Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
கருக் கலைப்பு செய்ய கணவரிடம் ''அனுமதி'' வாங்க வேண்டுமா?
Page 1 of 1
கருக் கலைப்பு செய்ய கணவரிடம் ''அனுமதி'' வாங்க வேண்டுமா?
இயல்பிலையே கருக்கலைப்பை வன்மையாகவே எதிர்த்து வந்திருக்கின்றோம்..தற்போது போதிய விளக்கங்களோடு எதிர்க்கின்றோம்..! கருக்கலைப்பு என்பது கொலைக்கு சமனானது. எக்காரணத்துக்காகவும் கருக்கலைப்பை அனுமதிக்க முடியாது..!
பெரியவர்கள் விடும் தவறுகளுக்காக ஒரு ஆரோக்கியமான சிசுவை அழிக்க எவருக்கும் உரிமையில்லை..!
எப்படியும், 20 வாரங்கள் வளர்ந்த கருவைக் கலைப்பது சட்டப்படி குற்றம்.
தற்போது ஸ்கானிங் மூலம் சிசுவில் வளர்ச்சிக் குறைபாடிருப்பது கண்டறியப்பட்டாலும் கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கிறார்கள்.. அது கூட ஒரு வகை கொலைதான்..! இயற்கையான மரணத்துக்கு இட்டுச் செல்லாத அனைத்தும் கொலைதான்..!]
கணவரின் அனுமதி இல்லாமல் ஒரு பெண் தன் கருவைக் கலைக்கலாமா? சட்டப்படி அது செல்லுமா?
லக்னோ ஐகோர்ட்டில் ஒருவர் தன் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். தன் கருத்தைக் கேட்காமலேயே தன் மனைவி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்து விட்டதாகவும், சட்டப்படி இது குற்றம் என்றும், மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ், தன்னிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். ஆனால் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
"மெடிக்கல் டெர்மினேஷன் ஆப் பிரெக்னன்சசி' சட்டத்தின் பிரிவு 3 (4)ல், "கருவுற்ற தாயின் ஒப்புதல் இன்றி, கருக்கலைப்பு செய்யக் கூடாது' என்று கூறப்பட்டுள்ளது. இதில் கணவரின் கருத்து பெறப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. "தாய் வயிற்றில் உள்ள கரு, தாய் உறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தக் கருவின் முழு உரிமை தாய்க்கு உள்ளது' என்று சட்ட வல்லுனர் ஒருவர் தெரிவிக்கிறார். எனவே கருவைக் கலைப்பதற்கும் தாய்க்கு முழு உரிமை உண்டு என்பது சட்டரீதியாக செல்லும். ஆனால், கருவைக் கலைக்க சரியான காரணங்கள் சொல்லப்பட வேண்டும். அவை என்னென்ன என்பதை இதே சட்டத்தின் பிரிவு 3(2) சொல்கிறது. அவை: "பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் ஒருவரால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போதும் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். (1) வயிற்றில் உள்ள கரு 12 வார வளர்ச் சிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
(2) "வயிற்றில் கரு வளர்வது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்; தாய்க்கு உடல் ரீதியான அல்லது மன ரீதியான கடும் காயங்களை ஏற்படுத்தும்; கற்பழிப்பு மூலம் உருவாகிய கரு; கரு வளர்ந்து குழந்தை பிறந்தால், அது உடல்ரீதியாக அல்லது மனரீதியாக ஊனமடைந்ததாக இருக்கும்; மணமான தம்பதியர் கருத்தடைக்காக பயன்படுத்திய வழிமுறைகள் தோல்வியடைந்த நிலை; தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற் படும்' என்று, பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்கள் இருவர் கருதினால், கருக் கலைப்பு செய்யப்படலாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருக் கலைப்பு செய்ய கணவரிடம் ''அனுமதி'' வாங்க வேண்டுமா?
எப்படியும், 20 வாரங்கள் வளர்ந்த கருவைக் கலைப்பது சட்டப்படி குற்றம்.
இச்சட்டத்தில், தாய்க்கு "கிரேவ் இஞ்ஜுரி' ஏற்பட்டால் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எந்த வகையான காயத்தை "கிரேவ் இஞ்ஜுரி' என்று எடுத்துக் கொள்வது என்பது விளக்கப் படவில்லை என்பது அவர்கள் கருத்து.
ஆனால், இந்த வழக்குத் தொடுத்தவர் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பெண் எப்போது கருவுறுகிறாளோ அப்போதே அக்கருவின் தந்தைக்கு கரு மீது உரிமை பிறந்து விடுகிறது. கருக்கலைப்பு என்பது சட்டம் 21 (வாழ்வதற்கு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை)யை மீறுவதாக அமைகிறது என்றார். மேலும், தனது மனைவி கருக் கலைப்பு செய்யக் கூடாது என்பதை வலியுறுத்துமாறு மருத்துவமனைகள், அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து சட்ட வல்லுனர்கள் கூறும்போது, "கணவனின் முன் அனுமதி இன்றி கருக்கலைப்பு செய்வது சட்டரீதியாக சரி என்று கூறினாலும், அப்படிச் செய்தால், அவர்களிடையே விவாகரத்து ஏற்பட இதுவே வழி வகுத்து விடும். ஆனால் குழந்தை பிறக்கும் வரை, தாயின் வயிற்றில் உள்ள கரு மீது கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. இது மிக வினோதமான விஷயம் தான். தாயின் உறுப்புகளுள் ஒன்றாகக் கரு கருதப்பட்டாலும், கண் இமை போன்றோ, நகங்கள் போன்ற இதைக் கருத முடியாது. கரு உருவாக, கணவன் மிக முக்கியமான காரணகர்த்தாவாக அமைவதால், சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும்' என்கின்றனர்.
சட்ட வல்லுனர்கள் இப்படிக் கருதினாலும், லக்னோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் இறுதியில் தோற்றுப் போனார். கருக்கலைப்பு செய்து கொள்ள கணவனிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் பெண்ணுக்கு இல்லை என்று தீர்ப்பாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்கட்டும்...
இச்சட்டத்தில், தாய்க்கு "கிரேவ் இஞ்ஜுரி' ஏற்பட்டால் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எந்த வகையான காயத்தை "கிரேவ் இஞ்ஜுரி' என்று எடுத்துக் கொள்வது என்பது விளக்கப் படவில்லை என்பது அவர்கள் கருத்து.
ஆனால், இந்த வழக்குத் தொடுத்தவர் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பெண் எப்போது கருவுறுகிறாளோ அப்போதே அக்கருவின் தந்தைக்கு கரு மீது உரிமை பிறந்து விடுகிறது. கருக்கலைப்பு என்பது சட்டம் 21 (வாழ்வதற்கு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை)யை மீறுவதாக அமைகிறது என்றார். மேலும், தனது மனைவி கருக் கலைப்பு செய்யக் கூடாது என்பதை வலியுறுத்துமாறு மருத்துவமனைகள், அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து சட்ட வல்லுனர்கள் கூறும்போது, "கணவனின் முன் அனுமதி இன்றி கருக்கலைப்பு செய்வது சட்டரீதியாக சரி என்று கூறினாலும், அப்படிச் செய்தால், அவர்களிடையே விவாகரத்து ஏற்பட இதுவே வழி வகுத்து விடும். ஆனால் குழந்தை பிறக்கும் வரை, தாயின் வயிற்றில் உள்ள கரு மீது கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. இது மிக வினோதமான விஷயம் தான். தாயின் உறுப்புகளுள் ஒன்றாகக் கரு கருதப்பட்டாலும், கண் இமை போன்றோ, நகங்கள் போன்ற இதைக் கருத முடியாது. கரு உருவாக, கணவன் மிக முக்கியமான காரணகர்த்தாவாக அமைவதால், சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும்' என்கின்றனர்.
சட்ட வல்லுனர்கள் இப்படிக் கருதினாலும், லக்னோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் இறுதியில் தோற்றுப் போனார். கருக்கலைப்பு செய்து கொள்ள கணவனிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் பெண்ணுக்கு இல்லை என்று தீர்ப்பாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்கட்டும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் பலதார மணம் செய்ய அனுமதி?
» Skype உரையாடல்களை ஒலி, ஒளிப்பதிவு செய்ய வேண்டுமா??
» நீங்கள் தற்கொலை செய்ய வேண்டுமா பாலோ மீ.......
» ஒரே க்லிக்கில் கணனியை லொக் செய்ய வேண்டுமா?
» முட்டை பொடிமாஸ் செய்ய வேண்டுமா?.. இதோ செய்யும் முறை....
» Skype உரையாடல்களை ஒலி, ஒளிப்பதிவு செய்ய வேண்டுமா??
» நீங்கள் தற்கொலை செய்ய வேண்டுமா பாலோ மீ.......
» ஒரே க்லிக்கில் கணனியை லொக் செய்ய வேண்டுமா?
» முட்டை பொடிமாஸ் செய்ய வேண்டுமா?.. இதோ செய்யும் முறை....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|