Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
உயிருக்கு உலை வைக்கும் `டெட்டனஸ்'!
Page 1 of 1
உயிருக்கு உலை வைக்கும் `டெட்டனஸ்'!
`டெட்டனஸ்' ஒரு அபாயகரமான, ஆபத்தை விளைவிக்கக்கூடிய, பயங்கரமான நோய்தான். நம் உடலின் நரம்புகளையும், நரம்பு மண்டலத்தையும் அதிகமாக பாதிக்கச் செய்யும் இந்த நோய் `க்ளாஸ்ட்ரீடியம் டெட்டனி' என்று சொல்லக்கூடிய பேக்டீரியா கிருமியினால் ஏற்படுகிறது.
கண்ணுக்குத் தெரியாத இந்த `டெட்டனி' கிருமி, தூணிலும் இருக்கும். துரும்பிலும் இருக்கும். அதுபோக மண், தூசி, குப்பையிலும், மாட்டுச் சாணம் போன்ற மிருகங்களின் திடக்கழிவுகளில் ஒரு விதை போன்று மிகச் சாதாரணமாக எங்கும் பரவியிருக்கும்.
மண்ணில் இருக்கும் போது, விதை போன்ற இந்த கிருமி, செயலற்ற, எந்த தொந்தரவும் பண்ணாத ஒரு சாதாரண கிருமியாகவே இருக்கும். இந்த மாதிரி செயலற்ற கிருமியாக சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக்கூட, விதையாக, மண்ணில் கிடக்கக்கூடிய சக்தி இந்த `டெட்டனி' கிருமிக்கு உண்டு.
அதே நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் வீரியம் அடைந்து, தீங்கு விளைவிக்கும் சக்தியும் இந்தக் கிருமிக்கு உண்டு. ஆனால் இந்த `டெட்டனி' கிருமிக்கு ஒரு காயத்தைப் பார்த்து விட்டாலோ, ஒரு காயத்தைத் தொட்டு விட்டாலோ, ஒரே கொண்டாட்டம் தான்.
உடலில் ஏற்பட்ட ஒரு காயத்தின் வழியாக, ஒரு ரணத்தின் வழியாக, ஒரு புண்ணின் வழியாக இந்தக் கிருமி, விதையாக, வித்தாக உடலுக்குள் முதலில் புகுந்துவிடும். பின்னர் அந்த வித்துக்குள் இருக்கும் டெட்டனி பேக்டீரியா கிருமியை வெளியே அனுப்பும்.
அதாவது ஒரு விதையிலிருந்து வெடித்துக் கொண்டு ஒரு செடி கிளம்புவது போல, ரத்தத்தையும் திசுக்களையும் தொட்டவுடன், விதை வெடித்து பேக்டீரியா கிருமி வெளியே வந்துவிடும்.
வெளிக்காயம் - அதாவது கத்தியால் கீறிக் கொள்வது, கத்தியால் வெட்டிக் கொள்வது, பழைய பிளேடால் வெட்டிக் கொள்வது, காலில் ஆணி குத்துவது, முள் குத்துவது, குழந்தைகள் தெருவில் விளையாடும்போது கீழே விழுந்து வாரிக் கொள்வது, சைக்கிளிலிருந்து கீழே விழுவது, ஸ்கூட்டர், காரில் போகும்போது ஏற்படும் விபத்தினால் காயம், வேலை பார்க்கும் இடத்தில், தொழிற்சாலைகளில் திறந்த வெளிகளில் துருப்பிடித்த இரும்பு, கம்பி குத்துவது, கீறுவது, வெட்டுவது, வேலை பார்க்கும் போது ஏற்படும் சிராய்ப்பு, காயம், வெட்டு, இவைகள் அனைத்திலுமே வெளிக்காயம் ஏற்படும்.
திறந்த காயத்தின் மூலமாக, தரையிலிருந்து உடலுக்குள் புகுந்த இந்த டெட்டனி பேக்டீரியா கிருமி, கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் பரவி, `டெட்டனோஸ்பாஸ்மின்' என்கிற கொடிய விஷப்பொருளை வெளியாக்குகிறது.
இந்த விஷப் பொருள், உடலிலுள்ள தசைகள் இயங்குவதற்கு பயன்படும் நரம்புகளின் சமிக்ஞைகளை செயலிழக்கச் செய்துவிடும். இதனால் நரம்பு மூலமாக தசைகளுக்கு சுருங்க, விரிய உத்தரவு கிடைக்காததால், தசைகள் அப்படி அப்படியே, இஷ்டத்துக்கு இழுத்து பிடிக்க ஆரம்பித்துவிடும்.
சில நேரங்களில் தசை நார்களே அறுந்து போகிற அளவுக்குக் கூட பாதிப்பு ஏற்பட்டுவிடும். உலகம் முழுவதும் இந்த டெட்டனஸ் நோய், அங்கொன்றும், இங்கொன்றுமாக வருவதற்கு காரணம், சிறிய வயதில் டெட்டனஸ் தடுப்பு மருந்தை முறையாக, ஒழுங்காக போட்டுக் கொள்ளாததே.
ஆண்டாண்டுகளாக இந்த டெட்டனஸ் நோய்க் கிருமி உலகில் இருந்து கொண்டிருந்தாலும், 1988-ம் ஆண்டு ஜெர்மனியில் கிடசாடோ என்கிற விஞ்ஞானியின் கண்களில்தான் இது முதன் முதலில் தெரிந்தது. தான் பார்த்த டெட்டனஸ் நோய்க்கிருமிக்கு தடுப்பு மருந்தையும், இவரேதான் முதன் முதலில் கண்டுபிடித்தார்.
கை, கால் தசைகள் எல்லாம் இழுத்து, இழுத்து விடுவதைத்தான் சிலபேர் ``அவனுக்கு ஜன்னி வந்துடுச்சுப்பா. கை, கால் எல்லாம் வெட்டி, வெட்டி இழுத்துச்சு'' என்று சொல்வதுண்டு. இதற்கு பெயர்தான் `டெட்டனி' அதாவது ஜன்னி. ஜன்னி என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த நோயை `நளிறு' என்றும் தஞ்சாவூர் பக்கத்தில் அழைப்பதுண்டு.
`நளிர்' என்றால் தூய தமிழில் `குளிர்காய்ச்சல்' என்று அர்த்தம். டெட்டனஸ் நோய் வந்தவர்களுக்கு, காய்ச்சல் அதிகமாகவும், அதிக குளிரில் உடம்பு எப்படி நடுங்குமோ, அப்படி நடுங்குவதாலும் இதை `நளிறு' என்று அழைக்கிறார்கள்.
`டெட்டனஸ்' நோயால் பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்படும் அறிகுறிகளை வைத்து, தனக்கு டெட்டனஸ் நோய்தான் வந்திருக்கிறது என்று சரியாக சொல்ல முடியாது. நோய் ஆரம்பித்து, ஒரு வாரத்திலிருந்து மூன்று வாரத்தில்தான் நோயின் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும்.
அதாவது முதலில் நோய் ஆரம்பித்துவிடும். அப்புறம்தான் நோயின் அறிகுறியே தெரியும். எனவே மெத்தனமாக இருக்க வேண்டாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, லேசான, மிகவும் குறைவான தசைப்பிடிப்பு மற்றும் தசை இறுக்கம், முதலில் தாடையிலுள்ள தசைகளில்தான் ஆரம்பிக்கும்.
மேல்தாடை, கீழ்தாடை இரண்டையும் ஒன்றாக சேர்த்து, இறுக்கி, பூட்டு போட்டு, பூட்டி விட்டால், எப்படி வாயைத் திறக்க முடியாதோ, அந்த மாதிரி ஏற்பட்டுவிடும். இந்தத் தசை இறுக்கம் மற்றும் தசைப் பிடிப்பு, தாடைகளில் மட்டுமல்லாது, மார்பு, கழுத்து, முதுகு, வயிறு, கை, கால் ஆகிய இடங்களிலுள்ள தசைகளையும் பாதிக்கும்.
முதுகுத் தசைகள் பாதிக்கப்பட்டால், உடம்பு வில் போன்று வளைந்து விடும். பறவைகள் மற்றும் பாலூட்டி விலங்குகளுக்குத்தான் மல்லாக்கப் படுத்துக் கொண்டு, வானத்தைப் பார்த்துக் கொண்டு, உடம்பை வில் போன்று வளைக்கக்கூடிய சக்தி உண்டு. மனிதனால் இப்படி செய்ய முடியாது.
ஆனால் டெட்டனஸ் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும், அந்த நேரத்தில் உடம்பு வில் போல் வளையும். முகம் வானத்தைப் பார்த்தபடி, முதுகுப் பக்கம் தரையைத் தொடாமல் தலையும் காலும் மட்டும் தரையைத் தொடும்படி இருக்கும்.
டெட்டனஸ் நோயின் முக்கிய அறிகுறிகளில், இந்த உடம்பு வில் போல் வளைவதும் ஒன்றாகும். இப்படி சாதாரண நேரங்களிலும் பரவும் டெட்டனஸ் நோய் இன்னும் கொடிய பாதிப்புகளையும் உருவாக்கும்.
கண்ணுக்குத் தெரியாத இந்த `டெட்டனி' கிருமி, தூணிலும் இருக்கும். துரும்பிலும் இருக்கும். அதுபோக மண், தூசி, குப்பையிலும், மாட்டுச் சாணம் போன்ற மிருகங்களின் திடக்கழிவுகளில் ஒரு விதை போன்று மிகச் சாதாரணமாக எங்கும் பரவியிருக்கும்.
மண்ணில் இருக்கும் போது, விதை போன்ற இந்த கிருமி, செயலற்ற, எந்த தொந்தரவும் பண்ணாத ஒரு சாதாரண கிருமியாகவே இருக்கும். இந்த மாதிரி செயலற்ற கிருமியாக சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக்கூட, விதையாக, மண்ணில் கிடக்கக்கூடிய சக்தி இந்த `டெட்டனி' கிருமிக்கு உண்டு.
அதே நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் வீரியம் அடைந்து, தீங்கு விளைவிக்கும் சக்தியும் இந்தக் கிருமிக்கு உண்டு. ஆனால் இந்த `டெட்டனி' கிருமிக்கு ஒரு காயத்தைப் பார்த்து விட்டாலோ, ஒரு காயத்தைத் தொட்டு விட்டாலோ, ஒரே கொண்டாட்டம் தான்.
உடலில் ஏற்பட்ட ஒரு காயத்தின் வழியாக, ஒரு ரணத்தின் வழியாக, ஒரு புண்ணின் வழியாக இந்தக் கிருமி, விதையாக, வித்தாக உடலுக்குள் முதலில் புகுந்துவிடும். பின்னர் அந்த வித்துக்குள் இருக்கும் டெட்டனி பேக்டீரியா கிருமியை வெளியே அனுப்பும்.
அதாவது ஒரு விதையிலிருந்து வெடித்துக் கொண்டு ஒரு செடி கிளம்புவது போல, ரத்தத்தையும் திசுக்களையும் தொட்டவுடன், விதை வெடித்து பேக்டீரியா கிருமி வெளியே வந்துவிடும்.
வெளிக்காயம் - அதாவது கத்தியால் கீறிக் கொள்வது, கத்தியால் வெட்டிக் கொள்வது, பழைய பிளேடால் வெட்டிக் கொள்வது, காலில் ஆணி குத்துவது, முள் குத்துவது, குழந்தைகள் தெருவில் விளையாடும்போது கீழே விழுந்து வாரிக் கொள்வது, சைக்கிளிலிருந்து கீழே விழுவது, ஸ்கூட்டர், காரில் போகும்போது ஏற்படும் விபத்தினால் காயம், வேலை பார்க்கும் இடத்தில், தொழிற்சாலைகளில் திறந்த வெளிகளில் துருப்பிடித்த இரும்பு, கம்பி குத்துவது, கீறுவது, வெட்டுவது, வேலை பார்க்கும் போது ஏற்படும் சிராய்ப்பு, காயம், வெட்டு, இவைகள் அனைத்திலுமே வெளிக்காயம் ஏற்படும்.
திறந்த காயத்தின் மூலமாக, தரையிலிருந்து உடலுக்குள் புகுந்த இந்த டெட்டனி பேக்டீரியா கிருமி, கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் பரவி, `டெட்டனோஸ்பாஸ்மின்' என்கிற கொடிய விஷப்பொருளை வெளியாக்குகிறது.
இந்த விஷப் பொருள், உடலிலுள்ள தசைகள் இயங்குவதற்கு பயன்படும் நரம்புகளின் சமிக்ஞைகளை செயலிழக்கச் செய்துவிடும். இதனால் நரம்பு மூலமாக தசைகளுக்கு சுருங்க, விரிய உத்தரவு கிடைக்காததால், தசைகள் அப்படி அப்படியே, இஷ்டத்துக்கு இழுத்து பிடிக்க ஆரம்பித்துவிடும்.
சில நேரங்களில் தசை நார்களே அறுந்து போகிற அளவுக்குக் கூட பாதிப்பு ஏற்பட்டுவிடும். உலகம் முழுவதும் இந்த டெட்டனஸ் நோய், அங்கொன்றும், இங்கொன்றுமாக வருவதற்கு காரணம், சிறிய வயதில் டெட்டனஸ் தடுப்பு மருந்தை முறையாக, ஒழுங்காக போட்டுக் கொள்ளாததே.
ஆண்டாண்டுகளாக இந்த டெட்டனஸ் நோய்க் கிருமி உலகில் இருந்து கொண்டிருந்தாலும், 1988-ம் ஆண்டு ஜெர்மனியில் கிடசாடோ என்கிற விஞ்ஞானியின் கண்களில்தான் இது முதன் முதலில் தெரிந்தது. தான் பார்த்த டெட்டனஸ் நோய்க்கிருமிக்கு தடுப்பு மருந்தையும், இவரேதான் முதன் முதலில் கண்டுபிடித்தார்.
கை, கால் தசைகள் எல்லாம் இழுத்து, இழுத்து விடுவதைத்தான் சிலபேர் ``அவனுக்கு ஜன்னி வந்துடுச்சுப்பா. கை, கால் எல்லாம் வெட்டி, வெட்டி இழுத்துச்சு'' என்று சொல்வதுண்டு. இதற்கு பெயர்தான் `டெட்டனி' அதாவது ஜன்னி. ஜன்னி என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த நோயை `நளிறு' என்றும் தஞ்சாவூர் பக்கத்தில் அழைப்பதுண்டு.
`நளிர்' என்றால் தூய தமிழில் `குளிர்காய்ச்சல்' என்று அர்த்தம். டெட்டனஸ் நோய் வந்தவர்களுக்கு, காய்ச்சல் அதிகமாகவும், அதிக குளிரில் உடம்பு எப்படி நடுங்குமோ, அப்படி நடுங்குவதாலும் இதை `நளிறு' என்று அழைக்கிறார்கள்.
`டெட்டனஸ்' நோயால் பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்படும் அறிகுறிகளை வைத்து, தனக்கு டெட்டனஸ் நோய்தான் வந்திருக்கிறது என்று சரியாக சொல்ல முடியாது. நோய் ஆரம்பித்து, ஒரு வாரத்திலிருந்து மூன்று வாரத்தில்தான் நோயின் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும்.
அதாவது முதலில் நோய் ஆரம்பித்துவிடும். அப்புறம்தான் நோயின் அறிகுறியே தெரியும். எனவே மெத்தனமாக இருக்க வேண்டாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, லேசான, மிகவும் குறைவான தசைப்பிடிப்பு மற்றும் தசை இறுக்கம், முதலில் தாடையிலுள்ள தசைகளில்தான் ஆரம்பிக்கும்.
மேல்தாடை, கீழ்தாடை இரண்டையும் ஒன்றாக சேர்த்து, இறுக்கி, பூட்டு போட்டு, பூட்டி விட்டால், எப்படி வாயைத் திறக்க முடியாதோ, அந்த மாதிரி ஏற்பட்டுவிடும். இந்தத் தசை இறுக்கம் மற்றும் தசைப் பிடிப்பு, தாடைகளில் மட்டுமல்லாது, மார்பு, கழுத்து, முதுகு, வயிறு, கை, கால் ஆகிய இடங்களிலுள்ள தசைகளையும் பாதிக்கும்.
முதுகுத் தசைகள் பாதிக்கப்பட்டால், உடம்பு வில் போன்று வளைந்து விடும். பறவைகள் மற்றும் பாலூட்டி விலங்குகளுக்குத்தான் மல்லாக்கப் படுத்துக் கொண்டு, வானத்தைப் பார்த்துக் கொண்டு, உடம்பை வில் போன்று வளைக்கக்கூடிய சக்தி உண்டு. மனிதனால் இப்படி செய்ய முடியாது.
ஆனால் டெட்டனஸ் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும், அந்த நேரத்தில் உடம்பு வில் போல் வளையும். முகம் வானத்தைப் பார்த்தபடி, முதுகுப் பக்கம் தரையைத் தொடாமல் தலையும் காலும் மட்டும் தரையைத் தொடும்படி இருக்கும்.
டெட்டனஸ் நோயின் முக்கிய அறிகுறிகளில், இந்த உடம்பு வில் போல் வளைவதும் ஒன்றாகும். இப்படி சாதாரண நேரங்களிலும் பரவும் டெட்டனஸ் நோய் இன்னும் கொடிய பாதிப்புகளையும் உருவாக்கும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|