Latest topics
» பல்சுவை - 5by rammalar Today at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு
3 posters
Page 1 of 1
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு
ஊழல் எதிர்ப்பு மக்கள் போராட்டமாக மாறியிருப்பதால் அரசுக்கு நெருக்கடி
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க கிளம்பிய அன்னா ஹசாரேயை, அதிகாலையில் பொலிசார் அவர் தங்கியிருந்த இடம் தேடிப் போய் கைது செய்தனர்.
அது மட்டுமல்லாது, ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கல்மாடி, ராஜாவுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கேட்டு அனைத்து தரப்பு மக்களும், அரசின் செயல் நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை கண்டு நடுநடுங்கிப்போயுள்ள அரசு, அடுத்த நடவடிக்கை எடுப்பதில் திணறி வருகிறது.
நேற்று முன்தினம் அதிகாலை 7 மணியளவில் டில்லி பொலிசின் உயர் அதிகாரி ஒருவர், ஹசாரே தங்கியிருக்கும் வீட்டுக் கதவை தட்டினார். ஹசாரேயிடம், தங்களது திட்டம் என்ன என்று கேட்டார். நான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவிற்கு உண்ணாவிரதம் இருக்க கிளம்புகிறேன் என்று கூறினார்.
அங்கு தடையுத்தரவு உள்ளது என்று பொலிஸ் சொல்ல, அதை மீறப் போவதாகவும் ஹசாரே கூற, உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடு செய்த மைதானத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹசாரே கைது செய்யப்படுவதற்கு முன் அவரது வீட்டின்முன்பாக ஏராளமானோர் கூடியிருந்தனர்; ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஹசாரேயை மிகுந்த பாதுகாப்புடன் கைது செய்து வானில் ஏற்றிச் சென்றனர். அவருடன் தங்கியிருந்த, மகசேசே விருது பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். இவர்கள், டில்லியில் உள்ள சிவில் லைன்ஸ் ஆபீசர்ஸ் மெஸ்சில் தங்க வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், ராஜ்காட் பகுதியில் மற்றொரு முக்கிய உறுப்பினர் கிரண் பேடியும் கைது செய்யப்பட்டார். அதேபோல், மூத்த உறுப்பினர் சாந்தி பூஷனும் கைது செய்யப்பட்டார். சி. ஆர். பி. சிங் பிரிவு 161 மற்றும் 107 ஆகியவற்றின் கீழ், இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் மாலை, கிரண் பேடியும், சாந்தி பூஷனும் திடீரென விடுவிக்கப்பட்டனர். பொலிசாரிடம் ஊரடங்கு சட்டத் தடைப் பிரிவில் கைது செய்திருக்கின்றனரா என்று விளக்கம் கேட்டு, அதற்குரிய ஆதாரம் கேட்டதால் கிரண் பேடியை பொலிசார் விடுவித்தனர் என்று கூறப்பட்டது.
சாந்தி பூஷன் மீது தடை உத்தரவு மீறல் குற்றச்சாட்டு இல்லை என்று விடுவித்தனர். ஹசாரே கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் திரள ஆரம்பித்தனர். நேரம் ஆக ஆக பதற்றம் அதிகரித்தது. மழையை பொருட்படுத்தாமல் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளத் தொடங்கினர். ஊடகங்களும் குவிய ஆரம்பிக்கவே, பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளதால் இதை பார்த்து மத்திய அரசு நடுநடுங்கி போயுள்ளது. பா. ஜ., இடதுசாரிகள், சமாஜ்வாடி கட்சி ஆகிய எல்லா எதிர்க் கட்சிகளும், அன்னா ஹசாரே கைதை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதால் அதன் நடவடிக்கைகள் முடங்கின. அவசர கால நிலைமை இது என்று அவர்கள் அரசை குறை கூறினர்.
நேற்று முன்தினம் பதற்றமான சூழ்நிலையில் ஆபீசர்ஸ் மெஸ்சிற்கு நீதிபதிகள் சென்றனர். அங்கு ஹசாரேயிடம் உறுதிமொழி கேட்கப்பட்டது. 144 தடையுத்தரவை மீற மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து, கையொப்பம் இடும்படி நீதிபதிகள் கேட்டனர். அதற்கு ஹசாரே உறுதியுடன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால் வேறு வழியின்றி ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அன்னா ஹசாரே குழுவினர், ரஜவ்ரி கார்டன் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து பின்னர் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை எண் 4ல் ஹசாரேயும், சிறை எண் 1ல் அரவிந்த் கெஜ்ரிவாலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி ராஜா, கனிமொழி, கல்மாடி உள்ளிட்டோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். அதே சிறையில் ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, மும்பை, நாக்பூர், கவுகாத்தி, ஜம்மு, புவனேஸ்வர், பாட்னா, புதுச்சேரி உட்பட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.
டில்லியில் மட்டும் 1,400 பேர் போராட்டங்களில் கைது செய்யப்பட்டனர்.
அன்னா ஹசாரே விவகாரத்தில், நேற்று முன்தினம் இரவு பரபரப்புத் திருப்பங்கள் ஏற்பட்டன. திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஹசாரேவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், இரவு உணவு வழங்கப்பட்டதாகவும், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும், தகவல்கள் வெளியாயின. இதனால், திகார் சிறைக்கு வெளியில், நேற்று முன்தினம் இரவு ஆயிரக் கணக்கான மக்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஹசாரேயை வரவேற்பதற்காகக் காத்திருந்தனர்.
இதற்கிடையில் போராட்டங்கள் வலுக்கவே, ஹசாரேயை விடுவிக்க அரசு உத்தரவிட்டது. இருப்பினும், சிறையை விட்டு வர ஹசாரே மறுத்தார். தான் வெளியே வரவேண்டுமானால் திரும்பவும், உண்ணாவிரதம் இருக்க நிபந்தனையற்ற அனுமதியை அரசு அளிக்க வேண்டும், என ஹசாரே தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க கிளம்பிய அன்னா ஹசாரேயை, அதிகாலையில் பொலிசார் அவர் தங்கியிருந்த இடம் தேடிப் போய் கைது செய்தனர்.
அது மட்டுமல்லாது, ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கல்மாடி, ராஜாவுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கேட்டு அனைத்து தரப்பு மக்களும், அரசின் செயல் நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை கண்டு நடுநடுங்கிப்போயுள்ள அரசு, அடுத்த நடவடிக்கை எடுப்பதில் திணறி வருகிறது.
நேற்று முன்தினம் அதிகாலை 7 மணியளவில் டில்லி பொலிசின் உயர் அதிகாரி ஒருவர், ஹசாரே தங்கியிருக்கும் வீட்டுக் கதவை தட்டினார். ஹசாரேயிடம், தங்களது திட்டம் என்ன என்று கேட்டார். நான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவிற்கு உண்ணாவிரதம் இருக்க கிளம்புகிறேன் என்று கூறினார்.
அங்கு தடையுத்தரவு உள்ளது என்று பொலிஸ் சொல்ல, அதை மீறப் போவதாகவும் ஹசாரே கூற, உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடு செய்த மைதானத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹசாரே கைது செய்யப்படுவதற்கு முன் அவரது வீட்டின்முன்பாக ஏராளமானோர் கூடியிருந்தனர்; ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஹசாரேயை மிகுந்த பாதுகாப்புடன் கைது செய்து வானில் ஏற்றிச் சென்றனர். அவருடன் தங்கியிருந்த, மகசேசே விருது பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். இவர்கள், டில்லியில் உள்ள சிவில் லைன்ஸ் ஆபீசர்ஸ் மெஸ்சில் தங்க வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், ராஜ்காட் பகுதியில் மற்றொரு முக்கிய உறுப்பினர் கிரண் பேடியும் கைது செய்யப்பட்டார். அதேபோல், மூத்த உறுப்பினர் சாந்தி பூஷனும் கைது செய்யப்பட்டார். சி. ஆர். பி. சிங் பிரிவு 161 மற்றும் 107 ஆகியவற்றின் கீழ், இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் மாலை, கிரண் பேடியும், சாந்தி பூஷனும் திடீரென விடுவிக்கப்பட்டனர். பொலிசாரிடம் ஊரடங்கு சட்டத் தடைப் பிரிவில் கைது செய்திருக்கின்றனரா என்று விளக்கம் கேட்டு, அதற்குரிய ஆதாரம் கேட்டதால் கிரண் பேடியை பொலிசார் விடுவித்தனர் என்று கூறப்பட்டது.
சாந்தி பூஷன் மீது தடை உத்தரவு மீறல் குற்றச்சாட்டு இல்லை என்று விடுவித்தனர். ஹசாரே கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் திரள ஆரம்பித்தனர். நேரம் ஆக ஆக பதற்றம் அதிகரித்தது. மழையை பொருட்படுத்தாமல் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளத் தொடங்கினர். ஊடகங்களும் குவிய ஆரம்பிக்கவே, பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளதால் இதை பார்த்து மத்திய அரசு நடுநடுங்கி போயுள்ளது. பா. ஜ., இடதுசாரிகள், சமாஜ்வாடி கட்சி ஆகிய எல்லா எதிர்க் கட்சிகளும், அன்னா ஹசாரே கைதை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதால் அதன் நடவடிக்கைகள் முடங்கின. அவசர கால நிலைமை இது என்று அவர்கள் அரசை குறை கூறினர்.
நேற்று முன்தினம் பதற்றமான சூழ்நிலையில் ஆபீசர்ஸ் மெஸ்சிற்கு நீதிபதிகள் சென்றனர். அங்கு ஹசாரேயிடம் உறுதிமொழி கேட்கப்பட்டது. 144 தடையுத்தரவை மீற மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து, கையொப்பம் இடும்படி நீதிபதிகள் கேட்டனர். அதற்கு ஹசாரே உறுதியுடன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால் வேறு வழியின்றி ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அன்னா ஹசாரே குழுவினர், ரஜவ்ரி கார்டன் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து பின்னர் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை எண் 4ல் ஹசாரேயும், சிறை எண் 1ல் அரவிந்த் கெஜ்ரிவாலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி ராஜா, கனிமொழி, கல்மாடி உள்ளிட்டோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். அதே சிறையில் ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, மும்பை, நாக்பூர், கவுகாத்தி, ஜம்மு, புவனேஸ்வர், பாட்னா, புதுச்சேரி உட்பட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.
டில்லியில் மட்டும் 1,400 பேர் போராட்டங்களில் கைது செய்யப்பட்டனர்.
அன்னா ஹசாரே விவகாரத்தில், நேற்று முன்தினம் இரவு பரபரப்புத் திருப்பங்கள் ஏற்பட்டன. திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஹசாரேவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், இரவு உணவு வழங்கப்பட்டதாகவும், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும், தகவல்கள் வெளியாயின. இதனால், திகார் சிறைக்கு வெளியில், நேற்று முன்தினம் இரவு ஆயிரக் கணக்கான மக்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஹசாரேயை வரவேற்பதற்காகக் காத்திருந்தனர்.
இதற்கிடையில் போராட்டங்கள் வலுக்கவே, ஹசாரேயை விடுவிக்க அரசு உத்தரவிட்டது. இருப்பினும், சிறையை விட்டு வர ஹசாரே மறுத்தார். தான் வெளியே வரவேண்டுமானால் திரும்பவும், உண்ணாவிரதம் இருக்க நிபந்தனையற்ற அனுமதியை அரசு அளிக்க வேண்டும், என ஹசாரே தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு
kaNdukkaama vittudanum ivaraiyellam...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு
இவனுக்கு குலுக்கோஷை ஏத்தி விடனும் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
» விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு
» விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும் சிறையை விட்டு வெளியேற அன்னா ஹசாரே மறுப்பு
» விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு
» விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும் சிறையை விட்டு வெளியேற அன்னா ஹசாரே மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|