Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அதிரடி விலை குறைப்பில் சிறிய மருந்து நிறுவனங்கள்
Page 1 of 1
அதிரடி விலை குறைப்பில் சிறிய மருந்து நிறுவனங்கள்
சிறிய மருந்து நிறுவனங்கள், விலை குறைப்பு, விற்பனையில் சலுகை போன்றவற்றால் பெரிய மருந்து நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்நாட்டு மருந்துகளின் விற்பனை, தற்போது ஆண்டுக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. இதில், நோய் எதிர்ப்பு மருந்துகள், இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவற்றுக்கான நிவாரண மருந்துகளின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. இப்பிரிவில், முன்னேறும் சிறிய நிறுவனங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. இந்நிறுவனங்கள், இத்துறையில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்துள்ளன. மேலும், மருந்து விற்பனையை அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகளையும் வினியோகஸ்தர்களுக்கு வழங்கி வருகின்றன. இத்தகைய செயல்பாடு காரணமாக, ரான்பாக்சி, சிப்லா போன்ற பெரிய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது. நடப்பு காலண்டர் ஆண்டில், சென்ற ஜூலை மாதம் வரையிலான ஏழு மாதங்களில், ரான்பாக்சி நிறுவனத்தின் உள்நாட்டு மருந்து விற்பனை 16 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருந்தது. சிறிய நிறுவனங்களின் போட்டி காரணமாக, இந்த வளர்ச்சி, சென்ற ஆகஸ்ட் மாதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது. இதே போன்று சிப்லா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, கடந்த மூன்று மாதங்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மருந்து துறையில் மிகப் பெரிய அளவில் வர்த்தகத்தை கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்றாக கெடிலா விளங்குகிறது. இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, நடப்பு காலண்டர் ஆண்டில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆறு மாத காலத்தில் 14 சதவீதம் முதல் 25 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி, சென்ற ஜூலை மாதம் 6 சதவீதமாகவும், ஆகஸ்ட் மாதம் 8.6 சதவீதம் என்ற அளவிலும் குறைந்துள்ளது. அதே சமயம், மேன்கைன்டு, மேக்லியாட்ஸ் போன்ற முன்னேறும் மருந்து நிறுவனங்களின் விற்பனை, அளவின் அடிப்படையில் அதிகரித்துள்ளது என பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் ஆய்வாளர்களான எஸ்.அருண் மற்றும் அரவிந்த் போத்ரா ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், இது குறித்து பெரும்பாலான ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரிய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி தற்காலிகமானது என்று தெரிவித்தனர். பிராண்டுகளின் மதிப்பு மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் பிரிவிலான வளர்ச்சியின் மூலம், சிறிய நிறுவனங்களின் போட்டியை பெரிய நிறுவனங்கள் சுலபமாக சமாளிக்கும் என்றும் அவர்கள் கூறினர். மருந்து கடைக்காரர் ஒருவர் கூறும்போது, மருந்து விற்பனையில் சலுகைகளை அளிப்பதால், அளவின் அடிப்படையில் விற்பனை உயரும் என்றபோதிலும், சிறிய நிறுவனங்களின் லாபவரம்பு குறைந்து விடும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதனால், சந்தையை கலக்கி வரும் சிறிய நிறுவனங்களின் தாக்கம், குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்றும், நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மருந்துகளின் மொத்த விற்பனையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் பங்களிப்பு 80 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, இவ்வகை மருந்துகளை தயாரிக்கும் பெரிய மருந்து நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகும். மேலும், இப்பிரிவிலான வளர்ச்சி, நீண்ட கால அடிப்படையிலானது என்பதால், பெரிய நிறுவனங்கள், தற்போதைய பாதிப்பை சுலபமாக எதிர் கொண்டு சமாளித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருந்து துறையின் விற்பனை வளர்ச்சி சென்ற ஜூலை மாதம் 8.9 சதவீதமாக இருந்தது. இது, சென்ற ஆகஸ்ட் மாதம் 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. மழைக்காலம் நீடிப்பதால், நோய் எதிர்ப்பு மற்றும் தீவிர நோய்களுக்கான மருந்துகளின் விற்பனை உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நடப்பு 2011-12ம் நிதியாண்டில், மருந்து துறையின் விற்பனை வளர்ச்சி 15 சதவீதம் என்ற அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar topics
» கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள்
» செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
» 8 மடங்கு எகிறுதே மருந்து விலை...
» மத்திய அரசின் அதிரடி-ரூ. 2.84 லட்சம் புற்று நோய் மருந்து இனி ரூ.88,00க்கே!
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா
» செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
» 8 மடங்கு எகிறுதே மருந்து விலை...
» மத்திய அரசின் அதிரடி-ரூ. 2.84 லட்சம் புற்று நோய் மருந்து இனி ரூ.88,00க்கே!
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|