சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் : ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து Khan11

தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் : ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து

Go down

தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் : ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து Empty தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் : ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 10:53

சென்னை, ஆக.28

கருணை மனு நிராகரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி
கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை 9-ந் தேதி தூக்கில் போட
முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய
சிறையில் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 3 பேரும் தனி
செல்களில் அடைக்கப்பட்டு, ஜெயிலர்களின் நேரடி கண்காணிப்பில்
வைக்கப்பட்டுள்ளனர்.

சிறை வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவாயில் அருகே ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே,
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு பெரும்பாலான அரசியல் கட்சிகள்
கோரிக்கை விடுத்துள்ளன. மனித சங்கிலி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட
போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முருகன்,
சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு
வேலூர் மத்திய சிறை சூப்பிரண்டு மூலமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு
கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தூக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாக குறைக்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் 3 பேர் சார்பிலும்
நாளை மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்காக
பிரபல வக்கீல்கள் ராம்ஜெத் மலானி, ஹரீஷ் சால்வே ஆகியோர் நாளை சென்னை
வருகிறார்கள். அவர்கள் இதர வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துவதுடன், மனுவுக்கு
இறுதி வடிவம் கொடுக்க உள்ளனர்.

இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

தூக்கு
தண்டனையை எதிர்நோக்கி உள்ள 3 பேரும், தங்கள் உயிரை காப்பாற்ற
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைதான் பெரிதும் நம்பி உள்ளனர். ஜனாதிபதியால் கருணை
மனு நிராகரிக்கப்பட்ட பிறகு கூட, தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக
குறைப்பதற்கு அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு, மாநில அரசுகளுக்கு
அதிகாரம் அளிக்கிறது.

எனவே, இந்த அதிகாரத்தை
பயன்படுத்தி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தூக்கு தண்டனையை குறைப்பதற்கு
அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்து, அதை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி
வைக்கலாம்.

ஜனாதிபதியால் கருணை மனு
நிராகரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்ததற்கு
முன் உதாரணங்கள் உள்ளன. கேரளாவைச் சேர்ந்த பாலன் என்பவர் வழக்கில், அவரது
கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, அவரது தூக்கு தண்டனையை கேரள அரசு ஆயுள்
தண்டனையாக குறைத்தது. அப்போது, அம்மாநில சட்ட மந்திரியாக வி.ஆர்.கிருஷ்ண
அய்யர் இருந்தார்.

ஆனால், 3 பேரும் தாக்கல் செய்த
கோரிக்கை மனு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அறிகுறியும்
தெரியாததால், தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
திங்கட்கிழமை மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம்.

தூக்கு
தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதுடன், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க
வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கை. 3 பேரின் கருணை மனுக்களை நிராகரிக்க
ஜனாதிபதி நீண்ட காலம் எடுத்துக்கொண்டிருப்பதை காரணமாக வைத்து, இந்த
கோரிக்கையை விடுப்போம்.

பொதுவாக, கருணை மனுக்களை
நிராகரிப்பதற்கு ஜனாதிபதி 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்தால்,
ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு, தூக்கு தண்டனையை குறைத்ததற்கு
முன் உதாரணங்கள் உள்ளன.

உதாரணமாக, கடந்த 1965-ம்
ஆண்டு, அப்போதைய பஞ்சாப் முதல்-மந்திரியை கொலை செய்த வழக்கில் தூக்கு
தண்டனை விதிக்கப்பட்ட தயா சிங்கின் கருணை மனு, 2 1/2 ஆண்டு காலதாமதத்துக்கு
பிறகு நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் வழக்கில்,
ஜனாதிபதி உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து, தூக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாக குறைத்தது.

மேலும், நீண்ட தாமதத்துக்கு
பிறகு கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஒருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற
சமீபத்தில் கவுகாத்தி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

எனவே,
சென்னை ஐகோர்ட்டுக்கும் இந்த வழக்கில் தண்டனையை குறைக்க அதிகாரம் உள்ளது. 3
பேரும் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்து விட்டால், அவர்களின் தூக்கு
தண்டனையை சிறை அதிகாரிகள் நிறைவேற்ற முடியாது. ஏனென்றால், வழக்கு
நிலுவையில் இருக்கும்போது, தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று சுப்ரீம்
கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது.

இவ்வாறு வக்கீல் புகழேந்தி கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜீவ் கொலை கைதிகளின் தூக்கு தண்டனையை நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது: வக்கீல் புகழேந்தி பேட்டி
» மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம்
» தமிழகத்தில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன் தாயார் வேண்டுகோள்
» சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யவில்லை
» அரசு ஊழியர் மீதான லஞ்ச புகார் குறித்த தமிழக அரசாணையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum