Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிதியமைச்சு மீது நடவடிக்கை எடுக்குமாறு கடும் வற்புறுத்தல்
Page 1 of 1
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிதியமைச்சு மீது நடவடிக்கை எடுக்குமாறு கடும் வற்புறுத்தல்
பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளிதுமளி
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு (ஜே.பி.சி.) கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நிதியமைச்சகத்தால் எழுதப்பட்ட முக்கிய கடிதக் குறிப்பை ஜே.பி.சி. முன் அளிக்காதது ஏன் இது குறித்து நிதியமைச்சகம் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து மத்திய நிதியமைச்சகம் சார்பில், பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. மிகவும் இரகசியமான அந்த கடிதத்தில், அப்போதைய நிதியமைச்சர் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டை தடுத்திருக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த கடிதம் பெறப்பட்டு தற்போது நீதிமன்றத்திலும் சுப்ரமணியசாமி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, இந்த கடித விவகாரத்தால் மத்திய அமைச்சர்களான சிதம்பரத்திற்கும், பிரணாப் முகர்ஜிக்கும் இடையில் பெரும் புகைச்சல் ஏற்பட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சினையை பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பெரிதாக்கியுள்ளதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த கடித விவகாரம், ஜே.பி.சி. கூட்டத்திலும் பெரும் பிரச்சினையை கிளப்பியது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப் பட்டது.
பி.சி.சாக்கோ தலைமையிலான இக்குழுவில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து விவரங்களையும் வரவழைத்து ஆராய்ந்து சம்பந்தப்பட் டவர்களை அழைத்து விசாரித்தும் வருகிறது. நேற்று முன்தினம் இந்த கூட்டம் பாராளுமன்றத்தின் அனெக்ஸ் கட்டட அரங்கில் நடைபெற்றது. ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி கூட்டத்தில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், கூட்டம் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருமே ஒன்றிணைந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.யான சீத்தாராம் யெச்சூரிதான் இந்த கேள்விகளை ஆரம்பித்து வைத்தார். கூட்டுக்குழு என்பது பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்று. அப்படியிருக்கும்போது கூட்டுக்குழுவிக்கு தரும் ஆவணங்களில் சிலவற்றை மட்டும் நிதியமைச்சகம் தராமல் இருந்தால் அது முழுக்க முழுக்க உரிமை மீறல் செயலாகும். தற்செயலாக கடிதம் விடுபட்டு இருந்தா லுமே கூட அது மிகவும் பாரதூரமான விடயம் என்று யெச்சூரி கூறினார். பா.ஜ.வின் மூத்த எம்.பி.யான எஸ். எஸ். அலுவாலியா பேசுகையில், "கூட்டுக்குழுவின் விசாரணையை அலட்சியப்படுத்தும் வகையில் இந்த செயல் இருக்குமோ என தெரிகிறது. இந்த கடிதம் ஏன் விடுபட்டது என்பது பற்றிய முழு விவரங்களும் தெரிந்தாக வேண்டும். எனவே இதுபற்றி விசாரித்து அறியும் வகையில், நிதியமைச்சக செயலரை நேரில் அழைக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் பேசிய பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பிட்ட கடிதம் மட்டும் மறைக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பது பற்றி அனைவருக்கும் தெரிந்தாக வேண்டுமென்று வாதிட்டனர். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தலைவர் சாக்கோ, "நிதியமைச்சக செயலரை அழைப்பது என்பது கடினம். காரணம் இதுபோன்ற ஒரு சிறிய கடிதம் விடுபட்டுப்போனதற்காக போய் அவரை அழைப்பதா என்று கூற அனைத்து உறுப்பினர்களும் கடுப்பாகி விட்டனர். சாக்கோவின் பதிலால் சமாதானம் அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இது சாதாரண கடிதம் அல்ல என்று வாதிட்டனர். செயலரை இல்லா விட்டாலும்கூட நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளையாவது அழைத்து இதுபற்றி விளக்கம் கேட்க வேண்டு மென்று அனைவரும் வலியுறுத்தினர். இதையடுத்து பேசிய சாக்கோ, "நிதியமைச்சகத்தின் கடிதம் குறித்து உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நிதித்துறை செயலர் ஆர். எஸ். குஜராலை, ஒக்டோபர் 13ம் திகதி நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஸ்பெக்ட்ராம் ஊழல் தொடர்பாக பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பெயர் பெரிதாக அடிப்பட்டும் வருகிறது. இந்நிலையில் கூட்டுக்குழு விசாரணை முன்பாக சிதம்பரமும் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய 1998ம் ஆண்டிற்கு பிறகு இருந்த முன்னாள் நிதியமைச்சர்கள் நிதித்துறை செயலர்கள் அனைவரையுமே அழைப்பாணை அனுப்பி விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டுமென பாராளுமன்ற கூட்டுக்குழு சார்பில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வரிசையில் சிதம்பரமும் வருவார் என்பதால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூட்டுக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு (ஜே.பி.சி.) கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நிதியமைச்சகத்தால் எழுதப்பட்ட முக்கிய கடிதக் குறிப்பை ஜே.பி.சி. முன் அளிக்காதது ஏன் இது குறித்து நிதியமைச்சகம் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து மத்திய நிதியமைச்சகம் சார்பில், பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. மிகவும் இரகசியமான அந்த கடிதத்தில், அப்போதைய நிதியமைச்சர் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டை தடுத்திருக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த கடிதம் பெறப்பட்டு தற்போது நீதிமன்றத்திலும் சுப்ரமணியசாமி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, இந்த கடித விவகாரத்தால் மத்திய அமைச்சர்களான சிதம்பரத்திற்கும், பிரணாப் முகர்ஜிக்கும் இடையில் பெரும் புகைச்சல் ஏற்பட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சினையை பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பெரிதாக்கியுள்ளதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த கடித விவகாரம், ஜே.பி.சி. கூட்டத்திலும் பெரும் பிரச்சினையை கிளப்பியது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப் பட்டது.
