சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

 இஸ்லாமியத் திருமணம்-நிறைவு பகுதி Khan11

இஸ்லாமியத் திருமணம்-நிறைவு பகுதி

Go down

 இஸ்லாமியத் திருமணம்-நிறைவு பகுதி Empty இஸ்லாமியத் திருமணம்-நிறைவு பகுதி

Post by gud boy Mon 12 Sep 2011 - 17:00

“கடமைகள்”

கணவனின் கடமைகள்


மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள்,

“நீர் உண்ணும்போது அவளுக்கு உணவளிப்பதும், நீர் அணியும்போது அவளையும் அணியச்செய்வதும்,அவளது முகத்தில் அறையாதி ருப்பதும், அவளை (தீய சொற்களால்) இழிவு படுத்தாதிருப்பதும், வீட்டில் தவிர (வெளியிடங்களில்) அவளைக் கண்டிக்காதிருப்பதும் (கணவனின் கடமை) என்று நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பாளர்: முஆவியா(ரலி)ஆதாரம்: அபூதாவூத் இப்னுமாஜா, அஹ்மத்.


ஒரு இறை நம்பிக்கையுடைய ஆண், இறை நம்பிக்கையுடைய தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால், அவன் விரும்பக் கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என்பது நபிமொழி.அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

தவறு செய்யும் மனைவியை வீட்டிலன்றி (வெளியிடங்களில் பலரறிய) கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது.அறிவிப்பாளர்: முஆவியத்துல் கஷீரி(ரலி)ஆதாரம்: அபூதாவுத், இப்னுமாஜா.

மனைவியின் கடமைகள்


அல்லாஹ் கூறுகின்றான்.
நல்லொழுக்கமுள்ள மனைவியர் (தன் கணவர்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தன் கணவர்) இல்லாத சமயத்தில், அவர்களின் (செல்வம், உடமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள் தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள். (அல்குர்ஆன் : (4:34)

ஒரு பெண் (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டால், நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம் என்று அவளிடம் (மறுமையில்) கூறப்படும்.அறிவிப்பாளர்: அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப்.ஆதாரம்: தப்ரானி அஹ்மத்.


ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சுவர்க்கத்தில் நுழைவாள்.
அறிவிப்பாளர்: உம்முஸலமா (ரலி) ஆதாரம்: திர்மிதி.

மணமக்கள் கேட்கவேண்டிய துஆ


ரப்பனா வஜ்அல்லா முஸ்லிமைனி ல(க்)க வமின் துர்ரியத்தினா உம்மதன் முஸ்லிமதன் ல(க்)க இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம் (2:12)

பொருள்:-
எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக. எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக. எங்களை (கருணையுடன் நோக்கி, எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக. நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கிறாய்.


எச்சரிக்கை (தடுக்கப்பட்டவை)


ஒரு கணவன் தன் மனைவியிடம் பின் துவாத்தில் உடல்உறவு கொள்வதையும், மாதவிடாயின் போது உடல்உறவு கொள்வதையும் இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது. இவ்விரண்டும் (ஹராம்) தடை செய்யப்பட்டுள்ளது.
‘நபிகள் நாயகம்(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.
உங்கள் மனைவியரின் பின் துவாரத்தில் உறவு கொள்ளாதீர்கள்”பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவனாவான்’ அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), ஆதாரம்: அஹ்மத்.


கடமையான குளிப்பு


தம்பதியர் உடல் உறவு கொண்டால் பர்ளான குளிப்பு இருவர் மீதும் கடமையாகும்.கடமையான குளிப்பை நிறைவேற்றுவதாக நிய்யத்து வைத்து உடல் முழுவதும் நனையும் வகையில் குளிப்பது இருவரது கட்டாயக் கடமையாகும். ( குளிப்பு பற்றிய மேல்விபரங்களுக்கு பார்க்க: தொழுகைப்பாடத்தில் தூய்மை)
இதில் அலட்சியம் காட்டுவோர் கடும் தண்டனைக்க ஆளாவர் என்பதை பல்வேறு நபிமொழிகள் எச்சரிக்கின்றன. (மேல் விபரங்களும் ஹதீஸ், ஃபிக்ஹீ நூல்களைக் காண்க.)

உடலுறவின் போது ஓதும் துஆ

ஒரு கணவன் தம் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் போது ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவதும் இறைவனிடம் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடுவதும் சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
உங்களில் யாரேனும் தன் மனைவியிடம் உடல்உறவு கொள்ளும்போது,
‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா’
இறைவன் திருநாமத்தால் உடலுறவு கொள்கிறேன். இறiவா! ஷைத்தானின் தீங்குகளை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக! நீ எங்களுக்கு வழங்கும்; சந்ததிகளையும் ஷைத்தானைவிட்டும் பாதுகாப்பாயாக என ஓதுவாராக. இவ்விதப் பிரார்த்தனைக்குப் பிறகு குழந்தை தரித்துப் பிறந்தால் அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தானின் தீங்குகள் அணுகாது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி,முஸ்லிம்.


பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய பெருநெறியைப் பின்பற்றி இறை மறை ஒளியில் நபி வழியில நின்று சம்பிரதாயச் சடங்குகளுக்கு சாவு மணி அடித்து கண்மூடித்தனமாக பழக்க வழக்கங்களை மண்மூடச் செய்து தூய இஸ்லாமிய வாழ்வு வாழ்வோம். அதற்கு வல்ல ரஹ்மான் (தவ்ஃபீக்) நல்லருள் புரிவானாக.
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத் தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனதன் வகினா அதாபந் நார்.
இறைவா! இம்மையிலும் நல்வாழ்வை நல்குவாயாக! மறுமையிலும் நற்பேறுகளை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காப்பாயாக. ஆமீன்.

பித்அத்கள்”

திருமணத்தின் போது கூடாத பித்அத்கள் - அனாச்சாரங்கள்!

இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் ஹராம்களும், கேளிக்கைகளும், அனாச்சாரங்களும் எண்ணிலடங்கா. அவற்றில் சில:-

1. கைக்கூலி என்னும் பெயரில் வரதட்சணை வாங்குதல்.
2. மணமக்களுக்கு மருதாணி போடுதல், அதற்காக திருமண இரவில் ஒரு விழாவே எடுத்தல், குலவை விடுதல், மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடுதல், விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் ஆண், பெண் (ஹிஜாபு) திரை இன்றி கேலி செய்தல்.
3. கருகமணி கட்டுதல், ஆரத்தி எடுத்தல், மணமகனின் காலை கழுவிவிடல், காலில் ஸ்பிரே அடித்தல், ஆடு, கோழி போன்றவற்றை தலை சுற்றுதல்.
4. ஊர்வலம், கார், குதிரை, யானை போன்றவற்றில் உலா வருதல்.
5. மணமக்களை கல்யாணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள் கட்டி அணைத்து வாழ்த்துதல்.
6. மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் ஷிர்க்காண (இணை வைக்கக்கூடிய) பாடல்களைப் பாடுதல்.
7. மணமக்களை மலர்களால் அலங்கரித்தல், மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.
8. நல்லநாள், நல்ல நேரம், சகுனம், நஹசு, ஜோதிடம் பார்த்தல், (இது ஹராமாக்கப்பட்டுள்ளது)
9. முகச்சவரம் என்ற பெயரில் தாடியை வழத்தல்.
10. மணமகனுக்கு தங்க மாலை, தங்க மோதிரம், நகை அணிவித்தல். (இது ஹராம் தடுக்கப்பட்டது)
11. திருமணத்தின் போது ஆடல் பாடல், பாட்டுக் கச்சேரி நடத்துதல், மேள வாத்தியம், மேடை அலங்காரம், வீடியோ ஆகிய அனாச்சாரங்களுக்காக பணத்தை வீண்வி;ரயம் செய்தல்.
12. பெண் வீட்டாரின் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரால் பணத்தையும், பொருட்களையும் கறத்தல்.
13. நிகாஹ் முடிந்த பிறகு ‘யாகுத்பா’ பைத்து ஓதுதல்.
14. திருமணத்தன்று விருந்து, மண்டபச் செலவுகளுக்காக பெண் வீட்டாரை நிர்பந்திப்பது.
15. மணமக்களை தர்ஹாக்களுக்கு அழைத்துச் செல்வது.

மேற்குறிப்பிட்ட அனைத்து சம்பிரதாயங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவை அனைத்தும் (பித் அத்கள்) அனாச்சாரங்கள், தவிர்க்கப்பட வேண்டியவைகள், மாற்று மதக்கலாச்சாரங்கள்.

இவைகளை திருமணத்தில் நடைமுறைப்படுத்துவதால் நபி வழிகளிலிருந்து நாம் விலகி வழிகேட்டின் பால் செலவதாக ஆகும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை அனைத்து வழிகேடுகளிலிருந்தும் காப்பானாக!

"இப்படி வாழ்த்தலாமா?"

திருமண வாழ்த்து :

திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் ‘நபிமார்களைப்போல் வாழ்க’என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு “ஆமீன்” கூறிவருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர்.
ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வஃபாரி}h வயூஸுஃப் வ ஸுலைஹா -
இவர்களைப்போல் வாழ்க என்ற வாழ்த்தின் பின்னணியைக் கவனியுங்கள்.

1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க !
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக்கனியை உண்டதற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3. அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப்பட்டார்கள்.
4. பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக்கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழவேண்டுமா ?

2. நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க !

( நூஹு(அலை) , லூத் (அலை) ஆகிய )இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைதூதர்களால்)அவ்வருவரையும் இறைவனி(ன் தண்டனையி)லிருந்து காப்பாற்ற முடியவில்லை.
இருவரும் நரகிற் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன்: 66: 10)

இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது.

இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரகவாசி யாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிறகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரக வாசியைப் போன்று வாழ்க என வாழ்த்தலாமா ?

3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க !
இப்றாஹீம் நபி – ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை)குழந்தைப்பேறே இல்லாதிருந்தது.
எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர் வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி ) பிள்ளை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார். என அல்- குர்ஆன் : 11: 71, 72. கூறுகிறது .

வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத் தெரிந்தும் இவ்வாறுவாழ்த்தலாமா? எந்த தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்?
ஆசையோடு எதிர்பர்க்கும் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா ?

4. நபி யூஸுஃப் – ஸுலைஹா போல் வாழ்க !
5. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப்பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை..
இந்த ஸுலைஹா யார் ?
6. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன்வந்தது எப்படி?
7. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாகசித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
8. திருமறையே இவளை நடத்தை கெட்டவள் என வர்ணிக்கிறது. நடத்தை கெட்டவள் நபியின் மனைவியாக முடியுமா?
9. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா ?
10. திருமணம் நடந்ததாக ஆதாரரமே இல்லாத ஒருவளை – ஒரு தம்பதியை – குறிப்பிட்டு வாழ்த்தலாமா ? இது முறையா ?
11. பல தீமைகளை தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு
அதுவும் ஒரு நபிக்கு மனைவிக்கவேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
12. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப்பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற அவசியம் என்ன?
13. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
14. அஹ்ஸனுல் கஸஸ் அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது
விட்டிருப்பான்?

இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்சிகரமான மணவிழாவில் புதுத்தம்பதியரை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்ளவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ளவிரும்புபவரும் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

பாவமென்று தெரிந்தும் வீம்புக்காக இவற்றில் அடம்பிடிப்பதும் பெரும் பாவமல்லவா ? இவையெல்லாம் சரிதானா என்று இன்னும் சிந்தித்துப் பார்க்காமலிருப்பது பத்தாம் பசலித்தனமல்லவா ?

தவறான ஃபத்வாக்கள்.

ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ மர்ர்க்கத்தைப்பற்றி எதையும் துணிந்து எழுதுவது இன்று நாகரீகமாகிவிட்டது. தேசிய அளவில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஷாபானு, இம்ரானா
போன்றவர்களின் செய்திகளை சமுதாயம் நன்கறியும்.

தமிழகத்திலிருந்து நெடுஙகாலமாக தொடர்ந்து வெளிவரும் மாத இதழ ஒன்றில் “ இஸ்லாமிய சட்ட விளக்கம்” என்ற பெயரில் யூஸுஃப் நபி , ஸுலைஹாவை மணமுடித்திருந்தார்கள் என ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர், அதை நியாயப்படுத்த இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட மக்களால் அறியப்படாத ” மஆரிபுல் குர்ஆன்” என்னும் உருது கிதாபை ஆதாரமாககக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதற்கு வலுவூட்டும் ஆதாரம் ஏதையேனும் அதில் குறிப்பிட்டுள்ளார்களா என்றால் எதுவுமே இல்லை. குர்ஆன் , ஹதீஸுடைய விளக்கங்களோ அதனை உறுதிப்படுத்தும் சான்றுகளோ குறிப்பிடப் படவில்லை. சில விரிவுரையாளர்கள் இப்படி எழுதியுள்ளார்கள் என மொட்டையாக மேற்கோள் காட்டியுள்ளார்கள்.

இறுதியில் யூஸுஃப் ஸுலைஹா போல் வாழ்த்தலாம் என பத்வாவும் கொடுத்துள்ளார்கள்.

இதனை வரலாற்று ரீதியாக சற்று ஆராய்ந்தாலே இதற்கு துளியும் ஆதாரம் இல்லை என எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இறை தூதர் நபி யூஸுஃப் (அலை) அவர்கள் வாழ்ந்த காலமோ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னராகும். அவர்கள் ஸுலைஹாவை மணமுடித்தார்கள் என்பதை குர்ஆனோ ஹதீஸோ எதையும்
குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட நூலோ கல் வெட்டோ இல்லை. இமாம்கள் ஏரேனும் இதுபற்றி எழுதியுள்ளார்களா என ஆராய்ந்த போது அப்படியும் இல்லை.இறைவன் ஸூரா யூஸுஃபில் கூறுகிறான் :

நபியே! இந்த குர்ஆனை ( நாம் வஹீ மூலம்) அறிவித்திருப்பதின் வாயிலாக மிக்க அழகான வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் அறியாதவராக இருந்தீர்.
( அல்-குர்ஆன் 12 :13)

அல்லாஹ்வின் தூதரே வஹீ வருவதற்கு முன்னர் இந்தச்செய்தியைப் பற்றி எதுவும் தெரிந்திருக் கவில்லை என்று குர்ஆன் கூறும்போது, மற்றவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி எப்படித் தெரிந்திருக்க முடியும். ?
நமக்கு அந்த துஆவில் வரும் நபி மார்களைப்பற்றித் தான் தெரியுமே தவிர அவர்களின் மனைவியருடன் நடத்திய இல்லறவாழ்வைப்பற்றி எதுவும் தெரியாது. அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ இவர்களின் இல்லற வாழ்வு பற்றி எதுவும் அறிவிக்காத போது நாம் எவ்வாறு துணிந்து இது பற்றிக் கூறுவது ? இவையெல்லாம் புனித நபிமார்களைப் பற்றிப் புனையப்படும் கற்பனைகளல்லவா ? பொய்களல்லவா?பாவங்களல்லவா?

ஓவ்வொரு நபிமார்களின் வாழ்வில் பின்பற்றப்படவேண்டிய எத்தனையோ அம்சங்களும், பாடங்களும் உள்ளன. அவற்றை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டுமே தவிர குர்ஆனிலோ நபி மொழியிலோ கூறப்படாத எதையும் நாமாக் கற்பனை செய்து, ஆதாரமற்ற செய்திகளை வைத்து மர்க்கமாக்குவதும் முன்மாதிரியாகக் கொள்வதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவே இல்லை.

எனவே நபி (ஸல்) அவர்கள் வாழ்த்தியவாறே நாமும் வாழ்த்தவேண்டும்.
“திருமண வாழ்த்து” என்ற பெயரில் இவர்கள் வாழ்த்துவது நபி வழிக்கு மாற்றமான துஆ வாகும்

பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய பெருநெறியைப் பின்பற்றி இறை மறை ஒளியில் நபி வழியில நின்று சம்பிரதாயச் சடங்குகளுக்கு சாவு மணி அடித்து கண்மூடித்தனமாக பழக்க வழக்கங்களை மண்மூடச் செய்து தூய இஸ்லாமிய வாழ்வு வாழ்வோம். அதற்கு வல்ல ரஹ்மான் (தவ்ஃபீக்) நல்லருள் புரிவானாக.
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத் தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனதன் வகினா அதாபந் நார்.
இறைவா! இம்மையிலும் நல்வாழ்வை நல்குவாயாக! மறுமையிலும் நற்பேறுகளை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காப்பாயாக. ஆமீன்.

Courtesy: Dr. Ahmad Baqavi PhD.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum