Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
நான் எனும் நீ
4 posters
Page 1 of 1
நான் எனும் நீ
இலங்கை அரசியலில் ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்த எங்களின் தேசியத்தலைவர்
இலங்கை முஸ்லீம்களின் ஒரே குரலாக இருந்த எம் பெருந்தலைவர்
இன்று உள்ள முஸ்லீம் தலைவர்களின் எடுத்துக்காட்டாக இருந்த எங்களின்
நேசத்துக்குரிய தலைவர்
மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் எண்ணத்தில் உருவான கவிதைதான்
இது 1996 ல் அவர் எழுதினார்.
நான் எனும் நீ
இவ்வுலகில் இனி ஒரு கனமும் வாழமுடியாது!
ஒன்றுமே இல்லாத என்னை
நான் ஆகக் காட்டிய உன்னை
இனிவாழ விடவே மாட்டேன்!
என்னை மரணம் அணைக்கு முன்னே
உன்னை உயிரோடு இருக்க விடக்கூடாது!
எனக்கோ ஒரேயொரு வாழ்க்கை
அதில் உன்னை எப்போதும்
திருப்திப்படுத்த ஓடியதால்
என்னை வருத்தியது மட்டுமன்றி
எதுவுமே எச்சமில்லை !
என்றோ ஒரு நாள்
உன் உதிரிப்பாகங்களான
என் இளமையும் என் அழகும்
என் உற்சாகமும் என் அறிவும்
என் ஆற்றல்களும் என் நினைவுகளும்
என்னைவிட்டு ஓடும் போது
நீ ரு நொடிதானும்
என்னருகே இருக்கப்போவதில்லை !
என்னையும் என்னைச் சுற்றியுள்ளோரையும்
ஏமாற்றிக் கொண்டிருக்கும்
நான் எனும் நீ
எந்த வேலையும் எனை விட்டோடுதற்காய்
உன்னிப்பாய்
ஒரு சிறுத்தை போல் பதுங்குவது
என்னிரு கன்களுக்கும்
இப்போது தெரிகிறது!
என்னோடு இருந்து
என்னையே ஏமாற்றும்
உன்னை இனி ஒரு கணமும்
வாழ விடக்கூடாது!
உனக்குச் சதா
தீனி போட்டுக்கொண்டிருந்ததால்
எனக்கு ஏற்பட்ட
இழப்புக்களையும் இன்னல்களையும்
நீ அறிவாயோ?
நான் எனும் நீதான் என்னை
அவனிடத்தில் இருந்தும் பிரித்தாய்!
அவன் என்னோடு எப்போதும்
இருந்து கொண்டிருக்கையில்
அவனைத்தேடி என்னை அலைய வைத்த
எனது மாபெரும் எதிரியும் நீயேதான்!
அவனுக்கும் எனக்கும் இடையில்
நீ இனிமேல் இருக்கவே கூடாது
நீ என்னை நிசமாக எனக்கு
காட்டத் தவறியதால் தான்
என்னை நான் என எண்ணி ஏமாந்தேன்!
என்னைப்போல் எத்தனையோ பேர்
அவர்களை யாரென்று அறியாத நிலையில்
ஏமாற்றமடந்தவ்ர்களாய்
நோய் பிடித்து படுக்கையிலே கிடக்கிறார்
வாசனைகள் பூசியிருந்த
அவர்கலின் உடம்புகளில் இருந்து
வியர்வையும் இரத்தமும் சீழும்
மூக்கைப்பிடிக்க வைக்கிறது.
வானம் பிளக்கப்பேசிய அவர்களின்
வாய்களெல்லாம் ஒரு
கோணத்தில் கென்னிக் கொண்டிருக்கின்றன!
வீரத்தோடு வாளெடுத்து
வீசிய அவர்களின் கைகளெல்லாம்
கைத்தடிகளையும் தூக்கிக்கொள்ள முடியாமல்
நடுங்கிக் கொண்டிருக்கின்றன!
ஆயிரக்கணக்கில் செலவு செய்து
அலங்கரித்த அவர்களின் உடல்கள்
நிர்வாணத்துடன்
மையித்துகளாக
மல்லாந்து கிடக்கின்றன!
மாடாமாளிகைகளை உடைத்தெறிந்து விட்டு
வானுயரக் கட்டிடங்களைக்கட்டி
தங்கத்தால் கட்டில்கள் செய்து
வெள்ளிப்பாத்திரங்களில்
பாலும் நீரும் பருகியவர்கள்
மண்ணை முத்தமிட்டவர்களாய்
மண்ணறைக்குள் மறந்து விட்டார்!
பாவம் இறுதி மூச்சுவரை
அவர்கள் யாரென்பதை
அவர்களே அறிய வில்லை!
ஏமாற்றப்பட்டவர்கலை ஏந்தி
தோள்களின் மீது சுமந்து சென்று
அவர்களின் ஏமாற்றங்களுக்காக
அவர்களை மன்னிக்குமாறு
இறவனைப்பிரார்த்திக்கும்
ஏமாந்த கூட்டங்கள்!
அவர்களோடு என்னையும் இதுவரை
சேர்த்து வைத்திருந்த
நான் எனும் நீ
எனக்கு ஒரு வெறும் பொய்யே!
அவனிடம் இருந்து வந்த
அம்சங்களில் ஒன்றை
அவனிடமிருந்து பிரிக்கின்ற
அநியாயத்தை நடக்க நாம் விடலாமோ?
அவனிடம் இருந்து வந்த அம்சம்
ஆனாலும் அது அவனுமல்ல
அவனின் நுளைவு இல்லாத
அம்சங்களும் இங்கு இல்லை
இருந்து வந்த இடமும் தெரியாது
இருக்கப்போகும் இடமும் தெரியாது!
கடந்து வந்த பாதையெனும்
நினைவுகட்கும்
கடக்கப்போகும் பாதையெனும்
கனவுகட்கும், இடையில்
எங்கிருந்து இங்கே
இங்கிருந்து எங்கே
என்கின்ற கேள்விகட்கு
எவ்வித விடையும் தெரியாமல்
வந்த பாதை சரியா?
வலமா? இடமா? இல்லை
முன்னே முடங்கிச்செல்லும்
முட்கள் நெறிந்த பாதையா?
என்பவைகள் புரியாமல்
ஒன்றுமே செய்ய முடியாமல்
ஒடுங்கியே கிடக்குமென்னை
நான் ஆக்கி ஏமாற்றும்
உன்னை இனியும்
உயிரோடு இருப்பதற்க்கு
அனுமதிக்கவே முடியாது!
இலங்கை முஸ்லீம்களின் ஒரே குரலாக இருந்த எம் பெருந்தலைவர்
இன்று உள்ள முஸ்லீம் தலைவர்களின் எடுத்துக்காட்டாக இருந்த எங்களின்
நேசத்துக்குரிய தலைவர்
மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் எண்ணத்தில் உருவான கவிதைதான்
இது 1996 ல் அவர் எழுதினார்.
நான் எனும் நீ
இவ்வுலகில் இனி ஒரு கனமும் வாழமுடியாது!
ஒன்றுமே இல்லாத என்னை
நான் ஆகக் காட்டிய உன்னை
இனிவாழ விடவே மாட்டேன்!
என்னை மரணம் அணைக்கு முன்னே
உன்னை உயிரோடு இருக்க விடக்கூடாது!
எனக்கோ ஒரேயொரு வாழ்க்கை
அதில் உன்னை எப்போதும்
திருப்திப்படுத்த ஓடியதால்
என்னை வருத்தியது மட்டுமன்றி
எதுவுமே எச்சமில்லை !
என்றோ ஒரு நாள்
உன் உதிரிப்பாகங்களான
என் இளமையும் என் அழகும்
என் உற்சாகமும் என் அறிவும்
என் ஆற்றல்களும் என் நினைவுகளும்
என்னைவிட்டு ஓடும் போது
நீ ரு நொடிதானும்
என்னருகே இருக்கப்போவதில்லை !
என்னையும் என்னைச் சுற்றியுள்ளோரையும்
ஏமாற்றிக் கொண்டிருக்கும்
நான் எனும் நீ
எந்த வேலையும் எனை விட்டோடுதற்காய்
உன்னிப்பாய்
ஒரு சிறுத்தை போல் பதுங்குவது
என்னிரு கன்களுக்கும்
இப்போது தெரிகிறது!
என்னோடு இருந்து
என்னையே ஏமாற்றும்
உன்னை இனி ஒரு கணமும்
வாழ விடக்கூடாது!
உனக்குச் சதா
தீனி போட்டுக்கொண்டிருந்ததால்
எனக்கு ஏற்பட்ட
இழப்புக்களையும் இன்னல்களையும்
நீ அறிவாயோ?
நான் எனும் நீதான் என்னை
அவனிடத்தில் இருந்தும் பிரித்தாய்!
அவன் என்னோடு எப்போதும்
இருந்து கொண்டிருக்கையில்
அவனைத்தேடி என்னை அலைய வைத்த
எனது மாபெரும் எதிரியும் நீயேதான்!
அவனுக்கும் எனக்கும் இடையில்
நீ இனிமேல் இருக்கவே கூடாது
நீ என்னை நிசமாக எனக்கு
காட்டத் தவறியதால் தான்
என்னை நான் என எண்ணி ஏமாந்தேன்!
என்னைப்போல் எத்தனையோ பேர்
அவர்களை யாரென்று அறியாத நிலையில்
ஏமாற்றமடந்தவ்ர்களாய்
நோய் பிடித்து படுக்கையிலே கிடக்கிறார்
வாசனைகள் பூசியிருந்த
அவர்கலின் உடம்புகளில் இருந்து
வியர்வையும் இரத்தமும் சீழும்
மூக்கைப்பிடிக்க வைக்கிறது.
வானம் பிளக்கப்பேசிய அவர்களின்
வாய்களெல்லாம் ஒரு
கோணத்தில் கென்னிக் கொண்டிருக்கின்றன!
வீரத்தோடு வாளெடுத்து
வீசிய அவர்களின் கைகளெல்லாம்
கைத்தடிகளையும் தூக்கிக்கொள்ள முடியாமல்
நடுங்கிக் கொண்டிருக்கின்றன!
ஆயிரக்கணக்கில் செலவு செய்து
அலங்கரித்த அவர்களின் உடல்கள்
நிர்வாணத்துடன்
மையித்துகளாக
மல்லாந்து கிடக்கின்றன!
மாடாமாளிகைகளை உடைத்தெறிந்து விட்டு
வானுயரக் கட்டிடங்களைக்கட்டி
தங்கத்தால் கட்டில்கள் செய்து
வெள்ளிப்பாத்திரங்களில்
பாலும் நீரும் பருகியவர்கள்
மண்ணை முத்தமிட்டவர்களாய்
மண்ணறைக்குள் மறந்து விட்டார்!
பாவம் இறுதி மூச்சுவரை
அவர்கள் யாரென்பதை
அவர்களே அறிய வில்லை!
ஏமாற்றப்பட்டவர்கலை ஏந்தி
தோள்களின் மீது சுமந்து சென்று
அவர்களின் ஏமாற்றங்களுக்காக
அவர்களை மன்னிக்குமாறு
இறவனைப்பிரார்த்திக்கும்
ஏமாந்த கூட்டங்கள்!
அவர்களோடு என்னையும் இதுவரை
சேர்த்து வைத்திருந்த
நான் எனும் நீ
எனக்கு ஒரு வெறும் பொய்யே!
அவனிடம் இருந்து வந்த
அம்சங்களில் ஒன்றை
அவனிடமிருந்து பிரிக்கின்ற
அநியாயத்தை நடக்க நாம் விடலாமோ?
அவனிடம் இருந்து வந்த அம்சம்
ஆனாலும் அது அவனுமல்ல
அவனின் நுளைவு இல்லாத
அம்சங்களும் இங்கு இல்லை
இருந்து வந்த இடமும் தெரியாது
இருக்கப்போகும் இடமும் தெரியாது!
கடந்து வந்த பாதையெனும்
நினைவுகட்கும்
கடக்கப்போகும் பாதையெனும்
கனவுகட்கும், இடையில்
எங்கிருந்து இங்கே
இங்கிருந்து எங்கே
என்கின்ற கேள்விகட்கு
எவ்வித விடையும் தெரியாமல்
வந்த பாதை சரியா?
வலமா? இடமா? இல்லை
முன்னே முடங்கிச்செல்லும்
முட்கள் நெறிந்த பாதையா?
என்பவைகள் புரியாமல்
ஒன்றுமே செய்ய முடியாமல்
ஒடுங்கியே கிடக்குமென்னை
நான் ஆக்கி ஏமாற்றும்
உன்னை இனியும்
உயிரோடு இருப்பதற்க்கு
அனுமதிக்கவே முடியாது!
Re: நான் எனும் நீ
நான் எனும் நீ என்ற இக்கவிதையினை பகிர்ந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் தோழரே
மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களால் எழுதப்பட்ட நான் எனும் நீ எனும் கவிதை நூல் என்னிடம் இருக்கிறது அவரது வரிகள் உரைகள் நிதர்சன வாழ்வென்று அவரால் மக்களின் மனங்களில் பதித்த எழுத்துகள் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கின்றது
இலங்கை முஸ்லீம்களுக்கு ஒரு விடிவெள்ளியாக இருந்த அம்மனிதரின் மரணம் அனைவரையும் அல்லல் படச்செய்திருந்தது அவரது வரிகளில் எதை குறிப்பிட்டுச்சொல்ல என்றில்லாமல் அத்தனையிலும் அர்த்தமிருப்பதை அனைவருமறிவர் மிக்க நன்றி தோழா பகிர்ந்தமைக்கு
மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களால் எழுதப்பட்ட நான் எனும் நீ எனும் கவிதை நூல் என்னிடம் இருக்கிறது அவரது வரிகள் உரைகள் நிதர்சன வாழ்வென்று அவரால் மக்களின் மனங்களில் பதித்த எழுத்துகள் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கின்றது
இலங்கை முஸ்லீம்களுக்கு ஒரு விடிவெள்ளியாக இருந்த அம்மனிதரின் மரணம் அனைவரையும் அல்லல் படச்செய்திருந்தது அவரது வரிகளில் எதை குறிப்பிட்டுச்சொல்ல என்றில்லாமல் அத்தனையிலும் அர்த்தமிருப்பதை அனைவருமறிவர் மிக்க நன்றி தோழா பகிர்ந்தமைக்கு
Re: நான் எனும் நீ
நேசமுடன் ஹாசிம் wrote:நான் எனும் நீ என்ற இக்கவிதையினை பகிர்ந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் தோழரே
மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களால் எழுதப்பட்ட நான் எனும் நீ எனும் கவிதை நூல் என்னிடம் இருக்கிறது அவரது வரிகள் உரைகள் நிதர்சன வாழ்வென்று அவரால் மக்களின் மனங்களில் பதித்த எழுத்துகள் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கின்றது
இலங்கை முஸ்லீம்களுக்கு ஒரு விடிவெள்ளியாக இருந்த அம்மனிதரின் மரணம் அனைவரையும் அல்லல் படச்செய்திருந்தது அவரது வரிகளில் எதை குறிப்பிட்டுச்சொல்ல என்றில்லாமல் அத்தனையிலும் அர்த்தமிருப்பதை அனைவருமறிவர் மிக்க நன்றி தோழா பகிர்ந்தமைக்கு
Re: நான் எனும் நீ
முனாஸ் சுலைமான் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நான் எனும் நீ என்ற இக்கவிதையினை பகிர்ந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் தோழரே
மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களால் எழுதப்பட்ட நான் எனும் நீ எனும் கவிதை நூல் என்னிடம் இருக்கிறது அவரது வரிகள் உரைகள் நிதர்சன வாழ்வென்று அவரால் மக்களின் மனங்களில் பதித்த எழுத்துகள் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கின்றது
இலங்கை முஸ்லீம்களுக்கு ஒரு விடிவெள்ளியாக இருந்த அம்மனிதரின் மரணம் அனைவரையும் அல்லல் படச்செய்திருந்தது அவரது வரிகளில் எதை குறிப்பிட்டுச்சொல்ல என்றில்லாமல் அத்தனையிலும் அர்த்தமிருப்பதை அனைவருமறிவர் மிக்க நன்றி தோழா பகிர்ந்தமைக்கு
:];: :];: :’|:
Re: நான் எனும் நீ
இலங்கை முஸ்லீம்களுக்கு ஒரு விடிவெள்ளியாக இருந்த அம்மனிதரின் மரணம் அனைவரையும் அல்லல் படச்செய்திருந்தது அவரது வரிகளில் எதை குறிப்பிட்டுச்சொல்ல என்றில்லாமல் அத்தனையிலும் அர்த்தமிருப்பதை அனைவருமறிவர் மிக்க நன்றி தோழா பகிர்ந்தமைக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நான் எனும் நீ
கடந்து வந்த பாதையெனும்
நினைவுகட்கும்
கடக்கப்போகும் பாதையெனும்
கனவுகட்கும், இடையில்
எங்கிருந்து இங்கே
இங்கிருந்து எங்கே
என்கின்ற கேள்விகட்கு
எவ்வித விடையும் தெரியாமல்
வந்த பாதை சரியா?
வலமா? இடமா? இல்லை
முன்னே முடங்கிச்செல்லும்
முட்கள் நெறிந்த பாதையா?
என்பவைகள் புரியாமல்
ஒன்றுமே செய்ய முடியாமல்
ஒடுங்கியே கிடக்குமென்னை
நான் ஆக்கி ஏமாற்றும்
உன்னை இனியும்
உயிரோடு இருப்பதற்க்கு
அனுமதிக்கவே முடியாது!
நான் எனும் நீ
எனக்கு ஒரு வெறும் பொய்யே!
:!+: :!+:
ஒரு உன்னதமான கவிதை. கவிதை வடிவில் ஒரு ஞானகீற்று.
எல்லோராலும் இந்த அளவிற்கு, எழுதமுடியுமா? பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாய் எழுதமுடியுமா? என சிந்திக்க வைக்கிறது. அற்புதப் படைப்பு.
அறிய ஒரு கலைப் படைப்பினை தந்திட்ட அன்பு முனாசிர்க்கு :+=+: :+=+: :];:
நினைவுகட்கும்
கடக்கப்போகும் பாதையெனும்
கனவுகட்கும், இடையில்
எங்கிருந்து இங்கே
இங்கிருந்து எங்கே
என்கின்ற கேள்விகட்கு
எவ்வித விடையும் தெரியாமல்
வந்த பாதை சரியா?
வலமா? இடமா? இல்லை
முன்னே முடங்கிச்செல்லும்
முட்கள் நெறிந்த பாதையா?
என்பவைகள் புரியாமல்
ஒன்றுமே செய்ய முடியாமல்
ஒடுங்கியே கிடக்குமென்னை
நான் ஆக்கி ஏமாற்றும்
உன்னை இனியும்
உயிரோடு இருப்பதற்க்கு
அனுமதிக்கவே முடியாது!
நான் எனும் நீ
எனக்கு ஒரு வெறும் பொய்யே!
:!+: :!+:
ஒரு உன்னதமான கவிதை. கவிதை வடிவில் ஒரு ஞானகீற்று.
எல்லோராலும் இந்த அளவிற்கு, எழுதமுடியுமா? பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாய் எழுதமுடியுமா? என சிந்திக்க வைக்கிறது. அற்புதப் படைப்பு.
அறிய ஒரு கலைப் படைப்பினை தந்திட்ட அன்பு முனாசிர்க்கு :+=+: :+=+: :];:
Re: நான் எனும் நீ
@. @. :”@: :”@:அப்துல் றிமாஸ் wrote:இலங்கை முஸ்லீம்களுக்கு ஒரு விடிவெள்ளியாக இருந்த அம்மனிதரின் மரணம் அனைவரையும் அல்லல் படச்செய்திருந்தது அவரது வரிகளில் எதை குறிப்பிட்டுச்சொல்ல என்றில்லாமல் அத்தனையிலும் அர்த்தமிருப்பதை அனைவருமறிவர் மிக்க நன்றி தோழா பகிர்ந்தமைக்கு
Re: நான் எனும் நீ
:”@: :”@:Atchaya wrote:கடந்து வந்த பாதையெனும்
நினைவுகட்கும்
கடக்கப்போகும் பாதையெனும்
கனவுகட்கும், இடையில்
எங்கிருந்து இங்கே
இங்கிருந்து எங்கே
என்கின்ற கேள்விகட்கு
எவ்வித விடையும் தெரியாமல்
வந்த பாதை சரியா?
வலமா? இடமா? இல்லை
முன்னே முடங்கிச்செல்லும்
முட்கள் நெறிந்த பாதையா?
என்பவைகள் புரியாமல்
ஒன்றுமே செய்ய முடியாமல்
ஒடுங்கியே கிடக்குமென்னை
நான் ஆக்கி ஏமாற்றும்
உன்னை இனியும்
உயிரோடு இருப்பதற்க்கு
அனுமதிக்கவே முடியாது!
நான் எனும் நீ
எனக்கு ஒரு வெறும் பொய்யே!
:!+: :!+:
ஒரு உன்னதமான கவிதை. கவிதை வடிவில் ஒரு ஞானகீற்று.
எல்லோராலும் இந்த அளவிற்கு, எழுதமுடியுமா? பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாய் எழுதமுடியுமா? என சிந்திக்க வைக்கிறது. அற்புதப் படைப்பு.
அறிய ஒரு கலைப் படைப்பினை தந்திட்ட அன்பு முனாசிர்க்கு :+=+: :+=+: :];:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|