பி.சி.சாக்கோ தலைமையிலான இக்குழுவில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து விவரங்களையும் வரவழைத்து ஆராய்ந்து சம்பந்தப்பட் டவர்களை அழைத்து விசாரித்தும் வருகிறது. நேற்று முன்தினம் இந்த கூட்டம் பாராளுமன்றத்தின் அனெக்ஸ் கட்டட அரங்கில் நடைபெற்றது. ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி கூட்டத்தில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், கூட்டம் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருமே ஒன்றிணைந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.யான சீத்தாராம் யெச்சூரிதான் இந்த கேள்விகளை ஆரம்பித்து வைத்தார். கூட்டுக்குழு என்பது பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்று. அப்படியிருக்கும்போது கூட்டுக்குழுவிக்கு தரும் ஆவணங்களில் சிலவற்றை மட்டும் நிதியமைச்சகம் தராமல் இருந்தால் அது முழுக்க முழுக்க உரிமை மீறல் செயலாகும். தற்செயலாக கடிதம் விடுபட்டு இருந்தா லுமே கூட அது மிகவும் பாரதூரமான விடயம் என்று யெச்சூரி கூறினார். பா.ஜ.வின் மூத்த எம்.பி.யான எஸ். எஸ். அலுவாலியா பேசுகையில், "கூட்டுக்குழுவின் விசாரணையை அலட்சியப்படுத்தும் வகையில் இந்த செயல் இருக்குமோ என தெரிகிறது. இந்த கடிதம் ஏன் விடுபட்டது என்பது பற்றிய முழு விவரங்களும் தெரிந்தாக வேண்டும். எனவே இதுபற்றி விசாரித்து அறியும் வகையில், நிதியமைச்சக செயலரை நேரில் அழைக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் பேசிய பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பிட்ட கடிதம் மட்டும் மறைக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பது பற்றி அனைவருக்கும் தெரிந்தாக வேண்டுமென்று வாதிட்டனர். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தலைவர் சாக்கோ, "நிதியமைச்சக செயலரை அழைப்பது என்பது கடினம். காரணம் இதுபோன்ற ஒரு சிறிய கடிதம் விடுபட்டுப்போனதற்காக போய் அவரை அழைப்பதா என்று கூற அனைத்து உறுப்பினர்களும் கடுப்பாகி விட்டனர். சாக்கோவின் பதிலால் சமாதானம் அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இது சாதாரண கடிதம் அல்ல என்று வாதிட்டனர். செயலரை இல்லா விட்டாலும்கூட நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளையாவது அழைத்து இதுபற்றி விளக்கம் கேட்க வேண்டு மென்று அனைவரும் வலியுறுத்தினர். இதையடுத்து பேசிய சாக்கோ, "நிதியமைச்சகத்தின் கடிதம் குறித்து உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நிதித்துறை செயலர் ஆர். எஸ். குஜராலை, ஒக்டோபர் 13ம் திகதி நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஸ்பெக்ட்ராம் ஊழல் தொடர்பாக பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பெயர் பெரிதாக அடிப்பட்டும் வருகிறது. இந்நிலையில் கூட்டுக்குழு விசாரணை முன்பாக சிதம்பரமும் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய 1998ம் ஆண்டிற்கு பிறகு இருந்த முன்னாள் நிதியமைச்சர்கள் நிதித்துறை செயலர்கள் அனைவரையுமே அழைப்பாணை அனுப்பி விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டுமென பாராளுமன்ற கூட்டுக்குழு சார்பில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வரிசையில் சிதம்பரமும் வருவார் என்பதால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூட்டுக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» எங்கள் ஆட்சி அமைந்தால் கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மாயாவதி மிரட்டல்
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா
» ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி., கூட்டத்தில்...கடும் அமளி
» எங்கள் ஆட்சி அமைந்தால் கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மாயாவதி மிரட்டல்
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா
» ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி., கூட்டத்தில்...கடும் அமளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|