Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
2 posters
Page 1 of 1
புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
கவிதை, திரைப்பாடல் என்ற இரண்டு தண்டவாளங்களிலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இளைப்பாறாமல்
ஓடிக்கொண்டிருக்கிற இலக்கிய ரயில் மு. மேத்தா!
தேகமழை நானாகும்
தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக
மேனியை மூடுவேன்.
என்று உருகி உருகி நெகிழ்கிற இந்தக் கவிஞர், ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
''சிறு வயதில் சினிமா பெரிய கனவு. வீட்டில் அழுது அடம்பிடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களைக் கொட்டக் கொட்டக்
கண்விழித்துப் பார்த்திருக்கிறேன். பிற்பாடு தீவிர இலக்கியத்தில் நுழைந்து கவிதையில் புகழ்பெற்ற பிறகு, சினிமா
ஆசை போய்விட்டது. ஆனால், சினிமாவில் பாட்டு எழுதுபவர்கள்தான் இன்று கவிஞர்கள் என்று அறியப்படுகிற
சூழ்நிலையில், நண்பர்கள் என்னை சினிமாவை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு பாடல்
வாய்ப்பு என் வீடு தேடிவந்தது'' என்று சிரித்தபடி பழைய நினைவுகளில் மூழ்குகிறார்.
''அப்போ நாடக உலகில் பிரபலமாயிருந்த உடையப்பா என்பவர் 'அனிச்சமலர்' என்`றாரு படம் தயாரித்தார்.
அவருடைய
மகன் சுப்பிரமணியம் என் கல்லூரி நண்பர். என் கவிதைகளைப் படித்திருந்த உடையப்பா, அவரது படத்தில் நான் ஒரு
பாடல் எழுத வேண்டுமென்று விரும்பி, என்னை சங்கர்-கணேஷிடம் அறிமுகப்படுத்தினார். சுற்றிலும்
சினிமாக்காரர்கள். முற்றிலும் அறிமுக மாகாத சூழ்நிலை. பாடல் எழுத சரியான பயிற்சியில்லாத நான் சங்கர்-
கணேஷ் தந்த அந்த மெட்டை என் தமிழால் தட்டுத்தடுமாறி தடவிப் பார்த்தேன். அதுதான் -
காத்து வீசுது புது காத்து வீசுது
இங்கே
கதிர்கள்கூட வயல்வரப்பில்
காதல் பேசுது
என்ற எனது முதல் பாடல். அந்தப் படம் ஓடவில்லை. எனது பாடலும் பிரபலமாகவில்லை.
அதற்குப் பிறகு பாட்டெதுவும் எழுதாமல் விலகியிருந்த என்னைத் திரும்பவும் சினிமாவுக்குள் அழைத்தவர்
கமல்ஹாசன்தான். கமலும் பாலகுமாரனும்தான் என்னை மனோபாலாவிடம் அறிமுகப்படுத் தினார்கள். மனோபாலா
மூலமாக இளையராஜாவின் நட்பு கிடைத்தது. என் வாழ்க்கையின் திருப்புமுனை அது. ரஜினி நடித்த 'வேலைக்காரன்'
படத்தில் ஆறு பாடல்களை எழுதும் வாய்ப்பை எனக்குத் தந்தார் இளைய ராஜா.
பக்கத்து வீட்டுக்காரன் முகம் கூட தெரியாத இந்த நகரத்து மனிதர்களின் அவசர வாழ்க்கையும், மக்களை ஏமாற்றிப்
பிழைக்கிற அரசியல் சுயநலமும் என்னை எப்போதும் ரணப்படுத்துகிற விஷயம், அதுதான்...
சிங்காரமா ஊரு... இது
சென்னையின்னு பேரு
ஊரச் சுத்தி ஓடுதையா
கூவம் ஆறு!
கட்சிகளும் வாங்கி இங்கே
கட்டிடங்கள் வெச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்
கட்டாந்தரை தானிருக்கு.
என்று என்னை எழுத வைத்தது. அதே படத்தில் 'வா.. வா.. வா... கண்ணா வா'ன்னு ஒரு காதல் பாடல். மென்மையான
அந்தப் பாட்டில் அழுத்தமாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன்.
காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னைக் கண்டால்
சீதை என்று துள்ளுவான்
- இப்படிப் போகிற பாடலின் இறுதியில்,
தாஜ்மகாலின் காதிலே
இராம காதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்றுசேரலாம்.
என்று மத ஒற்றுமையைச் சொல்கிற மாதிரி எழுதினேன். ஒரு பாடலாசிரியனாக எனக்கிருக்கும் எல்லைக்குள் சமூகம்
சார்ந்த விஷயங்களைச் சொல்லவேண்டும் என்ற துடிப்பு எப்போதும் எனக்கிருக்கிறது.
இது தோடராகத் தொரும் தொடர்ந்து இருங்கள்
ஓடிக்கொண்டிருக்கிற இலக்கிய ரயில் மு. மேத்தா!
தேகமழை நானாகும்
தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக
மேனியை மூடுவேன்.
என்று உருகி உருகி நெகிழ்கிற இந்தக் கவிஞர், ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
''சிறு வயதில் சினிமா பெரிய கனவு. வீட்டில் அழுது அடம்பிடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களைக் கொட்டக் கொட்டக்
கண்விழித்துப் பார்த்திருக்கிறேன். பிற்பாடு தீவிர இலக்கியத்தில் நுழைந்து கவிதையில் புகழ்பெற்ற பிறகு, சினிமா
ஆசை போய்விட்டது. ஆனால், சினிமாவில் பாட்டு எழுதுபவர்கள்தான் இன்று கவிஞர்கள் என்று அறியப்படுகிற
சூழ்நிலையில், நண்பர்கள் என்னை சினிமாவை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு பாடல்
வாய்ப்பு என் வீடு தேடிவந்தது'' என்று சிரித்தபடி பழைய நினைவுகளில் மூழ்குகிறார்.
''அப்போ நாடக உலகில் பிரபலமாயிருந்த உடையப்பா என்பவர் 'அனிச்சமலர்' என்`றாரு படம் தயாரித்தார்.
அவருடைய
மகன் சுப்பிரமணியம் என் கல்லூரி நண்பர். என் கவிதைகளைப் படித்திருந்த உடையப்பா, அவரது படத்தில் நான் ஒரு
பாடல் எழுத வேண்டுமென்று விரும்பி, என்னை சங்கர்-கணேஷிடம் அறிமுகப்படுத்தினார். சுற்றிலும்
சினிமாக்காரர்கள். முற்றிலும் அறிமுக மாகாத சூழ்நிலை. பாடல் எழுத சரியான பயிற்சியில்லாத நான் சங்கர்-
கணேஷ் தந்த அந்த மெட்டை என் தமிழால் தட்டுத்தடுமாறி தடவிப் பார்த்தேன். அதுதான் -
காத்து வீசுது புது காத்து வீசுது
இங்கே
கதிர்கள்கூட வயல்வரப்பில்
காதல் பேசுது
என்ற எனது முதல் பாடல். அந்தப் படம் ஓடவில்லை. எனது பாடலும் பிரபலமாகவில்லை.
அதற்குப் பிறகு பாட்டெதுவும் எழுதாமல் விலகியிருந்த என்னைத் திரும்பவும் சினிமாவுக்குள் அழைத்தவர்
கமல்ஹாசன்தான். கமலும் பாலகுமாரனும்தான் என்னை மனோபாலாவிடம் அறிமுகப்படுத் தினார்கள். மனோபாலா
மூலமாக இளையராஜாவின் நட்பு கிடைத்தது. என் வாழ்க்கையின் திருப்புமுனை அது. ரஜினி நடித்த 'வேலைக்காரன்'
படத்தில் ஆறு பாடல்களை எழுதும் வாய்ப்பை எனக்குத் தந்தார் இளைய ராஜா.
பக்கத்து வீட்டுக்காரன் முகம் கூட தெரியாத இந்த நகரத்து மனிதர்களின் அவசர வாழ்க்கையும், மக்களை ஏமாற்றிப்
பிழைக்கிற அரசியல் சுயநலமும் என்னை எப்போதும் ரணப்படுத்துகிற விஷயம், அதுதான்...
சிங்காரமா ஊரு... இது
சென்னையின்னு பேரு
ஊரச் சுத்தி ஓடுதையா
கூவம் ஆறு!
கட்சிகளும் வாங்கி இங்கே
கட்டிடங்கள் வெச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்
கட்டாந்தரை தானிருக்கு.
என்று என்னை எழுத வைத்தது. அதே படத்தில் 'வா.. வா.. வா... கண்ணா வா'ன்னு ஒரு காதல் பாடல். மென்மையான
அந்தப் பாட்டில் அழுத்தமாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன்.
காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னைக் கண்டால்
சீதை என்று துள்ளுவான்
- இப்படிப் போகிற பாடலின் இறுதியில்,
தாஜ்மகாலின் காதிலே
இராம காதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்றுசேரலாம்.
என்று மத ஒற்றுமையைச் சொல்கிற மாதிரி எழுதினேன். ஒரு பாடலாசிரியனாக எனக்கிருக்கும் எல்லைக்குள் சமூகம்
சார்ந்த விஷயங்களைச் சொல்லவேண்டும் என்ற துடிப்பு எப்போதும் எனக்கிருக்கிறது.
இது தோடராகத் தொரும் தொடர்ந்து இருங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
ஆதாம்-ஏவாளின் காதல்தான் இந்த உலகம். என்னுடைய காதல் கவிதைகள் ஏராளமான இதயங்களை எனக்குத்
தந்திருக்கின்றன. 'ரெட்டைவால் குருவி' படத்துக்காக பாலுமகேந்திரா அழைத்துப் பேசினார். ஒருவனுக்கு இரண்டு
காதலிகள் என்று சூழலை அவர் விவரித்த போதே கிறுகிறுத்து விட்டது. நான் எழுதிக்கொண்டு சென்ற இரண்டு, மூன்று
பல்லவிகளில் 'ராஜராஜ சோழன்'தான் கம்பீரமாக இருப்பதாக அதை எடுத்துக் கொண்டார்.
உல்லாச மேடை மேலே
ஓரங்க நாடகம்..
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்.
கள்ளூரப் பார்க்கும் பார்வை
உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே.
அற்புதமான இசையும் ஜீவனுள்ள வரிகளும் சேர்ந்து இன்றைக்கும் அந்தப் பாடல் என் மனக் குளத்தில் கல்லெறிகிறது.
பாடலாசிரியராக இருப்பதில் இருக்கக்கூடிய சங்கடங்களும் நெருக்கடிகளும் வெளியில் பெரிதாகத் தெரியாது.
இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் ரொம்பப் பிரபலமாக இருந்த நேரம் அது. அவர் படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கிடைப்பதே
பெரிய விஷயம். அந்த நேரத்தில் அவரே அழைத்து ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். வரிகள் நன்றாக அமைந்து
போகவே, மேலும் சில பாடல்களைத் தந்தார். அதில் ஒரு பாடல் ஏற்கெனவே ஒரு கவிஞருக்குச் சென்று அவர் சரியாக
எழுதாததால், என்னை எழுதித் தருமாறு கேட்டார்கள். ஆனால், அதை நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். அது
இன்னொரு கவிஞரைக் காயப்படுத்துகிற மாதிரி ஆகிவிடும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
இந்த மாதிரியான விஷயங்களில் நான் என்றுமே சமரசம் செய்துகொண்டது கிடையாது. இந்த என்னுடைய
குணத்தால்தான் அதிகமான பாடல்கள் எழுத முடியவில்லை என்று இன்றைக்கும் என் நண்பர்கள் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பதில் சொல்கிற மாதிரி 'காசி' படத்தில் வருகிற 'என் மன வானில் சிறகு விரிக்கும்'
பாடலில் எழுதினேன் -
நான் பாடும் பாடல்
எல்லாம்
நான் பட்ட பாடே
அன்றோ
பூமியில் இதை யாரும்
உணர்வாரோ
மனதிலே
மாளிகைவாசம்
கிடைத்ததோ மரநிழல்
நேசம்
எதற்கும் நான்
கலங்கியதில்லை
இங்கே.
இந்தத் திரையுலக வாழ்க்கையில் எனக்கு நான் உண்மையாக இருந்திருக்கிறேன். அது போதும் எனக்கு.
இது தோடராகத் தொடரும் தொடர்ந்து இருங்கள்
தந்திருக்கின்றன. 'ரெட்டைவால் குருவி' படத்துக்காக பாலுமகேந்திரா அழைத்துப் பேசினார். ஒருவனுக்கு இரண்டு
காதலிகள் என்று சூழலை அவர் விவரித்த போதே கிறுகிறுத்து விட்டது. நான் எழுதிக்கொண்டு சென்ற இரண்டு, மூன்று
பல்லவிகளில் 'ராஜராஜ சோழன்'தான் கம்பீரமாக இருப்பதாக அதை எடுத்துக் கொண்டார்.
உல்லாச மேடை மேலே
ஓரங்க நாடகம்..
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்.
கள்ளூரப் பார்க்கும் பார்வை
உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே.
அற்புதமான இசையும் ஜீவனுள்ள வரிகளும் சேர்ந்து இன்றைக்கும் அந்தப் பாடல் என் மனக் குளத்தில் கல்லெறிகிறது.
பாடலாசிரியராக இருப்பதில் இருக்கக்கூடிய சங்கடங்களும் நெருக்கடிகளும் வெளியில் பெரிதாகத் தெரியாது.
இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் ரொம்பப் பிரபலமாக இருந்த நேரம் அது. அவர் படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கிடைப்பதே
பெரிய விஷயம். அந்த நேரத்தில் அவரே அழைத்து ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். வரிகள் நன்றாக அமைந்து
போகவே, மேலும் சில பாடல்களைத் தந்தார். அதில் ஒரு பாடல் ஏற்கெனவே ஒரு கவிஞருக்குச் சென்று அவர் சரியாக
எழுதாததால், என்னை எழுதித் தருமாறு கேட்டார்கள். ஆனால், அதை நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். அது
இன்னொரு கவிஞரைக் காயப்படுத்துகிற மாதிரி ஆகிவிடும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
இந்த மாதிரியான விஷயங்களில் நான் என்றுமே சமரசம் செய்துகொண்டது கிடையாது. இந்த என்னுடைய
குணத்தால்தான் அதிகமான பாடல்கள் எழுத முடியவில்லை என்று இன்றைக்கும் என் நண்பர்கள் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பதில் சொல்கிற மாதிரி 'காசி' படத்தில் வருகிற 'என் மன வானில் சிறகு விரிக்கும்'
பாடலில் எழுதினேன் -
நான் பாடும் பாடல்
எல்லாம்
நான் பட்ட பாடே
அன்றோ
பூமியில் இதை யாரும்
உணர்வாரோ
மனதிலே
மாளிகைவாசம்
கிடைத்ததோ மரநிழல்
நேசம்
எதற்கும் நான்
கலங்கியதில்லை
இங்கே.
இந்தத் திரையுலக வாழ்க்கையில் எனக்கு நான் உண்மையாக இருந்திருக்கிறேன். அது போதும் எனக்கு.
இது தோடராகத் தொடரும் தொடர்ந்து இருங்கள்
Last edited by பாயிஸ் on Wed 27 Jul 2011 - 18:15; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
முத்தா .புதுக்கவிதைக்கு ,இவரும் முன்னோடி .
பகிர்வுக்கு நன்றி .
பகிர்வுக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
» மு.மேத்தா கட்டுரைகளில்லிருந்து...
» புதுக்கவிதை
» புதுக்கவிதை.
» புதுக்கவிதை
» மு.மேத்தா கட்டுரைகளில்லிருந்து...
» புதுக்கவிதை
» புதுக்கவிதை.
» புதுக்கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|