Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
சிரிப்பு மருந்து
5 posters
Page 1 of 1
சிரிப்பு மருந்து
ஒருவர் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாரென்றால், அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? மனிதர் கொடுத்து வைத்தவர்! தொட்டதெல்லாம் துலங்குகிறது. கவலையில்லாமல் இருக்கிறார், என்பார்கள்.
அதேபோல் ஒருவர் சிடுசிடு என்றோ கடுகடு என்றோ பேசினால் என்ன நினைப்பார்கள்? பாவம், இவர். என்ன பாடுபடுகிறார்! வீட்டில் அலுவலில் தொழிலில் என்று ஆயிரத்தெட்டு பிரச்னைகளை வைத்துக்கொண்டு மனிதர் தள்ளாடுகிறார். அதுதான் சிடுசிடு என்று வெடிக்கிறார் என்பார்கள்.
ஒருவரின் அன்றாட நடவடிக்கை அவரின் வாழ்க்கை நிலையை மனநிலையை அறியக்கூடியதாக இருக்கறது.
ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும்.
வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவரவர் மனத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கும். அவை, மகிழ்ச்சியை அல்லது துன்பத்தைத் தரக் கூடியவையாக அமையும்.
அதனால், வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் மனத்தைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பாதித்தாலும் அவற்றிலிருந்து விடுபட முயல வேண்டும்.
ஒரு தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகச் சில உத்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவதைப்போல், வாழ்க்கையில் இன்பமுண்டாகவும் சில உத்திகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த முன்வந்தால், வாழ்வே மகிழ்ச்சிதான்!
செய்யும் செல்கள் சீராகவும், உடலும் மனமும் வளமாகவும் கவலைகள் கழிய வாழ்க்கை உத்திகள் வகை செய்யும்.
வாழ்க்கையில் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம். வாழ்க்கைப் பாதைகளோ பல. எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் எளிதாகச் சென்றடையலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியதும் அவரவர்களே!
வாழ்க்கையில் எது எளிதாக இருக்கிறதோ அதை நாடிச் செல்வது, மனத்தின் இயல்பு. மனத்துக்கு எளிதாக இருப்பது, இரண்டு. ஒன்று திருப்தி, மற்றொன்று பேராசை. இந்த இரண்டு மனத்தின் இரண்டு பக்கங்கள்.
மனத்தின் ஒரு புறத்தில் பேராசை இருந்தால், அதன் மறுபுறத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கிறது என்று பொருள்.
திருப்தியை மகிழ்ச்சியை விரும்புகின்ற மனம், அந்தப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கும். அதனால் மனத்தில் இயல்பு மாறி என இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை தோன்றும்.
இவற்றைப் போக்கிவிட்டால், மனத்தின் உழைப்புக்கு உரிய திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர்.
இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. சிரிப்புக்குச் செலவு செய்வாருண்டா?
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! என்றால் வாய் மூடிக்கிடக்கலாமா?
சிரிப்பைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சிரிப்பு பல வகை. அவை,
நமுட்டுச் சிரிப்பு
அவுட்டுச் சிரிப்பு
வெடிச்சிரிப்பு
புன்சிரிப்பு
வெறிச்சிரிப்பு
கபடச்சிரிப்பு
அசட்டுச்சிரிப்பு
ஆணவச்சிரிப்பு
அகந்தைச்சிரிப்பு
கள்ளச் சிரிப்பு
காதல் சிரிப்பு
என்று கூறப்பட்டாலும், மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு.
நகைச்சுவைக்காகவும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகிறது. சிலரது நகைச்சுவை, சிந்தையைத் தூண்டக்கூடியதாகவும்அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவைப் பொருள் பொதிந்ததாகவும் இருக்கக் காணலாம். நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது.
சிரிக்கச்சிரிக்க மலரும் தாமரை போல், மனம் மணம்ம வீசத் தொடங்குகிறது. மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான். அந்தச் சிரிப்பு மருந்து கசப்போ புளிப்போ உவர்ப்போ கார்ப்போ துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை. அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள்.
மருந்துகளை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று கூறியிருக்கின்றார்கள்.
காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.
உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு சிநிஸிறி என்று பெயரிட்டுள்ளார்கள். என்னும் ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும், நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் ‘இம்யூனோகுளோபுலின்&ஏ’ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.
கொழுப்பின் மிகுதியினால் மாரடைப்பு என்னும் நோய் மரணத்தைத் தருவதாக இருக்கிறது. அவ்வாறான நிலை ஏற்படாதிருக்க வேண்டுமானால், நாள் தோறும் குறைந்த அளவு ஒரு மணி நேரமாவது, சிரித்துப்பழகவேண்டும். நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டுச் சிரித்துப் பழகவேண்டும்.
உடம்பில் நோயெதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள்அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
சிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப்பினால், ‘என்சிபேலின்ஸ்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது.
மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.
நகைச்சுவையினால் நாலாயிரம் நன்மைகள் இருக்கட்டும். ஆனால், நான் சிரிப்பதாக இல்லை! என்று இருப்பவர்களைக் கண்டாவது, சிரிக்கலாம் அல்லவா?
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும்.
புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம்.
சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை நம்பினால், சிரியுங்கள். நம்பாமலும் சிரியுங்கள்.
அதேபோல் ஒருவர் சிடுசிடு என்றோ கடுகடு என்றோ பேசினால் என்ன நினைப்பார்கள்? பாவம், இவர். என்ன பாடுபடுகிறார்! வீட்டில் அலுவலில் தொழிலில் என்று ஆயிரத்தெட்டு பிரச்னைகளை வைத்துக்கொண்டு மனிதர் தள்ளாடுகிறார். அதுதான் சிடுசிடு என்று வெடிக்கிறார் என்பார்கள்.
ஒருவரின் அன்றாட நடவடிக்கை அவரின் வாழ்க்கை நிலையை மனநிலையை அறியக்கூடியதாக இருக்கறது.
ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும்.
வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவரவர் மனத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கும். அவை, மகிழ்ச்சியை அல்லது துன்பத்தைத் தரக் கூடியவையாக அமையும்.
அதனால், வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் மனத்தைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பாதித்தாலும் அவற்றிலிருந்து விடுபட முயல வேண்டும்.
ஒரு தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகச் சில உத்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவதைப்போல், வாழ்க்கையில் இன்பமுண்டாகவும் சில உத்திகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த முன்வந்தால், வாழ்வே மகிழ்ச்சிதான்!
செய்யும் செல்கள் சீராகவும், உடலும் மனமும் வளமாகவும் கவலைகள் கழிய வாழ்க்கை உத்திகள் வகை செய்யும்.
வாழ்க்கையில் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம். வாழ்க்கைப் பாதைகளோ பல. எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் எளிதாகச் சென்றடையலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியதும் அவரவர்களே!
வாழ்க்கையில் எது எளிதாக இருக்கிறதோ அதை நாடிச் செல்வது, மனத்தின் இயல்பு. மனத்துக்கு எளிதாக இருப்பது, இரண்டு. ஒன்று திருப்தி, மற்றொன்று பேராசை. இந்த இரண்டு மனத்தின் இரண்டு பக்கங்கள்.
மனத்தின் ஒரு புறத்தில் பேராசை இருந்தால், அதன் மறுபுறத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கிறது என்று பொருள்.
திருப்தியை மகிழ்ச்சியை விரும்புகின்ற மனம், அந்தப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கும். அதனால் மனத்தில் இயல்பு மாறி என இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை தோன்றும்.
இவற்றைப் போக்கிவிட்டால், மனத்தின் உழைப்புக்கு உரிய திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர்.
இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. சிரிப்புக்குச் செலவு செய்வாருண்டா?
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! என்றால் வாய் மூடிக்கிடக்கலாமா?
சிரிப்பைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சிரிப்பு பல வகை. அவை,
நமுட்டுச் சிரிப்பு
அவுட்டுச் சிரிப்பு
வெடிச்சிரிப்பு
புன்சிரிப்பு
வெறிச்சிரிப்பு
கபடச்சிரிப்பு
அசட்டுச்சிரிப்பு
ஆணவச்சிரிப்பு
அகந்தைச்சிரிப்பு
கள்ளச் சிரிப்பு
காதல் சிரிப்பு
என்று கூறப்பட்டாலும், மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு.
நகைச்சுவைக்காகவும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகிறது. சிலரது நகைச்சுவை, சிந்தையைத் தூண்டக்கூடியதாகவும்அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவைப் பொருள் பொதிந்ததாகவும் இருக்கக் காணலாம். நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது.
சிரிக்கச்சிரிக்க மலரும் தாமரை போல், மனம் மணம்ம வீசத் தொடங்குகிறது. மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான். அந்தச் சிரிப்பு மருந்து கசப்போ புளிப்போ உவர்ப்போ கார்ப்போ துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை. அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள்.
மருந்துகளை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று கூறியிருக்கின்றார்கள்.
காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.
உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு சிநிஸிறி என்று பெயரிட்டுள்ளார்கள். என்னும் ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும், நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் ‘இம்யூனோகுளோபுலின்&ஏ’ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.
கொழுப்பின் மிகுதியினால் மாரடைப்பு என்னும் நோய் மரணத்தைத் தருவதாக இருக்கிறது. அவ்வாறான நிலை ஏற்படாதிருக்க வேண்டுமானால், நாள் தோறும் குறைந்த அளவு ஒரு மணி நேரமாவது, சிரித்துப்பழகவேண்டும். நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டுச் சிரித்துப் பழகவேண்டும்.
உடம்பில் நோயெதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள்அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
சிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப்பினால், ‘என்சிபேலின்ஸ்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது.
மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.
நகைச்சுவையினால் நாலாயிரம் நன்மைகள் இருக்கட்டும். ஆனால், நான் சிரிப்பதாக இல்லை! என்று இருப்பவர்களைக் கண்டாவது, சிரிக்கலாம் அல்லவா?
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும்.
புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம்.
சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை நம்பினால், சிரியுங்கள். நம்பாமலும் சிரியுங்கள்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: சிரிப்பு மருந்து
முனாஸ் சுலைமான் wrote:என்ன சொன்னார் சார்*சம்ஸ் wrote: தகவலுக்கு நன்றி முபீஸ்
தாங்கள் எதை நினைத்தீர்களே அதைதான் சொன்னார் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிப்பு மருந்து
சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை நம்பினால், சிரியுங்கள். நம்பாமலும் சிரியுங்கள். நீங்க நம்புறீங்களா சார் நான் நம்ப வில்லை*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:என்ன சொன்னார் சார்*சம்ஸ் wrote: தகவலுக்கு நன்றி முபீஸ்
தாங்கள் எதை நினைத்தீர்களே அதைதான் சொன்னார் சார்
Re: சிரிப்பு மருந்து
முனாஸ் சுலைமான் wrote:சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை நம்பினால், சிரியுங்கள். நம்பாமலும் சிரியுங்கள். நீங்க நம்புறீங்களா சார் நான் நம்ப வில்லை*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:என்ன சொன்னார் சார்*சம்ஸ் wrote: தகவலுக்கு நன்றி முபீஸ்
தாங்கள் எதை நினைத்தீர்களே அதைதான் சொன்னார் சார்
@. @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிப்பு மருந்து
நானும் நம்பவில்லை*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை நம்பினால், சிரியுங்கள். நம்பாமலும் சிரியுங்கள். நீங்க நம்புறீங்களா சார் நான் நம்ப வில்லை*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:என்ன சொன்னார் சார்*சம்ஸ் wrote: தகவலுக்கு நன்றி முபீஸ்
தாங்கள் எதை நினைத்தீர்களே அதைதான் சொன்னார் சார்
@. @. @.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: சிரிப்பு மருந்து
முனாஸ் சுலைமான் wrote:இது நல்ல சிரிப்பு முபீஸ் :,;:
காசி கொடுத்தாலும் கிடைக்காது
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: சிரிப்பு மருந்து
வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகும் தகவலுக்கு நன்றி முபீஸ் சிரிப்பில் இத்தனை ஜாதி உள்ளதா?
சிரிப்பு பல வகை. அவை,
நமுட்டுச் சிரிப்பு
அவுட்டுச் சிரிப்பு
வெடிச்சிரிப்பு
புன்சிரிப்பு
வெறிச்சிரிப்பு
கபடச்சிரிப்பு
அசட்டுச்சிரிப்பு
ஆணவச்சிரிப்பு
அகந்தைச்சிரிப்பு
கள்ளச் சிரிப்பு
காதல் சிரிப்பு
:#: :#: :#:
சிரிப்பு பல வகை. அவை,
நமுட்டுச் சிரிப்பு
அவுட்டுச் சிரிப்பு
வெடிச்சிரிப்பு
புன்சிரிப்பு
வெறிச்சிரிப்பு
கபடச்சிரிப்பு
அசட்டுச்சிரிப்பு
ஆணவச்சிரிப்பு
அகந்தைச்சிரிப்பு
கள்ளச் சிரிப்பு
காதல் சிரிப்பு
:#: :#: :#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிப்பு மருந்து
குழந்தை சிரிப்பை விட்டு விட்டீர்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
» மனிதனுக்கு சிரிப்பு என்பது ஒரு வகை மருந்து - ரோபோ சங்கர்!
» இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
» சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
» சிரிப்பு.சிரிப்பு
» மனிதனுக்கு சிரிப்பு என்பது ஒரு வகை மருந்து - ரோபோ சங்கர்!
» இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
» சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
» சிரிப்பு.சிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|