சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்! Khan11

சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்!

2 posters

Go down

சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்! Empty சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்!

Post by gud boy Sat 1 Oct 2011 - 18:34

நமது அடிவயிற்றின் உட்பகுதியிலுள்ள சிறுநீர்ப்பையில்தான் இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் வடியும் சிறுநீர், தேங்க ஆரம்பிக்கிறது. சிறுநீரைத் தேக்கி வைக்கும் இந்த சிறுநீர்ப்பை, அடிவயிற்றினுள் தொப்புளுக்குக் கீழ், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் என்கிற சுரப்பியின் மேல்பகுதியில் அமைந்திருக்கிறது.

இதே போல் பெண்களுக்கு கர்ப்பப் பைக்கு கீழே அமைந்திருக்கிறது. அடி வயிற்றில் கர்ப்பப்பை கொஞ்சம் இடத்தை அடைத்துக் கொள்வதால், பெண்களுக்கு சிறுநீர்ப்பை சற்று சிறிதாக இருக்கும். சிறிய குழந்தைகளுக்கு, சிறுநீர்ப்பை வயிற்றில் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும்.

அவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியும், கர்ப்பப்பையும் அந்த வயதில் வளராததே இதற்குக் காரணம். சிறுநீரை, சிறுநீர்ப் பையிலிருந்து வெளியே அனுப்புவதற்கு பெயர்தான் `சிறுநீர் கழித்தல்' என்று நாம் சொல்வதுண்டு. இதை உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு மொழிகளில், பலவிதமாக அழைப்பதுண்டு.

அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் ஒரு ஆணுக்கு, சிறுநீர் கழித்தல் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தக் கட்டுப்பாடு கூட ஒரு அளவுக்குத்தான். அளவை மீறிவிட்டால், அப்புறம் கட்டுப்பாட்டையும் மீறிவிடும். அப்புறம் அந்த இடம் அசிங்கம்தான். இதைத்தான் கிராமங்களில், ``சிந்தனையை அடக்கலாம் ஆனால் சிறுநீரை அடக்கமுடியாது'' என்பார்கள்.

பிறந்த குழந்தைகள், மிகவும் வயதானவர்கள், விபத்துகளில் நரம்பு பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கெல்லாம் சிறுநீர் கழித்தல் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்காது. அதனால்தான் சிறிய குழந்தைகள், அடக்க முடியாமல், அடக்கத் தெரியாமல் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள்.

சிறுநீர் கழித்தல் என்பது மிகச் சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயமாக நாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படியல்ல. இது ஒரு சாதாரண விஷயமுமல்ல. ஒரு விளையாட்டான விஷயமுமல்ல. பெருமூளையிலுள்ள நரம்பு மண்டலப் பகுதிகளின் செயல்பாட்டில் தான் சிறுநீர் கழித்தலே நடைபெறுகிறது. நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைவூட்டுவதே இந்த மூளையிலிருந்து வரும் சமிக்கைகள்தான்.

மூளைதான் இதை கண்ட்ரோல் பண்ணுகிறது. மிகச்சிறிய குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கலாம், இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு வருவதற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று வயது வரை ஆகும். ஏனென்றால், அந்த வயதில்தான் மத்திய நரம்பு மண்டலத்தில், சிறுநீரை கட்டுப்பாட்டில் வைப்பதற்குண்டான பகுதி வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது.

எனவே மிகச்சிறிய குழந்தைகளை திட்டுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. வயது வந்த ஆண் மற்றும் பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் சிறுநீர் கொள்ளும் அளவு சுமார் 600 மில்லி லிட்டர் வரை பிடிக்கும். இந்த கொள்ளளவு ஆளுக்கு ஆள், கொஞ்சம் வேறுபடும். சிறுநீர்ப்பை நீளத்தில் ஐந்து அங்குலமும், அகலத்தில் மூன்று அங்குலமும் விரிந்து கொடுக்கும் தன்மை உடையது.

மேலிருந்து சிறுநீர் வடிய, வடிய, சிறுநீர்ப்பைகளின் தளச்சுவர்கள் மெல்லியதாகி, கொஞ்சம், கொஞ்சமாக விரிந்து கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் சுமார் 150 முதல் 200மில்லி லிட்டர் சிறுநீர் நிரம்பிவிட்டாலே, சிறுநீர் கழித்தாக வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்துவிடும்.

சுமார் 600 லிட்டர் வரை அடக்கும் சக்தி இருந்தாலும், சுமார் 200 மில்லி லிட்டர் சிறுநீர் சேர்ந்துவிட்டாலே நரம்பு மண்டலத்தின் மூலமாக மூளைக்கு செய்தி போய், மூளையிலிருந்து சிக்னல் கிடைத்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிடும். ஒரு பையில் தண்ணீர் அதிகமாக இருந்தால், அழுத்தமும் அதிகமாக இருக்கும் என்று நாம் நினைப்போம்.

சிறுநீர்பையில் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வடிந்து சேர ஆரம்பிக்கும்போது, எல்லோரும் நினைப்பது போல் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகமாக இருக்காது. மாறாக அழுத்தம் குறைவாகவே இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழிப்பது என்பதே ஒரு மிகப்பெரிய சந்தோஷம். வயிறு முழுவதும் காலியானது போல் தோன்றும்.

மிகப்பெரிய விடுதலை கிடைத்ததுபோல் மனதில் தோன்றும். இது இயற்கையே. சிறுநீர் கழிக்காமல், அப்படியே அடக்கி வைத்துக்கொண்டிருந்தால், டென்ஷன் அதிகமாகும். எதிலும் ஈடுபாடு இருக்காது. இதற்கு இடங்கொடுக்காமல் உடனே சிறுநீர் கழித்து விடுவது நல்லது.

எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவும் சிறுநீராக வெளியே வந்துவிடும் என்று சிலர் நினைப்பதுண்டு. இது சரியல்ல. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு சுமார் நான்கு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். இது இயற்கை. சர்க்கரை வியாதிக்காரர்கள் நான்கு முறைக்கு மேல், அடிக்கடி பாத்ரூம் போய் வந்து கொண்டிருப்பார்கள்.

இது நோயினால் ஏற்படும் மாற்றம். ஒரு நாளைக்கு சுமார். 1.2 லிட்டரிலிருந்து 1.8 லிட்டர் வரை, சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வடிந்து, சிறுநீர்ப்பை மூலமாக வெளியேறுகிறது. மழைக்காலங்களில் அதிக தடவை சிறுநீர் கழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. ஆண், பெண் இருவருமே தண்ணீர் நிறைய குடித்தால், அடிக்கடி சிறுநீர் போகவேண்டும் என்பதற்கு பயந்து, அதிக தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.

இது தவறு. எனக்குத் தெரிந்த ஒருவர், சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போதும் ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்கமாட்டார், ``முதலில் தண்ணீர் குடித்து விட்டால், அதிகமாக சாப்பிட முடியாதாம். அதனால் சாப்பிட்டு முடித்த பின்பு தான் தண்ணீர் குடிப்பேன்'' என்றார். இவர் செய்வதும் விநோதமே.

அதிகமாக சாப்பிட முடியாது என்பதால், தண்ணீர் குடிக்க பயப்படுகிறார்.எது எப்படியோ, ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. ஒருவருக்கு தண்ணீரின் தேவை அவரது உடல் எடையில் 4 சதவீதம் ஆகும். உதாரணத்திற்கு (70 கிலோ ல 4 % = 2.80 லிட்டர்) அதாவது 70 கிலோ எடையுள்ள அவர் சுமார் 2.8 லிட்டர் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்! Empty Re: சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்!

Post by Atchaya Sat 1 Oct 2011 - 18:43

:!+: :!+: ://:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum