சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

இராணுவபலம், அரசியல் அதிகாரம் நாட்டின் இறைமையை பாதுகாத்தது  Khan11

இராணுவபலம், அரசியல் அதிகாரம் நாட்டின் இறைமையை பாதுகாத்தது

Go down

இராணுவபலம், அரசியல் அதிகாரம் நாட்டின் இறைமையை பாதுகாத்தது  Empty இராணுவபலம், அரசியல் அதிகாரம் நாட்டின் இறைமையை பாதுகாத்தது

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 3:43

இராணுவபலம், அரசியல் அதிகாரம் நாட்டின் இறைமையை பாதுகாத்தது
‘த இக்கொனமிக் டைம்ஸ்’ சஞ்சிகை இலங்கைக்கு பாராட்டு
மகேஸ்வரன் பிரசாத்
இராணுவ பலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஏககாலத்தில் பயன்படுத்தி இலங்கை தன்னுடைய இறைமையை பாதுகாத்து பொருளாதார ரீதியில் இன்று வளர்ச்சியடைந்துவருவது பாராட்டுக்குரிய சாதனை என்று ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

21வது நூற்றாண்டில் முதற்தடவையாக இலங்கை இராணுவம் உலகில் மிகவும் படுபயங்கரமான எல்.ரி.ரி.ஈ. போராளிகளை தோற்கடிக்கும் சாதனையைப் புரிந்ததை ஒரு சிறந்த அடித்தளமாக வைத்து அந்நாட்டின் பொருளாதாரம் இன்று 8 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று அந்த சஞ்சிகை மேலும் தெரிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை செலவிட்டு இந்த ஆக்கபூர்வமான யுத்தத்தில் வெற்றிகண்டிருப்பதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராளை மேற்கோள்காட்டி இச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் இந்த சாதனைக்கு எதிர்மாறாக ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க அரசாங்கம் ஏறத்தாழ ஒரு ரில்லியன் டொலர்களை செலவிட்டும் இன்னும் வெற்றிபெற முடியாத நிலையில் இருந்து வருகிறது என்று சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்தால் நாடு வலுவிழந்துவிடும் என்ற எண்ணத்தோடு எல்.ரி.ரி.ஈ. யினர் யுத்த தந்திரங்களை கையாண்டு கொழும்பில் மத்திய வங்கிக் கட்டடம், சர்வதேச விமான நிலையம், ஹோட்டல்கள் ஆகியவற்றின் மீது பெரும் சேதமிழைக்கும் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களை மேற்கொண்டு இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை அழித்துவிட்டது என்றும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இத்தகைய அழிவுகள் மூலம் வருடாந்த தேசிய பொருளாதாரம் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்த போதிலும் காலப்போக்கில் யுத்தம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் நடைபெற்ற காரணத்தினால் தேசிய பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சியடைந்தது என்று இந்த சஞ்சிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் அதிகாரத்தில் வீற்றிருந்த அரசாங்கங்கள், அதிக பணச்செலவு ஏற்படும், அரசியல் ரீதியில் பிரச்சினைகள் எழும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை சீர்குலைந்துவிடும் போன்ற காரணங்களினால் எல்.ரி.ரி.ஈ.யினை இராணுவ ரீதியில் தோற்கடிக்கத் தயங்கின. என்றாலும், இந்த அரசாங்கம் இத்தகைய அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ.யினை அடக்குவதில் வெற்றிகண்டது என்றும் சஞ்சிகை பாராட்டியுள்ளது.

இன்று யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியடையும் சாதகமான சமிக்ஞைகள் தெட்டத்தெளிவாகத் தென்படுகின்றன. நாட்டைவிட்டு வெளியேறிய கல்விமான்கள் மீண்டும் நாடு திரும்புகிறார்கள். பணவீக்க விகிதம் ஒற்றையிலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையின்மையின் விகிதாசாரம் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது. போஷாக்கின்மை 35 சதவீதத்திலிருந்து 13.5 சதவீதமாகவும், வறுமை நிலை 15.2 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது. இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து ஒரு பாராட்டுக்குரிய சாதனையென்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 56 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இது 2014இல் 98 பில்லியன் டொலர்களாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளிநாட்டு உல்லாசப் பயணத்துறை அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருடத்திற்கு 600 மில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொடுக்கிறது. அதனால்தான் இலங்கையை ஆசிய நாடுகளில் ஒரு விந்தைக்குரிய தேசமென்று பாராட்டுகிறார்கள் என்றும் ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கடந்த 30 ஆண்டு காலமாக எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறாதபோதிலும், யுத்தம் முடிவடைந்து இரண்டாண்டு காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் வேகமாகத் துளிர்விட ஆரம்பித்துள்ளன.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிவடைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னரே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்ததாக அறிகின்றோம். வடக்கு கிழக்கின் மீள்நிர்மாண நடவடிக்கைகளு க்கு அடுத்த 3 ஆண்டு காலத்தில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டில் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சி 14 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்றும் ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ பாராட்டியுள்ளது.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மனித வாழ்வில் இயற்கையின் இறைமையை நிலைநிறுத்திய நிகழ்வு
» அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என தீர்மானம்
» யாழ். எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைப்பு தமிழர்களின் இறைமையை அழிக்கும் செயல்: சம்பந்தன் _
» தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை
» எகிப்து பிரதமருக்கு மேலும் அதிகாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum