சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம் Khan11

இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம்

Go down

இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம் Empty இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம்

Post by நண்பன் Thu 23 Dec 2010 - 19:09

இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம் Indian%20inteligence
பழைய உத்திகளை இவர்கள் கைவிடுவதாக இல்லை! அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் நிலை தடுமாறிப் போயிருக்கும் காங்கிரசு மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலைகிறார்கள்!
மன்மோகன் சிங், சோனியா கோந்தி, கருணாநிதியை விடுதலைப்புலிகள் கொல்லச் சதி” என்று தலைப்பிட்டு ஊடகங்களை உசுப்பேத்தியது உளவுத்துறை! “சரி, யாரோயோ போட்டுத் தள்ளிவிட்டு புலிகள் மீது பழியைப் போடப் போகிறார்கள்! அந்தக் கையோட தமிழ்நாட்டில் எழுந்துவரும் தமிழின எழுச்சியின்மீதும் ஒரு ஏவுதல் படலத்தைத் தொடரலாம்” என்று போட்ட கணக்கை தமிழர்கள் சரியாகப் புரிந்து கொண்டு ஆப்பு வைத்துவிட்டார்கள்!
நினைவு இருக்கிறதா? விழுப்புரம் அருகில் தண்டவாளத்தில் குண்டு வைத்துத் தகர்த்து, அதன் அருகில் மடிப்பு கலையாத தாளைப் போட்டு, விசாரணைக்கு அதிகாரிகள் போகும் முன்னரே சென்னையிலுள்ள காவல் அதிகாரி இதில் மாவோயிஸ்டுகளுக்குத் தொடர்பு இல்லை என்று அறிக்கைவிட எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்கிற பாணியில் அசிங்கப்பட்டு அம்பலப்பட்டு போனது அவர்கள் காரியம்! தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒடுக்க இப்படி குண்டக்க மண்டக்க என்று பழைய பாணி அரசியலை புது அச்சு போட்டு உளவுத்துறை விற்கத்தான் பார்க்கிறது! ஆனால் தற்போது அது போணியாக மறுக்கிறது!
மன்மோகன்சிங், சோனியாகோந்தி, கருணாநிதி மீது விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல ஒட்டுமொத்தத் தமிழினமே கடும் சினம் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அதை உளவுத்துறையும் இந்த செய்திப் பரப்பலின் வழியாக ஒத்துக் கொண்டிருக்கிறது மகிழ்ச்சிதான்! அதைத் திசைதிருப்பும் அவர்களது முயற்சி நமநமத்துப் போனவுடன் திரைக்கதை வசன கர்த்தாவை மாற்றி இப்போது புதுச் சரடு விடுகிறார்கள்.
“போர் உச்ச கட்டத்தை நெருங்கியபோது பயங்கர ஆயுதங்களுடன் புலிகளில் பலர் தப்பி விட்டனர் என்றும் அவர்களுக்கு தாவுத் இப்ராகிம் தொடர்பு இருப்பதாகவும், அவர் உதவியுடன் பொட்டுஅம்மான் உட்பட புலிகளில் பலர் தப்பி அயல்நாடுகளுக்குப் போனதாகவும், இறுதிக்கட்டப் போருக்குப் பின்னரும் பதுங்கியிருந்த புலிகள் தப்பித்துப் போய்விட்டனர் என்றும் புதுக் கதையும் புது முடிச்சும் போடுகிறார்கள்.
விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா? எங்கே இருக்கிறார்கள்? என்பது உலகமே வியந்து எதிர்நோக்கியிருக்கும் வினாக்கள் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை! ஆனால், அந்தச் சந்தில் சிந்து பாட உளவுத்துறை புதுக்கதை புனைந்திருப்பதற்குக் காரணம் இல்லாமலா இருக்கும்?
1. இலங்கையின் ராஜபக்ச அரசு போர்க்குற்றச்சாட்டு நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!
2, இந்தியாவின் காங்கிரசு அரசு ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியில் வெந்துகொண்டிருக்கிறது!
3. தமிழ்நாட்டின் தி.மு.க அரசு ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியிலும் கருணாநிதி குடும்ப அரசியல் நெருக்கடியிலும் ஊசலாடுகிறது!
4. வெங்காயமும் விலைவாசி ஏற்றமும் மக்களைக் கடுப்பின் உச்சியில் வைத்திருக்கிறது! சரத்பவார், மிகச் சாவகாசமாக, “மூன்று வாரங்கள் கழித்துத்தான் விலை இறங்கும்” என்கிறார்.
5. விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் செய்திகள், ராடியா உரையாடல் பதிவுகள், மத்தியப் புலனாய்வுத் துறையின் திடீர் செயற்பாடுகள் போன்றன மக்கள் மனதில் தீவிரக் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
6. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழரின் தனிநாட்டு போராட்டம் என்பது நியாயமானதே என்று உலக நாடுகள் உணரத் தொடங்கியிருக்கின்றன! தமிழ்நாட்டுக்குள் திராவிட இந்திய எதிர்ப்பு என்பது கால்கொள்ளத் தொடங்கிவிட்டது!
ஒரே கல்லில் இந்த ஆறு மாங்காய்களையும் அடிக்க உளவுத்துறை தலையைப் பிய்த்துக் கொள்கிறது! இத்தனைக் கிடுக்கிப் பிடியிலிருந்தும் இந்தக் கட்சிகளையும் தனிமாந்தர்களையும் விடுவிக்க வேண்டுமானால் மிகப் பயங்கரமான ஒரு கொலையையோ, குண்டு வெடிப்பையோ அல்லது மிகுந்த அதிர்ச்சியூட்டக்கூடிய நிகழ்வையோ நடத்தினால்தான் மக்களைத் திசை திருப்ப முடியும் என்பது இவர்களின் கணக்கு!
இனி பொது அறிவுக்கு சில எளிய வினாக்களைத் தொடுப்போம்!
ஒட்டு மொத்தத் தமிழினமும் விடுதலைப் புலிகளின் போராட்டக் காரணங்களை இன்று ஏற்று ஆதரிக்கிற நிலையில் புலிகள் வன்முறை வழியில் அதிரடி செய்து ஆதரவை இழக்க விரும்புவார்களா? அவ்வளவு அறிவு கெட்டவர்களா அவர்கள்?
இன்று உலக நாடுகள் பல விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தமிழரின் வாழ்வுரிமை, அவர்களின் தனியாட்சி உரிமை, தமிழருக்கு எதிரான சிங்களப் பேரினவாதம் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து வருகிற சூழுலில் ஆயுத வழிப் பாதைக்குத் திடுதிப்பென்று திரும்புவார்களா?
சிங்கள இனவெறியர்களின் போர் வெறித் தாண்டவம் என்பது உலக வரலாற்றில் மிகப் பெரிய கொடூரமான மனித உரிமை மீறல் என்று உலகே இன்று அதிர்ந்து, புரிந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் அதைக் கெடுக்கும் விதமாக வன்முறைப் பாதையில் இறங்குவார்களா?
சிங்கள இந்திய திராவிடக் கூட்டு தமிழருக்கு எதிராக மாபெரும் தவறுகளையும் மிகப்பெரியப் போர்க்குற்றங்களையும் இழைத்துவிட்டு இன்று அதன் விளைவுகளை அறுக்கத் தொடங்கியிருக்கிறது! இதை புலிகள் கெடுக்க விரும்புவார்களா?
“அறத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்! அறமே வெல்லும்” என்பது முதியோர் வாக்கு!
உலகெங்கும் வாழும் தமிழர்கள் விழிப்படையவேண்டும்! உளவுத்துறையின் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறியுங்கள்! நம்மவர் நல்லவர் அனைவரிடமும் உண்மைகளைச் சொல்லி எச்சரித்து வையுங்கள்!
தமிழர்களம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum