Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
4 posters
Page 1 of 1
திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
சென்னை: பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். திமுகவின் பல வெற்றிகளுக்கும் பெண்கள்தான் காரணம். தோல்விக்கும் பெண்கள்தான் காரணம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புது வண்ணாரப்பேட்டையில் நடந்தது. விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிப் பேசுகையில்,
தேர்தல் வந்தால்தான் சில அரசியல் கட்சிகளுக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் ஞாபகம் வரும். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின மக்களின் நலனுக்காகப் பாடுபடக் கூடியது திமுக.
தன் எண்ணங்களைச் செயல்படுத்த நபிகள் நாயகம் முனைந்தபோது எத்தனையோ சோதனைகளை சந்தித்தார்.
அதைப்போல திமுகவும் பல்வேறு சோதனைகள் சந்தித்துத்தான் வளர்ந்தது. அதனால் சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் திமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். திமுகவின் பல வெற்றிகளுக்கும் பெண்கள்தான் காரணம். தோல்விக்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.
வறுமை என்ற சாத்தானை விரட்டுவோம்-விஜயகாந்த்:
அதே போல தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த்,
நான் சின்ன வயதில் இருந்தே நோன்புக் கஞ்சி குடித்து வருகிறேன். மதுரை பள்ளி வாசலில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி மிகவும் ருசியாக இருக்கும். நோன்பு திறப்பு பற்றி எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. பின்னர் குரானில் படித்து தெரிந்து கொண்டேன்.
யார் தப்பு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இதுபற்றி குரானிலும், பைபிளிலும், பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது. தப்பு செய்தால் தெய்வம் கண்ணைக் குத்தும், அரசன் அன்றே கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். எந்த தெய்வமும் கண்ணை குத்தாது. பத்மநாபபுரம் கோவில் பாதாள அறையை திறந்தால் தீய அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
எனக்கு தெய்வ பக்தி உண்டு. நான் சாமி கும்பிடுவேன். ஆனால் சிலர், சாமி கிடையாது என்று சொல்லிவிட்டு திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவார்கள். நான் அப்படி அல்ல. எனக்கு சாதி, மதம் கிடையாது. என் வீட்டு பூஜை அறையில் எல்லா சாமிகளின் படங்களும் இருக்கும். சாதி, மத பேதங்களை ஏற்படுத்தி மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் கோவிலை குறிக்கும் டெம்பிள் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து, மசூதியை குறிக்கும் மாஸ்க் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து. சர்ச் என்ற வார்தைக்கு 6 எழுத்து. இதேபோல், குரான், பைபிள், கீதா ஆகிய வார்த்தைகளுக்கு 5 எழுத்து. இப்படி மொழிகளும், வார்த்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றன. அப்படி இருக்கும்போது மனிதர்களுக்குள் ஒற்றுமை இல்லாமலா போய்விடும்?
நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்? எல்லாரும் சகோதரத்துவமாக இருப்போம். ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டைவிட்டு விரட்டுவோம், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று ரம்ஜான் நாளில் சபதம் ஏற்போம். இனிமேல் தே.மு.தி.க. அலுவலகத்தில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.
ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புது வண்ணாரப்பேட்டையில் நடந்தது. விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிப் பேசுகையில்,
தேர்தல் வந்தால்தான் சில அரசியல் கட்சிகளுக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் ஞாபகம் வரும். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின மக்களின் நலனுக்காகப் பாடுபடக் கூடியது திமுக.
தன் எண்ணங்களைச் செயல்படுத்த நபிகள் நாயகம் முனைந்தபோது எத்தனையோ சோதனைகளை சந்தித்தார்.
அதைப்போல திமுகவும் பல்வேறு சோதனைகள் சந்தித்துத்தான் வளர்ந்தது. அதனால் சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் திமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். திமுகவின் பல வெற்றிகளுக்கும் பெண்கள்தான் காரணம். தோல்விக்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.
வறுமை என்ற சாத்தானை விரட்டுவோம்-விஜயகாந்த்:
அதே போல தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த்,
நான் சின்ன வயதில் இருந்தே நோன்புக் கஞ்சி குடித்து வருகிறேன். மதுரை பள்ளி வாசலில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி மிகவும் ருசியாக இருக்கும். நோன்பு திறப்பு பற்றி எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. பின்னர் குரானில் படித்து தெரிந்து கொண்டேன்.
யார் தப்பு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இதுபற்றி குரானிலும், பைபிளிலும், பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது. தப்பு செய்தால் தெய்வம் கண்ணைக் குத்தும், அரசன் அன்றே கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். எந்த தெய்வமும் கண்ணை குத்தாது. பத்மநாபபுரம் கோவில் பாதாள அறையை திறந்தால் தீய அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
எனக்கு தெய்வ பக்தி உண்டு. நான் சாமி கும்பிடுவேன். ஆனால் சிலர், சாமி கிடையாது என்று சொல்லிவிட்டு திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவார்கள். நான் அப்படி அல்ல. எனக்கு சாதி, மதம் கிடையாது. என் வீட்டு பூஜை அறையில் எல்லா சாமிகளின் படங்களும் இருக்கும். சாதி, மத பேதங்களை ஏற்படுத்தி மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் கோவிலை குறிக்கும் டெம்பிள் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து, மசூதியை குறிக்கும் மாஸ்க் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து. சர்ச் என்ற வார்தைக்கு 6 எழுத்து. இதேபோல், குரான், பைபிள், கீதா ஆகிய வார்த்தைகளுக்கு 5 எழுத்து. இப்படி மொழிகளும், வார்த்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றன. அப்படி இருக்கும்போது மனிதர்களுக்குள் ஒற்றுமை இல்லாமலா போய்விடும்?
நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்? எல்லாரும் சகோதரத்துவமாக இருப்போம். ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டைவிட்டு விரட்டுவோம், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று ரம்ஜான் நாளில் சபதம் ஏற்போம். இனிமேல் தே.மு.தி.க. அலுவலகத்தில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
நல்ல யோசனை செய்யுங்கள் கெப்டன் ஒற்றுமையுடனிருந்தால் உலகையாளலாம் நன்றி பகிர்வுக்கு
Re: திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
ஆமாம் இப்பொது அவர் கட்சி தோற்று இருப்பது ஒரு பெண்ணிடம்தானே அதைத்தான் சொல்கிறார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்- ஸ்டாலின்
நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்? எல்லாரும் சகோதரத்துவமாக இருப்போம். ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டைவிட்டு விரட்டுவோம், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று ரம்ஜான் நாளில் சபதம் ஏற்போம். இனிமேல் தே.மு.தி.க. அலுவலகத்தில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.
:!.: ங்கற்றம் .[/color]
:!.: ங்கற்றம் .[/color]
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தி.மு.க.,வின் தோல்விக்கு யார் காரணம்? போட்டு உடைத்தார் ஸ்டாலின்
» 9 வங்கிக் கணக்கு; ஆனால் வைத்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல்: திமுகவின் அழகான வேட்பாளரின் பின்னணி
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» கனிமொழியைச் சிறையில் சந்தித்தார் ஸ்டாலின்
» திருநங்கையர் தினத்தையொட்டி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
» 9 வங்கிக் கணக்கு; ஆனால் வைத்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல்: திமுகவின் அழகான வேட்பாளரின் பின்னணி
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» கனிமொழியைச் சிறையில் சந்தித்தார் ஸ்டாலின்
» திருநங்கையர் தினத்தையொட்டி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|