சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கருணை தர்மங்கள் Khan11

கருணை தர்மங்கள்

+5
arull
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
செய்தாலி
9 posters

Go down

கருணை தர்மங்கள் Empty கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Mon 26 Sep 2011 - 8:54

கருணை தர்மங்கள் 413542908_5220217aa2


தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய்
கட்டில் படுக்கையில் தந்தை

அன்னம் உண்ணா தாய்
பால் வற்றிய மார்பு
பசியில் அழும் தம்பி

அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்

உயிர்போர்த்திய நான்கு ஜீவன்கள்
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு

இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை

விழிகளால் வாசித்த மனிதர்கள்
அகம் இளகி விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை

ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்

சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள்

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது


Last edited by செய்தாலி on Mon 26 Sep 2011 - 13:43; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 9:01

கருணை தருமங்கள் என்ற கருவுக்கு மிகவும் அருமையாக வரிகளைக் கோர்த்துள்ளீர்கள் செய்தாலி இதில் இன்னும் நமக்குப்புரியாத புதிர்

ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்
மதிகெட்ட மனிதர்கள் முறையாக தான தர்மங்கள் செய்தால் நீங்கும் இந்த நிலை வாழ்த்துக்கள் செய்தாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Mon 26 Sep 2011 - 11:11

நண்பன் wrote:கருணை தருமங்கள் என்ற கருவுக்கு மிகவும் அருமையாக வரிகளைக் கோர்த்துள்ளீர்கள் செய்தாலி இதில் இன்னும் நமக்குப்புரியாத புதிர்

ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்
மதிகெட்ட மனிதர்கள் முறையாக தான தர்மங்கள் செய்தால் நீங்கும் இந்த நிலை வாழ்த்துக்கள் செய்தாலி

நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 11:31

எச்சமுகத்திலும் சீர்செய்யப்படாத கொடுமை தோழரின் வரிகளில் கேள்விக் கணைகள் அருமையான கரு
கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அள்ளிவளங்கும் காணிக்கைகள் வீணே எந்தக் கடவுளுக்கும் அதனால் எதுவும் ஆவதில்லை
அதனையே பசியின் கொடுமையில் வாடும் உயிர்களுக்கு அளித்திட்டால் கோடி புண்ணியம் கிடைத்திடும்

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது

இதுதான் இதற்கான தீர்வு அனுதாபங்களை விட்டுவிட்டு செயலில் ஈடுபடுவதில்தான் இதனை அகற்றிட முடியும்
மிக்க நன்றி நல்ல கவிதைப் பகிர்வுக்கு


கருணை தர்மங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by அப்துல்லாஹ் Mon 26 Sep 2011 - 11:42

இதயம் வழிக் கருணை
காணிக்கைக் கைப் பொருளாய்
மடை திறந்த வெள்ளமாய்
மானுடம் நோக்கிப் பாய்ந்தால்
கவலையுற்ற மானுடத்தை
காண்பதற்க் கரிதாகும்
களிப்புடனே வையம் வாழும்...

நேயம் மனதிற்கொண்டு
ஞாயம் கேட்கும் தம்பி
செய்தாலி செப்பும் நல்ல
சிந்தனை ஏற்புடைத்தே...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by arull Mon 26 Sep 2011 - 12:44

நல்ல கவிதை :!+:

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 13:02

அருமையான கரு ஒன்றினை எடுத்து அற்புதமாக கவி எழுதி மக்கள் விழிப்பிற்கு எடுத்துக் காட்டிய விதம் அருமை .

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது


உயிர் கொடுக்கிறது இந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே. :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 13:08

சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் .

தர்ம்மத்தை நோக்கியும்,
தர்ம்மத்தை எதிர்ப்பார்த்தும் ,

உள்ளதை சொல்லும் கவிதை ,மனதை ...............செய்கிறது உண்மை
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Mon 26 Sep 2011 - 13:59

நேசமுடன் ஹாசிம் wrote:எச்சமுகத்திலும் சீர்செய்யப்படாத கொடுமை தோழரின் வரிகளில் கேள்விக் கணைகள் அருமையான கரு
கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அள்ளிவளங்கும் காணிக்கைகள் வீணே எந்தக் கடவுளுக்கும் அதனால் எதுவும் ஆவதில்லை
அதனையே பசியின் கொடுமையில் வாடும் உயிர்களுக்கு அளித்திட்டால் கோடி புண்ணியம் கிடைத்திடும்

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது

இதுதான் இதற்கான தீர்வு அனுதாபங்களை விட்டுவிட்டு செயலில் ஈடுபடுவதில்தான் இதனை அகற்றிட முடியும்
மிக்க நன்றி நல்ல கவிதைப் பகிர்வுக்கு

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Mon 26 Sep 2011 - 14:00

அப்துல்லாஹ் wrote:இதயம் வழிக் கருணை
காணிக்கைக் கைப் பொருளாய்
மடை திறந்த வெள்ளமாய்
மானுடம் நோக்கிப் பாய்ந்தால்
கவலையுற்ற மானுடத்தை
காண்பதற்க் கரிதாகும்
களிப்புடனே வையம் வாழும்...

நேயம் மனதிற்கொண்டு
ஞாயம் கேட்கும் தம்பி
செய்தாலி செப்பும் நல்ல
சிந்தனை ஏற்புடைத்தே...

மிக்க நன்றி உடன்பிறப்பே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Mon 26 Sep 2011 - 14:01

arull wrote:நல்ல கவிதை :!+:

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Mon 26 Sep 2011 - 14:01

*சம்ஸ் wrote:அருமையான கரு ஒன்றினை எடுத்து அற்புதமாக கவி எழுதி மக்கள் விழிப்பிற்கு எடுத்துக் காட்டிய விதம் அருமை .

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது

மிக்க நன்றி சம்ஸ்


உயிர் கொடுக்கிறது இந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே. :];:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Mon 26 Sep 2011 - 14:03

kalainilaa wrote:சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் .

தர்ம்மத்தை நோக்கியும்,
தர்ம்மத்தை எதிர்ப்பார்த்தும் ,

உள்ளதை சொல்லும் கவிதை ,மனதை ...............செய்கிறது உண்மை

மிக்க நன்றி கவிஞரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by Atchaya Mon 26 Sep 2011 - 19:03

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
#heart :flower:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 19:05

அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை

உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Tue 27 Sep 2011 - 15:17

Atchaya wrote:அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
#heart :flower:

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Tue 27 Sep 2011 - 15:22

முனாஸ் சுலைமான் wrote:
அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை

உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:

என்னால் வரிகளில் மட்டுமே ஊருக்கு சொல்ல முடிந்தது
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் சமூக சேவையை செயலில் கடைபிடிக்கிறீங்க
உங்களின் அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் என்றும் துணை இருப்பான் உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 16:11

செய்தாலி wrote:
முனாஸ் சுலைமான் wrote:
அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை

உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:

என்னால் வரிகளில் மட்டுமே ஊருக்கு சொல்ல முடிந்தது
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் சமூக சேவையை செயலில் கடைபிடிக்கிறீங்க
உங்களின் அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் என்றும் துணை இருப்பான் உறவே
துபாயில் ஏசியானெட் வானொலியில் எனது நண்பர் செய்தாலி தோழி ஜோதி இருவர் இருந்தார்கள் அந்த செய்தாலியா நீங்க என்று சொல்லுங்களேன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by செய்தாலி Tue 27 Sep 2011 - 16:26

முனாஸ் சுலைமான் wrote:
செய்தாலி wrote:
முனாஸ் சுலைமான் wrote:
அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை

உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:

என்னால் வரிகளில் மட்டுமே ஊருக்கு சொல்ல முடிந்தது
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் சமூக சேவையை செயலில் கடைபிடிக்கிறீங்க
உங்களின் அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் என்றும் துணை இருப்பான் உறவே
துபாயில் ஏசியானெட் வானொலியில் எனது நண்பர் செய்தாலி தோழி ஜோதி இருவர் இருந்தார்கள் அந்த செய்தாலியா நீங்க என்று சொல்லுங்களேன்

இல்லை தோழரே

பிறப்பால் ஒரு மலையாளி
என் தாயின் மண்ணோ தமிழ் நாடு (நெல்லை )
நான் ஒரு சாதாரண குடுபத்தை சேர்ந்தவன்
துபாயில் ரியல் எஸ்டேட் கம்பனியில் வேலை பார்க்கிறேன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by Atchaya Tue 27 Sep 2011 - 16:36

இந்த தலைப்பினை வெகு நேரம் யோசித்தேன்!
இக்கவிதையை படித்து வெகு நேரம் யோசித்தேன் !
ஏன் இந்த நிலை ?
சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் ?

ஏன் இந்த நிலை?
பதிவிட்ட செய்தாலி அன்பு தோழருக்கு என் :];: :];: :];: :+=+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 16:44

Atchaya wrote:இந்த தலைப்பினை வெகு நேரம் யோசித்தேன்!
இக்கவிதையை படித்து வெகு நேரம் யோசித்தேன் !
ஏன் இந்த நிலை ?
சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் ?

ஏன் இந்த நிலை?
பதிவிட்ட செய்தாலி அன்பு தோழருக்கு என் கருணை தர்மங்கள் 930799 கருணை தர்மங்கள் 930799 கருணை தர்மங்கள் 930799 கருணை தர்மங்கள் 755559
படிக்கும் போதெல்லாம் கருத்திட துடிக்கிறது உள்ளம் அப்படித்தானே அட்சயா அதுதான் செய்தாலின் கிறுக்கல்கள் கருணை தர்மங்கள் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by Atchaya Tue 27 Sep 2011 - 16:51

செய்தாலியின் கிறுக்கல்கள்
பிரம்மனின் கிறுக்கல்கள்

பிரமிக்க வைக்கின்றன ஒவ்வொரு
பிரசவிக்கும் கவிதைகளும் !

உங்களின் கருத்து ஏற்புடைய கருத்து தான் நண்பா!


Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 18:31

செய்தாலி wrote:
முனாஸ் சுலைமான் wrote:
செய்தாலி wrote:
முனாஸ் சுலைமான் wrote:
அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை

உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:

என்னால் வரிகளில் மட்டுமே ஊருக்கு சொல்ல முடிந்தது
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் சமூக சேவையை செயலில் கடைபிடிக்கிறீங்க
உங்களின் அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் என்றும் துணை இருப்பான் உறவே
துபாயில் ஏசியானெட் வானொலியில் எனது நண்பர் செய்தாலி தோழி ஜோதி இருவர் இருந்தார்கள் அந்த செய்தாலியா நீங்க என்று சொல்லுங்களேன்

இல்லை தோழரே

பிறப்பால் ஒரு மலையாளி
என் தாயின் மண்ணோ தமிழ் நாடு (நெல்லை )
நான் ஒரு சாதாரண குடுபத்தை சேர்ந்தவன்
துபாயில் ரியல் எஸ்டேட் கம்பனியில் வேலை பார்க்கிறேன்
பிறப்பால் மட்டும்தான் மலையாளி ஏன் என்றால் தமிழுக்கு அமுதென்று பெயர் வந்தது உங்களைப்போன்ற அழகுக்கவிஞ்சர்களின் உயிரூட்டல்களால் என்றுதான் சொல்ல வேண்டும் அப்படி கவிகளால் அசத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே
நானும் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்து என்னைப்போன்று ஆரம்பமே கஷ்டமாக இருக்கும் உறவுகளின் கண்ணீரைத்துடைக்கவேண்டும் என்பதற்க்காக புனிதமான பயணம் செய்யலாம் என்று நான் சமூக சேவையையும் உதவிக்காக அரசியலையும் கையில் எடுத்துள்ளேன் தோழரே படைத்தவன் பகிர்ந்தளிப்பான் நாம் முயற்சிப்போம் என்று முன்னிற்க்கிறேன் உங்களைப்போன்ற உறவுகளின் உதவியும் ஒத்தாசையுமே என் பாதை :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கருணை தர்மங்கள் Empty Re: கருணை தர்மங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum