சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

யாழில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம்: பூனைக்கு மணிகட்ட அஞ்சுகிறதா தமிழ்த் தலைமைத்துவம்? Khan11

யாழில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம்: பூனைக்கு மணிகட்ட அஞ்சுகிறதா தமிழ்த் தலைமைத்துவம்?

Go down

யாழில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம்: பூனைக்கு மணிகட்ட அஞ்சுகிறதா தமிழ்த் தலைமைத்துவம்? Empty யாழில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம்: பூனைக்கு மணிகட்ட அஞ்சுகிறதா தமிழ்த் தலைமைத்துவம்?

Post by Admin Tue 4 Jan 2011 - 21:06

யாழில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம்: பூனைக்கு மணிகட்ட அஞ்சுகிறதா தமிழ்த் தலைமைத்துவம்? Thief_1
“ஊரில் எங்கோ ஒரு மூலையில் நாய் குரைத்தாலும் குலைநடுங்கிப்போகும். கண்ணிமைக்கப் பயந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே எங்கள் இரவுப்பொழுதுகள் கழிகின்றன”

சுன்னாகத்திலுள்ள குடும்பத் தலைவியொருவரின் வலிசுமந்த இதயத்திலிருந்து வெளிப்பட்ட வேதனைமிக்க வார்த்தைகள் இவை.

மூன்று தசாப்த யுத்தம் - கோரமான கொலைகள் - எண்ணிக்கையில் அடங்காத இழப்புகள் - அழுகை,கதறல்,ஓலம்,ஒப்பாரி என சோகங்களோடும் சோதனைகளோடும் வாழ்ந்த இருள் காலம் தள்ளிப்போய் ஓரடி முன்னால் நகர்ந்திருக்கும் நேரம் இது.

உள்ளங்களில் நிறைந்திருக்கும் ஒவ்வொரு வலிநிறைந்த சுவடுகளுக்கும் காலம் என்றாவது காத்திரமான பதில்சொல்லும் என்ற எதிர்பார்ப்போடு நம் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

யுத்தம் என்பதைத்தவிர தாம் எப்படியெல்லாம் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம் என்பதையும் அவர்கள் மறந்துவிடவில்லை. இந்தக் கசப்பான அனுபவங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கியெறியும் முன்னர் மீண்டும் தொடங்கியிருக்கிறது காடையர்களின் அட்டகாசம்.

மழைக்காலம் தொடங்கியவுடன் அதனைச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் தமது கைவரிசையைக்காட்ட ஆரம்பித்தார்கள். வீடுகளில் கொள்ளை, இரவில் தனியாக நடமாடுவோரிடம் பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் உயிரைக் காவுகொள்ளவும் தயங்கவில்லை.

சங்கானையில் பூசகர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகமும் நேற்றுமுன்தினம் வலிகாமம் வலய உதவிக் கல்விப்பணிப்பாளரின் கொலையும் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எந்தப் பயமுமின்றி கொள்ளையர்கள் நடமாடி வருவதாக யாழ் மக்கள் கூறுகிறார்கள். அவ்வாறெனின் இதனுடன் பலமானதொரு பின்புலத் தொடர்பு இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. அதனைத் தட்டிக்கேட்பதற்கு அல்லது பூனைக்கு மணி கட்டுவதற்கு தமிழ்த் தலைமைகள் அஞ்சுகிறதா எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது.

சந்திக்குச் சந்தி நள்ளிரவில் நடமாடித் திரியும் நிழல்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்க பாதுகாப்புத் தரப்பினருக்கு இவ்வளவு காலம் எடுக்கிறதா?

வடமராட்சியில் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட திருடர்கள் மறுநாள் சுதந்திரமாக நடமாட அனுமதித்தவர் யார்? போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

வண்ணார்பண்ணைப் பகுதிகளில் இரவில் வரும் ஒருசிலர் வீடுகளுக்கு முன்பாக பட்டாசு கொளுத்திவிட்டு ஓடிவிடுவதாகவும் இதனால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆதலால் ஆறுமணியாகியவுடன் சுதந்திரத்துக்கு விடுப்புக் கொடுத்து பயத்துடன் காலம் கழிக்க வேண்டிய நிலைக்கு யாழ் மக்கள் உள்ளாகியுள்ளனர். சுன்னாகத்திலுள்ள இந்தக் குடும்பத் தலைவியின் சோகக் குரல் ஒவ்வொரு வீட்டிலும் ஓலக் குரலாக மாறிவிடக் கூடாது என்பதில் அனைவருமே சிரத்தையுடன் செயற்பட வேண்டும்.

தொடர்ச்சியாக இவ்வாறு கொலை, கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பினருமே ஏற்கவேண்டும்.

சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை மீண்டும் ஏற்படுவது தவிர்க்கப்படுதல் அவசியமாகும்.

ஆதலால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உரிய ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் அரசியல், பண பலம் பார்க்கப்படாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் தைரியத்துடன் இந்தச் சவாலை எதிர்கொள்வதன் மூலம் ஓரளவுக்கேனும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.


-இராமானுஜம் நிர்ஷன்
Admin
Admin
புதுமுகம்

பதிவுகள்:- : 83
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum