Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
எட்டாததை எட்டு...!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
எட்டாததை எட்டு...!
மனிதனை ஆட்டி வைப்பவை ஒன்பது கிரகங்கள் என்பது சோதிடம்.
உலகத்தையே ஆட்டிப்படைப்பதும் இந்த ஒன்பது எண்கள்தான் என்பது அறிவியல்.
ஜனநாயகமே இந்த எண்ணிக்கையில்தானே அடங்கியிருக்கிறது.
வான்இயற்பியல் (Astro Physics) விஞ்ஞானியைக் கேட்டால் உலகம் காலம் என்பதில் தோன்றி அதிலேயே ஒடுங்குவதாகக் கூறுவார்கள். அந்தக் கால தத்துவத்திற்கும் இந்த ஒன்பது எண்கள்தான் அடிப்படை. கம்ப்யூட்டருக்கு எந்த மொழியும் தெரியாது. அதற்கு 0 என்பது மட்டும்தான் தெரியும்.
அந்தப் பூஜ்யத்தில் அது சாம்ராஜ்யத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறது.
எனவே ஒன்பது எண்களுமே சிறப்பானவை தான் இருந்தாலும் நம்மவர்களுக்கு எட்டு என்ற எண்ணைக் கேட்டாலே ஒரு பயம்.
அந்த எண்ணில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு அமைந்து விட்டாலோ எப்போது இது வெட்டுமோ? என்ற எண்ணம் வந்து வந்து பயமுறுத்தும்.
நாட்களிலே அஷ்டமி என்றால் ஐயோ! வேண்டாம் என்பார்கள். இன்னும் சிலருக்கு 8 என்ற எண்ணைப் பார்த்தாலே அச்சம். அதன் கோணலே அவர்களுக்குப் பிடிக்காது. சோதிடர்கள் ஒருவரிடம் உனக்கு அஷ்டமத்துச்சனி என்று சொல்லிவிட்டால் போதும், சனி அவரைப் பாடாய்ப் படுத்துகிறதோ இல்லையோ; அந்த அஷ்டமம் அவர்கள் மனத்தைப் பாடாய்ப் படுத்திவிடும்.
எட்டைப் பற்றிய உண்மையான செய்திகளைத் தெரிந்து கொண்டால் நம் வீணான அச்சம் தொலையும். எட்டின்மேல் நமக்குப் பாசம் வருகிறதோ இல்லையோ! ஆனால் ஒரு பக்தி தோன்றும். எண்ணிப்பார்த்தால் எல்லாமே எட்டுக்குள்தான் என்ற ஞானம் தோன்றும்.
மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது. அப்போது கருப்பையில் இடம் போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்திற்கேற்பத் தன் கைகால்களை மடக்கிக் கொள்கிறது. தன் உடல் உறுப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முதல் அறிவை அப்போதுதான் அது பெறுகிறது. அப்போது அதன் கருப்பை வடிவம் 8 என்ற எண் வடிவம். சைவர்களின் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் எட்டாம் திருமுறை திருவாசகம். வார்த்தைகளுக்கு எட்டாத தெய்வ அனுபவத்தை முதன்முதலாக வார்த்தைகளில் வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல். கடல் போன்ற தமிழ் நூல்களில் ஆறு மிகச்சிறந்த நூல்களில் ஒன்று. அதனை இயற்றிய மாணிக்கவாசகர் கருப்பையில் நம் முதல் வடிவத்தை எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் என்று கூறுகிறார். அந்த நெருக்கத்தில் சிக்கித் துன்புற்று இறந்து போகாமல் பிழைத்துப் பிறந்திருக்கிறோமே! இதற்கு நாம் எட்டிற்கு நன்றி சொல்ல வேண்டாமா!
எட்டாம் மாதத்தில் தாயின் கருப்பையில் உடலைக்குறுக்கிக் கொண்டு துன்பப்படும் ஓர் உயிருக்கு, நாம் செய்த தீவினையால் தானே மீண்டும் ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் நிச்சயம் நாம் தவறு ஏதும் செய்யக்கூடாது என்ற ஞானம் அதற்குத் தோன்றுவதாகக் கீதை ஓரிடத்தில் கூறுகிறது. ஆனால் பிறந்த பின் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் (இருந்தால்) நிச்சயம் தோன்றும். அதனால் எட்டை ஒரு ஞான எண்ணாகக் கூறுவார்கள். எட்டாம் எண் கூட்டுத்தொகை உடையவர்கள் ஒன்று தீவிர பக்தர்களாகவோ, தத்துவவாதிகளாகவோ, சமுதாயத் தொண்டர்களாகவோ இருப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குருவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ இருந்தால் அவர்கள் இப்பிறவியில் ஞானம் பெற்று முத்தியடைவார்கள் என்று சோதிடம் கூறுகிறது. பாரதத்தின் ஒப்பற்ற தவஞானி ஆதி சங்கரருக்கு எட்டாம் இடத்தில் குரு; மரணமில்லாமல் பெருவாழ்வை சாதித்துக் காட்டிய வள்ளலார் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதனும், சனியும். சைவ சித்தாந்தத்தின் வேத நூலாக சிவஞானபோதத்தின் எட்டாம் நூற்பா ஞானம் உணர்த்தும் முறையைக் கூறுகிறது. இந்த ஒரு நூற்பாவை மட்டும் ஏதேனும் ஒரு திருமடத்திலோ அல்லது ஒரு துறவியிடமோ தான் பாடங்கேட்க வேண்டும் என்ற மரபு இன்றும் உண்டு. வைணவர்களின் வேதநூல் நாலாயிரத் திவ்விய பிரபந்தம். இதில் உள்ள பாடல்கள் காலப்போக்கில் மறைந்து போயின. வீரநாராயண புரத்தில் வைணவர்கள் சிலர் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் எட்டாம் திருவாய்மொழியின் ஐந்தாம் பத்தைப் பாடியதைக் கேட்ட நாதமுனிகள் பின்னர் நாலாயிரம் பாடல்களையும் மீட்டுக்கொடுத்தார். ஆதலால் எட்டாம் எண் ஞானத்திற்குரிய எண். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உள்ளத்தளவில் அவர்கள் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
எட்டாம் எண் யோகத்திற்கும் உரியது. தவமுனிவர்கள் மேற்கொள்ளும் யோகம் எட்டுவகைப்படும். அவை இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். இந்த எட்டுவகை யோகங்களும் இடகலை, பின்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளை அடிப்படையாகக் கொண்டவை. அடி வயிற்றுக்குக் கீழே இடப்புறமிருந்து இடகலைநாடியும் வலப்புறமிருந்து பின்கலை நாடியும் தொடங்கிச் சுழிமுனை என்ற நாடியுடன் சேர்ந்து மீண்டும் பிரிந்து புருவமத்தியில் ஒன்று சேர்கின்றன. இதன் வடிவம் எட்டு.
இந்த யோகமுறையால் நம்மால் பின்வரும் எட்டுவிதமான சித்திகளை அடையமுடியும். நம் உடலை அனுவாகச் சுருக்கலாம். எவ்வளவு பெரிய உருவாகவும் பெருக்கலாம். எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லலாம், உடலை மிகமிக இலேசானதாக மாற்றலாம், தேவைப்படுவதை அடையலாம். எல்லாவற்றிலும் நிறைவானவனாக விளங்கலாம், யார் மீதும் எந்தப் பொருள்மீதும் தன் ஆட்சியைச் செலுத்தலாம்.
எதனையும் தன்வசமாக்கலாம். இதனை யோக முறையில் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று கூறுவார்கள். யோகத்திற்குரிய எட்டு உடையவர்கள் யோகம் பயிலத் தொடங்கினால் அதில் எளிதில் முன்னேறிச் செல்வார்கள். அவர்கள் அதைப் பயிலாவிட்டாலும் அவர்களுக்கு நிர்வாகத் திறமை, ஆளுமைப்பண்பு, எவரையும் கவரும் ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கும்.
மனிதப் பிறப்பில் பல நபர்கள் 8 ஆம் தேதியில் பிறந்து சாதித்துள்ளனர். இதில் மன்மோகன் சிங், எம்.ஜி.ஆர், அத்வானி, ஜோதிபாசு, முரசொலி மாறன் உள்பட பல தலைவர்கள் 8ஆம் எண்ணில் பிறந்துள்ளனர்.
எட்டு என்ற எண் தெய்வங்களோடு தொடர் புடைய எண்ணாகும். மனிதர்களைப் போலவே இறைவனுக்கும் குணங்கள் உண்டு. அந்தக் குணங்கள் எல்லாம் அவனுக்கு இருப்பதாக அருளாளர்கள் கூறுவார்கள். உண்மையில் பரம்பொருள் குணங்களும் வடிவங்களும் இல்லாதது. இறைவன் குணாதீதன், அதாவது குணங்களைக் கடந்தவன். இருப்பினும் அவனுக்கு குணங்களைக் கற்பிக்கும்போது எட்டு என்ற எண்தான் எல்லையாக அமைந்தது. இறைவனுக்குத் தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.
எட்டுக் குணங்களைக் கொண்ட சிவபெருமான் எட்டு இடங்களில் எட்டு வீரச் செயல்களை நிகழ்த்திய தாகவும் கூறுவர். அந்த இடங்கள் அட்ட வீரட்டத் தலங்கள் எனப்படும். இறைவன் வரம்பற்ற ஆற்றல் உடையவனாக இருந்தாலும் அவன் நிகழ்த்திய வீரச் செயல்கள் எட்டுதான். திருவள்ளுவர் இறைவனைப் பற்றிக்கூறும்போது அவனை எண்குணத்தான் என்று எட்டுக்குச் சிறப்பு கொடுத்தே கூறுகிறார். சிவபெருமானுக்குத் தோள்களும் எட்டுதான். இறைவன் வடிவங்கள் கூறுவதும் எட்டுதான். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய எட்டும் அவன் திருவடிவங்கள்.
எட்டு எண்ணில் பிறந்தவர்களுக்கு எல்லாம் இருக்கும்; ஆனால் இருக்காது. இறைவன் எல்லாம் உடையவன். இந்த உலகமும், வானமும் அண்டங் களும் அவற்றில் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை. எனவே, இறைவனை உடையவர் என்றே வழங்குவார்கள். கல்வெட்டுகளில் அந்தக் கோயில்கள் எழுந்தருளியுள்ள இறைவனை அந்த ஊரின் பெயரைச் சேர்த்து உடையவர் என்றே கூறுகின்றன.
ஆனால், அவனுக்கென்று எதுவுமே இல்லை. அவனுக்குத் தாயும் தந்தையும்கூட இல்லை. அவன் ஓர் அனாதை. இதை மாணிக்கவாசகர் தாயும் இலி; தந்தையிலி; தான் தனியன் கானேடி!.
மாணிக்க வாசகரின் திருவாசகம் உள்ளத்தை உருக்கும்; உடம்பில் கலந்து உயிரில் கலக்கும். மாணிக்க வாசகர் சொல்லச் சொல்லத் தில்லை நடராசப் பெருமானே ஓர் ஏடெழுதும் பிள்ளையாக வந்து தம் திருக்கரத்தால் எழுதிய ஞானநூல். வெளிநாட்டினரின் உள்ளங்களைக் கவர்ந்த ஒப்பற்ற நூல். முத்தியில் பெறும் இன்பம் எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை முதன் முதலாக வார்த்தைகளில் வடித்துக்கொடுத்த தெய்வத்திருநூல். இது சைவர்களின் பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாவதாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.
எட்டுக்கும், மேலுலகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தெய்வங்கள் எல்லாம் இந்த உலகத்திற்குத் தேவையான செல்வங்களை மட்டும் கொடுக்கக்கூடியவை. பிறவாமையைக் கொடுக்க அவற்றால் முடியாது. அவனது நடனம் ஆனந்த நடனம். அதைக் கண்டுவிட்டால் போதும் என்றும் ஆனந்தந்தான்.
ரஷியாவில் அணுஉலை ஒன்றில் கொதித்துக் கொண்டிருந்த அணுக்கலவையிலிருந்து ஒரு சிறிய துளி வெளியில் விழுந்து விட்டது. அதைத் தொலைவிலிருந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணிப்பொறிகள் மூலமாக விஞ்ஞானிகள் பார்த்தார்கள். அந்த ஒரு சிறு துளி வெளியில் வந்து விழுந்தவுடன் ஆடிய ஆட்டம் இதுவரையில் உலகில் கண்டறியாத அற்புத நடனமென்றும், அந்த நடனத்தின் அழகை வார்த்தைகளால் விளக்க முடியாது என்றும் கூறினார்கள். அந்த அணுவிலும் தாண்டவமாடும் தில்லை ஆடலரசன் காலைத் தூக்கி நின்றாடும் கோலத்தைச் சுற்றி நேர்க்கோடுகள் வரைந்தால் அது எண் கோணமாகும். அந்த ஆனந்தக் கூத்தன் அந்த எட்டில் நின்று ஆடித்தான் இந்த உலகத்தைப் படைக்கிறான்; நிலை நிறுத்துகிறான். அழிக்கின்றான். ஆம்;
ஆவதும் எட்டாலே; அழிவதும் எட்டாலே; போவதும் எட்டாலே; வருவதும் எட்டாலே.
எட்டு என்றதைக் கேட்டவுடன் பிடிக்காமல் போவதைப்போல இந்த நடராசனைக் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. தப்பித் தவறி வீட்டுக்கு வந்து விட்டாலும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் எங்காவது ஒரு கோயிலில் வைத்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள். எல்லோருமே இறப்புக்குப்பின் சொர்க்கத்துக்குப் போக நினைக்கிறார்கள். அந்தச் சொர்க்கத்திற்குப் போகும் நுழைவாயில் நம் வீட்டு வாசற்காலைப் போல இல்லை; அது எண் கோண வடிவில் இருக்கிறது. கோயில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு உள்ளே அதன் மேல் உள்ள விமானப் பகுதி எண் கோணவடிவில் அமைந்திருக்கும். அதை மூடியிருக்கும் கல்லும் எண்கோண வடிவில் அமைந்திருக்கும். உள்பகுதியில் உள்ள எண் கோணத்தை பிரம்மரந்திரம் என்பார்கள். இறைவன் சொர்க்கத்தின் நாயகன்; அவன் போவதும் வருவதும் அந்த எண்கோண வழியில்தான். தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மூலவர் மிகவும் பெரிய உருவம். அவருக்குப் பெயரே தஞ்சைப் பெருவுடையார். அதற்குத் தகுந்தாற்போல் உள்கூட்ட எண்கோணம் மிகவும் பெரியது. அதை மூடத்தான் எட்டு டன் எடையுள்ள ஒரே கல் தேவைப்பட்டது. எண் கோண வடிவிலான அதை எப்படித் தூக்கிக் கீழேயுள்ள எண் கோணத்தில் பொருந்துமாறு நிறுத்தியிருப்பார்கள் என்று புரியாமல் இன்றும் வெளிநாட்டுக் கட்டிடக்கலை நிபுனர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
எகிப்திய பிரமிடுகளைப் பற்றி அறிந்திருக்கிறோம். அதன் உட்புறம் ஏக்கர் கணக்கில் பெரியது. அதன் நடுநாயகமாக இருக்கும் பகுதியில்தான் இறந்த எகிப்திய மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அடங்கிய நவரத்தினப் பேழைகள் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு நேரான மேல் பகுதிதான் வெளியில் தெரியும் கூம்பு வடிவம். பேழைகளுக்கு நேராக மேலே உள்ள பகுதி எண் கோண வடிவில் அமைந்திருக்கும். அதை மேல்புறத்தில் மூடுவதற்கு ஒவ்வொன்றும் எட்டு டன் எடையுள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மம்மிகளுக்கு மேலேயுள்ள இந்த எண்கோல் வழியாகத்தான் அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் மன்னர்கள் தங்கள் அரசியருடன் பகலில் சொர்க்கலோகத்திற்குச் சென்று அங்குப் பகலெல்லாம் இருந்துவிட்டு இரவில் அதே எண்கோண வழியாக மம்மிக்குத் திரும்பி விடுகிறார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.
குழந்தை பிறக்கும்போது அதன் தலையின் உச்சித் துர தோலால் மட்டுமே மூடப்பட்டிருக்கும். குழந்தை வளர வளரத்தான் மண்டையோடு வளர்ந்து கூடுகிறது. குழந்தை பிறக்கும்போதிருந்த உச்சித்துளை வட்டவடிவமானது அல்ல. அது எண்கோண வடிவிலானது. எனவே, அதையும் யோகித பிரம்மரந்திரம் என்றே கூறுவார்கள். உடலிலிருந்து உயிர் பிரியும்போது உச்சித் துளை வழியாகப் பிரிந்து சென்றால் அந்த உயிர் நேரே சொர்க்கத்திற்கும் மேற்பட்ட பல உயர்ந்த உலகங்களுக்குச் சென்று விடுகிறது. அது மீண்டும் பூமிக்கு வருவதில்லை. யோகிகள் நினைத்தால் தன் உடலில் பெரிய அக்கிணியை உருவாக்கிக் கொண்டு அதைத் தலை உச்சிக்குச் செலுத்திப் பிரம்மரந்திரத்தை வெடிக்கச் செய்து அதன் வழியாக மேலுக்கு மேலான உலகத்திற்கு செல்வார்கள். இதனைக் கபாலமோட்சம் என்பார்கள்.
புதுவைக்கு அருகிலுள்ள பொம்மையார்பாளையத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதினத்தின் சிவஞான பாலைய சுவாமிகள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்தின் குருநாதர் இங்குள்ள முருகன் சந்நிதியை ஒட்டிக் கீழே செல்லும் நிலவறையுள் சென்று ஞானாக்கினியால் தம்மை எரித்துக்கொண்டு இறைவனோடு ஐக்கியமானார். அவரை இன்றும் ஒடுக்கத்துச் சுவாமிகள் என்றே அழைப்பார்கள். ஞானிகள் எவ்வாறு விரும்புகிறார்களோ அவ்வாறே ஐக்கியம் ஆவார்கள்.
எண்சாண் உயரமுள்ள நம் உடலே ஒரு கோயில்; அதில் இதயமே மூலஸ்தானம். உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயமாம் என்றார் திருமூலர். நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் கோயில் கொண்டுள்ளான். நாம் கருப்பையில் இருக்கும்போது அவன் எப்படி அங்கு வந்திருப்பான். உடல் ஓயும்போது எந்த வழியாகப் புறப்பட்டு போவான். கருவாய் இருந்தபோது நம் உச்சித்துளை வழியே வந்து வந்த வழியிலேயே சென்றிருப்பானோ அந்தக் கள்வன்?
அவையெல்லாம் மனித அறிவுக்கு எட்டாதவை; அதே திருமூலர் உள்ளத்தின் உள்ளே தான் அவன் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான்; எனக்கு ஏற்படும் இரக்கம், கருணை எல்லாம் அந்த வள்ளலால் வந்தவை; என் ஓட்டை உடம்புக்குள் எப்படியோ வந்து புகுந்து எப்படியோ புறப்பட்டுத் தப்பிச் சென்று விடும் அந்த கள்ளர்கள் தலைவனை யாரால் அறிய முடியும்? என்று கேட்கிறார்.
உள்ளத்து ளேதான் கரந்துஎங்கும் நின்றவன்;
வள்ளல்; தலைமகன்; மலர்உறை மாதவன்;
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே
திருமந்திரம்: 1531
இந்தக் கள்ளன் மண்டையோட்டின் உச்சித்துளை யாகிய உடம்புக்கோயிலின் பிரம்மரந்திரம் மூலம் வந்திருப்பானோ?
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
கடில்போது தந்தளித்த கள்வர் போலும்
என்று அப்பர் அடிகளும் கூறுகிறாரே. அப்படித்தான் இருக்குமோ?
அறிவுக்கெல்லாம் அறிவாக விளங்கும் அவனை அறிய யாரால் முடியும்? விஞ்ஞானிகளால் முடியாது; ஆனால் ஞானிகளால் முடியும். அவர்கள் அறிந்து கூறுவதை நம்புவோம்.
நன்றி...
உலகத்தையே ஆட்டிப்படைப்பதும் இந்த ஒன்பது எண்கள்தான் என்பது அறிவியல்.
ஜனநாயகமே இந்த எண்ணிக்கையில்தானே அடங்கியிருக்கிறது.
வான்இயற்பியல் (Astro Physics) விஞ்ஞானியைக் கேட்டால் உலகம் காலம் என்பதில் தோன்றி அதிலேயே ஒடுங்குவதாகக் கூறுவார்கள். அந்தக் கால தத்துவத்திற்கும் இந்த ஒன்பது எண்கள்தான் அடிப்படை. கம்ப்யூட்டருக்கு எந்த மொழியும் தெரியாது. அதற்கு 0 என்பது மட்டும்தான் தெரியும்.
அந்தப் பூஜ்யத்தில் அது சாம்ராஜ்யத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறது.
எனவே ஒன்பது எண்களுமே சிறப்பானவை தான் இருந்தாலும் நம்மவர்களுக்கு எட்டு என்ற எண்ணைக் கேட்டாலே ஒரு பயம்.
அந்த எண்ணில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு அமைந்து விட்டாலோ எப்போது இது வெட்டுமோ? என்ற எண்ணம் வந்து வந்து பயமுறுத்தும்.
நாட்களிலே அஷ்டமி என்றால் ஐயோ! வேண்டாம் என்பார்கள். இன்னும் சிலருக்கு 8 என்ற எண்ணைப் பார்த்தாலே அச்சம். அதன் கோணலே அவர்களுக்குப் பிடிக்காது. சோதிடர்கள் ஒருவரிடம் உனக்கு அஷ்டமத்துச்சனி என்று சொல்லிவிட்டால் போதும், சனி அவரைப் பாடாய்ப் படுத்துகிறதோ இல்லையோ; அந்த அஷ்டமம் அவர்கள் மனத்தைப் பாடாய்ப் படுத்திவிடும்.
எட்டைப் பற்றிய உண்மையான செய்திகளைத் தெரிந்து கொண்டால் நம் வீணான அச்சம் தொலையும். எட்டின்மேல் நமக்குப் பாசம் வருகிறதோ இல்லையோ! ஆனால் ஒரு பக்தி தோன்றும். எண்ணிப்பார்த்தால் எல்லாமே எட்டுக்குள்தான் என்ற ஞானம் தோன்றும்.
மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது. அப்போது கருப்பையில் இடம் போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்திற்கேற்பத் தன் கைகால்களை மடக்கிக் கொள்கிறது. தன் உடல் உறுப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முதல் அறிவை அப்போதுதான் அது பெறுகிறது. அப்போது அதன் கருப்பை வடிவம் 8 என்ற எண் வடிவம். சைவர்களின் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் எட்டாம் திருமுறை திருவாசகம். வார்த்தைகளுக்கு எட்டாத தெய்வ அனுபவத்தை முதன்முதலாக வார்த்தைகளில் வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல். கடல் போன்ற தமிழ் நூல்களில் ஆறு மிகச்சிறந்த நூல்களில் ஒன்று. அதனை இயற்றிய மாணிக்கவாசகர் கருப்பையில் நம் முதல் வடிவத்தை எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் என்று கூறுகிறார். அந்த நெருக்கத்தில் சிக்கித் துன்புற்று இறந்து போகாமல் பிழைத்துப் பிறந்திருக்கிறோமே! இதற்கு நாம் எட்டிற்கு நன்றி சொல்ல வேண்டாமா!
எட்டாம் மாதத்தில் தாயின் கருப்பையில் உடலைக்குறுக்கிக் கொண்டு துன்பப்படும் ஓர் உயிருக்கு, நாம் செய்த தீவினையால் தானே மீண்டும் ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் நிச்சயம் நாம் தவறு ஏதும் செய்யக்கூடாது என்ற ஞானம் அதற்குத் தோன்றுவதாகக் கீதை ஓரிடத்தில் கூறுகிறது. ஆனால் பிறந்த பின் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் (இருந்தால்) நிச்சயம் தோன்றும். அதனால் எட்டை ஒரு ஞான எண்ணாகக் கூறுவார்கள். எட்டாம் எண் கூட்டுத்தொகை உடையவர்கள் ஒன்று தீவிர பக்தர்களாகவோ, தத்துவவாதிகளாகவோ, சமுதாயத் தொண்டர்களாகவோ இருப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குருவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ இருந்தால் அவர்கள் இப்பிறவியில் ஞானம் பெற்று முத்தியடைவார்கள் என்று சோதிடம் கூறுகிறது. பாரதத்தின் ஒப்பற்ற தவஞானி ஆதி சங்கரருக்கு எட்டாம் இடத்தில் குரு; மரணமில்லாமல் பெருவாழ்வை சாதித்துக் காட்டிய வள்ளலார் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதனும், சனியும். சைவ சித்தாந்தத்தின் வேத நூலாக சிவஞானபோதத்தின் எட்டாம் நூற்பா ஞானம் உணர்த்தும் முறையைக் கூறுகிறது. இந்த ஒரு நூற்பாவை மட்டும் ஏதேனும் ஒரு திருமடத்திலோ அல்லது ஒரு துறவியிடமோ தான் பாடங்கேட்க வேண்டும் என்ற மரபு இன்றும் உண்டு. வைணவர்களின் வேதநூல் நாலாயிரத் திவ்விய பிரபந்தம். இதில் உள்ள பாடல்கள் காலப்போக்கில் மறைந்து போயின. வீரநாராயண புரத்தில் வைணவர்கள் சிலர் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் எட்டாம் திருவாய்மொழியின் ஐந்தாம் பத்தைப் பாடியதைக் கேட்ட நாதமுனிகள் பின்னர் நாலாயிரம் பாடல்களையும் மீட்டுக்கொடுத்தார். ஆதலால் எட்டாம் எண் ஞானத்திற்குரிய எண். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உள்ளத்தளவில் அவர்கள் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
எட்டாம் எண் யோகத்திற்கும் உரியது. தவமுனிவர்கள் மேற்கொள்ளும் யோகம் எட்டுவகைப்படும். அவை இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். இந்த எட்டுவகை யோகங்களும் இடகலை, பின்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளை அடிப்படையாகக் கொண்டவை. அடி வயிற்றுக்குக் கீழே இடப்புறமிருந்து இடகலைநாடியும் வலப்புறமிருந்து பின்கலை நாடியும் தொடங்கிச் சுழிமுனை என்ற நாடியுடன் சேர்ந்து மீண்டும் பிரிந்து புருவமத்தியில் ஒன்று சேர்கின்றன. இதன் வடிவம் எட்டு.
இந்த யோகமுறையால் நம்மால் பின்வரும் எட்டுவிதமான சித்திகளை அடையமுடியும். நம் உடலை அனுவாகச் சுருக்கலாம். எவ்வளவு பெரிய உருவாகவும் பெருக்கலாம். எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லலாம், உடலை மிகமிக இலேசானதாக மாற்றலாம், தேவைப்படுவதை அடையலாம். எல்லாவற்றிலும் நிறைவானவனாக விளங்கலாம், யார் மீதும் எந்தப் பொருள்மீதும் தன் ஆட்சியைச் செலுத்தலாம்.
எதனையும் தன்வசமாக்கலாம். இதனை யோக முறையில் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று கூறுவார்கள். யோகத்திற்குரிய எட்டு உடையவர்கள் யோகம் பயிலத் தொடங்கினால் அதில் எளிதில் முன்னேறிச் செல்வார்கள். அவர்கள் அதைப் பயிலாவிட்டாலும் அவர்களுக்கு நிர்வாகத் திறமை, ஆளுமைப்பண்பு, எவரையும் கவரும் ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கும்.
மனிதப் பிறப்பில் பல நபர்கள் 8 ஆம் தேதியில் பிறந்து சாதித்துள்ளனர். இதில் மன்மோகன் சிங், எம்.ஜி.ஆர், அத்வானி, ஜோதிபாசு, முரசொலி மாறன் உள்பட பல தலைவர்கள் 8ஆம் எண்ணில் பிறந்துள்ளனர்.
எட்டு என்ற எண் தெய்வங்களோடு தொடர் புடைய எண்ணாகும். மனிதர்களைப் போலவே இறைவனுக்கும் குணங்கள் உண்டு. அந்தக் குணங்கள் எல்லாம் அவனுக்கு இருப்பதாக அருளாளர்கள் கூறுவார்கள். உண்மையில் பரம்பொருள் குணங்களும் வடிவங்களும் இல்லாதது. இறைவன் குணாதீதன், அதாவது குணங்களைக் கடந்தவன். இருப்பினும் அவனுக்கு குணங்களைக் கற்பிக்கும்போது எட்டு என்ற எண்தான் எல்லையாக அமைந்தது. இறைவனுக்குத் தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.
எட்டுக் குணங்களைக் கொண்ட சிவபெருமான் எட்டு இடங்களில் எட்டு வீரச் செயல்களை நிகழ்த்திய தாகவும் கூறுவர். அந்த இடங்கள் அட்ட வீரட்டத் தலங்கள் எனப்படும். இறைவன் வரம்பற்ற ஆற்றல் உடையவனாக இருந்தாலும் அவன் நிகழ்த்திய வீரச் செயல்கள் எட்டுதான். திருவள்ளுவர் இறைவனைப் பற்றிக்கூறும்போது அவனை எண்குணத்தான் என்று எட்டுக்குச் சிறப்பு கொடுத்தே கூறுகிறார். சிவபெருமானுக்குத் தோள்களும் எட்டுதான். இறைவன் வடிவங்கள் கூறுவதும் எட்டுதான். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய எட்டும் அவன் திருவடிவங்கள்.
எட்டு எண்ணில் பிறந்தவர்களுக்கு எல்லாம் இருக்கும்; ஆனால் இருக்காது. இறைவன் எல்லாம் உடையவன். இந்த உலகமும், வானமும் அண்டங் களும் அவற்றில் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை. எனவே, இறைவனை உடையவர் என்றே வழங்குவார்கள். கல்வெட்டுகளில் அந்தக் கோயில்கள் எழுந்தருளியுள்ள இறைவனை அந்த ஊரின் பெயரைச் சேர்த்து உடையவர் என்றே கூறுகின்றன.
ஆனால், அவனுக்கென்று எதுவுமே இல்லை. அவனுக்குத் தாயும் தந்தையும்கூட இல்லை. அவன் ஓர் அனாதை. இதை மாணிக்கவாசகர் தாயும் இலி; தந்தையிலி; தான் தனியன் கானேடி!.
மாணிக்க வாசகரின் திருவாசகம் உள்ளத்தை உருக்கும்; உடம்பில் கலந்து உயிரில் கலக்கும். மாணிக்க வாசகர் சொல்லச் சொல்லத் தில்லை நடராசப் பெருமானே ஓர் ஏடெழுதும் பிள்ளையாக வந்து தம் திருக்கரத்தால் எழுதிய ஞானநூல். வெளிநாட்டினரின் உள்ளங்களைக் கவர்ந்த ஒப்பற்ற நூல். முத்தியில் பெறும் இன்பம் எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை முதன் முதலாக வார்த்தைகளில் வடித்துக்கொடுத்த தெய்வத்திருநூல். இது சைவர்களின் பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாவதாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.
எட்டுக்கும், மேலுலகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தெய்வங்கள் எல்லாம் இந்த உலகத்திற்குத் தேவையான செல்வங்களை மட்டும் கொடுக்கக்கூடியவை. பிறவாமையைக் கொடுக்க அவற்றால் முடியாது. அவனது நடனம் ஆனந்த நடனம். அதைக் கண்டுவிட்டால் போதும் என்றும் ஆனந்தந்தான்.
ரஷியாவில் அணுஉலை ஒன்றில் கொதித்துக் கொண்டிருந்த அணுக்கலவையிலிருந்து ஒரு சிறிய துளி வெளியில் விழுந்து விட்டது. அதைத் தொலைவிலிருந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணிப்பொறிகள் மூலமாக விஞ்ஞானிகள் பார்த்தார்கள். அந்த ஒரு சிறு துளி வெளியில் வந்து விழுந்தவுடன் ஆடிய ஆட்டம் இதுவரையில் உலகில் கண்டறியாத அற்புத நடனமென்றும், அந்த நடனத்தின் அழகை வார்த்தைகளால் விளக்க முடியாது என்றும் கூறினார்கள். அந்த அணுவிலும் தாண்டவமாடும் தில்லை ஆடலரசன் காலைத் தூக்கி நின்றாடும் கோலத்தைச் சுற்றி நேர்க்கோடுகள் வரைந்தால் அது எண் கோணமாகும். அந்த ஆனந்தக் கூத்தன் அந்த எட்டில் நின்று ஆடித்தான் இந்த உலகத்தைப் படைக்கிறான்; நிலை நிறுத்துகிறான். அழிக்கின்றான். ஆம்;
ஆவதும் எட்டாலே; அழிவதும் எட்டாலே; போவதும் எட்டாலே; வருவதும் எட்டாலே.
எட்டு என்றதைக் கேட்டவுடன் பிடிக்காமல் போவதைப்போல இந்த நடராசனைக் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. தப்பித் தவறி வீட்டுக்கு வந்து விட்டாலும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் எங்காவது ஒரு கோயிலில் வைத்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள். எல்லோருமே இறப்புக்குப்பின் சொர்க்கத்துக்குப் போக நினைக்கிறார்கள். அந்தச் சொர்க்கத்திற்குப் போகும் நுழைவாயில் நம் வீட்டு வாசற்காலைப் போல இல்லை; அது எண் கோண வடிவில் இருக்கிறது. கோயில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு உள்ளே அதன் மேல் உள்ள விமானப் பகுதி எண் கோணவடிவில் அமைந்திருக்கும். அதை மூடியிருக்கும் கல்லும் எண்கோண வடிவில் அமைந்திருக்கும். உள்பகுதியில் உள்ள எண் கோணத்தை பிரம்மரந்திரம் என்பார்கள். இறைவன் சொர்க்கத்தின் நாயகன்; அவன் போவதும் வருவதும் அந்த எண்கோண வழியில்தான். தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மூலவர் மிகவும் பெரிய உருவம். அவருக்குப் பெயரே தஞ்சைப் பெருவுடையார். அதற்குத் தகுந்தாற்போல் உள்கூட்ட எண்கோணம் மிகவும் பெரியது. அதை மூடத்தான் எட்டு டன் எடையுள்ள ஒரே கல் தேவைப்பட்டது. எண் கோண வடிவிலான அதை எப்படித் தூக்கிக் கீழேயுள்ள எண் கோணத்தில் பொருந்துமாறு நிறுத்தியிருப்பார்கள் என்று புரியாமல் இன்றும் வெளிநாட்டுக் கட்டிடக்கலை நிபுனர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
எகிப்திய பிரமிடுகளைப் பற்றி அறிந்திருக்கிறோம். அதன் உட்புறம் ஏக்கர் கணக்கில் பெரியது. அதன் நடுநாயகமாக இருக்கும் பகுதியில்தான் இறந்த எகிப்திய மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அடங்கிய நவரத்தினப் பேழைகள் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு நேரான மேல் பகுதிதான் வெளியில் தெரியும் கூம்பு வடிவம். பேழைகளுக்கு நேராக மேலே உள்ள பகுதி எண் கோண வடிவில் அமைந்திருக்கும். அதை மேல்புறத்தில் மூடுவதற்கு ஒவ்வொன்றும் எட்டு டன் எடையுள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மம்மிகளுக்கு மேலேயுள்ள இந்த எண்கோல் வழியாகத்தான் அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் மன்னர்கள் தங்கள் அரசியருடன் பகலில் சொர்க்கலோகத்திற்குச் சென்று அங்குப் பகலெல்லாம் இருந்துவிட்டு இரவில் அதே எண்கோண வழியாக மம்மிக்குத் திரும்பி விடுகிறார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.
குழந்தை பிறக்கும்போது அதன் தலையின் உச்சித் துர தோலால் மட்டுமே மூடப்பட்டிருக்கும். குழந்தை வளர வளரத்தான் மண்டையோடு வளர்ந்து கூடுகிறது. குழந்தை பிறக்கும்போதிருந்த உச்சித்துளை வட்டவடிவமானது அல்ல. அது எண்கோண வடிவிலானது. எனவே, அதையும் யோகித பிரம்மரந்திரம் என்றே கூறுவார்கள். உடலிலிருந்து உயிர் பிரியும்போது உச்சித் துளை வழியாகப் பிரிந்து சென்றால் அந்த உயிர் நேரே சொர்க்கத்திற்கும் மேற்பட்ட பல உயர்ந்த உலகங்களுக்குச் சென்று விடுகிறது. அது மீண்டும் பூமிக்கு வருவதில்லை. யோகிகள் நினைத்தால் தன் உடலில் பெரிய அக்கிணியை உருவாக்கிக் கொண்டு அதைத் தலை உச்சிக்குச் செலுத்திப் பிரம்மரந்திரத்தை வெடிக்கச் செய்து அதன் வழியாக மேலுக்கு மேலான உலகத்திற்கு செல்வார்கள். இதனைக் கபாலமோட்சம் என்பார்கள்.
புதுவைக்கு அருகிலுள்ள பொம்மையார்பாளையத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதினத்தின் சிவஞான பாலைய சுவாமிகள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்தின் குருநாதர் இங்குள்ள முருகன் சந்நிதியை ஒட்டிக் கீழே செல்லும் நிலவறையுள் சென்று ஞானாக்கினியால் தம்மை எரித்துக்கொண்டு இறைவனோடு ஐக்கியமானார். அவரை இன்றும் ஒடுக்கத்துச் சுவாமிகள் என்றே அழைப்பார்கள். ஞானிகள் எவ்வாறு விரும்புகிறார்களோ அவ்வாறே ஐக்கியம் ஆவார்கள்.
எண்சாண் உயரமுள்ள நம் உடலே ஒரு கோயில்; அதில் இதயமே மூலஸ்தானம். உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயமாம் என்றார் திருமூலர். நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் கோயில் கொண்டுள்ளான். நாம் கருப்பையில் இருக்கும்போது அவன் எப்படி அங்கு வந்திருப்பான். உடல் ஓயும்போது எந்த வழியாகப் புறப்பட்டு போவான். கருவாய் இருந்தபோது நம் உச்சித்துளை வழியே வந்து வந்த வழியிலேயே சென்றிருப்பானோ அந்தக் கள்வன்?
அவையெல்லாம் மனித அறிவுக்கு எட்டாதவை; அதே திருமூலர் உள்ளத்தின் உள்ளே தான் அவன் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான்; எனக்கு ஏற்படும் இரக்கம், கருணை எல்லாம் அந்த வள்ளலால் வந்தவை; என் ஓட்டை உடம்புக்குள் எப்படியோ வந்து புகுந்து எப்படியோ புறப்பட்டுத் தப்பிச் சென்று விடும் அந்த கள்ளர்கள் தலைவனை யாரால் அறிய முடியும்? என்று கேட்கிறார்.
உள்ளத்து ளேதான் கரந்துஎங்கும் நின்றவன்;
வள்ளல்; தலைமகன்; மலர்உறை மாதவன்;
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே
திருமந்திரம்: 1531
இந்தக் கள்ளன் மண்டையோட்டின் உச்சித்துளை யாகிய உடம்புக்கோயிலின் பிரம்மரந்திரம் மூலம் வந்திருப்பானோ?
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
கடில்போது தந்தளித்த கள்வர் போலும்
என்று அப்பர் அடிகளும் கூறுகிறாரே. அப்படித்தான் இருக்குமோ?
அறிவுக்கெல்லாம் அறிவாக விளங்கும் அவனை அறிய யாரால் முடியும்? விஞ்ஞானிகளால் முடியாது; ஆனால் ஞானிகளால் முடியும். அவர்கள் அறிந்து கூறுவதை நம்புவோம்.
நன்றி...
Re: எட்டாததை எட்டு...!
சில ஞானிகளையும் நம்ப முடியாது இப்போது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எட்டு காலங்கள் .
» எட்டு சவால்கள்....எதிர்கொள்ளும் வழி!
» எட்டு வாழ்க்கைக்கு பத்து
» நூற்றி எட்டு மலர்கள்
» எட்டு ஆத்ம குணங்களை(8 )
» எட்டு சவால்கள்....எதிர்கொள்ளும் வழி!
» எட்டு வாழ்க்கைக்கு பத்து
» நூற்றி எட்டு மலர்கள்
» எட்டு ஆத்ம குணங்களை(8 )
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|