Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
3 posters
Page 1 of 1
அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
அண்டவெடிப்பு ஐங்குறு நூறிலும்.
அகத்தியன் சொம்பில் காவிரி நீரும்.
அவ்வைப் பாட்டி அணுவைப் பிளந்ததும்
அன்றே சொன்னார்கள்.
நானோ தொழில் நுட்பம் நமது கண்டுபிடிப்பு
ஏனோ மறந்தனர் இற்றை நாளில் -இவர்கள்
ஆனைமலையில் அணு உலை அமைத்து
அகிலம் முழுவதும் மின்திறன் அனுப்பிய
தமிழர் திறமையை- அன்றே சொன்னார்கள்.
வான ஓடத்தை கண்டவன் யார்? முதலில் கண்டவன் யார்?
பண்டைத் தமிழன் நம்மைத்தவிர வேறு யார்?
இராவணன் தேரில் சீதையை கடத்த
கண்ணகி கணவனுடன் மேலுலகு செல்ல
சீவகன் நினைத்த இடத்தில் மனம்கவர் கன்னியைப் புணர
வான ஓடத்தைக் கண்டவர் யார்? நம்மைத் தவிர வேறு யார்?
கம்பன் தன்னிலும் பெரிய அறிவியல் அறிஞன்
பாரினில் உண்டோ? இருந்தால் சொல்லும்!.
ராமன் எடுத்த வில்லின் சத்தம் ஒடிவதைக் கேட்டு
இற்றது சீதையின்- மேகலை இடுப்பு.
அல்குல் பெருத்தால் பாவம் மேகலை என்ன செய்யும்?.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை காவியம் முதலாய்
எத்தனை முலைகள்! எத்தனை அல்குல்!.
அத்தனையும் அறத் தமிழ் பேசும்!
மணிமேகலை கையில் அட்சய சட்டி
அள்ளக் குறையாத அறுசுவை உண்டி
அய்யோ பாவம்! தொலைத்து விட்டாள்-அருந்தமிழர்
இன்று பட்டினியால் வாட விட்டாள்?
முலையைத் திருகி மதுரையை எரித்த முதல் தமிழச்சி
கண்ணகி அன்றோ?
நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கி கல் யானைக்கு
கரும்பு புகட்டி எத்தனை சிறப்பு தமிழன் சிறப்பு.
மாலிக்காபூர் வந்து படையுடன் நிற்க, அத்துணை சிறப்பும்
ஒளிந்தது எங்கே?
எல்லாம் சொன்னார்கள். எப்படியோ சொன்னார்கள்.
ஒன்றை மட்டும் சொல்லாது விட்டனர்.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
நன்றி துரை இளமுருகு & கீற்று
அகத்தியன் சொம்பில் காவிரி நீரும்.
அவ்வைப் பாட்டி அணுவைப் பிளந்ததும்
அன்றே சொன்னார்கள்.
நானோ தொழில் நுட்பம் நமது கண்டுபிடிப்பு
ஏனோ மறந்தனர் இற்றை நாளில் -இவர்கள்
ஆனைமலையில் அணு உலை அமைத்து
அகிலம் முழுவதும் மின்திறன் அனுப்பிய
தமிழர் திறமையை- அன்றே சொன்னார்கள்.
வான ஓடத்தை கண்டவன் யார்? முதலில் கண்டவன் யார்?
பண்டைத் தமிழன் நம்மைத்தவிர வேறு யார்?
இராவணன் தேரில் சீதையை கடத்த
கண்ணகி கணவனுடன் மேலுலகு செல்ல
சீவகன் நினைத்த இடத்தில் மனம்கவர் கன்னியைப் புணர
வான ஓடத்தைக் கண்டவர் யார்? நம்மைத் தவிர வேறு யார்?
கம்பன் தன்னிலும் பெரிய அறிவியல் அறிஞன்
பாரினில் உண்டோ? இருந்தால் சொல்லும்!.
ராமன் எடுத்த வில்லின் சத்தம் ஒடிவதைக் கேட்டு
இற்றது சீதையின்- மேகலை இடுப்பு.
அல்குல் பெருத்தால் பாவம் மேகலை என்ன செய்யும்?.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை காவியம் முதலாய்
எத்தனை முலைகள்! எத்தனை அல்குல்!.
அத்தனையும் அறத் தமிழ் பேசும்!
மணிமேகலை கையில் அட்சய சட்டி
அள்ளக் குறையாத அறுசுவை உண்டி
அய்யோ பாவம்! தொலைத்து விட்டாள்-அருந்தமிழர்
இன்று பட்டினியால் வாட விட்டாள்?
முலையைத் திருகி மதுரையை எரித்த முதல் தமிழச்சி
கண்ணகி அன்றோ?
நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கி கல் யானைக்கு
கரும்பு புகட்டி எத்தனை சிறப்பு தமிழன் சிறப்பு.
மாலிக்காபூர் வந்து படையுடன் நிற்க, அத்துணை சிறப்பும்
ஒளிந்தது எங்கே?
எல்லாம் சொன்னார்கள். எப்படியோ சொன்னார்கள்.
ஒன்றை மட்டும் சொல்லாது விட்டனர்.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
நன்றி துரை இளமுருகு & கீற்று
Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்! :,;:
பழைமை வாதம் பேசுதல் மறவான்! :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
தொடரும் நம்பிக்கைள் சில
மூடத்தனமாக உள்ளது.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
மூடத்தனமாக உள்ளது.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
Last edited by நண்பன் on Fri 23 Sep 2011 - 18:44; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
Atchaya wrote:ஏன் ஓடுகிறீர் தோழரே!
நான் பேசவில்லை என்று தான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|