சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும் Khan11

தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்

Go down

தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும் Empty தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்

Post by நண்பன் Tue 2 Aug 2011 - 4:12

தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்
அமைச்சின் செயலாளர் கணேகல
மகேஸ்வரன் பிரசாத்
தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கும் மக்களுக்கு சரியான தகவல்களை, துல்லியமாக வழங்கும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு அதிகமான பொறுப்பு இருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகள் தொடர்பான உண்மைத் தன்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல ஊடகவியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்விட யத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராகவிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வில் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சின் செயலாளர்.

கடந்த ஆறு வருடங்களில் இதுபோன்ற 50 செயலமர்வுகளை நாம் நடத்தியுள்ளோம். வட பகுதியில் நடைபெறும் முதலாவது செயலமர்வு இதுவாகும்.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடக வியலாளர்களுக்கு இச்செயலமர்வு நடைபெறுகிறது. அடுத்த மாதம் யாழ்ப் பாண ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப் பாணத்தில் செயலமர்வொன்றை நடத்த வுள்ளோம்.

ஊடகவியலாளர்கள் துறைசார் வல்லுனர் களாகக் காணப்பட வேண்டும் என்பதே அமைச்சரின் எதிர்பார்ப்பு. இதனாலேயே ஊடகவியலாளர்களுக்கு செயமலர்வை ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறான செயலமர்வுகளை மேலும் பல இடங்களில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

தகவல்களை அறிந்து கொள்வது மக்க ளின் ஜனநாயக உரிமை. தகவல்கள் சுதந்திரமாக வழங்கப்பட வேண்டும். எனவே, மக்களுக்கான தகவல்களை உண்மையாக, துல்லியமான முறையில் வழங்குவது ஊடக வியலாளர்களின் கடமை. குறிப்பாக வட பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இதுவிடயத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியமானது.

30 வருட பயங்கரவாத நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் நாட்டில் சாந்தியையும், சமா தானத்தையும் நிலைநாட்டும் பாரிய கடமை ஊடகவியலாளர்களுக்குக் காணப் படுகிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் பாது காக்கவேண்டும்.

நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்தி யிலேயே அரசாங்கம் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது. இந்த நிலையில் அபிவி ருத்திப் பணிகள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி மக்களுக்கு அதன் மூலம் ஊடகவியலாளர் நாட்டின் அபி விருத்தியில் பங்களிப்புச் செய்ய முடியும்.

இதேநேரம், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் தனது மஹிந்த சிந்தனையின் ஊடாக பல்வேறு நன்மையான திட்டங்களை அறிவித்துள்ளார். இவற்றில் சில நிறைவேற் றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் நாம் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் ஊடகத்துறை அமைச் சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகசெயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபர், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் வசந்தபிரிய ராமநாயக்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப்பணிப்பாளர் சீலரட்ண செனரத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்து கொண்ட இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க சர்வதேச ஊடகங்களின் நிலைமை பற்றி கருத்துரை வழங்கியிருந்த துடன், திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடத் தலைவர் சட்டத்தரணி யசோதரா கதிர்காமத்தம்பி, கச்சி முகமட், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன் செய்தி சேகரிப்பு மற்றும் அறிக்கையிடல் தொடர்பான கருத்துரை யையும் வழங்கினார்கள்.

வடபகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுத்து வரப்படும் நிலை யில் ஊடகத்துறையில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லையென இச்செயலமர்வில் கருத்துத் தெரிவித்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப்பணிப்பாளர் சீலரட்ண செனரத், இவ்வாறான செயலமர்வுகள் மூலம் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி அபிவிருத்திப் பணிகள் பற்றி மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்றும் கூறினார்.

30 வருட கொடிய யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியை நோக்கி நாடு வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஊடகவியலாளர்களும் தமது பங்களிப்பை நாட்டுக்கு வழங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இதேவேளை சுமார் 30 வருடங்களின் பின்னர் வன்னிப் பிரதேசத்தில் இவ்வாறான செயலமர்வொன்று நடத்தப்பட்டிருப்பதானது தமக்கு மிகவும் உதவியாக அமைந்தது என மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான அந்தோனிமார்க் தெரிவித்தார்.

இந்தச் செயலமர்வின் மூலம் பல்வேறு விடயங்களைத் தாம் அறிந்து கொண்டதுடன், இதுபோன்ற பல்வேறு செயலமர்வுகள் தொடர்ந்தும் நடத்தப்படவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்.

இச்செயலமர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த பி.பி.சி. செய்திச் சேவையின் வவுனியா பிராந்திய செய்தியாளர் மாணி க்கவாசகர், இவ்வாறான செயலமர்வுகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அவசியமானது என்றார். 30 வருடங்களாக யுத்த சூழலிலிருந்த ஊடகவியலாளர்களுக்கு ஊடகத்துறை தொடர்பாக அறிவூட்டப்பட வேண்டியது அவசியம். இதனடிப்படையில் இந்த செயலமர்வு தமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum