Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
அந்த ஊர் வீதி
+9
lafeer
யாதுமானவள்
ADNAN
இப்ஹாம்
*சம்ஸ்
அப்துல்லாஹ்
நிலா
kalainilaa
செய்தாலி
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அந்த ஊர் வீதி
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்தியிலுள்ள மரம்
மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்
சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்
வீதியின் ஆரம்பப் பகுதியில்
சட்டென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி
வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திரும்பி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்
வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்
எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்
மும்மரமாக எதைப் பற்றியோ
வாய்ச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்
எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு
அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சைக்காரன்
வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
Re: அந்த ஊர் வீதி
வீதியின் விதியை சொன்ன அழகு அருமை .
உள்ளதை உள்ளபடி உண்மையை உவமையோடு சொல்லும் கவிதை!
தோழரே !நடத்துங்கள் வீதியோட்டத்தை.
உள்ளதை உள்ளபடி உண்மையை உவமையோடு சொல்லும் கவிதை!
தோழரே !நடத்துங்கள் வீதியோட்டத்தை.
Last edited by kalainilaa on Thu 15 Sep 2011 - 19:04; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அந்த ஊர் வீதி
சொல் தோரணங்களால் காட்சிப் படுத்தப்பட்ட கவிஞனின் இந்தக் கவிதை வீதியும் உயிருடைத்து எனச் சத்தியப் பிரமாணம் செய்கிறதோ... ://:-: ://:-: ://:-:
என்னருமை செய்தாலி அழகியலுடன் வடிக்கப்பட்ட அற்புதக் கவிதை...
என்னருமை செய்தாலி அழகியலுடன் வடிக்கப்பட்ட அற்புதக் கவிதை...
Re: அந்த ஊர் வீதி
@. @. @.அப்துல்லாஹ் wrote:சொல் தோரணங்களால் காட்சிப் படுத்தப்பட்ட கவிஞனின் இந்தக் கவிதை வீதியும் உயிருடைத்து எனச் சத்தியப் பிரமாணம் செய்கிறதோ... ://:-: ://:-: ://:-:
என்னருமை செய்தாலி அழகியலுடன் வடிக்கப்பட்ட அற்புதக் கவிதை...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அந்த ஊர் வீதி
நிதர்சன வரிகள் அனைத்தும் அருமை
வீதியின் விதியை சொன்ன அழகு அருமை வாழ்த்துகள்
வீதியின் விதியை சொன்ன அழகு அருமை வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அந்த ஊர் வீதி
அறுமையான கவிதை ஆனால்
(வீதிக்கும் விதிக்கும் நிறைய தொடர்பு உண்டு
நிறைய மனிதர்களின் விதி தீர்மானிக்கப்படுவது
வீதிகளில்தான்)
நன்றி உங்கள் கவிதைக்கு செய்தாலி
(வீதிக்கும் விதிக்கும் நிறைய தொடர்பு உண்டு
நிறைய மனிதர்களின் விதி தீர்மானிக்கப்படுவது
வீதிகளில்தான்)
நன்றி உங்கள் கவிதைக்கு செய்தாலி
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: அந்த ஊர் வீதி
செய்தாலி wrote:
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
"அருமை .... சொல்லாமல் சென்றுவிட்ட கோபத்தால் முகம் சிவந்த நீல மேகத்தைப்பார்த்து.... நக்கலான புன்னகையா ...கோபத்திலும் அழகான மேகத்தைப் ரசித்த புன்னகையா... எப்படி இப்படி எழுதுகிறீர்கள் ... வாவ்! ! தங்கள் கற்பனையே வித்தியாசமானதுதான்.
மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்
"குபுகேன்று சிரித்துவிட்டேன்... கிடைக்காததால் சமாளிக்கும் சாமர்த்தியம்... நாற்காலி கிடைக்காததால் மரியாதை நிமித்தம் நிற்பதாக..... ரொம்பவே நக்கல் உங்களுக்கு... நன்றாக ரசித்தேன் .
சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்
வீதியின் ஆரம்பப் பகுதியில்
சட்டென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி
ஒவ்வொரு தெருவில்லும் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வு இது ...
வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திரும்பி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்
வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்
எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்
மும்மரமாக எதைப் பற்றியோ
வாய்ச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்
எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு
அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சைக்காரன்
வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
அப்படியே வீதியின் நடுவில் நான் நின்று அத்தனை நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டிருப்பது போன்று உணரவைத்து விட்டீர்கள்... சாதாரணமாகப் பார்க்கும்போது சும்மா பார்த்துக்கொண்டு நகர்ந்துவிடுவோம்.. ஆனால் அத்தனை நிகழ்வுகளும் தங்கள் கவிதையில் சுவாரசியமாக கொண்டு செல்கிறீர்கள்... இதோ இக்கவிதையைப் படிக்கும்போது பால்கனி வழியாக வீதியை கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்....
ஆனால் இங்கு வெறும் கார்கள் மட்டுமே போகிறது... கருப்பு மெர்சிடிஸ், வெள்ளை பஜெரோ.... மரூன் ஜிஎம்சி... இப்படி...
கவிதை அழகை ரசித்துக்கொண்டே... நம் நாட்டு வீதிகளை ஏக்கத்துடன் மனக்கண்ணில் பார்க்கிறேன்....
எப்போதும்போல் எழுதும் பொருளின் ஆழத்தை உணர்ந்து.... அப்படியே அதைவிட அழகாகக் கவிதையாக்கும் செய்தாலிக்கு நிகர் செய்தாலியே...
நன்றி... அருமையான கவிதையை இங்கு எம்முடன் பகிர்ந்தமைக்கு! வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் மெருகு கூட்டுவதற்கு!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அந்த ஊர் வீதி
இக்கவிதையின் இட்டபோதே படித்தேன் காரியாலயத்தில் இருந்தபோது பதிலெழுத அவகாசமற்று விட்டுச்சென்றேன்
மிகவும் அருமையான நினைவுகளைத் தொகுத்த வரிகள் வேலைகள் முடித்து விட்டு வீடு வரும் பெருசுகள் எப்ப வீதிக்கடைக்கு செல்லலாம் என்றுதான் காத்திருப்பர் அதையும் நிதர்சனமாக்கி வீதியின் நிகள்வுகளை நிழலாக்கிய கவிதை பாராட்டுகள்
மிகவும் அருமையான நினைவுகளைத் தொகுத்த வரிகள் வேலைகள் முடித்து விட்டு வீடு வரும் பெருசுகள் எப்ப வீதிக்கடைக்கு செல்லலாம் என்றுதான் காத்திருப்பர் அதையும் நிதர்சனமாக்கி வீதியின் நிகள்வுகளை நிழலாக்கிய கவிதை பாராட்டுகள்
Re: அந்த ஊர் வீதி
சூப்பரா எழுதுறீங்க நண்பா? ஒரு கவிதை மூலமா ஒரு தெரு வில் நடக்கும் சம்பவங்களை வ்டித்து விட்டீர்கள்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அந்த ஊர் வீதி
கவிதை மிகவும் ரசனையாகவும் சிறப்பாகவும் உள்ளது வாழ்த்துக்கள் செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்த ஊர் வீதி
kalainilaa wrote:வீதியின் விதியை சொன்ன அழகு அருமை .
உள்ளதை உள்ளபடி உண்மையை உவமையோடு சொல்லும் கவிதை!
தோழரே !நடத்துங்கள் வீதியோட்டத்தை.
மிக்க நன்றி தோழரே
Re: அந்த ஊர் வீதி
நிலா wrote:
தோழி நிலாமதி அவர்களை நெடுநாட்களுக்கு பிறகு உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
சேனையுடன் இணைந்து இருங்கள் தோழி
மிக்க நன்றி
Re: அந்த ஊர் வீதி
அப்துல்லாஹ் wrote:சொல் தோரணங்களால் காட்சிப் படுத்தப்பட்ட கவிஞனின் இந்தக் கவிதை வீதியும் உயிருடைத்து எனச் சத்தியப் பிரமாணம் செய்கிறதோ... ://:-: ://:-: ://:-:
என்னருமை செய்தாலி அழகியலுடன் வடிக்கப்பட்ட அற்புதக் கவிதை...
மிக்க நன்றி ஆசிரியர் பெருந்தொகையே
Re: அந்த ஊர் வீதி
*சம்ஸ் wrote:நிதர்சன வரிகள் அனைத்தும் அருமை
வீதியின் விதியை சொன்ன அழகு அருமை வாழ்த்துகள்
மிக்க நன்றி காதல் கவிஞரே
Re: அந்த ஊர் வீதி
ADNAN wrote:அறுமையான கவிதை ஆனால்
(வீதிக்கும் விதிக்கும் நிறைய தொடர்பு உண்டு
நிறைய மனிதர்களின் விதி தீர்மானிக்கப்படுவது
வீதிகளில்தான்)
நன்றி உங்கள் கவிதைக்கு செய்தாலி
மிக்க நன்றி தோழரே
Re: அந்த ஊர் வீதி
யாதுமானவள் wrote:செய்தாலி wrote:
சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
"அருமை .... சொல்லாமல் சென்றுவிட்ட கோபத்தால் முகம் சிவந்த நீல மேகத்தைப்பார்த்து.... நக்கலான புன்னகையா ...கோபத்திலும் அழகான மேகத்தைப் ரசித்த புன்னகையா... எப்படி இப்படி எழுதுகிறீர்கள் ... வாவ்! ! தங்கள் கற்பனையே வித்தியாசமானதுதான்.
மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்
"குபுகேன்று சிரித்துவிட்டேன்... கிடைக்காததால் சமாளிக்கும் சாமர்த்தியம்... நாற்காலி கிடைக்காததால் மரியாதை நிமித்தம் நிற்பதாக..... ரொம்பவே நக்கல் உங்களுக்கு... நன்றாக ரசித்தேன் .
சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்
வீதியின் ஆரம்பப் பகுதியில்
சட்டென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி
ஒவ்வொரு தெருவில்லும் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வு இது ...
வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திரும்பி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்
வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்
எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்
மும்மரமாக எதைப் பற்றியோ
வாய்ச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்
எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு
அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சைக்காரன்
வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்
ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
அப்படியே வீதியின் நடுவில் நான் நின்று அத்தனை நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டிருப்பது போன்று உணரவைத்து விட்டீர்கள்... சாதாரணமாகப் பார்க்கும்போது சும்மா பார்த்துக்கொண்டு நகர்ந்துவிடுவோம்.. ஆனால் அத்தனை நிகழ்வுகளும் தங்கள் கவிதையில் சுவாரசியமாக கொண்டு செல்கிறீர்கள்... இதோ இக்கவிதையைப் படிக்கும்போது பால்கனி வழியாக வீதியை கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்....
ஆனால் இங்கு வெறும் கார்கள் மட்டுமே போகிறது... கருப்பு மெர்சிடிஸ், வெள்ளை பஜெரோ.... மரூன் ஜிஎம்சி... இப்படி...
கவிதை அழகை ரசித்துக்கொண்டே... நம் நாட்டு வீதிகளை ஏக்கத்துடன் மனக்கண்ணில் பார்க்கிறேன்....
எப்போதும்போல் எழுதும் பொருளின் ஆழத்தை உணர்ந்து.... அப்படியே அதைவிட அழகாகக் கவிதையாக்கும் செய்தாலிக்கு நிகர் செய்தாலியே...
நன்றி... அருமையான கவிதையை இங்கு எம்முடன் பகிர்ந்தமைக்கு! வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் மெருகு கூட்டுவதற்கு!
உங்களின் கருத்தில் மெய்சிலிர்க்கிறேன் தோழி
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி
Re: அந்த ஊர் வீதி
நேசமுடன் ஹாசிம் wrote:இக்கவிதையின் இட்டபோதே படித்தேன் காரியாலயத்தில் இருந்தபோது பதிலெழுத அவகாசமற்று விட்டுச்சென்றேன்
மிகவும் அருமையான நினைவுகளைத் தொகுத்த வரிகள் வேலைகள் முடித்து விட்டு வீடு வரும் பெருசுகள் எப்ப வீதிக்கடைக்கு செல்லலாம் என்றுதான் காத்திருப்பர் அதையும் நிதர்சனமாக்கி வீதியின் நிகள்வுகளை நிழலாக்கிய கவிதை பாராட்டுகள்
மிக்க நன்றி உறவே
Re: அந்த ஊர் வீதி
kiwi boy wrote:சூப்பரா எழுதுறீங்க நண்பா? ஒரு கவிதை மூலமா ஒரு தெரு வில் நடக்கும் சம்பவங்களை வ்டித்து விட்டீர்கள்..
மிக்க நன்றி நண்பா
Re: அந்த ஊர் வீதி
நண்பன் wrote:கவிதை மிகவும் ரசனையாகவும் சிறப்பாகவும் உள்ளது வாழ்த்துக்கள் செய்தாலி
மிக்க நன்றி நண்பன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒரு வீதி நிகழ்வுகள்
» வீதி என்றால்...
» அட்டாளைச்சேனையில் வீதி விபத்து
» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
» வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி
» வீதி என்றால்...
» அட்டாளைச்சேனையில் வீதி விபத்து
» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
» வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|