Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
வேங்கை
3 posters
Page 1 of 1
வேங்கை
ஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த ஆக்ஷன் படம் தான் 'வேங்கை'.
ஊரில் மிகப்பெரிய கையாக இருக்கும் ராஜ்கிரண் அவரது மகன் தனுஷ். அந்த ஊரில் இருக்கும் எம்.எல்.ஏ. பிரகாஷ்ராஜ் இந்த மூவருக்கும் இடையில் கதை பின்னப்பட்டிருக்கிறது. துவக்க காட்சியில் ஹரியின் அதிரடியான துவக்க பாடலுடன் துவங்குகிறது. தன் மகன் தன்னைப்போல் ரவுடியாக ஆகவேண்டாம் என திருச்சிக்கு அனுப்ப திட்டமிட்டு அங்கு ரியல் எஸ்டேட் செய்யும் லிவிங்ஸ்டன் அலுவலகத்தில் பணியாற்ற அனுப்பப்படுகிறார் தனுஷ். திருச்சியில் பஸ்ஸில் தமன்னாவை பார்த்த மாத்திரத்தில் சின்ன வயதில் தன்னுடன் பள்ளியில் படித்த ராதிகா என கண்டுப்பிடித்து இருவருக்குமான நட்பு ஆரம்பித்து விடுகிறது. தமன்னா விலக இவர் விரட்ட என பல்வேறு குழப்பங்களுக்கிடையே இருவருக்கும் காதல் மலர்கிறது.
ராஜ்கிரண் தயவில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பிரகாஷ்ராஜ் மணல் கொள்ளையில் அதிகம் சம்பாதித்து அதிக சொத்து வாங்குகிறார். இதை தட்டிக்கேட்ட ராஜ்கிரணுடன் மோதல் துவங்குகிறது. ராஜ்கிரணுக்கு வலிக்கவேண்டும் என்பதற்காக திருச்சியில் இருக்கும் தனுஷை கொலை செய்ய ஆட்களை ஏவிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் அது தோல்வியில் முடிகிறது. இப்போது தனுஷும், பிரகாஷ்ராஜும் நேர் எதிரிகளாக ஒருவரையொருவர் கொல்ல சபதமெடுக்கிறார்கள். இதில் யார் ஜெயித்தார்கள் என்பது மீதிக்கதை.
தனுஷுக்கு பெரியதாய் வேலையில்லை. மொத்தமாய் அருவாள் சைஸில் இருந்து கொண்டு, சடசடவென மரத்தில் ஏறி அருவாளை மரத்தின் மீது பாய்ச்சி நிற்பது நன்றாக இருந்தாலும், ஒரு அருவாளே அருவாளை தாங்குகிறதே என்று கவிதை படிக்க தோன்றுகிறது. பட் நல்ல ஐடியா. காதல் காட்சிகளில் தனுஷ் தனியே தெரிகிறார்.
படத்தின் பலம் படம் வேகமாக விறுவிறுப்பாக செல்வதுதான். அதே அருவாள், டாடா சுமோ, வெள்ளைவேட்டி, வெள்ளை சட்டை என்று நாம் ஏற்கனவே பார்த்த விசயங்களாக இருந்தாலும் அலுப்புத்தட்டவில்லை. ஹரியின் ஹீரோக்களின் வழக்கமான அந்த புத்திசாலித்தனமான அணுகுமுறை தனுஷுக்கும் தரப்பட்டுள்ளது. அதை தனுஷ் நன்றாக செய்திருக்கிறார்.
தமன்னாவுக்கு ஒன்றும் பெரிய ரோல் இல்லை. நன்றாக நடித்திருக்கிறார். அழகாய் இருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் முகத்தில் ஏதோ ஒரு மென் சோகத்தை அப்பிக் கொண்டவாறு இருப்பது ஏன் என்று தெரியவில்லை.(கார்த்தி-ரஞ்சனி கல்யாணத்தால் ஏற்பட்ட சோகமோ) தமன்னாவை விட, அவருடன் வரும் தோழிகள் க்யூட்டாக இருக்கிறார்கள். தனுஷின் தங்கையாக வரும் அம்முகூட.
படத்தில் ஊர்வசி, சார்லி, பொன்னம்பலம், ஒய்.ஜி.மகேந்திரன், 'பரவை' முனியம்மா, ஜஸ்வர்யா என நிறைய நடிகர் பட்டாளம் தன் பங்குக்கு அவர்களின் வேலையை செய்திருக்கிறது.
'சிங்கம்' படத்தில் கொடுத்த கால்ஷீட்டின் நீட்சியோ என்று யோசிக்கும் அளவு அதே டயலாக், அதே பாடி லாங்குவேஜ், அதே வீராப்பு... முதல் முறையா இந்தப் படத்துல போரடிக்கிறீங்க பிரகாஷ்ராஜ். ராஜ்கிரணும் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் ஒரு அருமையான நடிகரை எவ்வளவு நாளுக்கு ஒரே கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள் என்று தெரியவில்லை.
காமெடியனாக கஞ்சா கருப்பு. யாராவது நல்ல காமெடி ரைட்டர் இவருக்கு உடனடித் தேவை. இல்லையென்றால் தேறுவது ரொம்பக் கஷ்டம். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், ஹாண்ட்பார் காமெடி எரிச்சல் மூட்டுகிறது. தெரு மாறி வந்து சைக்கிளை விடும் காட்சியில் மட்டும் தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.
சில படங்களின் கதைக்களம் நடிக்கும் நடிகர்களை வைத்து தெரிந்த, அரைத்த மாவுக் கதையாகவேயிருந்தாலும் எடுபட்டுவிடும். ஆனால் சில நடிகர்களுக்கு பெரிதாய் எடுபடாது. அந்த வகைதான் தனுஷுக்கு இந்தப் படம். விக்ரம், சூர்யாவை வைத்து திரைக்கதையெழுதும் போது இருக்கும் விறுவிறுப்பு மற்ற நடிகர்களுக்கு எழுதும் போது ஹரிக்கு குறைந்து போவது என்ன காரணமோ?.
வில்லனுக்கும், ஹீரோவுக்குமான காட்சிகள் எல்லாமே ஏற்கனவே பார்த்த ஃபீலீங் வருவதால் போரடிக்கிறது. அதுவும் தனுஷின் அறிமுகக் காட்சி படு மொக்கை. ஆனால் லாஜிக்கல். இடைவேளைக்கு முன்னால் வரும் சேஸிங் காட்சியும், சண்டைக் காட்சியை கோரியோகிராப் செய்த விதமும் தீயாய் வேலை செய்திருக்கிறார்கள். 'சிங்க'த்தில் ஆகட்டும், 'சாமி'யில் ஆகட்டும் என்ன தான் லாஜிக் இலலாவிட்டாலும் யோசிக்க விடாதபடி அடுத்தடுத்து வில்லனுக்கு ஹீரோவுக்குமான கன்பர்ண்டேஷன் அடிதூள் பரத்தும். இதில் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வில்லன் செல்போனை தரையிலடித்து உடைப்பதை தவிர வேறேதும் பெரிதாய் இல்லை. படத்தில் ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகள் கொஞ்சம் இண்ட்ரஸ்டிங். ஆனால் ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என்று தமன்னாவை வில்லி ஆக்குவது செம காமெடி.
கஞ்சா கருப்பு காமெடி சீன், சாரி காம நெடி. இந்த சீன் எடுக்கும்போது இயக்குநர் மனசுல குற்ற உணர்ச்சியே வர்லையா? இப்படி கேவலமா சீன் எடுக்கறமேன்னு..? மனிதனின் மனதில் உள்ள மென்மையான உணர்வுகள், பாசிட்டிவ் குணங்களே உங்க கண்ணுக்கு தெரியாதா? ஒரு கிராமம்னா அங்கே இருக்கறவங்களுக்கு அடிதடி, வெட்டுக்குத்து தவிர வேற வேலையே இருக்காதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் இயக்குநர் ஹரி என்ன பதில் சொல்வாரோ....
ஆனால் அதேநேரத்தில் படத்தில் அடியாட்கள் என்ற பெயரில் பல பேருக்கு வேலை, சம்பளம், பேட்டா கொடுத்து மெயிண்ட்டெயின் செய்தது.. அரிவாள் செய்யும் கலைஞர்கள், அரிவாள் தீட்டும் கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளித்தது.. என ஹரியை பாராட்டும் விஷயங்களும் உண்டு.
மசாலாப் படத்துக்கு இசையமைக்க தேவிஸ்ரீ பிரசாத்-ஐ விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார்..படத்திற்கு பெரிய பலம் சூப்பர் ஹிட் பாடல்கள். 'என்ன சொல்லப் போறே', 'புடிக்கலை', 'ஒரே ஒரு வார்த்தைக்காக' என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் மனதைக் கவர்கின்றன. குறிப்பாக கார்த்திக்கின் குரலில் 'காலங்காத்தால' பாடல் பலரின் விருப்பப் பாடலாக அமைந்ததில் சந்தேகமில்லை.
வெற்றியின் கேமராவும், வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்திற்கு பக்கபலம்.
தன்னை ஒரு கமர்சியல் டைரக்டர் என்று அறிவித்துக்கொண்ட ஹரியிடம் உலகச் சினிமா எதிர்பார்ப்பது நம் தவறு. சொன்னபடி கமர்சியல் படம் கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தால், சொல்லி அடித்திருக்கிறார். வழக்கமான ஹரியின் க்ளிஷேக்கள் இருந்தாலும், நல்ல பொழுதுபோக்குப் படம்.
வேங்கை - மொக்க அருவா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேங்கை
ஒரு அருவாளே அருவாளை தாங்குகிறதே என்று கவிதை படிக்க தோன்றுகிறது. :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வேங்கை
@. :”@:kalainilaa wrote:ஒரு அருவாளே அருவாளை தாங்குகிறதே என்று கவிதை படிக்க தோன்றுகிறது. :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|