Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
3 posters
Page 1 of 1
ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
டெல்லி: லோக்பால் மசோதா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாகவும், அன்னா குழு உருவாக்கிய ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அன்னா ஹசாரே தரப்புடன் பேச்சு நடத்தவுள்ளார்.
பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்த 3 பேர் குழுவை அன்னா ஹசாரே நியமிக்கவுள்ளார். இரு தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தையை துவக்கவுள்ளனர்.
அன்னா தொடர்ந்து இன்று 8ம் நாளாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பிரதமர் அல்லது ராகுல் காந்தியுடன் மட்டும் தான் லோக்பால் மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அன்னா ஹஸாரே நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானை பிரதமர் மத்தியஸ்தராக நியமித்தால் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைவோம் என்று அன்னா இன்று காலை தெரிவித்தார். பேச்சுவார்த்தையை உடனே துவங்க நாங்கள் திறந்த மனதுடன் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோருடன் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். (அன்னா ஹஸாரே, சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், பிரிதிவிராஜ் சவாண் ஆகியோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
இக் கூட்டத்தையடுத்து ஹசாரே மற்றும் அவரது குழுவினருடன் பேச்சு நடத்த விலாஸ்ராவ் தேஷ்முக்கை மத்திய அரசு நியமித்தது.
அதே நேரத்தில் அன்னா தரப்பில் அரவிந்த் கெஜரிவாலுடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தைகளை இன்று காலை ஆரம்பித்தார்.
அன்னாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று சல்மான் கேட்டுக் கொண்டார். அப்போது, பிரதமர் உறுதியளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று கெஜரிவால் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் ஒரு அவசர கடிதம் அனுப்பினார்.
அதில், நாம் எல்லோருமே ஊழலுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து செல்வோம். நானும் ஊழலுக்கு எதிரானவனே. லோக்பால் மசோதா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாக தனிப்பட்ட முறையில் உறுதியளிக்கிறேன்.
இதனால் உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பத் தயாராக உள்ளேன்.
சபாநாயகர் அனுமதிக்கும்பட்சத்தில் உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவும் தயாராக உள்ளேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் பேச்சு நடத்த பிரணாப் முகர்ஜியை நியமித்து பிரதமர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அன்னாவின் சார்பில் 3 பேர் கொண்ட குழு பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தும் என்று அரவிந்த் கெஜரிவால் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் முன் அதை அனைத்துக் கட்சிகளும் கொண்ட நிலைக் குழுவுக்கு அனுப்பி, விவாதித்து, அனுமதி பெற்று பின்னர் சபாநாயகரின் அனுமதி கிடைத்த பின்னரே அதை சமர்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், ஜன் லோக்பால் மசோதாவை இப்போது அரசு ஏற்றுக் கொண்டாலும் நாடாளுமன்ற சட்ட திட்டங்களின்படி அதை நிறைவேற்ற குறைந்தபட்சம் 1 மாத காலமாவது ஆகும்.
இதை அன்னா ஒப்புக் கொண்டால் அவரது உண்ணாவிரதம் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
இதையடுத்து மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அன்னா ஹசாரே தரப்புடன் பேச்சு நடத்தவுள்ளார்.
பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்த 3 பேர் குழுவை அன்னா ஹசாரே நியமிக்கவுள்ளார். இரு தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தையை துவக்கவுள்ளனர்.
அன்னா தொடர்ந்து இன்று 8ம் நாளாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பிரதமர் அல்லது ராகுல் காந்தியுடன் மட்டும் தான் லோக்பால் மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அன்னா ஹஸாரே நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானை பிரதமர் மத்தியஸ்தராக நியமித்தால் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைவோம் என்று அன்னா இன்று காலை தெரிவித்தார். பேச்சுவார்த்தையை உடனே துவங்க நாங்கள் திறந்த மனதுடன் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோருடன் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். (அன்னா ஹஸாரே, சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், பிரிதிவிராஜ் சவாண் ஆகியோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
இக் கூட்டத்தையடுத்து ஹசாரே மற்றும் அவரது குழுவினருடன் பேச்சு நடத்த விலாஸ்ராவ் தேஷ்முக்கை மத்திய அரசு நியமித்தது.
அதே நேரத்தில் அன்னா தரப்பில் அரவிந்த் கெஜரிவாலுடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தைகளை இன்று காலை ஆரம்பித்தார்.
அன்னாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று சல்மான் கேட்டுக் கொண்டார். அப்போது, பிரதமர் உறுதியளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று கெஜரிவால் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் ஒரு அவசர கடிதம் அனுப்பினார்.
அதில், நாம் எல்லோருமே ஊழலுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து செல்வோம். நானும் ஊழலுக்கு எதிரானவனே. லோக்பால் மசோதா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாக தனிப்பட்ட முறையில் உறுதியளிக்கிறேன்.
இதனால் உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பத் தயாராக உள்ளேன்.
சபாநாயகர் அனுமதிக்கும்பட்சத்தில் உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவும் தயாராக உள்ளேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் பேச்சு நடத்த பிரணாப் முகர்ஜியை நியமித்து பிரதமர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அன்னாவின் சார்பில் 3 பேர் கொண்ட குழு பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தும் என்று அரவிந்த் கெஜரிவால் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் முன் அதை அனைத்துக் கட்சிகளும் கொண்ட நிலைக் குழுவுக்கு அனுப்பி, விவாதித்து, அனுமதி பெற்று பின்னர் சபாநாயகரின் அனுமதி கிடைத்த பின்னரே அதை சமர்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், ஜன் லோக்பால் மசோதாவை இப்போது அரசு ஏற்றுக் கொண்டாலும் நாடாளுமன்ற சட்ட திட்டங்களின்படி அதை நிறைவேற்ற குறைந்தபட்சம் 1 மாத காலமாவது ஆகும்.
இதை அன்னா ஒப்புக் கொண்டால் அவரது உண்ணாவிரதம் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
இது அன்னா கசாரேக்கு கிடைத்த வெற்றி அல்ல கையாளாகாத அரசின் தோல்வி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
நீங்கள் கூறுவதும் சரிதான் ஆனால் இப்போது இந்தியா மட்டுமின்றி அமெரிகாவிலும் அன்னாவுக்கு ஆதவரு அதிகரித்து விட்டது {))jasmin wrote:இது அன்னா கசாரேக்கு கிடைத்த வெற்றி அல்ல கையாளாகாத அரசின் தோல்வி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
» லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல்
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி
» லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல்
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|