சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி Khan11

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி

2 posters

Go down

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி Empty வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி

Post by gud boy Mon 3 Oct 2011 - 6:29

தமிழ்நாட்டில் 40 தபால் நிலையங்களில் அறிமுகம்

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி

தமிழ்நாடு தலைமை தபால் துறை அதிகாரி சாந்தி நாயர் தகவல்

சென்னை, அக்.௨
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தபால் நிலையம் வழியாக பணம் பெறும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை தபால் நிலையம் மூலம் கொடுப்பதற்காக சர்வதேச பணப் பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள மணி கிராம் பேமண்ட் சிஸ்ட்ம் என்ற நிறுவனத்துடன் இந்திய தபால் துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மணி கிராம் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மந்திரி கபில்சிபல் 29ந் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த முன்னோடித் திட்டம், தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம், படிப்படியாக அனைத்து தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணத்தைப் பெறும் முறை...
ஒருவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப வேண்டுமானால், வெளிநாடுகளில் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டு பணத்தையோ அல்லது அமெரிக்க டாலரையோ இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினர் முகவரிக்கு அனுப்புவார். அப்போது அவரிடம் 8 இலக்க எண் ஒன்று தரப்படும். அவர் அந்த எண்ணை, இந்தியாவில் பணம் பெற இருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு சென்று பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அந்த நேரம் தபால் நிலையத்தில் ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொல்வார்கள். அதை நிரப்பிக் கொடுத்ததும், ஒரு ரசீது தருவார்கள். அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு பணத்தை வாங்கிச் செல்லலாம்.
வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப பராமரிப்பு அல்லது வெளிநாட்டு சுற்றுலா தேவைக்காக மட்டும் இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியும். இந்தியாவில் சொத்துகளை வாங்குவதற்கோ, முதலீடு செய்வதற்காகவோ, நன்கொடை கொடுப்பதற்காகவோ இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியாது.
190 நாடுகளில் இருந்து அனுப்பலாம்
வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு அதிகபட்சமாக 2500 டாலர் (ரூ.1,22,500) வரை அனுப்பலாம். மாதத்திற்கு ஒரு தடவை வீதம் ஓராண்டில் 12 தடவைகள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இந்திய ரூபாய் கணக்கின்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகை காசோலையாகத்தான் கொடுக்கப்படும்.
மொத்தம் 190 வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு பணம் அனுப்பும்போது ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக பெறப்படும். உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஆயிரம் டாலர் (ரூ.49,000) அனுப்பினால், அதில் 13 டாலர் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதமுள்ள 987 டாலர் மட்டும் தரப்படும்.
சென்னை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், திருச்சி மண்டலத்தில் 14 தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில் 6 தபால் நிலையங்களிலும் ஆக மொத்தம் 40 தபால் நிலையங்களில் இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை மண்டலத்தில், சென்னை அண்ணா சாலை, புதுச்சேரி, வேலூர், தாம்பரம், தி.நகர், திருவண்ணாமலை, பரங்கிமலை, விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சி மண்டலத்தில், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம், விருத்தாசலம், சீர்காழி, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில், காரைக்குடி, நாகர்கோவில், மதுரை, தக்கலை, ராமநாதபுரம், பரமக்குடி, பாளையங்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில், உதகமண்டலம், கோவை, திருப்பத்தூர், சேலம், குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி; தினத்தந்தி 02 -10 -2011
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி Empty Re: வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 3 Oct 2011 - 8:06

நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி


வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் விரைவில் மீட்கப்படும்
» ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம்
» வங்கிக் கணக்கில் பணம் கட்ட இனி க்யூவில் நிற்க வேணாம்; யு.பி.ஐ இருந்தாலே போதும்! RBI-ன் புதிய வசதி!
» ATM இயந்திரத்தில் இருந்து பணம் திருடியவன் கைது
» பிரிட்டிஷ் தபால் சேவையினால் வருடாந்தம் நாசமாக்கப்படும் 25 மில்லியன் தபால் பொருட்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum