Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆராய்ச்சியின் முடிவு.
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆராய்ச்சியின் முடிவு.
ஐந்து கரடிகள் உறங்குநிலையைப் பற்றிய ஆராய்ச்சிக்காக ஈடுபடுத்தப்பட்டன. அவற்றின் குளிர்கால உறங்குநிலையின் போது நிகழும் மாற்றங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டன.
ஆச்சரியில் மிகப்பெரிய மாற்றங்கள் கரடியில் ஏற்படுவதை அலாஸ்கா மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்வாளர்கள் அவதானித்துள்ளனர். அமெரிக்கக் கறுப்புக் கரடிகளே (Ursus americanus) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
உறங்குநிலை (hibernation - கைபேர்னேசன்) அல்லது பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால உறங்குநிலை எனப்படுவது. ஓர் உயிரினம் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாத காலங்களில் தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு நீண்ட கால உறக்கத்தில் வாழ்வதனைக் குறிக்கும். அப்போது வளர்சிதைமாற்றங்கள் (அனுசேபம் - metabolism) குறைவடைந்தும் உடல்வெப்பநிலை, சுவாசவீதம், இதயத்துடிப்பு ஆகியன குறைவடைந்தும் காணப்படும்.
இவ்வகை விலங்குகள் குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்பு நீண்ட உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தியை அளிக்கும். இந்த உறங்குநிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில் நிகழலாம் இது இனத்தைப் பொறுத்தது.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் குடிமனைகள் அருகாமையில் புகுந்து "தொந்தரவு" கொடுத்த கரடிகள் அவதானிப்புக்காகத் தயார்படுத்தப்பட்டன. இவற்றில் வெப்பநிலை, தசையின் செயற்பாடு, இதயத்துடிப்பு என்பவற்றை அளக்க ரேடியோ அலைபரப்பி பதிக்கப்பட்டது. கரடிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க செயற்கையான வதிவிடம் உருவாக்கப்பட்டது. இங்கே அகச்சிவப்புக் கமராக்கள், ஒட்சிசன்- கரியமிலவாயு உணரிகள், அசைவு உணரிகள் என்பன வைக்கப்பட்டன.
குளிர்காலத்தின் போது, கரடிகள் நாளொன்றுக்கு சாராசரியாக ஒருதடவை உறக்கத்தில் இருந்து விழித்து, தம்மைச் சுத்தப்படுத்தி, வைக்கோற் படுக்கையைச் சரிசெய்துகொண்டன. உறக்கத்தின் போது குறட்டை விடுவதும் அவதானிக்கப்பட்டது. அவற்றின் வெப்பநிலை 300 செல்சியசால் குறைந்தது, ஆனால் அவற்றின் ஒட்சிசன் தேவைப்பாடு, காபனீரொட்சைட் உருவாக்கம் ஆகியன வளர்சிதைமாற்றம் 25% ஆல் குறைந்துள்ளதை அறிந்துகொள்ள உதவியது.
ஆச்சரியமிக்க அவதானிப்புகளில் ஒன்றாக கரடிகளின் இதயத்துடிப்பு விளங்கியது. உறங்குநிலையின் போது கரடிகள் ஆழ்ந்த உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் மேற்கொள்கின்றன, அப்படி நிகழும்போது அவற்றின் இதயம் முற்றிலும் நின்று விடுகின்றது, 10, 15, 20 செக்கன்களுக்கு எந்தவித இதயத்துடிப்பும் நிகழவில்லை என இந்த ஆய்வு முன்னெடுத்து நடத்திய பிரையன் பார்னசு தெரிவித்தார்.
அவை மூச்சை ஒருநிமிடத்துக்கு விடாமல் அடக்கி வைத்துக் கொள்கின்றன. அதன் பின்னர் சுவாசிக்கத் தொடங்கும் போது மீண்டும் இதயம் வேலை செய்யத்தொடங்குகின்றது. வேறொரு ஆச்சரியம், உறங்குநிலையில் இருந்து எழும்பி அவற்றின் வெப்பநிலை சீராக 38 செல்சியசுக்குத் திரும்பியபின்னரும் அவற்றின் வளர்சிமாற்ற வீதம் குறைவாகவே, சாதாரண வளர்சிமாற்ற வீதத்தில் இருந்து அரைவாசியிலும் குறைவானதாகவே, நான்கு வாரங்களாகக் காணப்பட்டது.
இக்கரடிகளின் உடல் ஆரோக்கியம் எவ்விதத்திலும் குறையவில்லை தசைகள் நலிவடையவில்லை. குறைவான வளர்சிமாற்ற வீதத்திலும் தங்களது வழமையான செயற்பாடுகளைச் செய்கின்றன, கரடிகளின் இந்த இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்த முனையலாம் என்று பேராசிரியர் பார்னசு முன்மொழிந்தார்.
எம் உடலில் வளர்சிதைமாற்றத்தின் தேவை குறையும்படி செய்ய இயலுமானால் அது பெரியதொரு வரப்பிரசாதம் ஆகும் சில நோய்களால் உடலில் ஒட்சிசனின் தேவையை நிறைவு செய்ய இயலாமல் உள்ளது. இந்த இரகசியத்தை மனிதன் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்படுத்தினால், அத்தகைய நோய்களான மாரடைப்போ அல்லது மூளைக் குருதிக் குழாய் அடைப்போ அல்லது பெரிய காயமோ ஏற்பட்டால் மூளைக்குத் தேவைப்படும் ஒட்சிசனின் அளவை ஈடுசெய்யப் பயன்படுத்தலாம்.
Re: கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆராய்ச்சியின் முடிவு.
த இரகசியத்தை மனிதன் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்படுத்தினால், அத்தகைய நோய்களான மாரடைப்போ அல்லது மூளைக் குருதிக் குழாய் அடைப்போ அல்லது பெரிய காயமோ ஏற்பட்டால் மூளைக்குத் தேவைப்படும் ஒட்சிசனின் அளவை ஈடுசெய்யப் பயன்படுத்தலாம்.
##* :”@: :!+:
##* :”@: :!+:
Similar topics
» கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆராய்ச்சியின் முடிவு
» காருக்குள் மலசலகூடம்: ஆராய்ச்சியின் புதுமை
» மருத்துவத்தில் இறை சக்தி
» மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..! _
» சித்த மருத்துவத்தில் அல்சர்
» காருக்குள் மலசலகூடம்: ஆராய்ச்சியின் புதுமை
» மருத்துவத்தில் இறை சக்தி
» மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..! _
» சித்த மருத்துவத்தில் அல்சர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|