சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு Khan11

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு

3 posters

Go down

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு Empty உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 4:54

ஊழல் எதிர்ப்பு மக்கள் போராட்டமாக மாறியிருப்பதால் அரசுக்கு நெருக்கடி
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க கிளம்பிய அன்னா ஹசாரேயை, அதிகாலையில் பொலிசார் அவர் தங்கியிருந்த இடம் தேடிப் போய் கைது செய்தனர்.

அது மட்டுமல்லாது, ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கல்மாடி, ராஜாவுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கேட்டு அனைத்து தரப்பு மக்களும், அரசின் செயல் நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை கண்டு நடுநடுங்கிப்போயுள்ள அரசு, அடுத்த நடவடிக்கை எடுப்பதில் திணறி வருகிறது.

நேற்று முன்தினம் அதிகாலை 7 மணியளவில் டில்லி பொலிசின் உயர் அதிகாரி ஒருவர், ஹசாரே தங்கியிருக்கும் வீட்டுக் கதவை தட்டினார். ஹசாரேயிடம், தங்களது திட்டம் என்ன என்று கேட்டார். நான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவிற்கு உண்ணாவிரதம் இருக்க கிளம்புகிறேன் என்று கூறினார்.

அங்கு தடையுத்தரவு உள்ளது என்று பொலிஸ் சொல்ல, அதை மீறப் போவதாகவும் ஹசாரே கூற, உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடு செய்த மைதானத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹசாரே கைது செய்யப்படுவதற்கு முன் அவரது வீட்டின்முன்பாக ஏராளமானோர் கூடியிருந்தனர்; ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஹசாரேயை மிகுந்த பாதுகாப்புடன் கைது செய்து வானில் ஏற்றிச் சென்றனர். அவருடன் தங்கியிருந்த, மகசேசே விருது பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். இவர்கள், டில்லியில் உள்ள சிவில் லைன்ஸ் ஆபீசர்ஸ் மெஸ்சில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், ராஜ்காட் பகுதியில் மற்றொரு முக்கிய உறுப்பினர் கிரண் பேடியும் கைது செய்யப்பட்டார். அதேபோல், மூத்த உறுப்பினர் சாந்தி பூஷனும் கைது செய்யப்பட்டார். சி. ஆர். பி. சிங் பிரிவு 161 மற்றும் 107 ஆகியவற்றின் கீழ், இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் மாலை, கிரண் பேடியும், சாந்தி பூஷனும் திடீரென விடுவிக்கப்பட்டனர். பொலிசாரிடம் ஊரடங்கு சட்டத் தடைப் பிரிவில் கைது செய்திருக்கின்றனரா என்று விளக்கம் கேட்டு, அதற்குரிய ஆதாரம் கேட்டதால் கிரண் பேடியை பொலிசார் விடுவித்தனர் என்று கூறப்பட்டது.

சாந்தி பூஷன் மீது தடை உத்தரவு மீறல் குற்றச்சாட்டு இல்லை என்று விடுவித்தனர். ஹசாரே கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் திரள ஆரம்பித்தனர். நேரம் ஆக ஆக பதற்றம் அதிகரித்தது. மழையை பொருட்படுத்தாமல் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளத் தொடங்கினர். ஊடகங்களும் குவிய ஆரம்பிக்கவே, பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளதால் இதை பார்த்து மத்திய அரசு நடுநடுங்கி போயுள்ளது. பா. ஜ., இடதுசாரிகள், சமாஜ்வாடி கட்சி ஆகிய எல்லா எதிர்க் கட்சிகளும், அன்னா ஹசாரே கைதை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதால் அதன் நடவடிக்கைகள் முடங்கின. அவசர கால நிலைமை இது என்று அவர்கள் அரசை குறை கூறினர்.

நேற்று முன்தினம் பதற்றமான சூழ்நிலையில் ஆபீசர்ஸ் மெஸ்சிற்கு நீதிபதிகள் சென்றனர். அங்கு ஹசாரேயிடம் உறுதிமொழி கேட்கப்பட்டது. 144 தடையுத்தரவை மீற மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து, கையொப்பம் இடும்படி நீதிபதிகள் கேட்டனர். அதற்கு ஹசாரே உறுதியுடன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் வேறு வழியின்றி ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அன்னா ஹசாரே குழுவினர், ரஜவ்ரி கார்டன் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து பின்னர் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை எண் 4ல் ஹசாரேயும், சிறை எண் 1ல் அரவிந்த் கெஜ்ரிவாலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி ராஜா, கனிமொழி, கல்மாடி உள்ளிட்டோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். அதே சிறையில் ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, மும்பை, நாக்பூர், கவுகாத்தி, ஜம்மு, புவனேஸ்வர், பாட்னா, புதுச்சேரி உட்பட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

டில்லியில் மட்டும் 1,400 பேர் போராட்டங்களில் கைது செய்யப்பட்டனர்.

அன்னா ஹசாரே விவகாரத்தில், நேற்று முன்தினம் இரவு பரபரப்புத் திருப்பங்கள் ஏற்பட்டன. திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஹசாரேவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், இரவு உணவு வழங்கப்பட்டதாகவும், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும், தகவல்கள் வெளியாயின. இதனால், திகார் சிறைக்கு வெளியில், நேற்று முன்தினம் இரவு ஆயிரக் கணக்கான மக்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஹசாரேயை வரவேற்பதற்காகக் காத்திருந்தனர்.

இதற்கிடையில் போராட்டங்கள் வலுக்கவே, ஹசாரேயை விடுவிக்க அரசு உத்தரவிட்டது. இருப்பினும், சிறையை விட்டு வர ஹசாரே மறுத்தார். தான் வெளியே வரவேண்டுமானால் திரும்பவும், உண்ணாவிரதம் இருக்க நிபந்தனையற்ற அனுமதியை அரசு அளிக்க வேண்டும், என ஹசாரே தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு I1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு Empty Re: உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 10:08

kaNdukkaama vittudanum ivaraiyellam...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு Empty Re: உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு

Post by jasmin Thu 18 Aug 2011 - 11:20

இவனுக்கு குலுக்கோஷை ஏத்தி விடனும் ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு Empty Re: உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சிறையிலிருந்து வெளியேறவும் உணவு அருந்தவும் ஹசாரே மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
» விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு
» விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும் சிறையை விட்டு வெளியேற அன்னா ஹசாரே மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum