Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி!
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி!
தொழிற் கல்விப் படிப்புகளில் தற்போது அதிகக் கவனம் பெற்றுள்ளது உணவு தயாரிப்பு (கேட்டரிங்), ஆடை வடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி) ஆகியவைதான்.
வெளிநாடுகளுக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற ஆவலைத் தூண்டும் (உண்மையோ, பொய்யோ) துறையாக சில ஆண்டுகளாக இவை பிரபலமடைந்துள்ளன.
இவற்றின் ஒரு பகுதியாக "ஃபேஷன் டெக்னாலஜி' எனப்படும் ஆடை வடிவமைப்பு பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கும் போதும், வழக்கமான கல்லூரி ஆண்டு விழாக்களிலும் "ஆடை அலங்கார அணிவகுப்பு' கட்டாயம் இடம்பெறுகிறது.
இங்கே தான் குழப்பமே. இந்த அலங்கார அணிவகுப்புகள் தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத அரைகுறை நடை, உடை, பாவனைகளுடன் அமைந்து விடுகின்றன.
நிச்சயமாகப் பொது இடங்களில் போட்டுக் கொண்டு வெளிவர முடியாத ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, வழக்கமான மேடை கலாசாரமாகிய ஒளி வெள்ளத்தில், "ஆணிக்கால்' வந்தவரைப் போல "ஹை ஹீல்ஸ்' செருப்பு அணிந்து நடந்து வரும் இளம்பெண்கள், மேடையின் முன் அமர்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான மக்களுக்கு "பறக்கும் முத்தமும்' கொடுக்கிறார்கள்.
நிகழ்ச்சி முடியும் தருவாயில் இவர்களுக்கெல்லாம் ஒப்பனை செய்த கலைஞர்கள் (மேக்அப் மேன்) வருகிறார்கள். அவர்களை இறுக அணைத்தவாறே இறுதி நடை. சில நேரங்களில் அவர்களுக்கும் பகிரங்க முத்தம். "இவர் என்னுடைய மாஸ்டர்- இவர் என்னுடைய மாணவி'... அறிமுகங்கள் வேறு.
பெரும்பாலான ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் எல்லாம் கோவை போன்ற மாநகரிலிருந்து அழைத்து வரப்படும் "மாடலிங்' பெண்கள். அப்பாவியாய் நடைபோடும் ஆண்களும் உண்டு. ஒரு மணி நேரம் மேடையில் "நடக்க' இவர்கள் கட்டணம் பெறுகிறார்கள்.
கால்களும், உடலின் சில பகுதிகளும் இடமும், வலமுமாகச் செல்ல வேண்டும். ஆனால், நேராகச் செல்ல வேண்டும். இதற்குத்தான் "கேட் வாக்' என்ற பெயர் வேறு. இந்த நடை முறையால், யோகா செய்யாமல், உடற்பயிற்சி செய்யாமல் உடல் ஆரோக்கியமாக இருக்குமென்றாலும்கூட பரவாயில்லை. கையில் அல்லது கக்கத்தில் எதுவுமே இல்லாத குட்டைப்பையொன்று கண்டிப்பாக இருக்கும்.
இன்னும் சில பேஷன் டெக்னாலஜி கல்லூரிகளில் அபத்தங்கள் அரங்கேறுகின்றன. காய்கறிகளால், பயறுகளால் தயாரிக்கப்பட்ட ஆடை, பெண்களின் பாவாடையைப் போல மூங்கில் கூடை, சாக்கு தைக்கப் பயன்படும் சணலைக் கொண்டு தயாரிக்கப்படும் உடைகள். இதைத்தான் புதியன உருவாக்கும் திறன் (கிரியேட்டிவ்) என்கிறார்களோ?
இவற்றை அணிந்து கொண்டு ஆண்களும், பெண்களும் மேடையில் உலாவரும்போது பின்னணி இசைவேறு. இவையெல்லாம் எதற்காக? சாதாரணமாக இவற்றை அணிந்து சாலைகளில் நடை போட முடியுமா? தெரு நாய்கள் துரத்தாதா? திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்குப் போகத்தான் முடியுமா?
உண்மையில் இந்தப் படிப்பு, அறைகுறை ஆடைகளை, அபத்தமான ஆடைகளைத் தயாரிக்கத் தானா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அவ்வாறில்லை என கல்வித் துறையினர் மறுக்கின்றனர்.
பிறகு எதற்காக? புதிய வடிவங்களை, முன்மாதிரிகளைத் தயாரிக்கிறோம் என்பதைக் காட்டவா? இல்லை. அறைகுறையும், அபத்தங்களும் மட்டும்தான் புதிய வடிவங்களா? இல்லையில்லை. முற்றிலும் வணிக உத்தியே.
எதையும் வித்தியாசமாகப் பார்த்துப் பழகிய நம் மக்கள் மத்தியில் அபத்தமான, ஆபாசமான உடையணிந்து ஊர்வலம் விட்டால் கல்லூரிக்கு ஆள் பிடிக்கும் வேலையை எளிதாகச் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கத்தான் இந்த ஆபாசங்களும் அபத்தங்களும்.
இவையெல்லாம் மாயத் தோற்றங்கள் என்ற உண்மை புரியாமல் கீழே உட்கார்ந்து கைதட்டி ஆரவாரம் செய்யும் இளைஞர்கள், இளைஞிகள், பெற்றோர்களையும்கூட என்ன செய்வது?
கல்வி கற்க இதுபோன்ற அறிமுகங்கள் நமக்குத் தேவையா? கல்வியைக் கொடுக்க இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டுமா? கல்வி முறை, நம் வாழ்க்கை முறையை- வாழ்க்கைத் தேவையைவிட்டு வெகுதொலைவு விலகிச் செல்வதாகத் தெரிகிறதே?
உடைக்கும், நடைக்கும், கண்ணை- காதைப் பிளக்கும் ஒலி, ஒளிக்கும் என்ன பொருள்? விவரம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நல்லது.
nidur.info
வெளிநாடுகளுக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற ஆவலைத் தூண்டும் (உண்மையோ, பொய்யோ) துறையாக சில ஆண்டுகளாக இவை பிரபலமடைந்துள்ளன.
இவற்றின் ஒரு பகுதியாக "ஃபேஷன் டெக்னாலஜி' எனப்படும் ஆடை வடிவமைப்பு பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கும் போதும், வழக்கமான கல்லூரி ஆண்டு விழாக்களிலும் "ஆடை அலங்கார அணிவகுப்பு' கட்டாயம் இடம்பெறுகிறது.
இங்கே தான் குழப்பமே. இந்த அலங்கார அணிவகுப்புகள் தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத அரைகுறை நடை, உடை, பாவனைகளுடன் அமைந்து விடுகின்றன.
நிச்சயமாகப் பொது இடங்களில் போட்டுக் கொண்டு வெளிவர முடியாத ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, வழக்கமான மேடை கலாசாரமாகிய ஒளி வெள்ளத்தில், "ஆணிக்கால்' வந்தவரைப் போல "ஹை ஹீல்ஸ்' செருப்பு அணிந்து நடந்து வரும் இளம்பெண்கள், மேடையின் முன் அமர்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான மக்களுக்கு "பறக்கும் முத்தமும்' கொடுக்கிறார்கள்.
நிகழ்ச்சி முடியும் தருவாயில் இவர்களுக்கெல்லாம் ஒப்பனை செய்த கலைஞர்கள் (மேக்அப் மேன்) வருகிறார்கள். அவர்களை இறுக அணைத்தவாறே இறுதி நடை. சில நேரங்களில் அவர்களுக்கும் பகிரங்க முத்தம். "இவர் என்னுடைய மாஸ்டர்- இவர் என்னுடைய மாணவி'... அறிமுகங்கள் வேறு.
பெரும்பாலான ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் எல்லாம் கோவை போன்ற மாநகரிலிருந்து அழைத்து வரப்படும் "மாடலிங்' பெண்கள். அப்பாவியாய் நடைபோடும் ஆண்களும் உண்டு. ஒரு மணி நேரம் மேடையில் "நடக்க' இவர்கள் கட்டணம் பெறுகிறார்கள்.
கால்களும், உடலின் சில பகுதிகளும் இடமும், வலமுமாகச் செல்ல வேண்டும். ஆனால், நேராகச் செல்ல வேண்டும். இதற்குத்தான் "கேட் வாக்' என்ற பெயர் வேறு. இந்த நடை முறையால், யோகா செய்யாமல், உடற்பயிற்சி செய்யாமல் உடல் ஆரோக்கியமாக இருக்குமென்றாலும்கூட பரவாயில்லை. கையில் அல்லது கக்கத்தில் எதுவுமே இல்லாத குட்டைப்பையொன்று கண்டிப்பாக இருக்கும்.
இன்னும் சில பேஷன் டெக்னாலஜி கல்லூரிகளில் அபத்தங்கள் அரங்கேறுகின்றன. காய்கறிகளால், பயறுகளால் தயாரிக்கப்பட்ட ஆடை, பெண்களின் பாவாடையைப் போல மூங்கில் கூடை, சாக்கு தைக்கப் பயன்படும் சணலைக் கொண்டு தயாரிக்கப்படும் உடைகள். இதைத்தான் புதியன உருவாக்கும் திறன் (கிரியேட்டிவ்) என்கிறார்களோ?
இவற்றை அணிந்து கொண்டு ஆண்களும், பெண்களும் மேடையில் உலாவரும்போது பின்னணி இசைவேறு. இவையெல்லாம் எதற்காக? சாதாரணமாக இவற்றை அணிந்து சாலைகளில் நடை போட முடியுமா? தெரு நாய்கள் துரத்தாதா? திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்குப் போகத்தான் முடியுமா?
உண்மையில் இந்தப் படிப்பு, அறைகுறை ஆடைகளை, அபத்தமான ஆடைகளைத் தயாரிக்கத் தானா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அவ்வாறில்லை என கல்வித் துறையினர் மறுக்கின்றனர்.
பிறகு எதற்காக? புதிய வடிவங்களை, முன்மாதிரிகளைத் தயாரிக்கிறோம் என்பதைக் காட்டவா? இல்லை. அறைகுறையும், அபத்தங்களும் மட்டும்தான் புதிய வடிவங்களா? இல்லையில்லை. முற்றிலும் வணிக உத்தியே.
எதையும் வித்தியாசமாகப் பார்த்துப் பழகிய நம் மக்கள் மத்தியில் அபத்தமான, ஆபாசமான உடையணிந்து ஊர்வலம் விட்டால் கல்லூரிக்கு ஆள் பிடிக்கும் வேலையை எளிதாகச் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கத்தான் இந்த ஆபாசங்களும் அபத்தங்களும்.
இவையெல்லாம் மாயத் தோற்றங்கள் என்ற உண்மை புரியாமல் கீழே உட்கார்ந்து கைதட்டி ஆரவாரம் செய்யும் இளைஞர்கள், இளைஞிகள், பெற்றோர்களையும்கூட என்ன செய்வது?
கல்வி கற்க இதுபோன்ற அறிமுகங்கள் நமக்குத் தேவையா? கல்வியைக் கொடுக்க இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டுமா? கல்வி முறை, நம் வாழ்க்கை முறையை- வாழ்க்கைத் தேவையைவிட்டு வெகுதொலைவு விலகிச் செல்வதாகத் தெரிகிறதே?
உடைக்கும், நடைக்கும், கண்ணை- காதைப் பிளக்கும் ஒலி, ஒளிக்கும் என்ன பொருள்? விவரம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நல்லது.
nidur.info
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி!
நன்றி நண்பா சிறந்த பகிர்விற்க்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி!
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|