Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
எம் பாவம் தானென்ன..?
+2
இன்பத் அஹ்மத்
கலைவேந்தன்
6 posters
Page 1 of 1
எம் பாவம் தானென்ன..?
எம் பாவம் தானென்ன...?
உழைத்தால் சோறு உண்டென் றார்கள்
பிழைத்தால் மானமாய்ப் பிழைஎன் றார்கள்
இழைந்தே பொழுதை இழுத்திட முயன்றும்
குழைந்த எம்வயிறு நிறைந்திட வில்லை...!
கெட்டும் பட்டணம் போ என்றார்கள்
கிட்டும் உனது பேறென் றார்கள்...
எட்டும் திசையிலும் ஏகினோம் ஆயினும்
ஒட்டும் வயிற்றுக் குணவிலை எங்கிலும்..!
கலைக்கொரு உயர்நிலை எங்குமேயுண்டு
விலையிலா இசையது உருக்கிடும் என்றனர்..!
நிலையிலா மனிதரைப் பாடுத லததினும்
தலைவனின் புகழைப் பாடினோ மெங்கும்..!
வந்தனர் கேட்டனர் மகிழ்ந்தனர் ஆயினும்
தந்தது என்னவோ பாராட்டொன்றே...
இந்தஉம் மிசைக்கு ஈடிலை என்றனர்..
தந்த புகழுரை உண்டியும் நிறைக்குமோ...?
எங்கள் வறுமை எத்தனை கொடிது
எங்கினும் நோக்கினும் கிடைத்தலும் அரிது..
தங்கச்சிலையாய் செழித்த எம்மக்கள்
அங்கம் கறுத்தே அழகை இழந்தனர்..!
நாமகள் கையதன் நல்லதோர் வீணையாம்
யாமேன் இங்ஙனம் புழுதியில் படிந்தோம்..?
தாழையின் அகந்தை அழித்தவன் பிரமன்
ஏழைஎங்களைக் காத்திட வல்லனோ...?
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: எம் பாவம் தானென்ன..?
உங்கள் கவிதையும் சரி படமும் சரி மிகவும் அருமை ஆனால் இந்தப் படமே ஆயிரம் கவிதை சொல்கிறது சார் வாழ்த்துக்கள் சார் மிகவும் அருமை வறுமை பற்றிய வரிகள்
:!+: :!+:
:!+: :!+:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: எம் பாவம் தானென்ன..?
தங்கச்சிலையாய் செழித்த எம்மக்கள்
அங்கம் கறுத்தே அழகை இழந்தனர்..!
நாமகள் கையதன் நல்லதோர் வீணையாம்
யாமேன் இங்ஙனம் புழுதியில் படிந்தோம்..?
தாழையின் அகந்தை அழித்தவன் பிரமன்
ஏழைஎங்களைக் காத்திட வல்லனோ...?
என்ன ஒரு ஏக்கப்பாடு ...
வேதனையின் உச்சகட்டம்...
படைத்தவன் வந்து தான் காத்திட வேண்டும்...
வேறு வழி... உள்ளம் நிறைந்திட அவனைப் பாடுவோம் உண்டியும் நிறையும்....
கலை அவர்களின் நல்ல கவித்திறனுக்கு இக்கவிதையும் ஒரு எடுத்துக்காட்டு.
Re: எம் பாவம் தானென்ன..?
நெற்றி அடி பொட்டு அடி
சுற்றி வந்து அடி
வ்ரியமைப்பும் கருத்தாழமும் கொண்ட அருமையா உள்ளது... :!+: :!+:
சுற்றி வந்து அடி
வ்ரியமைப்பும் கருத்தாழமும் கொண்ட அருமையா உள்ளது... :!+: :!+:
Re: எம் பாவம் தானென்ன..?
கெட்டும் பட்டணம் போ என்றார்கள்
கிட்டும் உனது பேறென் றார்கள்...
எட்டும் திசையிலும் ஏகினோம் ஆயினும்
ஒட்டும் வயிற்றுக் குணவிலை எங்கிலும்..!
ஏக்கம் நிறைந்த சூழல் வாழ்வைத் தேடும் மனிதர்கள் மத்தியில் நாமும் இருக்கிறோம் நல்ல கவிதை அண்ணா வாழ்த்துகள்
Re: எம் பாவம் தானென்ன..?
அப்துல் றிமாஸ் wrote:உங்கள் கவிதையும் சரி படமும் சரி மிகவும் அருமை ஆனால் இந்தப் படமே ஆயிரம் கவிதை சொல்கிறது சார் வாழ்த்துக்கள் சார் மிகவும் அருமை வறுமை பற்றிய வரிகள்
மிக்க நன்றி றிமாஸ்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: எம் பாவம் தானென்ன..?
அப்துல்லாஹ் wrote:தங்கச்சிலையாய் செழித்த எம்மக்கள்
அங்கம் கறுத்தே அழகை இழந்தனர்..!
நாமகள் கையதன் நல்லதோர் வீணையாம்
யாமேன் இங்ஙனம் புழுதியில் படிந்தோம்..?
தாழையின் அகந்தை அழித்தவன் பிரமன்
ஏழைஎங்களைக் காத்திட வல்லனோ...?
என்ன ஒரு ஏக்கப்பாடு ...
வேதனையின் உச்சகட்டம்...
படைத்தவன் வந்து தான் காத்திட வேண்டும்...
வேறு வழி... உள்ளம் நிறைந்திட அவனைப் பாடுவோம் உண்டியும் நிறையும்....
கலை அவர்களின் நல்ல கவித்திறனுக்கு இக்கவிதையும் ஒரு எடுத்துக்காட்டு.
மிக்க நன்றி நண்பரே... உங்கள் கவித்திறனுக்கு சற்றேனும் உறை போட்டதாய் உள்ளது என்பதில் அகமகிழ்கிறேன்.
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: எம் பாவம் தானென்ன..?
Atchaya wrote:நெற்றி அடி பொட்டு அடி
சுற்றி வந்து அடி
வ்ரியமைப்பும் கருத்தாழமும் கொண்ட அருமையா உள்ளது...
மிக்க நன்றி அட்சயா..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: எம் பாவம் தானென்ன..?
நேசமுடன் ஹாசிம் wrote:கெட்டும் பட்டணம் போ என்றார்கள்
கிட்டும் உனது பேறென் றார்கள்...
எட்டும் திசையிலும் ஏகினோம் ஆயினும்
ஒட்டும் வயிற்றுக் குணவிலை எங்கிலும்..!
ஏக்கம் நிறைந்த சூழல் வாழ்வைத் தேடும் மனிதர்கள் மத்தியில் நாமும் இருக்கிறோம் நல்ல கவிதை அண்ணா வாழ்த்துகள்
மிக்க நன்றி ஹாசிம் தம்பி..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: எம் பாவம் தானென்ன..?
கவிதை சொல்லும் படமும் அதற்கு யிர் கொடுத்த வரிகளும் அருமை அருமை வாழ்த்துக்கள் வேந்தே @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எம் பாவம் தானென்ன..?
நன்றி நண்பன். இந்த படம் மிகப்பெரிய ஓவியர் ரவிவர்மாவின் உயிர்ச்சித்திரம். இப்படத்துக்கு கவிதை எழுத வேண்டுமென்னும் என் தாகம் தீர்த்துக்கொண்டேன்.
இன்னும் மூன்று கவிதைகள் ரவிவர்மாவின் ஓவியத்துக்காக எழுதியுள்ளேன்..!
இன்ஷா அல்லாஹ் அவற்றையும் சேனையில் பதிப்பேன்..!
இன்னும் மூன்று கவிதைகள் ரவிவர்மாவின் ஓவியத்துக்காக எழுதியுள்ளேன்..!
இன்ஷா அல்லாஹ் அவற்றையும் சேனையில் பதிப்பேன்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: எம் பாவம் தானென்ன..?
அப்படியே ஆகட்டும் ரவி வர்மாவின் ஓவியங்கள் அனைத்தும் உயிருள்ளவைகள் வாழ்த்துக்கள் உங்கள் கவிதைகளை இங்கு பகிருங்கள் @. @.கலைவேந்தன் wrote:நன்றி நண்பன். இந்த படம் மிகப்பெரிய ஓவியர் ரவிவர்மாவின் உயிர்ச்சித்திரம். இப்படத்துக்கு கவிதை எழுத வேண்டுமென்னும் என் தாகம் தீர்த்துக்கொண்டேன்.
இன்னும் மூன்று கவிதைகள் ரவிவர்மாவின் ஓவியத்துக்காக எழுதியுள்ளேன்..!
இன்ஷா அல்லாஹ் அவற்றையும் சேனையில் பதிப்பேன்..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிறு பாவம், பெரும் பாவம்
» ஐயோ... பாவம்!
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» பாவம்.
» பாவம் இக்குழந்தை
» ஐயோ... பாவம்!
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» பாவம்.
» பாவம் இக்குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|