்பாலால் உற்றதொரு தேகபலம்
கொண்டு நானும் வளர்ந்து சிறுமழலை யாகி ஓடிவர
கண்டு யெனைமற்றவர் கள்எழிலாக யெனையழைக்க
நண்ணிய தானலதா ராணியெனும் பெயர் பெற்றேன்.
முன்னெனக்குப் பிறந்தவர்கள் முத்தம்நிறை பெற்றவர்கள்
பின்னெனக்குப் பிறந்தவர்கள் பாசம்நிறை பெற்றவர்கள்
என்னருமை உடன்பிறந்தோர் அருமையான அறுவரையும்
உன்னாலே என்னுறவாய் இவ்வுலகில் நான் பெற்றேன்!
தக்க பருவந்தன்னில் தாய்மொழியைப் பயிற்றுவித்து
அக்கறை யோடு யெனை அருமையாக வளர்த்தெடுத்து
சொக்கும் தமிழோடு யெனைசேர்த் துவைத்து வாழவைத்து
மிக்கவரை ஈர்க்குமாறிந் தச்சிற்றறி வும்யான் பெற்றேன்.
பொன்னும் பொருளும் பெயருடனே உற்றபல நற்புகழும்
இன்னும் என்னென்ன உண்டோ இனிதான இவ்வுலகில்
உன்னாலே எல்லாமும் பெற்றே னிதைஎல்லாம் விஞ்சியதாய்
பொன்னினும் மேலான நின்னை யென்தாயாகப் பெற்றேன்.
தாய்க்கு நான் எழுதிய கவிதை இது....
பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
ஐயிரண்டு திங்களெனை அடிவயிற்றில் பதுக்கி யதால்
மெய்யுருக்கி நித்தமுந்தன் மேனியதை வருத்தி யதால்
பெய்யுமழை யாகியெனைப் புதுப்புனலாய் ஆக்கி யதால்
மெய்யான என்னுடலுக் குன்னாலுயிர் பெற்றேன்
உன்னுதிரம் குழைத்து தினம் உட்கொண்ட காரணத்தால்
என்னிதயம் என்சுவாசம் எல்லாமும் ஒழுங்குபட
உன்னுள்ளே ஓசையின்றி ஓவிய மாய்நீ வரைய
இன்னுலகம் காணும் படிஇவ்வுரு வம்நான் பெற்றேன்
உண்ட உந்தன் முலைப்பாலால் உற்றதொரு தேகபலம்
கொண்டு நானும் வளர்ந்து சிறுமழலை யாகி ஓடிவர
கண்டு யெனைமற்றவர் கள்எழிலாக யெனையழைக்க
நண்ணிய தானலதா ராணியெனும் பெயர் பெற்றேன்.
முன்னெனக்குப் பிறந்தவர்கள் முத்தம்நிறை பெற்றவர்கள்
பின்னெனக்குப் பிறந்தவர்கள் பாசம்நிறை பெற்றவர்கள்
என்னருமை உடன்பிறந்தோர் அருமையான அறுவரையும்
உன்னாலே என்னுறவாய் இவ்வுலகில் நான் பெற்றேன்!
தக்க பருவந்தன்னில் தாய்மொழியைப் பயிற்றுவித்து
அக்கறை யோடு யெனை அருமையாக வளர்த்தெடுத்து
சொக்கும் தமிழோடு யெனைசேர்த் துவைத்து வாழவைத்து
மிக்கவரை ஈர்க்குமாறிந் தச்சிற்றறி வும்யான் பெற்றேன்.
பொன்னும் பொருளும் பெயருடனே உற்றபல நற்புகழும்
இன்னும் என்னென்ன உண்டோ இனிதான இவ்வுலகில்
உன்னாலே எல்லாமும் பெற்றே னிதைஎல்லாம் விஞ்சியதாய்
பொன்னினும் மேலான நின்னை யென்தாயாகப் பெற்றேன்.
Last edited by யாதுமானவள் on Sat 2 Jul 2011 - 22:11; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
பாசமும் நேசமும் தாயின் புகளும் அருமையாக இணைத்து கவி வடித்த என்னருமை அக்காவுக்கு நன்றி நன்றி அனைத்து வரிகளும் அருமை ரசித்தேன்.. உணர்வு பூர்வமாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
பொன்னும் பொருளும் பெயரும் புகழும்
இன்னும் என்னென்ன உண்டோ இவ்வுலகில்
உன்னாலே எல்லாமும் பெற்றேன்- பொன்னான
நின்னை யென்தா யாகநான் பெற்றேன்.
முதலில் அன்பு தாய்க்கு வாழ்த்துக்கள் .
தாய்க்கு நிகர் தாய்,
அன்பாய்,தொடர்வாய்,பசியாருவாய்,வளர்வாய்,மகிழ்வாய்
அறிவாய்,உணர்வாய்,அனைத்துக்கும் விடையாய் நம் தாய் .
அருமை தோழியே !உங்கள் தாய்ப் பாசம் தொடரட்டும்
இன்னும் என்னென்ன உண்டோ இவ்வுலகில்
உன்னாலே எல்லாமும் பெற்றேன்- பொன்னான
நின்னை யென்தா யாகநான் பெற்றேன்.
முதலில் அன்பு தாய்க்கு வாழ்த்துக்கள் .
தாய்க்கு நிகர் தாய்,
அன்பாய்,தொடர்வாய்,பசியாருவாய்,வளர்வாய்,மகிழ்வாய்
அறிவாய்,உணர்வாய்,அனைத்துக்கும் விடையாய் நம் தாய் .
அருமை தோழியே !உங்கள் தாய்ப் பாசம் தொடரட்டும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
//தக்க பருவந்தன்னில் தாய்மொழியைப் பயிற்றுவித்து
அக்கறை யோடு யெனை அருமையாக வளர்த்தெடுத்து
சொக்கும் தமிழோடு யெனைசேர்த் துவைத்து வாழவைத்து
மிக்கவரை ஈர்க்குமாறிந் தச்சிற்றறி வும்யான் பெற்றேன்.//
தாய்கும்
தாய் அருமை பற்றியும்
கவி பாடிய அருமை அக்கா
தாய்க்கு எவ்வளவு பாடினாலும் பொருந்தும்
இப்படி யொரு சிந்தனை சிற்பியை பெற்றெடுத்த அந்த தாய்க்கு என் அன்பான நன்றிகள்
பிராத்தனைகளும்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
அக்கறை யோடு யெனை அருமையாக வளர்த்தெடுத்து
சொக்கும் தமிழோடு யெனைசேர்த் துவைத்து வாழவைத்து
மிக்கவரை ஈர்க்குமாறிந் தச்சிற்றறி வும்யான் பெற்றேன்.//
தாய்கும்
தாய் அருமை பற்றியும்
கவி பாடிய அருமை அக்கா
தாய்க்கு எவ்வளவு பாடினாலும் பொருந்தும்
இப்படி யொரு சிந்தனை சிற்பியை பெற்றெடுத்த அந்த தாய்க்கு என் அன்பான நன்றிகள்
பிராத்தனைகளும்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
கவிதை படிக்கும் போது என்தாய் கண்முன்னே காட்சி தந்தாள் தாய்க்குப்பெருமை தன்பிள்ளையினை ஊர் போற்றும் போது அந்த வகையில் உங்கள் தாய் அளவிலா பெருமையடைவார்
அருமையான கவிதை மிக்க நன்றி எங்களோடு பகிர்ந்தமைக்கு
அருமையான கவிதை மிக்க நன்றி எங்களோடு பகிர்ந்தமைக்கு
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
*சம்ஸ் wrote:பாசமும் நேசமும் தாயின் புகளும் அருமையாக இணைத்து கவி வடித்த என்னருமை அக்காவுக்கு நன்றி நன்றி அனைத்து வரிகளும் அருமை ரசித்தேன்.. உணர்வு பூர்வமாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்.
நன்றி சம்ஸ்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
kalainilaa wrote:பொன்னும் பொருளும் பெயரும் புகழும்
இன்னும் என்னென்ன உண்டோ இவ்வுலகில்
உன்னாலே எல்லாமும் பெற்றேன்- பொன்னான
நின்னை யென்தா யாகநான் பெற்றேன்.
முதலில் அன்பு தாய்க்கு வாழ்த்துக்கள் .
தாய்க்கு நிகர் தாய்,
அன்பாய்,தொடர்வாய்,பசியாருவாய்,வளர்வாய்,மகிழ்வாய்
அறிவாய்,உணர்வாய்,அனைத்துக்கும் விடையாய் நம் தாய் .
அருமை தோழியே !உங்கள் தாய்ப் பாசம் தொடரட்டும்
மிக்க நன்றி கலை நிலா!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
நண்பன் wrote://தக்க பருவந்தன்னில் தாய்மொழியைப் பயிற்றுவித்து
அக்கறை யோடு யெனை அருமையாக வளர்த்தெடுத்து
சொக்கும் தமிழோடு யெனைசேர்த் துவைத்து வாழவைத்து
மிக்கவரை ஈர்க்குமாறிந் தச்சிற்றறி வும்யான் பெற்றேன்.//
தாய்கும்
தாய் அருமை பற்றியும்
கவி பாடிய அருமை அக்கா
தாய்க்கு எவ்வளவு பாடினாலும் பொருந்தும்
இப்படி யொரு சிந்தனை சிற்பியை பெற்றெடுத்த அந்த தாய்க்கு என் அன்பான நன்றிகள்
பிராத்தனைகளும்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
நன்றி நண்பன்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
சாதிக் wrote:கவிதை படிக்கும் போது என்தாய் கண்முன்னே காட்சி தந்தாள் தாய்க்குப்பெருமை தன்பிள்ளையினை ஊர் போற்றும் போது அந்த வகையில் உங்கள் தாய் அளவிலா பெருமையடைவார்
அருமையான கவிதை மிக்க நன்றி எங்களோடு பகிர்ந்தமைக்கு
நன்றி சாதிக்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
அன்பு தாய்க்கு என் வாழ்த்துக்கள் தோழி
தாய்க்காக எழுப்பிய பாச வைரவரிகள்
தாய்மையின் உன்னதம் பேசுகிறது
உலகில் பெருமைகளை வரிகளால் எழுதிடலாம்
தாயின் பெருமை எழுத முனைத்தால் மொழியில் பஞ்சமாகிவிடும் எழுத்துக்கள்
கவிதை அருமை தோழி
தாய்க்காக எழுப்பிய பாச வைரவரிகள்
தாய்மையின் உன்னதம் பேசுகிறது
உலகில் பெருமைகளை வரிகளால் எழுதிடலாம்
தாயின் பெருமை எழுத முனைத்தால் மொழியில் பஞ்சமாகிவிடும் எழுத்துக்கள்
கவிதை அருமை தோழி
Re: பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!
செய்தாலி wrote:அன்பு தாய்க்கு என் வாழ்த்துக்கள் தோழி
தாய்க்காக எழுப்பிய பாச வைரவரிகள்
தாய்மையின் உன்னதம் பேசுகிறது
உலகில் பெருமைகளை வரிகளால் எழுதிடலாம்
தாயின் பெருமை எழுத முனைத்தால் மொழியில் பஞ்சமாகிவிடும் எழுத்துக்கள்
கவிதை அருமை தோழி
நன்றி செய்தாலி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» நான் உன்னை தெரிஞ்சுக்கிட்டேன்! - ஆண்டியார்
» நான் உன்னை விரும்புகிறேன் எல்லா மொழிகலிலும்
» உன்னை நினைத்து
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» நான் உன்னை விரும்புகிறேன் எல்லா மொழிகலிலும்
» உன்னை நினைத்து
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|