சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பாலும் ... மனிதர்களும் ... Khan11

பாலும் ... மனிதர்களும் ...

+2
*சம்ஸ்
nazimudeen
6 posters

Go down

பாலும் ... மனிதர்களும் ... Empty பாலும் ... மனிதர்களும் ...

Post by nazimudeen Mon 1 Aug 2011 - 22:45

பாலும் ... மனிதர்களும் ... Raw-milk-and-butter-good-fats
நம்முடைய வாழ்வில் பால் மிக முக்கியமான
பொருள். தேனீர் அருந்த பால் தேவை, காப்பி அருந்த பால் தேவை, எண்ணற்ற
பருகும் பொருள்களுக்கு பால் தேவை. வெறும் பால் காலையில், இரவில் எல்லோரும்
குடிக்கின்றனர். பால் மூலம் தயார் செய்யப்படும் பல பொருட்களை
சாப்பிடுகிறோம். பாலிலிருந்து தயிர் கிடைக்கிறது, வெண்ணெய் கிடைக்கிறது,
சீஸ் கிடைக்கிறது. மில்க் ஸ்வீட்ஸ் என்ற இனிப்புப் பண்டங்கள் கிடைக்கின்றன.


ஆனாலும்
உலகில் எல்லோரும் பால் சாப்பிடுவதில்லை. பலருக்கு பால் ஒத்துக்
கொள்வதில்லை. சில நாடுகளில் யாரும் பால் அருந்துவதில்லை. பலருக்கு பால்
சாப்பிட்டால் வாந்தி, பேதி ஏற்படுகிறது. ஏன் இப்படி என்று அறிவியல்
வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.


இதில்
ஒரு ஆராய்ச்சி மிகவும் சுவையானது. பாலூட்டி இனத்தில் உள்ள தாய்
மிருகங்களிடம்தான் பால் வருகின்றது. மனிதர்கள், நாய், பூனை, பன்றி, எலி,
ஆடு, மாடு, ஒட்டகம், குதிரை என்று பல மிருகங்களில் உடலில் இருந்து
வருகின்றன. அவை அனைத்திலும் பிறந்த குழந்தைகளுக்கு உணவாக பால் அமைகிறது.
வளர்ந்து விட்ட பிராணிகள் பால் அருந்துவதில்லை. வயதான மிருகங்களிடம்
இருந்தும் பால் வருவதில்லை.


பாலில்
லாக்டோஸ் என்ற ஒரு வகைச் சர்க்கரை உள்ளது. இந்த லாக்டோஸை, ஆற்றலாக
மாற்றுவதற்கு லாட்டேஸ் என்ற ஒரு எண்ணையும் நமது உடலுக்குத் தேவை. எல்லாப்
பாலூட்டி இனங்களிலும் பிறந்த குழந்தைகளுக்கு லாக்டோஸ் அதிக அளவில்
இருக்கும். அதனால் தான் சிறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியமான
உணவாகும். இரண்டு வருடங்களுக்குப்பின் லாட்டேஸ் அளவு குறைந்து விடும்.


இன்று
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் பால்
அருந்துகின்றனர். ஆனால் நமது முன்னோர்களால் குழந்தைப்பருவம் தாண்டி
வளர்ந்தபின் பால் அருந்தியிருக்க முடியாது. மிருகங்களிடம் இருந்துபால்
கறக்க ஆரம்பித்த பிறகுதான் சிலருக்கு பால் அருந்தும் திறன் அடைந்திருக்க
வேண்டும். மனித வரலாற்றில் பால் அருந்தும் திறன் பெற்றது மிக முக்கியமான
நிகழ்வாக கருதப்படுகிறது. நம் முன்னோர்களுக்கு அது பெரும் வரப்பிரசாதமாக
அமைந்திருக்க வேண்டும்.


நமது
மரபணுக்களிலேயே ஒரு மாறுதல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிலருக்கு
ஏற்பட்டிருக்க வேண்டும். பாலை செரிக்கும் வகையில் மரபணு
மாற்றமடைந்ததால்தான் நம்மால் எல்லா வயதிலும் பால் அருந்த முடிகிறது.


இவைபற்றி
ஆராய்ந்த அறிவியல் வல்லுனர்கள் முதலில் உலகில் எந்தெந்தப் பகுதிகளில் பால்
அருந்துகிறார்கள் என்று கணக்கிட்டனர். வடக்கு மத்திய ஐரோப்பாவில்
எல்லோரும் பால் அருந்துகிறார்கள். ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா, தென்
அமெரிக்கா இங்கெல்லாம் பால் பொருட்களை மக்கள் தவிர்க்கிறார்கள்.

பாலும் ... மனிதர்களும் ... IMG_2334

சமீபகால ஆராய்ச்சியில் மத்திய ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரியை சுற்றியுள்ள
பகுதிகளில்தான் சுமார் 7500 வருடங்களுக்கு முன்னர்தான் முதன் முதலாக பால்
அருந்தும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.


மற்றுமொரு
ஆராய்ச்சியில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் உபயோகித்த மண்
சட்டிகளையும் பானைகளையும் இது சம்பந்தமாக ஆராய்ந்துள்ளார்கள். பால் கறப்பது
இதற்கும் முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும். பெண் இன மிருகங்கள் பெருமளவில்
வைத்திருக்கப் பட்டிருந்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் பால்
அருந்தும் பழக்கம் 7500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்திருக்க வேண்டும்
என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.


பால்
அருந்தாவிட்டாலும் பால் ஏன் கறக்கப்பட்டது? அப்படிக் கறந்தபால் எதற்கு
பயன்படுத்தப்பட்டது? பால் புளிக்க வைத்து தயிர், வெண்ணையாக மாறும் போது
அவற்றில் லாக்டோஸ் பெருமளவில் எடுக்கப்பட்டு விடுகிறது. எனவே இந்த
பால்பொருட்களை எல்லோரும் உண்ணலாம்.


வெப்பமான
நாடுகளில் பாலை புளிக்க வைத்து தயிர் பெறுவது மிகச் சுலபம். பானையில் பாலை
ஊற்றி வெயிலில் வைத்து விட்டால் போதும், தயிர் உருவாகி விடும்.


பால்
கறக்கும் பழக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்து சுமார் 2000 ஆண்டு பால்
அருந்தாதவர்கள் ஏன் பிறகு ஏன் பால் அருந்த ஆரம்பித்தார்கள்? இதற்கு சரியான
விடை இன்னமும் கிடைக்கவில்லை.

ஒரு
விடை. பயிர்களும், மிருகங்களும் தொடர்ந்து கிடைப்பதில்லை. பால் தொடர்ந்து
கிடைக்கக் கூடிய உணவு. பால் மிகவும் மலிவானது சக்திமிகுந்தது. குடி தண்ணீரை
விடவும் ஆரோக்கியமானது.

பேரா.வி.முருகன்



--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

பாலும் ... மனிதர்களும் ... Empty Re: பாலும் ... மனிதர்களும் ...

Post by *சம்ஸ் Mon 1 Aug 2011 - 22:49

நன்றி சிறந்த பகிர்விற்க்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாலும் ... மனிதர்களும் ... Empty Re: பாலும் ... மனிதர்களும் ...

Post by abuajmal Mon 1 Aug 2011 - 22:55

பாலும் ... மனிதர்களும் ... 331844 அருமையன பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோ.



பால் என்று சொன்ன உடன் எனக்கு ஓர் ஹதீஸ் நியாபகத்திர்க்கு வருகிரது என்னவென்றால் பெருமானார்(ஸல்) அவர்களிடம் மூன்று பொருட்களை யார் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி கொள்வார்களாம் அந்த மூன்று பொருள்



1.அத்தர்(வாசனைத் திரவியங்கள்

2.பால்

3.தலையனை
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

பாலும் ... மனிதர்களும் ... Empty Re: பாலும் ... மனிதர்களும் ...

Post by jasmin Mon 1 Aug 2011 - 22:58

மிக அருமையான தகவல் வாழ்த்துகள் நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பாலும் ... மனிதர்களும் ... Empty Re: பாலும் ... மனிதர்களும் ...

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 23:10

மிக மிக அருமையான தகவல் உறவே நன்றி தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாலும் ... மனிதர்களும் ... Empty Re: பாலும் ... மனிதர்களும் ...

Post by lafeer Wed 3 Aug 2011 - 2:39

##*
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

பாலும் ... மனிதர்களும் ... Empty Re: பாலும் ... மனிதர்களும் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum