Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!
+3
Atchaya
kalainilaa
பர்ஹாத் பாறூக்
7 posters
Page 1 of 1
அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!
இவர் சிரிய தேசத்தைச் சேர்ந்த பாடகர். பெயர் இப்றாஹிம் காஷ_ஷ்.
சிரியாவின் ஹமா பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பொது நிகழ்வுகள், திருமண வைபவங்களில் பாடுகின்ற மரபு ரீதியான பாடகர்.
சிரியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியில் இவரும் ஒரு பிரபல
நட்சத்திரம். மிக எளிமையான வசனங்களைக் கொண்டு அவரே எழுதிப்பாடும் அவரது
பாடலின் ஒவ்வொரு வசனத்தையும் அவர் பாட அந்த வசனங்களை மீளப் பாடுகின்றனர்
லட்சக் கணக்காகத் திரண்டிருக்கும் மக்கள்.
அந்தப் பாடல் சிரியாவின் தலைவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறது.
அடக்கு முறைக்கும் அசுரத்தாக்குதலுக்கும் அரச படையினரது துப்பாக்கிக்
குண்டுகளுக்கும் எதிராக வலிமை மிக்க ஆயுதமாக அவர் பயன்படுத்தியது அவரது
குரலை மாத்திரமே!
ஹமா நகர மத்தியில் அவர் கடைசியாகப் பாடியது இவ்வருடம் ஜூலை முதலாம் திகதி.
இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடி நின்று அரச
எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்திய போது அவர் பாடினார்.
“பஷர் நீர் வெளியேற வேண்டிய தருணம் இது...
பஷர், மாஹிரி. ரமி... ஆகியோர் கொள்ளையர்கள்...
அவர்கள் எனது உறவினர்களைக் கொள்ளை கொண்டவர்கள்...
பஷர்... உம் குற்றங்கள் மன்னிப்புக்குரியலையல்ல...
பஷர்... நீர் அமெரிக்காவின் கையாள்... நீர் ஒரு பொய்யன்...
பஷர்... நீ ஒரு தேசத் துரோகி...
அவமானப்படுவதை விட இறப்பது மேல்...
சுதந்திரம் வாசலில் வந்து காத்து நிற்கிறது...
மக்கள் உமது ராஜாங்கத்தை வீழ்த்தத் துடிக்கிறார்கள்...
பஷர்... நீர் வெளியேற வேண்டிய தருணம் இது....!”
இப்றாஹிம் காஷ_ஷ் இன்று உயிருடன் இல்லை.
இந்த ஆர்ப்பாட்டம் நடந்து சரியாக
நான்காவது தினம் அஸ்ஸா ஆற்றங்கரையில் இப்றாஹிம் கஷ_ஷின் உடல்
கண்டெடுக்கப்பட்டது. அவரது குரல் வளை அறுக்கப்பட்டு உடல் துப்பாக்கிச்
சன்னங்களால் துளைத்தெடுக்கப்பட்டிருந்தது.
[url=http://1.bp.blogspot.com/-8RdoOo2JAWc/TledaQM_jeI/AAAAAAAAAfE/xJuCDH0ETBw/s1600/Ibrahim Qasouse.jpg][/url]
மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும்
மக்கள் எழுச்சியின் வரிசையில் சிரியாவில் ஏற்பட்ட எழுச்சியுடன்
சம்பந்தப்பட்டவர்களுக்கு பஷர் அல் அஸாத்தின் அரசு தெளிவான ஒரு எச்சரிக்கையை
இப்றாஹிம் காஷ_ஷின் கொலை மூலம் விடுத்துள்ளதாக ஆய்வாளர்கள்
கருதுகிறார்கள்.
மக்கள் அடக்குமுறைக்கெதிராகவும் அராஜகங்களுக்கெதிராகவும் குரல் கொடுக்கும்
பாடகர் ஒருவர் கொலை செய்யப்படுவது இதுவே முதற் தடவையல்ல. சிலியில் 1973ல்
ஒகஸ்டோ பினோச்சே இராணுவப் புரட்சி மூலம் அரசைக் கைப்பற்றிய பின்னர் கைது
செய்யப்பட்டவர்களில் ஒருவர் விக்டர் ஜாரா என்ற பிரபல பாடகர்.
ஒரு மகத்தான மக்கள் கலைஞனான அவருக்கு
நேர்ந்த கதி பரிதாபத்துக்குரியது. அவரை அடித்து எலும்புளை உடைத்துச்
சித்திரவதை செய்து உடலை சந்தியாகோ தெருவில் வீசி எறிந்தது அரசு. அவரது
உடலில் 44 துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன.
சலீம் அல் லோஸி லெபனானியப் பத்திரிகையாளர். இவர் சிரிய அரசுக்கெதிராக
80களில் எழுதி வந்தவர். லண்டனிலிருந்து வெளிவரும் அல் ஹவாதத் பத்திரிகையின்
வெளியீட்டாளரான இவர் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கையில் விலங்கிடப்பட்ட நிலையில்
கொலையாகியிருந்த இவரது முகத்தில் அசிற் ஊற்றப்பட்டிருந்தது. இந்தக்
கொலையின் பின்னணியில் சிரிய அரசே செயற்பட்டது என்று ஊடகங்கள் அடித்துப்
பேசின. இன்றும் அவர் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்.
இப்றாஹிம் கஷ_ஷின் மரணத்தைத் தொடர்ந்து அரச
எதிர்ப்பு மேலும் வலுவடைந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோரின்
பதாதைகளில் “ஹாபிஸ் (பஷரின் தந்தை) எனது பாட்டனாரை 1982ல் கொலை செய்தார்.
பஷர் எங்கள் தந்தையை (இப்றாஹிம் காஷ_ஷ்) 2011ல் கொலை செய்தார்” என்று
எழுதப்பட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.
31 வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையாரின் அரசினால் கொல்லப்பட்ட சலீம்
லோஸியை மக்கள் இன்றும் மறக்கவில்லை என்பதை இந்தப் பதாதைகள் மூலம் பஷர்
அறிந்து கொண்டிருப்பார். ஆக அதிகாரத்தில் இருக்கும் போது யார் அநியாயக்
கொலைக்கு ஆளானாலும் மக்கள் அதனை இலகுவில் மறந்த விடுவதில்லை என்பதையும்
கூடவே அவர் புரிந்து கொண்டிருப்பார்.
எல்லாக் கணக்குகளையும் கூட்டிக் கழிக்கும்
ஒரு தினம் வரும் போது அராஜகம் நிகழ்த்தியவர்களுக்காக இரங்க ஒரு
நாய்க்குட்டி கூட முன்வருவதில்லை.
இந்த நிலைக்கு ஆளான அநேகம் பேரின் அந்திம கால வாழ்க்கை தெருக்குப்பைக்குள்ளால் ஓடும் சுண்டெலியின் நிலையை விட மோசமானது.
இவ்வாறானவர்கள் அநேகரின் சரித்திரம் கண்முன்னே இருந்த போதிலும் ஆட்சியாளர்கள் ஏனோ அதிலிருந்து கற்றுக் கொள்வதில்லை.
எழுச்சிப் பாடல் ஒலிக்கும் ஒரு தொண்டையை
அறுப்பதானது தனது தொண்டையையேத் தானே அறுத்துக் கொள்வதற்கு ஒரு லட்சம்
கத்திகளைச் செய்து கொள்வதற்கு ஒப்பானது!
https://www.youtube.com/watch?v=3mG3V2fBYbw&feature=related
இந்த இணைப்பைச் சொடுக்கினால் இப்றாஹிம்
காஷ_ஷ் பாடுவதையும் அவரைத் தொடர்ந்து மக்கள் குரல் கொடுப்பதையும் நீங்கள்
கண்டும் கேட்டும் ரசிக்கலாம்.
ASHROFF SHIHABDEEN வலைப்பக்கத்தில் இருந்து | |
http://ashroffshihabdeen.blogspot.com/2011/08/blog-post_26.html |
Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!
எப்படி எல்லாம் ஆட்டம் போட்ட சாதம்,மரணம் ஒரு பாடம் தானே .
இப்போது இருக்கும் மன்னர்களுக்கும் ,மற்றவர்களுக்கும் .
இப்போது இருக்கும் மன்னர்களுக்கும் ,மற்றவர்களுக்கும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!
சிறந்த பகிர்வு. நன்றி உறவே...எழுச்சிப் பாடல் ஒலிக்கும் ஒரு தொண்டையை
அறுப்பதானது தனது தொண்டையையேத் தானே அறுத்துக் கொள்வதற்கு ஒரு லட்சம்
கத்திகளைச் செய்து கொள்வதற்கு ஒப்பானது!
Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!
அறியத்தமைக்கு நன்றி பர்ஹாத் :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!
அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!
இதுதான் இஸ்லாமிய நாடுகளை ஆழும் சர்வாதிகளின் இன்றைய அராஜகம் .....தன்னைக் கொல்ல வந்து பத்ருப் போரில் கைதியான கைதிகளை ரசூல் சல் அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்று இந்த கயவர்கள் பார்க்க வேணடாமா ..அழியட்டும் இவர்களின் அட்டகாசங்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|