Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
தனி நாட்டுக் கோரிக்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க அழுத்தம்
ஐ. நா. தனிநாட்டு கோரிக்கைக்கு இன்னும் இருவாரங்களுக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என பலஸ்தீன நிர்வாகம் கெடு விதித்துள்ளது.
ஐ. நா. வின் 194 ஆவது அங்கத்துவ நாடாக உறுப்புரிமை பெறும் விண்ணப் பத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பம் பாதுகாப்புச் சபையின் வாக்கெடுப்பிற்காக விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்தும் பாதுகாப்புச் சபை அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. எனினும் இன்னும் இரு வாரங்களுக்குள் பலஸ்தீன அங்கத்துவம் குறித்து முடிவு கிடைக்க வேண்டும் என ஐ. நா. விடம் பலஸ்தீன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
“பாதுகாப்புச் சபை முடிவு கிடைக்க பலஸ்தீன நிர்வாகம் இன்னும் இரு வாரங்கள் காத்திருக்கும்” என பதா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அஸ்ஸாம் அல் அஹ்மட் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤ம் வலியுறுத்தியுள்ளார். மாத காலங்கள் நீடிக்காமல், இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பலஸ்தீனின் விண்ணப்பம் குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று விவாதிக்கவுள்ளதாக பாதுகாப்புச் சபையின் லெபனான் நாட்டுக்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச் சபையின் தலைவராக இருக்கும் நவாஸ் சலாம் கூறும் போது, “பலஸ்தீனின் விண்ணப்ப கடிதம் பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்துக்கும் வழங்கப்பட் டுள்ளது. இது குறித்து திங்கட்கிழமை (இன்று) மாலை மூன்று மணிக்கு பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படும்” என தெரிவித்தார்.
“உலகின் 127 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை ஐ. நா. தன் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த வெள்ளிக் கிழமை ஐ. நா. பொதுச் சபை கூட்டத் தில் கோரிக்கை விடுத்தார். அவருக்குப் பின் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதன் யாஹு , தீர்மானங்கள் போடுவதைத் தவிர்த்து விட்டு, பேச்சு உவார்த்தைக்கு வரும்படி பலஸ்தீனத்துக்கு அழைப்பு விடுத்தார்.
பொதுச் சபையில் பேசிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியதாவது:- கடந்த 1967 க்கு முன்பிருந்த எல்லைகளுடன் கூடிய பாலஸ்தீன நாட்டை, பாதுகாப்புச் சபை அங்கீகரிக்க வேண்டும். இதுவரை பலஸ்தீனத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகள், இனி மேலாவது அதை ஒரு நாடாக ஏற்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, நாடோடிகளாகத் திரிந்து, காலனி ஆதிக்கத்தில் அவதிப்பட்ட எமது மக்கள், பூமியில் உள்ள மற்றவர்களைப் போல விடுதலை பெற்ற நிலத்தில் இறையாண்மையோடு வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அப்பாஸ் கூறினார்.
அப்பாஸ் பேசிக் கொண்டிருந்த போதே பல நாடுகளின் உறுப்பினர்கள் அவரது பேச்சை அங்கீகரித்து, எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
இதையடுத்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, “இஸ்ரேல் அமைதியையே விரும்புகிறது. ஐ. நா. வில் தீர்மானம் போடுவதால், அந்த அமைதியைக் கொண்டு வர முடியாது. பேச்சுவார்த்தையின் மூலமாகவே அதை சாதிக்க முடியும்” என்றார். பாலஸ்தீன கோரிக்கை குறித்து இரு நாட்கள் முன்னர், ஐ. நா. பொதுச் சபையில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “பலஸ்தீன விடுதலைக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது.
பேச்சு வார்த்தைகள் மூலமே அது சாத்தியம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பி டத்தக்கது. பலஸ்தீன ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பேச்சுக்களுக்குப் பின், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ. நா. ஆகியவை இணைந்து விடுத்த அறிக்கையில், “இன்னும் ஒரு மாதத்திற்குள் இரு தர ப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை ஆரம்பி ப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம், 2012 கடைசிக்குள் ஓர் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்து ள்ளன.
ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உள்ள 15 நாடுகளில், ஒன்பது நாடுகள், ஒரு நாட்டை அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்த போதும், அமெரிக்கா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள், தங்கள் மறுப்பாணையை (வீட்டோ) பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால், பாலஸ்தீன கோரிக்கை மீது தனது மறுப்பாணையை பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறிவிட்டார்.
தனி நாட்டுக் கோரிக்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க அழுத்தம்
ஐ. நா. தனிநாட்டு கோரிக்கைக்கு இன்னும் இருவாரங்களுக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என பலஸ்தீன நிர்வாகம் கெடு விதித்துள்ளது.
ஐ. நா. வின் 194 ஆவது அங்கத்துவ நாடாக உறுப்புரிமை பெறும் விண்ணப் பத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பம் பாதுகாப்புச் சபையின் வாக்கெடுப்பிற்காக விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்தும் பாதுகாப்புச் சபை அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. எனினும் இன்னும் இரு வாரங்களுக்குள் பலஸ்தீன அங்கத்துவம் குறித்து முடிவு கிடைக்க வேண்டும் என ஐ. நா. விடம் பலஸ்தீன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
“பாதுகாப்புச் சபை முடிவு கிடைக்க பலஸ்தீன நிர்வாகம் இன்னும் இரு வாரங்கள் காத்திருக்கும்” என பதா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அஸ்ஸாம் அல் அஹ்மட் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤ம் வலியுறுத்தியுள்ளார். மாத காலங்கள் நீடிக்காமல், இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பலஸ்தீனின் விண்ணப்பம் குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று விவாதிக்கவுள்ளதாக பாதுகாப்புச் சபையின் லெபனான் நாட்டுக்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச் சபையின் தலைவராக இருக்கும் நவாஸ் சலாம் கூறும் போது, “பலஸ்தீனின் விண்ணப்ப கடிதம் பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்துக்கும் வழங்கப்பட் டுள்ளது. இது குறித்து திங்கட்கிழமை (இன்று) மாலை மூன்று மணிக்கு பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படும்” என தெரிவித்தார்.
“உலகின் 127 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை ஐ. நா. தன் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த வெள்ளிக் கிழமை ஐ. நா. பொதுச் சபை கூட்டத் தில் கோரிக்கை விடுத்தார். அவருக்குப் பின் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதன் யாஹு , தீர்மானங்கள் போடுவதைத் தவிர்த்து விட்டு, பேச்சு உவார்த்தைக்கு வரும்படி பலஸ்தீனத்துக்கு அழைப்பு விடுத்தார்.
பொதுச் சபையில் பேசிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியதாவது:- கடந்த 1967 க்கு முன்பிருந்த எல்லைகளுடன் கூடிய பாலஸ்தீன நாட்டை, பாதுகாப்புச் சபை அங்கீகரிக்க வேண்டும். இதுவரை பலஸ்தீனத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகள், இனி மேலாவது அதை ஒரு நாடாக ஏற்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, நாடோடிகளாகத் திரிந்து, காலனி ஆதிக்கத்தில் அவதிப்பட்ட எமது மக்கள், பூமியில் உள்ள மற்றவர்களைப் போல விடுதலை பெற்ற நிலத்தில் இறையாண்மையோடு வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அப்பாஸ் கூறினார்.
அப்பாஸ் பேசிக் கொண்டிருந்த போதே பல நாடுகளின் உறுப்பினர்கள் அவரது பேச்சை அங்கீகரித்து, எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
இதையடுத்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, “இஸ்ரேல் அமைதியையே விரும்புகிறது. ஐ. நா. வில் தீர்மானம் போடுவதால், அந்த அமைதியைக் கொண்டு வர முடியாது. பேச்சுவார்த்தையின் மூலமாகவே அதை சாதிக்க முடியும்” என்றார். பாலஸ்தீன கோரிக்கை குறித்து இரு நாட்கள் முன்னர், ஐ. நா. பொதுச் சபையில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “பலஸ்தீன விடுதலைக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது.
பேச்சு வார்த்தைகள் மூலமே அது சாத்தியம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பி டத்தக்கது. பலஸ்தீன ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பேச்சுக்களுக்குப் பின், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ. நா. ஆகியவை இணைந்து விடுத்த அறிக்கையில், “இன்னும் ஒரு மாதத்திற்குள் இரு தர ப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை ஆரம்பி ப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம், 2012 கடைசிக்குள் ஓர் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்து ள்ளன.
ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உள்ள 15 நாடுகளில், ஒன்பது நாடுகள், ஒரு நாட்டை அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்த போதும், அமெரிக்கா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள், தங்கள் மறுப்பாணையை (வீட்டோ) பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால், பாலஸ்தீன கோரிக்கை மீது தனது மறுப்பாணையை பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறிவிட்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
இது எல்லாம் தெரிந்தும் உலக நாடுகள் மௌனம் தான் என்ன வென்று காரணம் தெரியவில்லை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
kalainilaa wrote:இது எல்லாம் தெரிந்தும் உலக நாடுகள் மௌனம் தான் என்ன வென்று காரணம் தெரியவில்லை .
@. @.
Similar topics
» ஐக்கிய நாடுகள் சபையிலும் ஊடகப் புறக்கணிப்பு
» ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாதுகாப்புக் கவுன்சிலில் உரை
» ஐக்கிய நாடுகள் தூதுவராக பதவி பெற்றவர்
» சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்
» போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் முழுமையான பதில் தேவை – ஐக்கிய நாடுகள் சபை.
» ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாதுகாப்புக் கவுன்சிலில் உரை
» ஐக்கிய நாடுகள் தூதுவராக பதவி பெற்றவர்
» சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்
» போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் முழுமையான பதில் தேவை – ஐக்கிய நாடுகள் சபை.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|